search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assault"

    • வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
    • நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெங்களூரு நகரில் பட்டப்பகலில் நபர் ஒருவரை நான்கைந்து பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் யார், அவர் ஏன் பொது வெளியில் அப்படியான தாக்குதலுக்கு ஆளானர் என்ற காரணங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில், இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான நபர் சுரேஷ் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே இவர் அதே நிறுவனத்தை சேர்ந்த உமாசங்கர் மற்றும் வினீஷ் என்ற இரு ஊழியர்களிடம் அதிவேகமாக வேலை செய்ய வலியுறுத்தி வந்துள்ளார்.

    இதன் காரணமாக உமாசங்கர் மற்றும் வினீஷ் இணைந்து வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் கோபமுற்ற இவர்கள் மேலாளரை அடியாட்கள் வைத்து தாக்குதல் நடத்துவதென முடிவு எடுத்தனர். அப்படியாக இருவரும் இணைந்து மேலாளரை தாக்குவதற்கு அடியாட்களை தேர்வு செய்துள்ளனர்.

    இருவரின் வலியுறுத்தலின் பேரிலேயே சம்பவத்தன்று பொது வெளியில் மேலாளரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ அதே பகுதியில் வந்த கார் ஒன்றின் டேஷ் கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகளே சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    வீடியோவை வைத்து விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • கணவர் தற்கொலைக்கு நிர்மலாவே காரணம் என சுரேஷ் கூறி வந்தார்
    • மளமளவென பரவிய தீயால் உடல் வெந்து அங்கேயே நிர்மலா உயிரிழந்தார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ரட்லம் (Ratlam) மாவட்டம்.

    ரட்லம் மாவட்டத்தில் தோதர் (Dhodhar) கிராமத்தில் தனது கணவர் பிரகாஷுடன் வசித்து வந்தவர் நிர்மலா (33). இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சில தினங்களுக்கு முன் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நிர்மலாதான் காரணம் என பிரகாஷின் மூத்த சகோதரர் சுரேஷ் (40) குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் நேற்று சுரேஷ், நிர்மலா வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் மோதலாக மாறிய போது ஆத்திரமடைந்த சுரேஷ், அருகிலிருந்த ஒரு இரும்பு கம்பியால் நிர்மலாவை தாக்கினார். இதில் நிர்மலா நிலைதடுமாறி விழுந்தார். அவர் மீது சுரேஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    மளமளவென பரவிய தீயால் உடல் வெந்து அங்கேயே துடிதுடித்து நிர்மலா உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தில் தங்கள் தாயார் பலியாவதை நிர்மலாவின் குழந்தைகள் கண்டனர்.

    இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்களின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சுரேஷை காவலில் எடுத்தனர்.

