என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan"
- ஐ.நா.சபையின் முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
- இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
போர் உள்ளிட்ட மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போரின்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த மொத்த பாலியல் வன்முறையின் கொடூரமான குற்றங்கள் முற்றிலும் வெட்கக்கேடான பதிவு ஆகும். 1971-ம் ஆண்டு அட்டூழியங்கள் முதல் மோதல் சூழ்நிலைகளில் பாலியல் வன்முறையின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றை பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க முறை இன்று வரை குறையில்லாமல் தொடர்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்கள், இளம் வயது திருமணங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் போன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தானின் நீதித்துறை பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை அங்கீகரித்துள்ளது.
மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் தலை முறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது.
பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் அறக்கட்டளை நிதிக்கு பங்களித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.சபையின் இந்த முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன என தெரிவித்தார்.
- பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
- பாகிஸ்தான் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்றார்.
இஸ்லாமாபாத்:
சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பிலாவல் பூட்டோ ஆகியோர் மிரட்டல் விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:
எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தினால், பாகிஸ்தானின் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்பதை எதிரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.
இதுபோன்ற செயலை இந்தியா செய்ய முயற்சித்தால் உங்கள் காதுகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய அளவுக்கு மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடற்படை ஊழியர் ஒருவர் சிக்கி உள்ளார்.
- தகவல்களை பகிர்வதற்காக பிரியா சர்மாவிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது.
இதில் அந்த முகாம்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் யூ-டியூபர் ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் புலனாய்வு அமைப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் ராஜஸ்தான் சி.ஐ.டி. புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடற்படை ஊழியர் ஒருவர் சிக்கி உள்ளார்.
அரியானாவை சேர்ந்த விஷால் யாதவ் என்ற அந்த கடற்படை ஊழியர் டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பிரியா சர்மா என்று கூறிக்கொள்ளும் பெண்ணுடன் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இவர் இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை பகிர்வதற்காக பிரியா சர்மாவிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்-லைன் விளையாட்டுகளில் அடிமையான விஷால் யாதவ் அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்தது தெரிய வந்தது.
மேலும் கிரிப்டோ கரன்சி மூலமாகவும், தனது வங்கி கணக்கிலும் நேரடியாக பணம் பெற்றதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
- காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்தியா ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு மற்றும் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
அவர்கள் ஒவ்வொரு நாடாக சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.
அப்போது தலைநகர் பொக்கோட்டாவில் சசி தரூர் நிருபர்களிடம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த இரங்கல் என்பது பயங்கரவாதிகளை அனுப்புபவர்களுக்கும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளுபவர்களுக்கும் இடையே வேறுபாடு இன்றி உள்ளது என்றார்.
இதற்கிடையே கொலம்பியா எம்.பிக்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர்.
இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சசிதரூர் கூறும்போது, நாங்கள் கவலை தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்கிறோம் என்று கொலம்பியா துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா தெரிவித்தார்.
இது நாங்கள் மிகவும் மதிக்கும் ஒன்று. எங்கள் இறையாண்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், இந்திய துணைக் கண்டத்தில் அமைதிக்காகவும் எங்களுடன் கொலம்பியா உறுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கையை கொலம்பியா வெளியிடும்" என்று தெரிவித்தார்.
- ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார்.
- அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது.
இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் உள்பட ராணுவ நிலைகளை தாக்கியது. அதன்பின் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதே கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார். தனது துருக்கி பயணத்தை முடித்து கொண்டு ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு சென்றடைந்தார். அங்கு அவரை சாதாபாத் அரண்மனையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வர வேற்றார்.
அப்போது ஷபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அண்டை நாடுகளு டன் பேசவும் தயாராக இருக்கிறோம். இந்தியா போரின் பாதையைத் தேர்ந்தெடுத்தால், பதில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க தேர்வு செய்தால், எங்கள் பிரதேசத்தை நாங்கள் பாதுகாப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
- அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. டேனிஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதில் லேப்டாப்பில் இருந்து 12 டெரா பைட்ஸ்சுக்கும் அதிகமாக டிஜிட்டல் தரவுகள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்ததில் ஜோதி மல்கோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறையுடன் அரட்டையடித்ததும், அவர்களுடனான அழைப்பு பதிவுகள், வீடியோ காட்சிகள், நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் சிக்கின.
ஜோதி மல்கோத்ரா ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், குறிப்பாக 4 பாகிஸ்தானியர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறியதற்கான ஆதாரங்களும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு பாதுகாப்பு அனுமதி மற்றும் சலுகைகளை பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வி.ஐ.பி. சலுகையை பயன்படுத்திய ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய காட்சிகளும் டிஜிட்டல் ஆவணங்களில் இருந்தன. இந்த வீடியோக்கள் ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் வி.ஐ.பி. வரவேற்பு பெற்றதை அம்பலப்படுத்தி உள்ளது.
மேலும் ஜோதி மல்கோத்ரா வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற விபரங்கள் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஹிசார் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் காவல் முடிந்து யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.
- 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் 32 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் தனது தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் தூதுக் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டமிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக பிலாவல் பூட்டோ தனது எக்ஸ் பதிவில், "பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னை தொடர்பு கொண்டு சர்வதேச அரங் கில் அமைதிக்கான பாகிஸ் தானின் நிலைப்பாட்டை முன்வைக்க ஒரு குழுவை வழி நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைவதாக தகவல் வெளியானது
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
இதற்கு கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.
பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
4 நாள் சண்டைக்கு பிறகு இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து இரு நாட்டின் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைவதாக தகவல் வெளியான நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடரும் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "டி.ஜி.எம்.ஓக்களின் (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்) பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்தத்திற்கு காலாவதி தேதி எதுவும் இல்லை. இன்று இந்தியா- பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்களுக்கு இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை" என்று தெரிவித்தார்.
- பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- ஜோதி மல்ஹோத்ரா ஏஜெண்டு மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
இதற்கு கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.
பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
இதனையடுத்து, இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து இரு நாட்டின் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை வழங்கியதாக பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உள்பட 6 பேரை உளவுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா (34). இவர் 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார்.
கைதான இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ரகசிய தகவல்களை உளவு பார்த்து சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023-ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்டு மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களை, ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், ஜோதியும், டேனிஸும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் பாகிஸ்தானியருடன் ஜோதி தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
மேலும், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்தே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருடனும் ஜோதி நெருக்கமாக இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று வந்துள்ளார்.
அங்கிருந்து பல்வேறு பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிப் பழகி பல்வேறு ராணுவத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். இதற்காக ஏராளமான பணத்தையும் அவர் பெற்றுள்ளார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
ஜோதி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவரது சமூக வலை தளத்தில் பாகிஸ்தானை அடிக்கடி புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் செய்துள்ள பதிவு ஒன்றில் லாகூரை பாகிஸ்தானின் கலாச்சார இதயம் என்று கூறியுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு 4 முறைக்கு மேல் சென்று வந்துள்ள தாகவும் பதிவிட்டுள்ளார்.
இவரது யூடியூப்பிற்கு 3.2லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை 13.4 லட்சத் திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 152-ன் கீழ் 3, 4, 5 ரகசிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதி 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இப்போது இந்த வழக்கு ஹிசார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பீகாரில் நடைபெறுகிறது.
- நெதா்லாந்து, பெல்ஜியத்தில் அடுத்த ஆண்டு ஹாக்கி உலக கோப்பை நடைபெறுகிறது.
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பீகாா் மாநிலம், ராஜ்கிரில் நடைபெறுகிறது. நெதா்லாந்து, பெல்ஜியத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பைக்கு தகுதிப் போட்டியாக இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஓமன், சீன தைபே ஆகிய அணிகளுடன் பாகிஸ்தானும் இந்தப் போட்டியில் பங்கேற்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் பாகிஸ்தான் இந்தப் போட்டியில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் எந்தவொரு உறவும் இருக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனா்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தால் 7 அணிகளுடன் போட்டியை நடத்துவதா? அல்லது பாகிஸ்தானுக்கு பதில் வேறு அணியை சோ்ப்பதா என்பது குறித்து ஆசிய ஹாக்கி சம்மேளனம் அப்போது முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் 2016-ல் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற ஜூனியா் உலககோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக மலேசியா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
- 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
- பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.
'ஆபரேசன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
இதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் நிலைகள் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட ஒப்பீட்டு செயற்கைக்கோள் படங்கள் முக்கியமான இடங்களில் கணிசமான கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை காட்டுகிறது.
குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் பாகிஸ்தானின் முரிட்கே நகரத்திற்குள் குறிவைக்கப்பட்டன.
82 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த வளாகம், பாகிஸ்தானின் பஞ்சாப், ஷேக்குபுராவின் முரிட்கே, நங்கல் சஹ்தானில் அமைந்துள்ள 'அல்மா மேட்டர்' மற்றும் லஷ்கர் இ-தொய்பாவின் மிக முக்கியமான பயிற்சி மையமாக இருந்தது.
இதேபோல், பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதியும் தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்தில் உள்ள கராச்சி மோரில் பஹவல்பூரின் புறநகரில் உள்ள என்.எச்.-5 (கராச்சி-டோர்காம் நெடுஞ்சாலை) இல் சுப்ஹான் அல்லா மர்கஸ் அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கிய மையமாக இந்த இடம் இருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 பயங்கரவாத தளங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.
பாகிஸ்தான் எல்லைக் குள் உள்ள 4 இடங்களில் இந்திய விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5 இடங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
சிந்தூர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களின் படங்கள் அனைத்தும் செயற்கைகோள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
- பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரை யாற்றினார். அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றத்தில் இருந்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
"பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவின் தாக்குதல்கள் கோழைத்தனமானது.
பாகிஸ்தான் பின்வாங்கும் என்று இந்தியா நினைத்திருக்கலாம், ஆனால் தங்கள் நாட்டிற்காகப் போராடத் தெரிந்த ஒரு நாடு பாகிஸ்தான் என்பதை இந்தியா மறந்துவிட்டது. இந்தியாவின் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் காயமடைந்த னர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் பழிவாங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் பாகிஸ்தான் மீது இந்தியா தவறான காரணங்களுக்காக குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டுவதற்கு முன்பு, விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை.
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஒரு மணி நேர வான்வழிப் போரில் நமது விமானிகள் எதிரிகளின் ஜெட் விமானங்களை வெடிக்கச் செய்தனர். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடர்ச்சியான சண்டை நடந்து வருகிறது. அங்கு பாகிஸ்தான் ராணுவம் தங்கள் துணிச்சலைக் காட்டிப் போராடி வருகிறது.
எனது பாகிஸ்தான் மக்களே உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, நமது ராணுவத்துக்கு எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். நாம் நிச்சயமாக அவர்களை (இந்தியாவை) எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம். நாட்டின் பாதுகாப்பிற்காக, பாகிஸ்தான் மக்களின் தைரியம் எனக்கு தேவை" என்று பேசினார்.






