search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Test"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெங்கு பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது
    • சேமங்கி சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை நடவடிக்கை

    வேலாயுத ம்பாளையம்,

    கரூர் மாவட்டம் சேமங்கி சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பா ளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலி யர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்ப குதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளு க்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதிய வர்கள், பாலூட்டும் தாய்மா ர்கள், மாற்று த்திறனாளிகள் ,நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோத னைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

    கீரை காய்கறிகள் போன்ற சத்தானவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக கிராம பகுதியில் உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு உண்டான வழிமுறை செய்ய வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பானைகளை திறந்து வைக்காமல் மூடி இருக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது.

    சிரட்டைகள் உரல்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நல்ல தண்ணீரில் உற்பத்தி யாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. எனவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    கடலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போலீஸ்காரர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன், பாலா ஆகியோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது விபத்துல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் சீட் பெல்ட் அணிந்து கொண்டும் செல்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கி பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சில வருடங்களில் தேர்தல் முன்விரோத தகராறில் பழிக்கு பழியாக2 கொலைகள் நடைபெற்று உள்ளது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளை சோதனை செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் போலீசார் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ளார்களா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு உள்ளார்கள்? தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் பகுதியில் கடந்த சில வருடங்களில் தேர்தல் முன்விரோத தகராறில் பழிக்கு பழியாக2 கொலைகள் நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையி ல்கடலூர் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதியில் 40 வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடியாக சோதனை செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரூராட்சி பகுதியில் அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தனர்.
    • பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்திரவின்படி, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்படுகிறதா ? என கடைகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கடைகளில் 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3000 வசூல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்தார்.
    • பாபநாசம் பகுதிகளில் அசைவ உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    பாபநாசம்:

    சவர்மா சாப்பிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்த சார்பில் சுகாதா ரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து பாபநாசம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் சுகாதாரத்துறை ஆய்வாளர் பரமசிவம், சுகாதார துறை மேற்பார்வையாளர் நாடிமுத்து, ஆகியோர் பாபநாசம் பகுதியில் உள்ள பல்வேறு அசை உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது உணவுகளில் கெட்டுப்போன கோழி இறைச்சிகள், மீன் இறைச்சிகள் உள்ளதா எனவும், தேதி முடிவுற்ற பயன்படுத்த முடியாத பொருள்கள் நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் சுகாதார முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேங்கைவயல் வழக்கில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு
    • ஏற்கனவே இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வழக்கு தொடர்பாக வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனு மீதான விசாரணையின் போது அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரியவரும். இதற்கிடையில் ஏற்கனவே டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவுகள் படிப்படியாக வந்திருப்பதாகவும், அதனை வைத்தும் ஒரு புறம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை மணல்குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 3-ம் நாளாக நடைபெற்றது
    • புதுக்கோட்டை மணல்குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 3-ம் நாளாக நடைபெற்றது

    புதுக்கோட்டை 

    மணல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடு புகார் தொட ர்பா க மணல் குவாரி ஒப்ப ந்ததாரர்கள் வீடு அலுவ லகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்க த்துறை அதிகா ரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    புதுக்கோட்டையில் பிரபல தொழிலதிபரும் மணல் குவாரி ஒப்பந்ததா ரருமான முத்துப்பட்டி னத்தை சேர்ந்த ராமச்சந்தி ரன் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தொடர்பு டையவர்களின் இடங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் கந்தர்வ கோட்டை அருகே புனல் குளம் பகுதி யில் சண்முகம் என்ப வரது குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவ னம் ஆகிய இடங்களில் அமலா க்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நிறைவ டைந்தது.

    பின்னர் 2-வது நாளாக நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான தொ ழிலதிபர் மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழவரா யன்பட்டியில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பன் வீடு, கறம்பக்குடியில் குவாரி அதிபர் கரிகாலன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதில் நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடை ந்தது. ராமச்சந்தி ரனின் அலு வலகம் தவிர்த்து கரிகாலன் உள்ளிட்ட மற்ற வர்களின் வீடுகளில் நடந்த சோதனையும் நேற்று மாலை மற்றும் இரவில் நிறைவு பெற்றது.

    இன்று(வியாழக்கிழமை) 3-வது நாளாக ராமச்ச ந்திரனின் அலுவலகத்தில் அமலா க்கத்துறை அதிகாரி கள் முகாமிட்டு ள்ளனர்.

    புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் இல்லை. ஆகவே ஏற்கனவே சோத னையில் கிடைத்த ஆவ ணங்கள் அடிப்ப டையில் அவரிடம் விசாரணை நடத்த அமலா க்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து காத்திருப்பதாக கூறப்படு கிறது.

    அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ய ப்பட்டு ள்ளது. ஆகவே அவரை அதிகாரிகள் தொ டர்பு கொள்ள இயலாமல் தவி ர்த்து வருகின்றனர்.

    இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்கள் குறித்து எந்த தகவ ல்களையும் அமலா க்கத்து றை அதிகாரிகள் அதிகா ரப்பூர்வமாக தெரிவிக்கவி ல்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
    • கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் அக்கிராம சிறுவர்கள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு குல்பி ஐஸ் சாப்பிட்ட பெரும்பாலான சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வயிற்றுப் போக்கில் அவதிப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிறுவ ர்களை அனுமதித்தனர். இத்தகவல் பரவியதால், குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அதன்படி 3 வயது குழந்தைகள் முதல் 15 வயது சிறியவர்கள் வரை மொத்தம் 87-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் பெரும்பா லான சிறுவர்களை மருத்து வமனையில் அனுமதித்த டாக்டர்கள், அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

    இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், குல்பி ஐஸ் விற்ற ஏழு செம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரி மன்னன் மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார். சிகிச்சை பெற்று வந்த சிறுவர்கள் மற்றும் அவரது பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் நலம் விசாரித்தனர். தொடர்ந்து சிகிச்சை குறித்து டாக்ட ர்ளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார். துறைத் தலைவர் புகழேந்தி. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய ரவிதுரை, ஜெயபாலன் விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும், குல்பி ஐஸ் வியாபாரி எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தார் என விசாரித்து, அங்கு சென்று சோதனை நடத்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 24 மணி நேரமும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சோதனைக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    சுதந்திரதின விழாவை யொட்டி திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் கும்பகோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், கும்பகோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து ரெயில்வே போலீசார்கள் கூறியதாவது, சுதந்திரதின விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பா விதமும் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ரெயில் நிலையத்திற்கு உள்ளே கொண்டு வரப்படும் பார்சல்கள், வெளியே கொண்டு செல்லும் பார்சல்கள் அனைத்தும் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்படு கின்றன. இந்த சோதனைக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முகாமை மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகராஜா தொடங்கி வைத்தார்.
    • முகாமில் 4 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கீழசெக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

    இதனை மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகராஜா தொடங்கி வைத்தார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் 23 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 4 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், இருட்டறை உதவியாளர் எட்டையா, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, அரி பால கிருஷ்ணன், அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் கணேசன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவினர் செய்திருந்தார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print