என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "newborn baby"

    • குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
    • பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

    ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம். 

    குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...

    உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள். 

    300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்

    பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன. 

    10,000 சுவை மொட்டுகள்

    புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.


    குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்

    வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்

    பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

    புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்

    பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.

    • குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை.
    • நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    மும்பை :

    மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி குழந்தைக்கு பால் புகட்ட பிரியா காம்ப்ளே தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை. மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி அவரிடம் கூறி அனுப்பினர். இதன்பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    அப்போதும் தனது குழந்தையின் வாயில் ஒட்டிய டேப் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு நர்சிடம் விசாரித்தார். இதற்கு குழந்தை அழாமல் இருப்பதற்காக டேப் ஒட்டியதாக நர்ஸ் தெரிவித்தார். இதனை கேட்டு திகைத்துப்போன பிரியா காம்ப்ளே மற்ற குழந்தைகளையும் கவனித்தார். அங்கிருந்த மேலும் 3 குழந்தைகளுக்கும் இதே போன்று டேப் ஒட்டப்பட்டு இருந்தது.

    இதுபற்றி அவர் முன்னாள் கவுன்சிலர் ஜக்ருதி பாட்டீலிடம் தெரிவித்தார். அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்ட நர்சை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.

    • சோபா ராணி அணுகிய இளம் பெண் தன்னுடைய குழந்தையை விற்க உள்ளதாக தெரிவித்தார்.
    • டாக்டர், குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கொடூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 60 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    குழந்தையை வளர்க்க போதிய வருமானம் இல்லாததால், குழந்தையை விற்க முடிவு செய்தார்.

    அதன்படி பீர்ஜாதி குடா மாநகராட்சி உட்பட்ட ராமகிருஷ்ண நகரில் சோபா ராணி என்ற ஓமியோபதி டாக்டர் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். சோபா ராணி அணுகிய இளம் பெண் தன்னுடைய குழந்தையை விற்க உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து இளம் பெண்ணிடம் டாக்டர் சோபா ராணி ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்தார்.

    நேற்று காலை இளம் பெண் தன்னுடைய பெண் குழந்தையை சோபா ராணி இடம் ஒப்படைத்தார்.

    தகவல் அறிந்த தன்னார்வளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டாக்டர் சோபா ராணி குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பச்சிளம் குழந்தையை தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பச்சிளம் குழந்தையை பாதுகாப்பாக தூக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
    குழந்தைகள் என்றாலே ஒரு தனி சந்தோசம், உற்சாகம் நமக்கு தானாக பிறந்துவிடும். அப்படி கைக்குழந்தைகளை நாம் பார்க்கும் போது தூக்க வேண்டும், செல்லமாக விளையாட வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் நமக்கு எழுவதும் உண்டு. அதை ஒரு மாதிரி நாம் நிறைவேற்றுவதும் உண்டு.

    ஆனால் கைக்குழந்தைகள் விஷயத்தில் 100 சதவீதம் கவனமாக இருக்கவேண்டும். சிலர் தங்கள் ஆசைக்கு குழந்தைகளை விரும்பம் போல் கையாள்வார்கள். ஆனால் அது ஆபத்தில் தான் முடியும்.

    பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை சரியாக நிற்காமல் இருக்கும். இந்த பருவத்தில் குழந்தையை சட்டென்று தூக்குதல் மிகப்பெரிய ஆபத்தான செயல்.

    அதே நேரம் குழந்தையைச் சரியாகத் தூக்காமல்போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி போன்ற கஷ்டங்கள் வந்துவிடும். இப்படி வந்தால் எங்களில் பலர் உடனே சுய மருத்துவம் செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் இப்படி செய்தல் ஆகாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அத்துடன் குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். இதை பலர் சரியாக செய்வதில்லை.

    மீண்டும் கை அணைப்பில் இருந்து இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்கவேண்டும்.

    இப்படி குழந்தைகள் விஷயத்தில் நாம் நிறைந்த கவனம் செலுத்த வேண்டும்.

    பிறந்த குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து உரம் விழலாம். பிறந்த குழந்தையை சரியாக தூக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
    தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது.

    பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும்.

    திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.

    பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
    உறவினர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். #WestBengal
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும் 48 வயதுடைய நபருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். மேலும், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, பேரக்குழந்தைகளும் உள்ள நிலையில், அவரது மனைவி மீண்டும் கருவுற்றார்.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, சப்திபாரி கிராமத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு கணவன்- மனைவி இருவரும் சென்றபோது, மனைவி குழந்தையை பெற்றெடுத்தார். 48 வயதில் குழந்தை பெற்றதால், தனது சொந்த பிள்ளைகள் முன்பு அவமானமாக இருக்கும் எனவும், மேலும் உறவினர்களும் கிண்டல் செய்வார்கள் என்பதால் பிறந்த குழந்தையை கொன்று அருகில் இருந்த குளத்தில் வீசியுள்ளனர்.

    பச்சிளம் குழந்தை குளத்தில் இறந்து மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் அளித்தனர். போலீசார் சமபவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது, பெற்றோரே குழந்தையை கொன்று வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பெற்ற தாயும் தந்தையுமே, குழந்தையை கொலை செய்து குளத்தில் வீசிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.
    இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 1,000 குழந்தைகளில் 34 பேர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் 10 சதவிகிதக் குழந்தைகள் `பிறவி இதயக் குறைபாட்டால்' பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு.

    பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருப்பதை பிரசவம் செய்யும் மருத்துவரோ அல்லது உடனிருக்கும் செவிலியரோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ரத்த ஓட்டம் காரணமாகப் பிறந்த குழந்தை சிவப்பாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால், ஏதோ கோளாறு இருக்கலாம்.

    இந்தக் குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, இதயத்தில் ஓட்டை இருப்பது. இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, `சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்’ (Synaptic Congenital Heart Disease). இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீல நிறத்தில் மாறிவிடுவார்கள். இந்தக் குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். தொடர் சிகிச்சைகள் அளித்தாலும், ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, காப்பாற்றுவது கடினம்.

    பிறவி இதயக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

    * மரபணுக் குறைபாடு
    * பெற்றோர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பது
    * கர்ப்பமாக இருக்கும்போது அதிக மாத்திரைகள் சாப்பிடுவது
    * கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது
    * கர்ப்ப காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
    * ருபெல்லா தடுப்பூசி (Rubella Vaccine) போடாமல் விடுவது.


    பிறவி இதயக் குறைபாடு வராமல் பாதுகாப்பது எப்படி?

    * சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
    * ருபெல்லா தடுப்பூசி குறித்துப் பெண்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம்.
    * கருவிலேயே குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து (Fetal Heart Screening) சிகிச்சையளிக்கலாம்.
    * பெற்றோர்களுக்கு மரபணுக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.

    உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 9 குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அந்த 9 குழந்தைகளில், மூன்று குழந்தைகள் தீவிர பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது பொதுவான புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இதற்கான கணக்கெடுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. முறையாகக் கணக்கெடுத்தால்தான் எத்தனை குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். இத்தனை குழந்தைகளுக்கும் அறுவைசிகிச்சை செய்து, சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இருக்கிறதா என்றால், பதில் கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகள் நல மருத்துவமனை (Institute of Child Health and Hospital) சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் நிறுவி, இதற்கான சிகிச்சைகளைச் செய்தால் குழந்தைகள் இறப்பைத் தடுத்துவிடலாம். 
    ×