என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐரோப்பிய ஒன்றியம்"

    • வரி இல்லாத வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு குறித்து ஆலோசனை.
    • இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

    இந்திய பிரதமர் மோடி இன்று மாலை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை டொலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையில் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முன்மொழியப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தியதுடன், இதற்கு ஆதரவு அளித்த மெலோனிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.

    மேலும், இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். உக்ரைனில் மோதலை முன்னதாகவே முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் முன்மொழியப்பட்ட வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வலுப்படுத்த இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பரிசீலித்து வருகின்றன. இரு தரப்பினரும் இந்த வாரம் டெல்லியில் 13வது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.

    எட்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 2022-ல் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கின.

    ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனாடில் டிரம்ப் கேட்டுக்கொண்ட நிலையில், இந்திய பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.

    அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த போதிலும், பிரதமர் மோடி அடிபணிய மறுத்துவிட்டார். இதனால் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

    மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் உள்ள இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியம் இதை செயல்படுத்தினால், அதே நடவடிக்கையை அமெரிக்காவும் நடைமுறைப்படுத்தும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    டிரம்பின் இந்த முடிவால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.

    • ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது.

    அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இறுதியாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருவருக்கும் இடையே ஒரு பெரிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    ஸ்காட்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் ரிசார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான குறைந்தபட்ச வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. 

    இதுவரை கண்டிராத மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 15 சதவீத வரி விதிக்கும் என்று அவர் கூறினார்.

    அமெரிக்காவிலிருந்து 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தியை வாங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    அமெரிக்காவில் மேலும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க இராணுவ தயாரிப்புகளையும் வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர் உர்சுலா, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

    அமெரிக்காவிடமிருந்து எல்என்ஜி, எண்ணெய் மற்றும் அணு எரிபொருளை வாங்குவோம் என்று அவர் கூறினார். இந்த கொள்முதல்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறும் என்று அவர் கூறினார். ரஷிய எரிபொருட்களிலிருந்து பிற ஆதாரங்களுக்கு மாறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    விமானங்கள், சில வகையான இரசாயனங்கள், விவசாய பொருட்கள் மற்றும் பிற முக்கியமான மூலப்பொருட்களுக்கு இருதரப்பு வரிச் சலுகைகளையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். தற்போது, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சுமார் 1.6 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.
    • ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

    உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனக்கு சொந்தமாக ட்ரூத் சோசியல் சமூக ஊடக பதிவில், "ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனிடமிருந்து இன்று எனக்கு அழைப்பு வந்தது.

    வர்த்தகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான 50% வரி மீதான ஜூன் 1 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரினார். ஜூலை 9, 2025 அன்று நீட்டிப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன். அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.

    பேச்சுவார்த்தைகள் விரைவாக தொடங்கும் என்று ஆணையத் தலைவர் கூறினார். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

    • ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
    • ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

    வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிப் போரை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி உயர்வு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சீனா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நிலைமையை சற்று சுமூகமாகியது.

    இந்நிலையில் ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

    தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

    டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

    முன்னதாக "இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்"  என ஆப்பிள் நிறுவனத்தை டிரம்ப் மிரட்டியது குறிப்பிடத்தக்கது. 

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இரு நாடுகளும் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதற்கிடையே இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தின.

    இந்நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார்.

    இதுதொடர்பாக காஜா கல்லாஸ் தனது எக்ஸ் பதிவில், "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் கவலையளிக்கின்றன. நிலைமையைத் தணிக்க இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் உதவாது. இதை தெரிவிக்க ஜெய்சங்கர் மற்றும் இஷாக் தார் ஆகியோருடன் பேசினேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், "ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாசுடன் பேசினேன். அப்போது பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதித்தேன். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்ததை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய நாடுகளின் தூதா்களை சந்தித்தாா். அப்போது மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிா்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள் என அவர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர்
    • ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதை தாற்காலிகமாக நிறுத்தினார் டிரம்ப்.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

    மெலோனியை சந்தித்தது குறித்து பேசிய அவர், "எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர். நாங்கள் ஒன்றாகவும் நாடுகளாகவும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100% ஒரு வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்றும் ஆனால் அது ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுப்பு.
    • தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

    அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது. இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் தானியங்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சமூக ஊடகங்கள் மூலம் ஜெலென்ஸ்கி கூறுகையில், "தானியங்கள் இறக்குமதி எந்தவொரு கட்டுப்பாடும் நீட்டிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐரோப்பா ஒரு குறிப்பிட்ட பொருட்களுக்கு அதன் எல்லைகளை மூடுவதை விட பகுத்தறிவுடன் செயல்படும் நிறுவன திறனைக் கொண்டுள்ளது.

    செப்டம்பர் 15 அன்று உக்ரேனிய தானியங்கள் குறைவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்" என்றார்.

