என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேட்டையில் அரிசி கடை ஊழியரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் கைது
- பூல் பாண்டி என்ற கண்ணன் சுத்தமல்லியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
- ஹரிஹரனுக்கும், கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் பூல் பாண்டி என்ற கண்ணன் (வயது 30). இவர் சுத்தமல்லியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடைக்கு அரிசி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியரான டவுனை சேர்ந்த ஹரிஹரன் (20) என்பவருக்கும், கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கண்ணன் ஆத்திரமடைந்து ஹரிகரனை தாக்கியுள்ளார். இது தொடர்பாக பேட்டை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
Next Story






