என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் உளவாளி"

    • பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியுள்ளார்.
    • கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார்

    பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு பார்த்ததாக மங்கத் சிங் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது.

    மங்கத் சிங்கிடம் மேற்கொண்ட விசாரணையில், இஷா ஷர்மா என்ற போலி பெயர் கொண்ட பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னும், பின்னும் அல்வார் கண்டோன்மென்ட் பகுதியை மங்கத் சிங் உளவு பார்த்தது உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது.
    • பாகிஸ்தானுக்குச் சென்றபோது அங்குள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

    'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா, இந்த ஆண்டு மே 16 அன்று அரியானா காவல்துறையினரால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது தொலைபேசி டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த எஹ்சான்-உர்-ரஹீம் டேனிஷ் அலியுடன் ஜோதி பல முறை பேசியுள்ளது இதில் கண்டறியப்பட்டது. டேனிஷ்  அதே மே மாதம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். 

    இந்நிலையில் அரியானாவின் ஹிசார் நீதிமன்றத்தில் சுமார் 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது.

    அவர் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

    ஜோதி நீண்ட காலமாக பாகிஸ்தான் முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்தியா குறித்த முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்பி வருவதாகவும் காவல்துறையினர் தங்கள் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

    குற்றப்பத்திரிகையின்படி, "ஆரம்பத்தில், அவர் ஒரு சாதாரண யூடியூபராக வலைப்பதிவுகள் மற்றும் வீடியோக்களை உருவாக்கினார்.

    ஆனால் விசாரணையின் போது அவர் பாகிஸ்தானுக்குச் சென்றபோது அங்குள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

    ஐஎஸ்ஐ முகவர்கள் என்று நம்பப்படும் ஷாகிர், ஹசன் அலி மற்றும் நசீர் தில்லான் ஆகியோருடனும் அவருக்கு தொடர்புகள் இருந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

    • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.
    • பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.

    ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.

    ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.

    இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் தேசிய அளவிலான முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    இந்திய எல்லையோரப் பகுதிகள் தொடர்பான முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவாளிக்கு அளித்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். #BSFjawanarrested #sharinginfo #Pakistaniagent
    சண்டிகர்:

    மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன்.

    இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றும் இவரது நடத்தையில் சில மாதங்களாக ஏற்பட்ட மாறுதல்களை கவனித்த எல்லை பாதுகாப்பு உளவுப்படை அதிகாரிகள் ரியாசுதீனை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிவரும் ரியாசுதீன் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருக்கும் வேலிகள் மற்றும் இணைப்பு சாலைகளை தனது கைபேசியில் படம் பிடித்து அவற்றை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு உளவாளி மிர்ஸா பைஸல் என்பவருக்கு ரகசியமாக அனுப்பி வந்துள்ளார்.

    மேலும், இந்திய எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரிகள் சிலரது கைபேசி எண்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதை மோப்பம் பிடித்த உளவுப்படை அதிகாரிகள் உரிய ஆதாரங்களை சேகரித்த பின்னர் ரியாசுதீனை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் 7 சிம்கார்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். #BSFjawanarrested #sharinginfo #Pakistaniagent
    ×