search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parent"

    • பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக முருகன் (வயது 51) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் முருகனை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தலைமை ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
    ‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்’ அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்ககூடிய வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்வது என்றால் இவை போன்றவற்றைக் கேட்பது இனிமையான ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை தவறு இழைத்தல் என்பது ஒன்றும் மோசமான செயல் அல்ல.

    எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.

    மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.

    இன்னும் ஒருபடி மேலாக, சின்னசின்ன விடுமுறை காலங்கள் பின்னாளில், பெரிய நிறைவேறுதல்களாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளரும்பட்சத்தில், எண்ணற்ற புதிய அனுபவங்களைப் பெறுகின்றது. இது அவர்கள் விரைவாக வளர்வதைக் காட்டுகின்றது. மகிழ்ச்சி நிறைந்த குழந்தை எளிதாக வாலிபப் பருவத்தினை ஏற்றுக்கொள்வதோடு, புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றது.



    உண்மை என்னவென்றால் பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.

    தனிமைப்படுத்துதல் நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.

    உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.

    குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.

    பெற்றோர் கார் வாங்கித்தராததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    உசிலம்பட்டி மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார்.

    இந்த நிலையில் கார்த்திக் தனது தந்தையிடம் ‘எனக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டார். அதற்கு ‘நான் ரூ.50 ஆயிரம் தருகிறேன். மீதிப்பணத்தை நீ தயார் செய்து கொள்’ என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.

    இதையடுத்து கார்த்திக் பல இடங்களில் கடன் வாங்க முயற்சி செய்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சீனி (40). மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் பணியில் இருந்த சீனி நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
    குழந்தை தத்தெடுப்புக்காக தமிழகத்தில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தை தத்தெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்குக் காரணம் பதிவு செய்திருக்கும் அளவிற்கு குழந்தைகள் இல்லாததே. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக ‘குழந்தைப் பேறின்மை’ உருவெடுத்து நிற்கிறது.

    நகரங்கள்தோறும் பெருகியிருக்கும் கருத்தரிப்பு மையங்கள், அதில் குவியும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என சொல்லிக்கொண்டே செல்லலாம். அவற்றில், நேரத்தையும் பணத்தையும் செலவிட விரும்பாத சிலர், காப்பகங்களில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், அதன் நடைமுறைகளை அறியாமல், இடைத்தரகர்கள், நண்பர்கள் காட்டும் குறுக்கு வழிகளில் சென்று சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை வாங்குகிறார்கள். இதனால் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் பெருகியுள்ளன.

    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே முறையானது. பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

    சமூகத்தில் ஆதரவற்ற, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பப் பாதுகாப்பை அமைத்துத்தருவதே தத்தெடுத்தலின் நோக்கம். இதற்காகவே மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மத்திய தத்துவள ஆதார மையம்’ செயல்படுகிறது.

    சுருக்கமாக இதை ‘கர’ என்று அழைக்கிறார்கள். இதுபோக அனைத்து மாநிலங்களிலும் ‘மாநில தத்துவள ஆதார மையம்’ இருக்கின்றன. தமிழகத்தில், சமூக நலத்துறை ஆணையர் தலைமையில் ‘தத்துவள மையம்’ செயல்படுகின்றது.

    தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். 4 வயதுடைய குழந்தையை தத்தெடுக்க, அந்த தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4 முதல் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க, தம்பதியின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகளும் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குழந்தைகளை தத்தெடுப்பதே சிறந்த வழி. இடைத்தரகர்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கும் போது, பல்வேறு சட்ட சிக்கல்களும் வரும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படலாம். பாசமாக வளர்த்த குழந்தைகளும் கைவிட்டு போகக்கூடிய சூழலும் வரலாம் என்பதால் இதில் மிகவும் கவனம் தேவை.
    குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.
    சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

    குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும்.

    நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம். குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும்.

    கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும். முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.

    ‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும். பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும். அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும். பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும்.

    என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்குதா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி. குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

    குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

    அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி. மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.
    சில குழந்தைகள், பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்கு சிரமப்படும். காரணம், பிரசவம் வரை தாயின் கருவறைச் சூழலில் இருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்கு பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள்தான்.
    சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருக்கும். இதனால் தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்சினை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநல பிரச்சினைகளும் பிரசவித்த தாய்க்கு ஏற்படக்கூடும்.

