என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

    • ஐ.நா.சபையின் முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
    • இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    போர் உள்ளிட்ட மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போரின்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த மொத்த பாலியல் வன்முறையின் கொடூரமான குற்றங்கள் முற்றிலும் வெட்கக்கேடான பதிவு ஆகும். 1971-ம் ஆண்டு அட்டூழியங்கள் முதல் மோதல் சூழ்நிலைகளில் பாலியல் வன்முறையின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றை பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ளது.

    இந்த வருந்தத்தக்க முறை இன்று வரை குறையில்லாமல் தொடர்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்கள், இளம் வயது திருமணங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் போன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தானின் நீதித்துறை பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை அங்கீகரித்துள்ளது.

    மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் தலை முறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது.

    பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் அறக்கட்டளை நிதிக்கு பங்களித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.சபையின் இந்த முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன என தெரிவித்தார்.

    • இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சித்து வருகிறார்கள்.

    அதை முறியடிக்க இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று பஞ்சாப் மாநில எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

    இந்த நிலையில் ஜம்முவில் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஜம்முவின் சம்பா பகுதியில் உள்ள எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
    • பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.

    'ஆபரேசன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.

    இதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் நிலைகள் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட ஒப்பீட்டு செயற்கைக்கோள் படங்கள் முக்கியமான இடங்களில் கணிசமான கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை காட்டுகிறது.

    குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் பாகிஸ்தானின் முரிட்கே நகரத்திற்குள் குறிவைக்கப்பட்டன.

    82 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த வளாகம், பாகிஸ்தானின் பஞ்சாப், ஷேக்குபுராவின் முரிட்கே, நங்கல் சஹ்தானில் அமைந்துள்ள 'அல்மா மேட்டர்' மற்றும் லஷ்கர் இ-தொய்பாவின் மிக முக்கியமான பயிற்சி மையமாக இருந்தது.

    இதேபோல், பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதியும் தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்தில் உள்ள கராச்சி மோரில் பஹவல்பூரின் புறநகரில் உள்ள என்.எச்.-5 (கராச்சி-டோர்காம் நெடுஞ்சாலை) இல் சுப்ஹான் அல்லா மர்கஸ் அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கிய மையமாக இந்த இடம் இருந்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 பயங்கரவாத தளங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.

    பாகிஸ்தான் எல்லைக் குள் உள்ள 4 இடங்களில் இந்திய விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5 இடங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

    சிந்தூர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களின் படங்கள் அனைத்தும் செயற்கைகோள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    • இந்தியாவை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தியது.
    • பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பழ வகைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி யதற்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று இந்தியா கூறி வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க படைகளை இந்தியா தயார் படுத்திக் கொண்டு இருக்கிறது.

    ஏற்கனவே பாகிஸ்தானியர்களை வெளியேற்றிய இந்தியா சிந்துநதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா அதற்காக பாகிஸ்தானை தண்டிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரை நிறுத்தி உள்ளது. 2 பெரிய அணைகளில் செனாப் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அதிக தண்ணீர் வழங்கும் ஜீலம் நதி தண்ணீரையும் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த நதியில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண கங்கா அணைக்கட்டு பகுதியில் தண்ணீரை தேக்க இந்தியா முடிவு செய்து உள்ளது.

    அப்படி தேங்கும் தண்ணீரை மாற்று பகுதி வழியாக இந்திய பகுதியில் வெளியேற்ற மத்திய நீர் பாசன துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாகிஸ்தான் விவசாயத்தை மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளையும் இந்தியாவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்து உள்ளது. இதனால் பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்கள் கடும் இழப்பை சந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பழ வகைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். அவை அனைத்தும் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால் முதல் ஓரிரு நாட்களில் பாகிஸ் தான் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.4,500 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து சிங்கப்பூர், இலங்கை, சவுதி அரேபியா போன்ற நாடுகளின் துணையுடன் தனது பொருட்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்தது. இந்திய அரசு அதையும் கண்டுபிடித்து தடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.
    • அதே வேளையில் அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

    காஷ்மீர் பகல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், 1 உள்ளூர் குதிரை ஓட்டி உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்து உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது

    இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த பதட்டத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

    அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்ல இருக்கிறது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆக்ரோஷமான இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதே போல இந்தியா தரப்பிலும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க இருக்கிறது.

