என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Test"

    • IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும்
    • இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும்.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசா கடற்கரையில் அதன் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் வெற்றிகரமான சோதனையை நடத்தியது.

    IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு முற்றிலும் உள்நாட்ட்டில் உருவாக்கப்பட்டது.

    இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும். சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட்டன.

    இந்த சோதனை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனை தளத்தில் நடந்தது. இதை மூத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது தனது எக்ஸ் பக்கத்தில், "IADWS இன் வெற்றிகு DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறையை நான் வாழ்த்துகிறேன்" தெரிவித்தார்.   

    • இந்தியாவை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தியது.
    • பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பழ வகைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி யதற்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று இந்தியா கூறி வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க படைகளை இந்தியா தயார் படுத்திக் கொண்டு இருக்கிறது.

    ஏற்கனவே பாகிஸ்தானியர்களை வெளியேற்றிய இந்தியா சிந்துநதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா அதற்காக பாகிஸ்தானை தண்டிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரை நிறுத்தி உள்ளது. 2 பெரிய அணைகளில் செனாப் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அதிக தண்ணீர் வழங்கும் ஜீலம் நதி தண்ணீரையும் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த நதியில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண கங்கா அணைக்கட்டு பகுதியில் தண்ணீரை தேக்க இந்தியா முடிவு செய்து உள்ளது.

    அப்படி தேங்கும் தண்ணீரை மாற்று பகுதி வழியாக இந்திய பகுதியில் வெளியேற்ற மத்திய நீர் பாசன துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாகிஸ்தான் விவசாயத்தை மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளையும் இந்தியாவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்து உள்ளது. இதனால் பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்கள் கடும் இழப்பை சந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பழ வகைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். அவை அனைத்தும் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால் முதல் ஓரிரு நாட்களில் பாகிஸ் தான் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.4,500 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து சிங்கப்பூர், இலங்கை, சவுதி அரேபியா போன்ற நாடுகளின் துணையுடன் தனது பொருட்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்தது. இந்திய அரசு அதையும் கண்டுபிடித்து தடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட்.
    • இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

    'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட். இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் ஆராய்ச்சியாளராகவும், நயன்தாரா மாதவனின் மனைவி மற்றும் ஆசிரியராகவும் நடித்து இருக்கிறார்கள்.

    இந்த மூன்று பேரும் தங்களுக்கு கிடைத்த இறுதி வாய்ப்பை தவறவிடாமல் நிரூபிக்க போராடுபவர்களாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். ஆராய்ச்சிக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் மாதவன் அட்டகாசப்படுத்தி உள்ளார். மனைவி நயன்தாராவுடன் காதல், சித்தார்த்தை மிரட்டும் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

    பாசமான மனைவியாக நயன்தாரா கவருகிறார். அவரது அழகான சிரிப்பும், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் ரசிக்க வைத்து இருக்கிறது. கிரிக்கெட் வீரராக வரும் சித்தார்த், நேர்த்தியான நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார். கிரிக்கெட்டுக்காக அவர் செய்யும் விஷயங்கள் எதார்த்தம்.

    கிரிக்கெட் போட்டியை களமாக கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்கொள்ள வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனால் படத்தின் திரைக்கதை மெதுவாக செல்வது பலவீனமாக அமைந்துள்ளது. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

    படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

    • TEST படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    டெஸ்ட்

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

    இந்தத் திரைப்படம் வருகிற நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

    மர்மர்

    ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர்.

    இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

    லெக் பீஸ்

    நகைச்சுவை நடிகரான ஸ்ரீனாத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது லெக் பீஸ் திரைப்படம். இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லெக் பீஸ் படம் நாளை டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

    கர்மா

    4 வித்தியாசமான கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது கொரியன் திரைப்படமான கர்மா. வெவ்வேறு சூழ்நிலை மற்றும் மனநிலையில் உள்ள மனிதர்கள் ஒரு சூழ்நிலையால் ஒன்று சேர்கிறார்கள்/ இதை மையப்படுத்தியே இக்கதை உருவாகியுள்ளது. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிதி தளத்தில் வெளியாகிறது.

    ராஜாகிளி

    சமீபத்தில் சமூத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்த திரைப்படம் ராஜாகிளி. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

    கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், பழ.கருப்பையா, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், தீபா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ராஜாகிளி திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை.
    • டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது.

    மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து சஷிகாந்த் இயக்கிய 'டெஸ்ட்' படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

    இதுகுறித்து சித்தார்த் கூறும்போது, "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி பலரும் அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட் வீரராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது.

    டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் பிடிக்கும்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST
    • திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

    இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.

    • டெஸ்ட் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

    இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு வரும் மார்ச்25 தேதி வெளியிடவுள்ளது

    • ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST.
    • இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. 

    இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாதவம் இப்படத்தில் சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு ரெசர்ச் செய்யும் நயராக நடித்துள்ளார். கதாப்பாத்திர வீடியோவை நடிகர் சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது " ஆயுத எழுத்து திரைப்படத்தில் இருந்து இப்படம் வரை மாதவன் எந்த படம் நடித்தாலும் அதில் அவரது சிறந்த நடிப்பை மட்டுமே வெளிப்படுத்துவார்" என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST.
    • இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.

    இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரையில் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடக்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியர் வடிவேலு சிறப்புரையாற்றினர்.

    மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம், இசிஜி, ஸ்கேனிங் மக்களை தேடி மருத்துவம், டிபி டெஸ்ட், எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்ப மருந்து மாத்திரையில் வழங்கப்பட்டது.

    இந்த மருத்துவ முகாமில் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா நேசமணி, அப்பகுதி பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் திரளானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.

    மேலும் இந்த முகாமில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண் . ராமநாதனுக்கு, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பரிசோதனை மேற்கொண்டார். 

    • தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந்தேதி நடத்தப்பட உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், 2 பாஸ்போர்ட் போட்டோவை தேர்வை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    • நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்ததில் பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் தஞ்சை இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மகாதேவன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    இருப்பு பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தண்டவாளத்தில் வெடி பொருட்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

    மேலும் நடைமேடை முழுவதும் கண்காணித்து வருகின்றனர். பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    தொடர்ந்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது

    இதேபோல் நீடாமங்கலம், பூதலூர், மன்னார்குடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×