என் மலர்
நீங்கள் தேடியது "ராஜஸ்தான்"
- வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.
- முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூர் மாவட்டத்தின் மனாய் கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (25) மற்றும் விமலா (23) ஆகியோர் சகோதரிகள். இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.21) இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர் காலையில் திருமணத்திற்கு தயாராக குடும்பத்தினர் எழுப்ப சென்றுள்ளனர்.
அப்போது இருவரின் உடல்நிலையும் மோசமாக இருந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் உண்மையாக காரணம் தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
- ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ பகதூர் சிங் கோலி, பாஜகவின் பட்ஜெட்டை ஆண்குழந்தை என்றும், காங்கிரஸின் பட்ஜெட்டை பெண்குழந்தை என்றும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவையில் பேசிய அவர்,
"எங்களது முதல் பட்ஜெட் வந்தது, ஒட்டுமொத்த ராஜஸ்தானும் அதனைப் பாராட்டியது. இரண்டாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது. மூன்றாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது.
எங்கள் அரசு முதல் பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, இரண்டாவது பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, மூன்றாவது பட்ஜெட்டிலும் ஒரு மகனைப் பெற்றெடுத்தது. இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது, அவர் தனது கடைசி பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார், அதனால்தான் அது ஒரு மகனைப் பெறவில்லை; ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்," என்று கோலி கூறினார்.
பெண் குழந்தையை ஒரு தோல்வியாகவும் அல்லது பலவீனமாகவும் சித்தரிக்கும் இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சு பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்வர்ணிம் சதுர்வேதி,
"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்டமன்றத்திலேயே இப்படிப் பேசுவதை கற்பனை செய்து பாருங்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், சிந்தனைப் போக்கையும் காட்டுகிறது. காங்கிரஸை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். இது பாலினத்திற்கு எதிரான அவர்களின் பாரபட்சமான மனநிலையைக் காட்டுகிறது, இது ஒரு பாலியல் ரீதியான (sexist) கருத்தைத் தவிர வேறில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
- ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
- குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாத்திரம் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்தனர்.
வேலை முடிந்ததும் அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயர சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.
- அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று திருடர்கள் அஞ்சினர்.
- பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தானில் 90 வயது மூதாட்டியைப் படுக்கையோடு தூக்கிச் சென்று மர்ம நபர்கள் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் 90 வயதான அந்த மூதாட்டி நேற்று உறங்கிக் கொண்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், மூதாட்டி அணிந்திருந்த கனமான வெள்ளி நகைகளைக் கழற்ற முயன்றனர்.
ஆனால், அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று அஞ்சிய திருடர்கள், அவரை அவர் படுத்திருந்த கட்டிலோடு அப்படியே தூக்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வயல்வெளிக்குச் சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றதும், மூதாட்டி அணிந்திருந்த வெள்ளி மற்றும் பிற நகை நகைகளை திருடர்கள் பிடுங்கிச் சென்றனர்.
மறுநாள் காலையில், மூதாட்டி கைகள் கட்டப்பட்ட நிலையில் வயல்வெளியில் கட்டிலுடன் மிகுந்த அச்சத்தில் இருந்த மூதாட்டியை கண்ட கிராம மக்கள் அவரை மீட்டனர்.
இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முன்னதாக ராஜஸ்தானின் சாவாய் மாதோபூர் நகரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
- சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
- ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌஷிக் விஹார் காலனியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை அந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நில அளவையாளராக பணியாற்றி வந்த அசோக் ரதி (40), அவரது மனைவி அஜந்தா (37), தாய் வித்யாவதி (70) மற்றும் மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) ஆகிய ஐந்து பேரும் ஒரே அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர்.
இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அந்த பெண்ணைக் கொண்டே சோனுவைத் தொலைபேசியில் அழைக்கச் செய்து, அவரை வரவழைத்துள்ளனர்.
- வீடியோவாகப் பதிவு செய்து சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு.
இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி, போபாலில் சோனுவுடன் வசித்து வந்தார்.
இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரைப் பலவந்தமாக ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அந்த பெண்ணைக் கொண்டே சோனுவைத் தொலைபேசியில் அழைக்கச் செய்து, அவரை ராஜஸ்தானுக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு சென்ற சோனுவைக் கடத்திய பெண்ணின் குடும்பத்தினர், அவரை ஒரு இடத்தில் மூன்று நாட்கள் அடைத்து வைத்துத் தடியால் அடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், ஒரு பாட்டிலில் சிறுநீரை நிரப்பி அவரை வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்துள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலை வீடியோவாகப் பதிவு செய்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அதனைச் சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனுவின் பெற்றோர், போபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து இந்த புகாரை விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
12 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி காலை அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை ஓடும் காரிலேயே பல மணி நேரம் அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் காரை வழிமறித்துச் சோதனையிட முயன்றனர்.
மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கிராம மக்கள் அந்த மாணவியை மீட்டு அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.
குடும்பத்தினர் கடந்த 11 ஆம் தேதி பிகானேர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இரு இளைஞர்களைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்ற நபர் தனது மனைவியுடன் கோவிலிக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் 'Exhaust' வழியாக ஒருவர் சிக்கி கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து பயத்தில் கத்திய ராவத் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர். தன்னுடைய கூட்டாளிகள் தன்னை தவிக்க விட்டு தப்பியோடியதாக கைதான திருடன் போலீசாரிடம் தெரிவித்தான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு பட காட்சியை இபபடம் நியாபக படுத்துவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்தனர்.
- பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
- சிறுமியின் மூக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் உள்ளே ஒரு அட்டை பூச்சி இருப்பதைக் கண்டறிந்தனர்.
ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க காட்டிற்குச் சென்றாள். அங்கு, தாகம் எடுத்ததால் கால்வாயில் இருந்து தண்ணீர் குடித்தாள்.
அந்த நேரத்தில், அது எப்படியோ ஒரு சிறிய அட்டைப்பூச்சி தண்ணீரில் இருந்து அவள் மூக்கில் நுழைந்துள்ளது. அது அங்கேயே தங்கி ரத்தத்தை உறிஞ்சி தொடர்ந்து வாழ்ந்தது.
2 மாதங்கள் கடந்துவிட்டன. சிறிய அட்டைப்பூச்சி மிகவும் பெரியதாக மாறியது. இதன் காரணமாக, சிறுமிக்கு சுவாசிக்க கடினமாகிவிட்டது. அவளுடைய மூக்கும் வலிக்க ஆரம்பித்தது.
ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வந்ததால், பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியின் மூக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் உள்ளே ஒரு அட்டை பூச்சி இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை வெளியே எடுத்தனர். 3 அங்குல நீளம் கொண்டதாக இருந்தது.
அதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- குடியரசு தினமான ஜனவரி 26 முதல் இந்த தீர்மானம் அமலுக்கு வருகிறது
- குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தின் கீழ் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்களை பயன்படுத்த அக்கிராம பஞ்சாயத்துகள் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இக்கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஒரு சமூக கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தடை ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியா வாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பதில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் பேசுவதற்கு கீபேட் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,
இது தவிர, பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு மொபைல் போன்கள் தேவைப்பட்டால் வீட்டில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், சமூக நிகழ்வுகள் அல்லது பக்கத்து வீட்டிற்கு கூட மொபைல் ஃபோன்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த மாதம் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்கக்கூடும் என்றும் சவுத்ரி தெளிவுபடுத்தினார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விதிமுறைகள் இக்கிராமத்தில் அடிக்கடி விதிக்கப்படுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு, ஒரு இளம் ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அக்கிராம தலைவர்கள் இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கிவைத்து உத்தரவிட்டனர். மேலும் மீண்டும் அவர்கள் ஊருக்குள் நுழைய ரூ.12 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த ஜோடி இதுதொடர்பாக காவல்துறையை அணுக, அதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பெரும்பாலான பெரியவர்களுடன் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சிலர் அவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயப்படுத்தினர். இதுபோல பல சம்பவங்கள் அக்கிராமத்தில் அரங்கேறி உள்ளன.
- ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
- மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இதில் ராஜஸ்தானில் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவீன் மஹாஜன் கூறுகையில், " ராஜஸ்தானில் 5.46 கோடி வாக்காளர்களில் 41.79 லட்சம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படவில்லை. இதனையடுத்து, அந்தப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.
அவர்களில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள்" என்று தெரிவித்தார்.
அதேவேளை நேற்று வெளியிடப்பட்ட மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை வேறொரு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.
- இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஆம்புலன்சிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை பஸ்ஸி பகுதி அருகே மூச்சு விடுவதில் சிரமப்பட்ட குழந்தையை, பரத்பூர் மாவட்டத்தின் பயானா மருத்துவமனையில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, குழந்தையை அதன் தந்தையும் மாமாவும் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பான்ஸ்கோ என்ற இடத்திற்கு அருகில் வந்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டரில் உள்ள வாயு தீர்ந்துவிட்டதை குழந்தையின் தந்தை கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை அருகில் உள்ள பஸ்ஸி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பஸ்ஸி மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸில் எந்த ஒரு செவிலியரும் இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தைதான் இயக்கிக்கொண்டிருந்தார். சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்ததாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று பஸ்ஸி காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.






