என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delegation"

    • அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.
    • 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் 32 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் தனது தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் தூதுக் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டமிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக பிலாவல் பூட்டோ தனது எக்ஸ் பதிவில், "பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னை தொடர்பு கொண்டு சர்வதேச அரங் கில் அமைதிக்கான பாகிஸ் தானின் நிலைப்பாட்டை முன்வைக்க ஒரு குழுவை வழி நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

    பிரமாதமான வளங்களை கொண்ட வடகொரியா பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பில் ஒருநாள் உயர்ந்த நாளாக உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    ×