என் மலர்
நீங்கள் தேடியது "Meloni"
- நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?
- டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய டிரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று தெரிவித்தார்.
மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
- அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டினார்.
- டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார்
அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்கிறேன். டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார். காஸாவில் தற்போது அமைதியை கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டும்போது இத்தாலி பிரதமர் மெலோனி தனது வாயில் கையை வைத்து கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
அப்போது, இத்தாலி பிரதமர் மெலோனியை, சிவப்பு கம்பளத்தின் மீது அல்பேனிய பிரதமர் எடி ராமா முழங்காலிட்டு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
- எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர்
- ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதை தாற்காலிகமாக நிறுத்தினார் டிரம்ப்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
மெலோனியை சந்தித்தது குறித்து பேசிய அவர், "எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர். நாங்கள் ஒன்றாகவும் நாடுகளாகவும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100% ஒரு வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்றும் ஆனால் அது ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
- இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' பெரும் வரவேற்பை பெற்றது.
- மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.
50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'மெலோடி டீமிடம் இருந்து ஹலோ' ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்ஃபி' பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.
- ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார்.
- மெலோனி மோடியுடன் ‘செல்பி’ வீடியோ எடுத்தார்.
இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். அப்போது மெலோனி மோடியுடன் 'செல்பி' வீடியோ எடுத்தார். பின்னர் அவர் அந்த வீடியோவை 'மெலோடி' என்ற தலைப்புடன் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தார். இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.
அந்த வீடியோவில், 'மெலோடி குழுவில் இருந்து ஹலோ' என்று மெலோனி கூற அவருக்கு பின்னால் நிற்கும் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இதனிடையே மெலோனி பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்து 'இந்தியா-இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆனது.
- ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
- அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்றார் அதிபர் புதின்.
ரோம்:
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், இத்தாலி சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். அதன்பின் மெலோனி கூறியதாவது:
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால் குழப்பமும் நெருக்கடியும் உருவாகும். சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது.
ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என நான் நினைக்கிறேன்.
உக்ரைனை ஆதரிப்பதற்கான தேர்வு எங்களுக்கு முதன்மையானது. இது தேசிய நலன்களின் தேர்வாகும் என தெரிவித்தார்.
- அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
- பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது
உலக பணக்காரருக்கும் தொழிலதிபருமான 53 வயதாகும் எலான் மஸ்க்கும் 47 வயதாகும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரின் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார்.

வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

- இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.
- என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.
Zerodha இணை நிறுவனர் நிகில் கமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோ நேற்று வெளியானது.
அதில், தன்னைப் பற்றியும் இத்தாலிய இணை ஜோர்ஜியா மெலோனி பற்றியும் வைரலான மீம்ஸ்களை பற்றி மோடி மனம் திறந்துள்ளார்.
இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். அதைப் பற்றி ஏதாவது பகிர விரும்புகிறீர்களா? அந்த மீம்ஸை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று காமத் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, மீம்ஸ்கள் எப்போதும் வந்துக்கொண்டேதான் இருக்கும்... மீம்ஸ்கள், சமூகவலைதள விவாதங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. நான் உணவுப் பிரியன் அல்ல, எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்கள் வழங்கும் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவேன்.
எனக்கு ஒரு மெனு கொடுத்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவும் என் முன் உள்ள உணவும் ஒன்றா என்று கூட எனக்குத் தெரியாது. அதனால் அப்போதெல்லாம் மறைந்த அருண் ஜெட்லியிடம்தான் உணவை ஆர்டர் செய்யக் கூறுவேன் என்று தெரிவித்தார்.