    சில குழந்தைகள், பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்கு சிரமப்படும். காரணம், பிரசவம் வரை தாயின் கருவறைச் சூழலில் இருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்கு பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள்தான். தாயின் வயிற்றுக்குள் பனிக்குடத்தில் இருக்கும் குழந்தை, தன் அம்மா நடக்கும்போதும், குனிந்து நிமிரும் போதெல்லாம், பனிக்குடத்தில் தூளி ஆடுவதுபோல, ஆடிக்கொண்டே உறக்கத்தில் இருக்கும்.

    இரவு அம்மா தூங்கும்போது அதற்குத் தூளி அசைவு கிடைக்காது என்பதால், தூக்கம் வராமல் விழித்துக்கொள்ளும். இதனால்தான் கர்ப்பிணிகள் பகலைவிட இரவு நேரத்தில் தங்கள் சிசுவின் அசைவுகளை அதிகமாக உணர்வார்கள். இந்த தூக்க முறையை, சில குழந்தைகள் பிறந்து நான்கு மாதங்கள் வரையிலும் தொடர்வார்கள். இரவில் குழந்தைகள் தூங்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம். இந்த முறையை மாற்றுவதற்கு, குழந்தையின் பகல் தூக்கத்தின் அளவைக் குறைப்பதிலிருந்து ஆரம்பித்து சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.

    பகல் நேரத்தில் குழந்தையைக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் சாத்தப்பட்ட கும்மிருட்டு சூழலில் தூங்க வைக்காமல், இயல்பான வெளிச்சம் உள்ள சூழலில் உறங்க வைக்கலாம். இது நீடித்த உறக்கத்தை தவிர்க்கச் செய்யும். இரவில் குழந்தை உறங்கும் அறை வெளிச்சம், ஓசைகள், ஒளிர்திரைகள் இன்றி இருக்க வேண்டும்.

    குழந்தைக்கு வீட்டுப் பெரியவர்களின் பேச்சு, கிரைண்டர், மிக்ஸி, தொலைக்காட்சி போன்ற சத்தங்களைப் பழக்க வேண்டும். அப்போதுதான் புற ஒலிகளுக்கும், புறச்சூழலுக்கும் இணக்கம் ஆவார்கள். கடைகளில் ‘நேப் பெட்‘ என்பது கிடைக்கும். அது கருவறை போன்றதோர் உணர்வை கொடுக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி குழந்தைகளை உறங்க வைக்கலாம்.

    குழந்தை விழித்திருக்கும்போது பாலூட்டுவது, குளிக்க வைப்பது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது என அம்மாவுக்கு தொடர்ச்சியாக வேலை இருந்துகொண்டே இருக்கும். அதனால், பகலோ இரவோ, குழந்தை உறங்கும் நேரமெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

    தூக்கமின்மை பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிற தாய்மார்கள், இரவு வேளைகளில் தூக்கம் தொலைக்காமல் இருக்க, பிரஸ்ட் பம்ப்‘ மூலம் பாலை எடுத்துச் சேமித்து வைத்து, குழந்தைக்கு வேறு யார் மூலமாகவாவது அதைப் புகட்டச் சொல்லலாம். பசி, அழுத்தும் உடைகள், மூச்சு விடுவதில் சிரமம், உடல்நலக் குறைவு எனக் குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுவதற்குக் காரணங்கள் பல என்பதால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும்.
    பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
    பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

    * குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

    * தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

    * தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

    * தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.

    * தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

    * குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.

    * குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.

    * குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.

    * குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.

    * தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.
    குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. பெற்றோர் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.
    குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் கணினித்திரையையும், டிவி திரையையும் பார்ப்பதும், பொம்மைகளுடன் விளையாடுவதுமாக கழிகிறது அவர்களுடைய பொழுதுகள். இதுபோன்ற சூழலில் சூழல்களில் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பு குறைந்து, கேட்பது மட்டுமே நடக்கிறது. ஒரு விஷயத்தை எப்படிப் பேச வேண்டும் என்பது தெரியாமல் குழந்தைகள் வளர நாம் காரணமாகிறோம். இடம், பொருள் அறிந்து பேச வேண்டிய தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை.

    * பெற்றோர் குழந்தைகளுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.

    * குழந்தைகள் தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில் அதிக நேரம் செலவளிப்பதைக் குறைப்பது அவசியம். இவற்றில் நேரம் செலவளிக்கும்போது பெரும்பாலும் அவர்கள் பேசுவதில்லை.