    குற்றத்தை ஒப்பு கொண்ட சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் லோதா தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 59). இவரது மகன் தமிழ்ச்செல்வன் புதுச்சேரி குருவிநத்தத்தை சேர்ந்த சரண்ராஜிடம் பணம் கடனாகப் வாங்கியது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று லோக சுந்தர், சரண்ராஜ் உள்பட நான்கு பேர் திடீரென்று தமிழ்ச்செல்வன் வீட்டுக்குள் நுழைந்து தமிழ்ச்செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த தமிழ்ச்செல்வன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் லோக சுந்தர், சரண்ராஜ் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாளி கம்பட்டை சேர்ந்தவர் ரமேஷ்
    • நண்பரோடு ஊருக்கு திரும்பினார்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மாளி கம்பட்டை சேர்ந்தவர் ரமேஷ் (44). இவர், பண்ருட்டி தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10-ந் தேதி அன்று மாலைவேலை முடிந்து தனது நண்பரோடு ஊருக்கு திரும்பும் பொழுது பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் சென்ற பெண் திடீரென குறுக்கே வந்ததால் இவரது நண்பர் கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அதற்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுப்பிள்ளையர் குப்பம் ரவி மகன்கள் கணேஷ், ஹரிஹரன் ஆகியோர் தங்களை தான் ஓய் எனகத்தியதாக எண்ணிக்கொண்டு ரமேசையும் அவரது நண்பரையும் அசிங்கமாக திட்டி ஜாதி பெயரை சொல்லிஅடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரமேஷ்கொடுத்தபுகாரின் பேரில் காடாம்பு லியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சப் -இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த கீழ்காங்கேயன் குப்பத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 61)ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். இவர் அதேபகுதியில் உள்ளஅய்ய னார் கோவிலில் இரவு காவல ராக இருந்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி இவரும் இவரது மனைவியும் வழக்கம் போல் அய்யனார் கோவிலை பூட்டிவிட்டு வருவதற்காக கோவிலுக்கு சென்றனர்.கோவில் விளக்கை அணைத்த போது கோவிலின் கருவறை பின்புறம் உள்ள பகுதிகளில் குடித்துக் கொண்டு இருந்தஅதே ஊரை சேர்ந்த சிவக்குமார் மகன் விமல்ராஜ்,சம்பத்குமார் மகன்சதீஷ், இளங்கோ மகன்தயாநிதி மற்றும் துரைஆகியோர் புகழேந்தியை அசிங்கமாக திட்டி கழுத்தை பிடித்து நெரித்து அடித்து அவரது மனைவியை சேலை யை பிடித்து இழுத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில்புகார் கொடுத்தனர். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த 2 பேர் வெங்கடேசனை வழிமறித்து தாக்கினர்.இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்த வெங்க டேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விடாமல் துரத்திய மர்மநபர்கள், வெங்கடேசனை வழி மறித்து தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் கீழே விழுந்தார்.தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் வெங்கடேன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் சாலை யில் சென்றவரை வழி மறித்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை பாட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 32)டிரைவர். இவர் தனது உறவினருடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த திண்டிவனம் ரேசனைப் பகுதியை சேர்ந்த ராசு திடீரென நாகராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதில் நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் ேபரில் ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்ணகியும் வந்து ஆபாசமாக பேசி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • கலையரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை குட்டை தெருவை சேர்ந்த வர் சுப்பிரமணி (வயது52), இவரது மனைவி கர்ணகி (48), பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). அவரது மனைவி கலையரசி (45). இவர்கள் எதிரெதிர் வீட்டி னர். கடந்த 18-ந் தேதி மாலை ராஜேந்திரன் மனைவி கலையரசி வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்து வாசலை பெருக்கி கோலம்போட்டுக் கொண்டிருந்த போது எதிர் வீட்டு வாசலுக்கு தண்ணீர் சென்றதால் சுப்பிரமணியும் அவரது மனைவி கர்ணகியும் வந்து ஆபாசமாக பேசி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசில் கலையரசி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

    இதே போல கடந்த 30-ந் தேதி ராஜேந்திரன் தனது வாகனத்தை சுப்பிரமணி வீட்டு வாசலில் நிறுத்திய தாகவும் ஏன் எங்கள் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்து கிறீர்கள் என்று சுப்பிரமணி கேட்டுள்ளார் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்தி ரன் அவரது மனைவி கலை யரசி ஆகியோர் சுப்பிரமணி மற்றும் கர்ணகியையும் ராஜேந்திரன் மற்றும் மனைவி கலையரசி ஆகி யோர் ஆபாசமாக திட்டி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பண்ருட்டி போலீசில் கர்ணகி கொடுத்த புகாரின் பண்ருட்டி போலீசார் ராஜேந்திரன் மற்றும் மனைவி கலையரசி ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளையும் பறித்து வைத்ததாக தெரிகிறது.
    • புகாரின் பேரில் சஞ்சய், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பரத்(20). பாண்டூர் பகுதியில் உள்ள பெண்தோழி ஒருவரை சந்திக்க சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பரத்தை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்து வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே பாண்டூர் பகுதியை சேர்ந்த 2 பேரை பரத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சய், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • விஸ்வநாதன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம் புலியூர் அடுத்த வேகாக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (42)தி.மு.க. வைச் சேர்ந்தவர். இவர் வேகாக்கொல்லை ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராகஇருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கும்பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஸ்வ நாதன் (51)என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம்இருந்து வந்தது. கொண்டான் குளம் அருகே உள்ள 141 செண்ட் நிலத்தை 30 வருடங்களாக விஸ்வநாதன் ஆக்கிரமிப்பு செய்ததை துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆக்கிர மிப்புகளை அகற்றச் சொல்லி அகற்றியதாக தவறாக தினமும் திட்டிக் கொண்டிருந்தார்.

