என் மலர்
நீங்கள் தேடியது "DRDO"
- IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும்
- இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசா கடற்கரையில் அதன் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் வெற்றிகரமான சோதனையை நடத்தியது.
IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு முற்றிலும் உள்நாட்ட்டில் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும். சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட்டன.
இந்த சோதனை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனை தளத்தில் நடந்தது. இதை மூத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது தனது எக்ஸ் பக்கத்தில், "IADWS இன் வெற்றிகு DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறையை நான் வாழ்த்துகிறேன்" தெரிவித்தார்.
- பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள், ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
- நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் ஜெய்சால்மர் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விருந்தினர் மாளிகையின் மேனஜர் மகேந்திர பிரசாத் என்பவரை சிஐடி போலீசார் கைது செய்தனர்.
ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது. இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அவர் கசியவிட்ட குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.
- பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.
ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேசிய அளவிலான முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது.
- துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.
"துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு மேலும் ஊக்கமாக இருக்கும்" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- இந்திய கடற்படையுடன் இணைந்து டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை.
- கடலுக்கு அடியில் மல்டி-இன்ஃப்ளூயன்ஸ் மைன் என்ற ஆயுத சோதனை வெற்றி.
கடலுக்கு அடியில் போர் திறனை வலுப்படுத்தும் சோதனையை இந்திய கடற்படையுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது.
கடலுக்கு அடியில் மல்டி-இன்ஃப்ளூயன்ஸ் மைன் என்ற ஆயுத சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.
ஒலி, காந்தி புலங்களை அடையாளம் கண்டறிந்து எதிரி கப்பல்களை முறியடிக்கும் திறன் கொண்டது டிஆர்டிஓ-ன் எம்ஐஜிஎம் தொழில்நுட்பம்.
- ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
- இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து ஆகாஷ்-என்ஜி ஏவுகணை இன்று காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இது வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பாகும். இன்றைய சோதனையின்போது, ஆகாஷ்-என்ஜி ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏவுகணையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை கண்டறியும் கருவி, லாஞ்ச்சர், ரேடார், கட்டுப்பாடு மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள் ஆகியவை உள்ளது.
இந்நிலையில், ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ, இந்திய விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
- ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
- ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
புவனேஸ்வர்:
பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், சூப்பர்சானிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் இந்திய கடற்படை திறனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
- கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார்.
- அப்துல் கலாம் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் [84] நேற்று [ஆகஸ்ட் 15] காலமானார். ஐதராபத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1940 ஆம் ஆண்டு பிறந்த பிறந்த ராம் நாராயண், சென்னை, கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார். பின்னர் பெங்களூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் -இல் தனது டாக்டர் பட்டதைப் பெற்றார்.
1983 ஆம் ஆண்டு இந்தியாவால் தொடங்கப்பட்ட அக்னி ஏவுகணைத் திட்ட இயக்குனராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்க கடும் உழைப்பை செலுத்தினார். எனவே, ஏவுகணை உருவாக்கத்துக்கு அடித்தளமிட்ட ராம் நாராயண், அக்னி ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுத்துகிறார்.
டி.ஆர்.டி.ஓ. [DRDO] எனப்படும் ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வக இயக்குநராகவும் ராம் நாராயண் அகர்வால் பணியாற்றியுள்ளார். ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. ராம் நாராயண் மறைவுக்கு டிஆர்டிஓ அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தனது சுயசரிதை புத்தகமான அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அக்னி 4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.
- அக்னி 4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
புவனேஷ்வர்:
இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
- புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
- அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலசோர்:
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை இன்று காலை ஒடிசா கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை தாக்கும் எல்லை 1,000 கிமீ முதல் 2,000 கிமீ வரை பயணம் செய்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.
- வான் வழியாக வரும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கக்கூடிய நவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
- தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானது.
பாலசோர்:
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது.
தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானது. எதிரிகள் வானில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு, உடனடியாக செயல்பட்டு வானிலேயே அதை தாக்கி அழிக்கும் திறன் உடையது இந்த ஏவுகணை.
நம் ராணுவத்தின் படை செல்லும்போது, வானில் இருந்து தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
தரையில் பயணம் செய்யும்போதும், வாகனத்தில் இருந்து இதை ஏவ முடியும். மொத்தம் 6 வகையான சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் துல்லியமாக, வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ., கூறியுள்ளது. இந்த முயற்சிக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- இந்திய கடற்படை கப்பலில் இருந்து குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.
- ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.
ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.