    * மற்ற குழந்தைகளுடன் இணைந்து புத்தகம் வாசிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

    * குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பின் தூக்கம் பிடிக்கும் வரை கதை புத்தகங்கள் வாசித்துக் காட்டலாம். இதனால் கற்பனை வளம் கூடுவதுடன் மொழி வளமும் அதிகரிக்கும்.

    * குழந்தைகள் விரும்பும் வகையில் கலர்புல்லான படங்கள் கொண்ட புத்தகங்களை அறிமுகம் செய்வதோடு குழந்தைகளிடம் அது பற்றிய கற்பனை மற்றும் கதைகளைச் சொல்ல வைத்துக் கேட்கலாம். மழலை மெல்ல மெருகேருவதை உணரலாம்.

    * குழந்தைகள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள். அறிவில் சேகரிக்கும் விஷயங்கள் மொழியிலும் வெளிப்படும்.

    * குழந்தைகளுக்கு உறவுகளை அறிமுகம் செய்யுங்கள். அவர்களைச் சந்தித்து உறவாடவும், உறையாடவும் வாய்ப்பளிக்கலாம். இதன் வழியாக அவர்கள் உற்சாகத்துடன் பேசிப்பழகுகின்றனர்.

    * குழந்தைகளை விடுமுறை நாட்களில் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள மார்க்கெட், கோயில். பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் பார்க்கும் பொருட்கள் பற்றிப் பேச வேண்டும்.

    * குழந்தைகள் தங்களது தேவைகளை வாய்விட்டு கேட்கப்பழக்குங்கள். எது வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கட்டும். நிறைய சிந்திக்கவும், சிந்தித்ததை வார்த்தைகளில் பரிமாறிக் கொள்ள வாய்ப்பிருக்கும் பட்சத்தில் குழந்தைகள் மொழி அழகும், மேன்மையும் பெறுகிறது.

    * புதிய நபர்களை எப்படி பேச்சில் அணுக வேண்டும் என்பதற்கு நீங்களே ரோல்மாடலாக இருங்கள்.

    * குழந்தைகள் பெரும்பாலும் உங்களிடம் இருந்தே பல விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். எதைப் பேசும்போதும் கவனத்துடன் செயல்படுங்கள்.

    * மேடையில் பலர் முன் பேச பயப்படும் குழந்தைகளை அவரது நண்பர்கள் மத்தியில் பேசப் பழக்குங்கள். நன்றாகப் பேசும்போது பாராட்டுங்கள். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அது அவர்கள் மொழியில் வெளிப்படும்.
    தற்போதுள்ள குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.
    பெற்றோர்களுக்கு இருக்கும் பொதுவான புகார்களில் ஒன்று, அவர்களுடைய குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை என்பதே. உங்கள் குழந்தை 10 வயதிலேயே குண்டான, உடல் பருமன் தொல்லை இருப்பவராக மாறும் வரை காத்திருக்காதீர்கள். பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.

    * ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்குவதற்கு முன்பு, ஆரோக்கியமான ஷாப்பிங்கைத் தொடங்குவது முக்கியமானது. விவசாயிகள் சந்தைக்கும், ஆர்கானிக் கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்களுக்கும் நேரடியாக குழந்தைகளை அழைத்து செல்லுங்கள், அப்போதுதான் பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு இடையே உங்கள் குழந்தைகளால் வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்.

    * உணவு உண்ணும் செயல்முறையில் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமான அளவில் ஈடுபடுத்த, அவர்களையே பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும். அவர்களே தேர்ந்தெடுத்த ஃப்ரெஷ்ஷான பொருட்களை வைத்து, என்ன சமைக்கலாம் என்று அவர்களிடம் கேட்கலாம், தேர்ந்தெடுக்கும், முடிவெடுக்கும் ஆற்றல் தம்மிடம் இருப்பதாகத் தெரிந்து கொள்ளும் குழந்தைகள், உணவைக் குறித்து இன்னும் நேர்மறையாகவும், சோதனை முயற்சிகளுக்கு தயாராகவும் உணர்வார்கள்.



