என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர்"

    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • பாகிஸ்தான் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்றார்.

    இஸ்லாமாபாத்:

    சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பிலாவல் பூட்டோ ஆகியோர் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:

    எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தினால், பாகிஸ்தானின் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்பதை எதிரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.

    இதுபோன்ற செயலை இந்தியா செய்ய முயற்சித்தால் உங்கள் காதுகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய அளவுக்கு மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார்.
    • அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது.

    காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது.

    இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் உள்பட ராணுவ நிலைகளை தாக்கியது. அதன்பின் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதே கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார். தனது துருக்கி பயணத்தை முடித்து கொண்டு ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு சென்றடைந்தார். அங்கு அவரை சாதாபாத் அரண்மனையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வர வேற்றார்.

    அப்போது ஷபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அண்டை நாடுகளு டன் பேசவும் தயாராக இருக்கிறோம். இந்தியா போரின் பாதையைத் தேர்ந்தெடுத்தால், பதில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க தேர்வு செய்தால், எங்கள் பிரதேசத்தை நாங்கள் பாதுகாப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    12CNI0505025: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரானில் செயல்பட்

    காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.  2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.

    காசா போருக்கு எதிராக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர்.  

    நேற்று இஸ்ரேலின் 2-வது பெரிய நகரமாக திகழ்ந்து வரும் டெல்அவிவ் பென்குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.

    போர் தொடங்கிய பிறகு இஸ்ரேல் விமான நிலையம் மீது அவர்கள் முதல் முறையாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விமான பயணிகள் மத்தியிலும் பீதி ஏற்பட்டது.

    ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டோம். எதிர்காலத்திலும் செயல்படுவோம். இனி 1 முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம், தொடர் தாக்குதல் நடத்துவோம். நாங்கள் 2 பணிகளில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று ஹமாசை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்பது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

    • மிரட்டலை கண்டு கொள்ளாத இந்திய ராணுவம் தொடர்ந்து தனது படைப்பலத்தை தயார் செய்து வருகிறது.
    • பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

    அந்த தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி களுக்கு உதவி செய்தவர்க ளும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.

    பகல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி 2 தடவை அறிவித்து உள்ளார். எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு திக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் அக்ரான் என்ற பெயரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் பயிற்சி அதிகரித்துள்ளது. ராணுவ வாகனங்களும் அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன.

    இந்தியாவின் பதிலடி திட்டத்துக்கு உலகின் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பயந்துபோய் இருக்கும் பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறது.

    எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று பூச்சாண்டி காட்டியபடி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த மிரட்டலை கண்டு கொள்ளாத இந்திய ராணுவம் தொடர்ந்து தனது படைப்பலத்தை தயார் செய்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடியை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் அவர்களது பேச்சு நீடித்தது.

    அப்போது தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இருந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடியும், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் பல்வேறு விசயங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது சந்திப்பு முக்கிய மானதாக கருதப்படுகிறது.

    பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அவர்கள் இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாக தெரிகிறது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அவர்கள் இன்று முக்கிய முடிவுகள் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இன்று பிற்பகல் பாராளு மன்ற பாதுகாப்பு நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பகல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு அந்த நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பேரில் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    • பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரூபாலி கங்குலி. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது டி.வி. சீரியல்களில் பிரபலமாக உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார்.

    பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தொலைநோக்குத் திட்டங் கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன. அவரது கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பிரத மர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜனதாவில் இணைந்து உள்ளேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×