என் மலர்
நீங்கள் தேடியது "ஆக்சிஜன் சிலிண்டர்"
- சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை வேறொரு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.
- இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஆம்புலன்சிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை பஸ்ஸி பகுதி அருகே மூச்சு விடுவதில் சிரமப்பட்ட குழந்தையை, பரத்பூர் மாவட்டத்தின் பயானா மருத்துவமனையில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, குழந்தையை அதன் தந்தையும் மாமாவும் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பான்ஸ்கோ என்ற இடத்திற்கு அருகில் வந்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டரில் உள்ள வாயு தீர்ந்துவிட்டதை குழந்தையின் தந்தை கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை அருகில் உள்ள பஸ்ஸி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பஸ்ஸி மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸில் எந்த ஒரு செவிலியரும் இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தைதான் இயக்கிக்கொண்டிருந்தார். சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்ததாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று பஸ்ஸி காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கேரள மாநிலம் ஆழப்புழாவை அடுத்த சம்பக்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகனன் நாயர்(வயது66) என்பவர் சிகிச்சைக்கு சென்றார்.
மூச்சுதிணறல் காரணமாக அவதிப்பட்ட மோகனன் நாயருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை எடத்து வாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் சுகாதார நிலைய ஊழியர்கள், மோகனன் நாயரை ஏற்றினர்.
மோகனன் நாயர் ஆம்புலன்சுக்குள் படுக்க வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சற்று நேரத்தில் ஆம்புலன்சும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மோகனன் நாயரும், ஆம்புலன்ஸ் டிரைவர் சைபுதீனும் தீயில் கருகினார். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். வழியிலேயே மோகனன் நாயர் இறந்தார். டிரைவர் சைபுதீன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதில் ஆம்புலன்ஸ் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. அருகில் உள்ள ஒரு கடையும் சேதமானது.
இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






