என் மலர்
நீங்கள் தேடியது "Honey Drop"
- பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்!
- ஒவ்வாமை உள்ளவர்கள் தேன் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அனைவருமே அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக பலரும் கடையில் விற்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் வீட்டு வைத்தியங்களயே கையாளுகின்றனர். அதாவது இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை பராமரித்து வருகின்றனர். அதில் தேனும் அடங்கும். சிலர் முகத்திற்கு தேனை பயன்படுத்துவர். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யாரெல்லாம் பயன்படுத்தவேண்டும் போன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. அந்தவகையில் தேனை எவ்வாறு பயன்படுத்தலாம்? அது சருமத்திற்கு அளிக்கும் பலன்கள் என்ன? பார்க்கலாம்...
தோலழற்சிக்கு எதிராக செயல்படும் தேன்...
வறட்சி, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட தோல் நோயான அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் (தோலில் பரவும் பாக்டீரியா தொற்று), புண்கள் போன்ற அனைத்துவிதமான தோல்நோய்களுக்கும் பச்சை தேன் பலனளிக்கும். தேனில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. பைட்டோ கெமிக்கல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை தோலழற்சி போன்ற தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக மனுகா தேன் (மனுகா மரத்தின் பூக்களில் இருந்து தேனீக்களால் எடுக்கப்படுவது) முகத்தில் உள்ள நுண்ணிய கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், வறட்சி போன்றவற்றை தடுத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன. தேன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்கவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். தேனில் உள்ள உரித்தல் பண்புகள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகக் காட்ட உதவும். அதுபோல முகத்தில் உள்ள வடுக்களை மறையச்செய்யும்.

பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்
தேனை எப்படி பயன்படுத்தலாம்?
பச்சைத்தேனை அப்படியே முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அது கடைகளில் வாங்கியதாக இருக்கக்கூடாது. அதாவது சில தேன்கள் வெறும் சர்க்கரைக்கரைசலாக உள்ளன. இயற்கையான தேன்தான் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லப்பலனைத் தரும். அப்படிப்பட்ட பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம். அதன் பிசுபிசுத்தன்மை பிடிக்காதவர்கள், தேனை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து அதன் பிசுபிசுப்புத்தன்மையை குறைத்து முகத்தில் பயன்படுத்தலாம். சில நிமிடங்கள் முகத்தில் தேனைவிட்டு, பின்னர் முகத்தை கழுவலாம். தேனை மற்ற பொருட்கள் உடனும் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி, கற்றாழை, இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றுடன் தேனை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம். மூன்று பங்கு தேன் மற்றும் ஒரு பங்கு தூய இலவங்கப்பட்டை தூளை ஒன்றாக கலக்கவேண்டும். இந்த கலவையை கொஞ்சம் சூடாக்கி, முகத்தில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகப்பருவை நீக்க உதவி நல்ல பலனை அளிக்கும். ஆனால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மேலும் தேன் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். அதுபோல தேனை முகத்தில் தடவிக்கொண்டே தூங்ககூடாது. காரணம் முகத்தில் இருக்கும் தேன் தூசி மற்றும் பிற குப்பைகளை ஈர்க்கும். இது செயலில் உள்ள முகப்பருவை மோசமாக்கும். தூசிகள் தோல் அரிப்புக்கு வழிவகுக்கும். இதை தொடர்ந்து செய்வது சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.
- பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியுள்ளார்.
- கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார்
பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு பார்த்ததாக மங்கத் சிங் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது.
மங்கத் சிங்கிடம் மேற்கொண்ட விசாரணையில், இஷா ஷர்மா என்ற போலி பெயர் கொண்ட பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னும், பின்னும் அல்வார் கண்டோன்மென்ட் பகுதியை மங்கத் சிங் உளவு பார்த்தது உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.
- வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
ஹனி டிராப் என்பது ஒருவரை கவர்ந்து மயக்கி அவரின் ரகசிய தகவல்களை அறிந்துகொள்வதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை வழக்கு விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் நவீன காலத்தில் இந்த முறையை சில மோசடி ஆசாமிகள் கடைபிடித்தது பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது, யாராவது ஒரு நபரின் பலவீனத்தை தெரிந்துகொண்டு, அதன்மூலம் அவரை ஆசை வார்த்தைகள் மூலம் மயக்கி, அவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை அபகரித்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகளவில் நடக்கிறது.
இந்நிலையில் கேரளாவில் அதேபோன்று ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான யூ-டியூப்பரிடமே ஒரு கும்பல் ஹனி டிராப் முறையில் கார் மற்றும் பணத்தை பறித்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண் யூ-டியூப்பர் ஒருவர் குடும்ப ஆலோசகராக இருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். அதில் தனது தொடர்பு எண்ணையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யூ-டியூப்பரின் செல்போனுக்கு இடுக்கி பகுதியை சேர்ந்த அக்க்ஷயா என்பவர் போன் செய்துள்ளார். அப்போது தனக்கு கவுன்சிலிங் தேவை என்று பெண் யூ-டியூப்பரிடம் தெரிவித்து கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்திருக்கிறார்.
அதன்படி பெண் யூ-டியூப்பரும் அந்த அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்க அக்ஷயா மட்டுமின்றி, இடுக்கி சந்தன்பாறையை சேர்ந்த அதிரா(28) என்ற இளம்பெண்ணும், வட்டப்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ்(28), கொல்லம் கைதோடு பகுதியை சேர்ந்த அல்அமீன்(23) என்ற 2 வாலிபர்களும் இருந்துள்ளனர்.
அவர்கள் பெண் யூ-டியூப்பருக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துள்ளனர். அதனை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அதனை பயன்படுத்தி பெண் யூ-டியூப்பரை அவர்கள் நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளனர். பின்பு சிறிதுநேரம் கழித்து பெண் யூ-டியூப்பர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
அப்போது அவர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த நிர்வாண படத்தை காண்பித்து பணம் தருமாறும், இல்லையென்றால் அந்த நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.
அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், பெண் யூ-டியூப்பரின் ரூ2.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறித்துக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் யு-டியூப்பர், கூத்தாட்டுக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
பெண் யூ-டியூப்பரிடம் பணம் மற்றும் காரை பறித்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்களது இருப்பிடத்தை செல்போன் டவர் மூலம் கண்டறிந்த போலீசார், அங்கு சென்று அக்ஷயா, அதிரா, அபிலாஷ், அல்அமீன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் இதுபோன்று வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