    இது தொடர்பாக ஐ.நா.சபைக்கான கிரேக்கத்தின் நிரந்தர பிரதிநிதியும், மே மாதத்திற்குரிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான எவாஞ்சலோஸ் கூறும் போது அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.

    அதே வேளையில் அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
    • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து பிரதமர் மோடி ராணுவ தளபதிகளுடனும், பா.ஜ.க. மூத்த தலைவர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    இதன் காரணமாக இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்கு ஊடுருவி சென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த 9 நாட்களாக பதட்டம் நீடித்தப்படி உள்ளது.

    இதற்கிடையே இந்திய போர் விமானங்கள் அரபிக் கடலில் போர் பயிற்சி செய்தன. அதுபோல பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இதை அறிந்த பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்களை குவித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியா எல்லையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து உள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் பல நவீன முகாம்களும் வைத்துள்ளனர்.

    அந்த முகாம்கள் மூலம் எல்லையில் ஆயுத பயிற்சிகள் பெற்று தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அந்த முகாம்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் கண்காணிப்பு வளையத் துக்குள் கொண்டு வந்துள்ளது.

    இதன் காரணமாக அந்த பயிற்சி முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் துல்லிய தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற பீதி பயங்கரவாதிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    பெரும்பாலான பயங்கரவாத முகாம்கள் பயத்தில் மூடப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளையும் கைவிட்டு விட்டு பயங்கரவாதிகள் ஓட் டம் பிடித்து வருகிறார்கள். இந்த தகவல்களையும் இந்திய உளவுத்துறை சேகரித்து பயங்கரவாதிகளின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே ஜம்மு டிவிசன் பகுதியில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் அமைத்து இருந் னர். அந்த முகாம்களில் 120-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்தனர். அந்த முகாம்களை மூடி விட்டு பயங்கரவாதிகள் கூட்டம் கூட்டமாக சென்றதை இந்திய ராணுவம் படம் பிடித்துள்ளது.

    • பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிஷ்த்வார் மாவட்டம் தந்து என்ற பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் கூட்டாக இணைந்து சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் அவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டனர்.

    பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் நேற்று ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இன்று அதிகாலை மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க கமாண்டர் என்றும், அவரது பெயர் சைபுல்லா என்றும் தெரிய வந்தது. மற்றவர்கள் பெயர் பர்மான், பாஷா ஆகும். இவர்களது தலைக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஊடுருவல் முயற்சியை தடுத்த ராணுவ வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது பெயர் குல்தீப்சந்த் ஆகும். இந்த துப்பாக்கி சண்டையில் ஜூனியர் ராணுவ அதிகாரி ஒருவரும் காயம் அடைந்தார்.

    • போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
    • பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி வெற்றி கரமாக முறியடிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கே.ஜி., செக்டர் என்ற இடத்தில் எல்லை கட்டுபாடு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.

    இதற்கு இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

    இதில் இந்திய ராணுவம் தரப்பில் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதி வழியாக பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயன்றது.

    அப்போது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்தியா ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இந்திய ராணுவம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல் சம்பவத்தையடுத்து கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டு எல்லையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.
    • பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன். 33 வயதான இவருக்கு ஆன்-லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேமன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசி காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். ஆனால் மேமனின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். எனவே காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.

    ஆனால் அவர் அமெரிக்காவுக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை. மாறாக பாகிஸ்தானிலேயே இருக்க போவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானை புனரமைக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக எனக்கு அரசாங்கம் ரூ.1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.87.39 லட்சம்) வேண்டும். இந்த வார இறுதிக்குள் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக தர வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இங்குள்ள தெருக்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். பாகிஸ்தானுக்கு புதிய பஸ்கள், டாக்சிகள் மற்றும் கார்கள் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அவரது இந்த பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×