    • அகதிகளின் செலவிற்காக டச்சு குடும்பங்கள் துன்பத்தில் வாழ்கின்றனர் என்றார் கீர்ட்
    • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றிலும் வெளியேற விரும்புகிறார் கீர்ட்

    ஐரோப்பிய கண்டத்தின் வடமேற்கில் உள்ள இயற்கை அழகு மிக்க நாடு நெதர்லாந்து (Netherlands). இதன் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam).

    நெதர்லாந்தில் சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

    அதில் "சுதந்திரத்திற்கான கட்சி" (PVV) எனும் வலதுசாரி கட்சி, 150 இடங்களில் 37 இடங்களை வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மேலும் இரு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.

    "வாக்காளர்கள் தங்கள் எண்ணங்களை உரத்த குரலில் கூறி உள்ளனர். அவர்களின் நம்பிக்கை எக்காரணம் கொண்டும் வீண் போகாது. கூட்டணி குறித்து விரைவில் ஒரு சமரச முடிவு எட்டப்படும். நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். 'தங்களின் நாடு தங்கள் வசமே மீண்டும் வரும்' என இனிமேல் டச்சு மக்கள் உறுதியுடன் இருக்கலாம். சுனாமி போல் நம் நாட்டிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையும், அனுமதியின்றி நம் நாட்டிற்குள் நுழைந்து புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் இனி படிப்படியாக குறைந்து விடும்" என தனது வெற்றி குறித்து கீர்ட் வைல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

    அரசியல் சித்தாந்தத்தில் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் போன்று கருதப்படும் வைல்டர்ஸின் வெற்றி விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

    அவரது கட்சி, இஸ்லாமியர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பிற்கும் எதிராக பார்க்கப்படுவதால், அவர் வெற்றி பெற்றதனால், நாட்டின் எல்லைகளை அகதிகளுக்கு மூடுவதும், ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டிற்குள் வசித்து வரும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதும் இனி நடக்க தொடங்கும் என நம்பப்படுகிறது.

    நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக தள்ளப்படலாம் என இஸ்லாமிய அமைப்புகள் அஞ்சுகின்றன.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களும், சட்டவிரோதமாக குடியேறியவர்களும் சொகுசு கப்பலில் கிடைப்பதை போன்ற சுகங்களை அனுபவித்தும், உணவுகளை உண்டும் மகிழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்ய டச்சு குடும்பங்கள் தங்கள் மளிகை மற்றும் இதர அத்தியாவசிய செலவுகளையும் குறைத்து வாழ வேண்டி உள்ளது" என கீர்ட் குற்றம் சாட்டி வந்தார்.

    தேர்தலில் வென்றால், இஸ்லாமிய பள்ளிகள், மசூதிகள், முகத்தை மூடும் உடைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை போல், நெதர்லாந்தும் வெளியேறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கீர்ட் கூறி வந்தார்.

    கீர்ட்டின் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியை கண்டு பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சித்தாந்தங்களை அவரை போலவே வகுக்க தொடங்கலாம் என அரசியல் நிபுணர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
    • மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.

    பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சீனாவின் மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
    • சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது எங்கள் இலக்கு அல்ல என கூறியது.

    பிரசெல்ஸ்:

    வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எந்த ஒரு வாகனத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவின் BYD மாடல்கள் 17.4 சதவீதமும், Geely 20 சதவீதமும், SAIC 38.1 சதவீதம் வரியையும் பெறுகிறது.

    உள்ளுர் உற்பத்தியாளர்களின் நலன்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், எங்கள் விரிவான விசாரணையின் தெளிவான சான்றுகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை முழுமையாக மதிக்கும் வகையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த விசாரணையை இறுதி செய்யும் நோக்கில் சீன அதிகாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இப்போது ஈடுபடுவோம்.

    சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது இலக்கு அல்ல. எங்கள் இலக்கு சமநிலையை மீட்டெடுப்பது மற்றும் சீனாவில் இருந்து மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தை திறந்திருப்பதை உறுதி செய்வதாகும் என தெரிவித்தனர்.

    இந்த நோய் குறைந்த அளவிலேயே பரவும் தன்மை கொண்டிருந்தாலும் பாலியல் உறவுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. 

    குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம்.

    காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்றாலும் நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு போன்றவற்றினால் பரவும். 

    மனிதர்களுக்கு இந்த வைரஸ் கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. 

    அந்நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கண்காணிக்கப்படுவர் என அமைச்சர் மா. சுப்பிரமணியமும் தெரிவித்தார்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் 219 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    இதில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் ஏற்படுவது அசாதரணம் எனவும் கூறியுள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் கணக்கின்படி பிரிட்டனில் 71 பேரும், ஸ்பெயினில் 51 பேரும், போர்ச்சுகலில் 37 பேரும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 15, அமெரிக்காவில் 9 பேருக்கு குரங்கம்மை ஏற்பட்டுள்ளது.

    இந்த நோய் குறைந்த அளவிலேயே பரவும் தன்மை கொண்டிருந்தாலும் பாலியல் உறவுகளில் இருப்பவரள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×