என் மலர்
நீங்கள் தேடியது "ஷெபாஸ் ஷெரீப்"
- தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
- பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, பாகிஸ்தான் தலைமையின் ஆதாரமற்ற மற்றும் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
தங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இராணுவத்தின் தூண்டுதலால் நிகழும் அரசியலமைப்புச் சட்ட மீறல் மற்றும் அதிகாரக் கைப்பற்றலில் இருந்து சொந்த மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் பொய்யான கதைகளை உருவாக்க முனைகிறது. இது பாகிஸ்தானின் எதிர்பார்க்கப்பட்ட தந்திரமாகும்.
சர்வதேச சமூகம் உண்மையை நன்கு அறிந்துள்ளது. பாகிஸ்தானின் கவனத்தைத் திசை திருப்பும் சூழ்ச்சிகளால் யாரும் ஏமாற மாட்டர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
- குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான் பிரதிநிதிகள் இந்திய ஆதரவுடன் நடத்தினர் என்று தெரிவித்தார்.
- இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
- ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
மே 7 ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்றார்.
முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 முறைக்கும் மேல் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என டிரம்ப் கேட்டார்.
- இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன்" என கூறிவிட்டு, பின்புறம் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என கேட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், "இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலைகளை செய்கிறார்" என்று தெரிவித்தார்.
- அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டினார்.
- டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார்
அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்கிறேன். டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார். காஸாவில் தற்போது அமைதியை கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டும்போது இத்தாலி பிரதமர் மெலோனி தனது வாயில் கையை வைத்து கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
- நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின் அளித்த பேட்டியில் இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட விமர்சன பதிவில்,
மோடியின் "அன்பான நண்பர்" டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார்.
இந்திய குடிமக்களின் கொலைகளைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனிர் இவர்தான்.
நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
நாடுதான் முதலில் முக்கியம், நட்பு அல்ல." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
- 2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய கூட்டம் 29 சாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே காசா பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
- இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது.
- அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்காவில் இன்று டிரம்பை சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பிலும் ஷெரீப் கலந்து கொண்டார்.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்தாண்டு 2 முறை அமெரிக்காவிற்கு சென்று அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இஸ்லாமாபாத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
- இந்தியாவுடனான பதட்டங்களின் போது 55 பொதுமக்கள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்காக நாடு அதன் அணுசக்தி திறனை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியாவுடனான சமீபத்திய பதட்டங்கள் அணுசக்தி மோதலுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளை ஷெரீப் நிராகரித்தார்.
மேலும் இந்தியாவுடனான பதட்டங்களின் போது 55 பொதுமக்கள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
- விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
- விமான விழுந்த பகுதிகளில் சேதம் அடைந்துள்ள நிலையில், சிலர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் மருத்துவமனை ஹாஸ்டலில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ஹாஸ்டலில் பயிற்சி மருத்துவர்கள் சாப்பிடும் இடம் சேதம் அடைந்துள்ளது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்த்துள்ளனர்.
ஷெபாஸ் ஷெரீப் தனது இரங்கல் செய்தியில் "இன்று அகமதாபாத் அருகே நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த மிகப்பெரிய இழப்பால் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
நவாஸ் ஷெரீப் "அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரழிவு இழப்பு எல்லைகளைக் கடந்து, நமது பகிரப்பட்ட மனிதநேயத்தை நினைவூட்டுகிறது. பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்வியை மறைக்க பாகிஸ்தான் மீது வீண் பழி போடுகிறது.
- சிவப்புக் கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யட்டனர். எனவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.
1960 இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் சிந்து நதியின் துணை நதிகளில் இருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நீரையே அந்நாட்டில் விவசாயம் மற்றும் மற்ற தேவைகளுக்கு மக்கள் நம்பியுள்ளனர். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை முறித்து சில அணைகளில் இந்தியா நீரை நிறுத்தியது.
ஆனால் பயங்கரவாத ஆதரவு குற்றசாட்டை மறுத்து வரும் பாகிஸ்தான், இந்தியா தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்வியை மறைக்க பாகிஸ்தான் மீது வீண் பழி போடுவதாக தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் இந்தியா தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடந்து வரும் சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது, 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது. குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது. பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்புக் கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்' என்று கூறினார்.
- இந்தியாவுக்கு பாடம் புகட்ட தயாராக இருந்தோம்.
- Su - 30 MKI போர் விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 10 சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து அஜர்பைஜான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "கடந்த 10ம் தேதி காலை 4.30 மணி தொழுகைக்கு பிறகு இந்தியாவுக்கு பாடம் புகட்ட தயாராக இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியா எங்களை தாக்கிவிட்டது.
நீண்டதூர சூப்பர்சோனிக் பிரமோஸ் குரூஸ் வகை ஏவுகணைகளை வைத்து தாக்கியது. ராவல்பிண்டி விமான தளம் உட்பட பாகிஸ்தானின் பல இடங்களை குறி வைத்து தாக்கியது. அதன் பிறகு இது பற்றி எனக்கு ராணுவ தளபதி அசிம் முனீர் தகவல் சொன்னார்'' என்று தெரிவித்தார்.
பிரமோஸ் என்பது ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா தயாரித்த அதிநவீன ஏவுகணை ஆகும். மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா மொத்தம் 15 பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியதாகி கூறப்படுகிறது. Su - 30 MKI போர் விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.
ராவல்பிண்டியில் உள்ள நுர்கான் விமான தளம் உட்பட மொத்தம் 11 இடங்கள் இதில் குறிவைக்கப்பட்டன.