    இன்று தட்சிணா மூர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் தம்பி மகன் அறிவு ஆகியோரை வீட்டில் இருந்த போது விஸ்வநாதன் அவரது மனைவி சின்னபொன்னு மற்றும் மகன்கள் பாஸ்கர், பிரசாந்த் அனைவரும் சேர்ந்து இரும்பு பைப்பாலும், கையாலும், கட்டையாலும் அடித்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது
    • தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 57). உளுந்தூர்பேட்டை நகர அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லாலிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று நடைபெற இருந்தது. இந்த பொதுக் கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 20-ந் தேதிகாலை 10மணியளவில் பஸ் நிலையம் அருகே எனது இருக்கசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த என்னை அவர்கள் ஒன்றுக்கூடிக்கொண்டு எனது இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி என்னை கையாலும், காலாலும் சரமாரியாக தாக்கி வேட்டியை உருவி கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தி என்னை பொதுமக்கள் மத்தியில் மானபங்கம் செய்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.அங்கு வந்த காவல்துறையினர் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் உதவியுடன் அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளேன். அந்த நபர்கள் மீது உரிய விசாரணைநடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    • 27 சதவீத சிறுமிகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகியதாக தெரிவித்தனர்
    • சிறுவர்களில் 24 சதவீதம் பேர் தனியே நடந்து செல்ல அச்சப்படுவதாக ஒப்புக்கொண்டனர்

    இங்கிலாந்தில் பதின் வயதுகளில் (13லிருந்து 19 வரை) உள்ள 1000 சிறுவர்களிடமும் 1000 சிறுமிகளிடமும் ஒரு தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் அவர்கள் வீட்டிலும், பள்ளிகளிலும், வீதிகளிலும் மற்றும் பொது இடங்களிலும் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

    இதில் 27 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் தாங்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு முறையாவது பாலியல் தாக்குதலுக்கோ அல்லது தொந்தரவிற்கோ ஆளானதாக தெரிவித்துள்ளனர்.

    நகர வீதிகளில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என 44 சதவீதம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெறும் ஆபாச படங்களும் செய்திகளும் தங்களை பாதிப்பதாகவும், இணையதளங்களில் எதிர்பாராத நேரங்களில் திடீரென தோன்றும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்கள் கவனத்தை பாதிப்பதாகவும் அவர்களனைவரும் தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் பலர் தாங்கள் எப்போதும் மன அழுத்தத்திலும் உளைச்சலிலும் இருப்பதாக கூறினர்.

    பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பாதுகாப்பற்று உணர்வதாக பல சிறுமிகள் கூறினர். உடுத்தும் உடை, உடல் தோற்றம் மற்றும் முக அழகு குறித்த விமர்சனங்களும் கிண்டல்களும் பகிரங்கமாக செய்யப்படுவதாக கவலையுடன் பல சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இறுக்கமான உடையணியும் போதெல்லாம் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதாக பலர் தெரிவித்தனர்.

    பின்னால் யாராவது தொடர்கின்றனரா என எப்போதும் பார்க்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் வீடு அல்லது பள்ளி நோக்கி செல்ல மாற்று பாதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும் சில சிறுமிகள் கூறினர்.

    ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இக்கருத்து கணிப்பில் 24 சதவீத சிறுவர்களும் பாதுகாப்பின்மையை உணர்வதாக ஒத்துகொண்டுள்ளனர். கும்பலாக குழுமியிருக்கும் பிற சிறுவர்கள் மற்றும் இரவு நேரம் ஆகியவை அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து கூறினர்.

    இன்ஃப்ளுயன்ஸர்கள் (influencers) எனப்படும் சமூக வலைதளங்களில் பதின் வயதினருக்கு மாறுபட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறி வருபவர்கள் தங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஒப்புக்கொண்டனர்.

    ஆனால், கருத்து கணிப்பில் பங்கேற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. பெண் கவுன்சிலர்-கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நேருஜி நகரை சேர்ந்தவர் தி.மு.க. நிர்வாகி மூர்த்தி (வயது33). இவரது மனைவி ஆஷா (31). இவர் விருதுநகர் நகராட்சியில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று இவரது வார்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனை ஆஷா தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும், மகேஷ்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஆஷா தங்களை தான் வீடியோ எடுப்பதாக நினைத்து மாரீஸ்வரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா, அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 2பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்றனர். இந்த பிரச்சினையில் தானும் தாக்கப்பட்டதாக மாரீஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×