    * குழந்தைகளை, நீங்கள் சமைக்கும்போதும் உணவுப்பொருட்களை சுத்தம் செய்யும்போதும் உங்களுடன் வேலைசெய்ய கூறுங்கள், அதில் உணவு சமைப்பதற்கான முன்னேற்பாடுகளான, நறுக்குதல், வெட்டுதல் போன்ற வேலைகளும் உள்ளடங்கும். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கத்திகளை குழந்தைகளிடம் தருவதன் மூலம், அவர்களையும் நறுக்கும் வேலைகளில் ஈடுபடுத்தலாம். இறுதி வரை இந்த வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உணவை சுவைத்து பார்க்க, எப்படி இருக்கிறது என்று கேட்க, இன்னும் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கவும். இதனால் அவர்கள் உணவு செய்யும் செயல்முறையின் ஒரு அங்கமாக தங்களை உணர்வார்கள், உணவுக்கு உரிமைதன்மையை உணர்ந்து கொள்வார்கள். பிறகு, உணவு ஒரு முழுமையான சரிவிகித உணவாக எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள தொடங்குவார்கள்.

    * நீங்கள் பார்ப்பதைத்தான் சாப்பிடுவீர்கள். உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ் அல்லது கிச்சன் மேடைகளில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் இடுபொருட்களைக் காட்சிப்படுத்துங்கள். அதிக கலோரி உணவுகள், பதப்படுத்திய உணவுகள், சோடா மற்றும் இனிப்புகள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    * நீங்கள் சமைக்கும்போதே, உங்கள் குழந்தைகளை ஒரு உணவில் இடவேண்டிய இடுபொருட்களைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அப்போது, நீங்கள் ஒரு கறியை சமைக்கிறீர்கள் என்றால், அதில் என்னென்ன காய்கறிகளை சேர்க்க விரும்புகிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் கேட்கவும். அது, உணவு தொடர்பான சிந்தனையைத் தூண்டும். அதுமட்டுமல்லாமல்,  பல்வேறு வகையான மசாலா மற்றும் ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தவும். இது நல்ல வழிமுறையாக இருக்கும், இதனால்,உங்கள் குழந்தையின் சுவை உணர்வு மற்றும் விருப்பங்கள்  பல்வேறு சுவைகளையும் அறியக்கூடியதாக மாறும்.
    பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.
    பெற்றோர்க்கு இடையிலான விவாகரத்து பிரச்சனையால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.

    குழந்தைப் பருவ ஆரோக்கிய வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் சரியாக கிடைக்காமல் தன்னை மாற்றுத்திறனாளிக்கு இணையாக நினைப்பதுடன், அச்சூழல் குழந்தைகளை வன்முறை குணம் கொண்டவர்களாகவும் மாற்றிவிடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா-அப்பா இருவரிடமும் இருந்து அன்பான அரவணைப்பும், அச்சமில்லாத வளர்ப்பு முறையும் கட்டாயம் கிடைக்க வேண்டும்.

    எல்லா பிரச்னைகளும் மனம் விட்டுப் பேசித் தீர்க்கக் கூடியவையே. கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அதனை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான்.

    அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும். மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது.

    குழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே.

    உங்கள் குழந்தை பலர் போற்றும் வண்ணம் இன்பமாய் வாழவேண்டுமா அல்லது தங்களால் வாழ்க்கையையே இழக்க வேண்டுமா என்பது பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
    முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும்.
    இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பது இன்னமும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதுபற்றி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கல்வி முறை பற்றி விரிவாக கூறியிருக்கிறது.

    இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இது இந்திய கல்வித்துறையின் குறைபாடுதான். சில வேளைகளில் பணத்தின் அளவு கல்லூரியின் உண்மையான கட்டணத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

    ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஒரு கோடி மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இருப்பதோ 20,769 கல்லூரிகளும் 490 பல்கலைக்கழகங்களும்தான். இதில்தான் ஒரு கோடி மாணவர்களும் சேருவதற்கு போட்டி போடுகிறார்கள். இந்த கல்லூரிகளிலும் சில மட்டும்தான் அதற்கான தகுதியை பெற்றிருக்கின்றன. மற்றவையெல்லாம் பெயரளவுக்குத்தான் கல்லூரிகள். இந்த நிலை பொதுவான பாடங்களுக்கு மட்டும்தான்.

    இதுவே தொழில்நுட்பக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி என்று வருகிறபோது நிலைமை மேலும் மோசமாகிறது. ஒரு வருடத்திற்கு 32,000 மருத்துவர்களும், 5 லட்சம் என்ஜினீயர்களும் தான் பட்டம் பெற முடியும். இதனால் ஏராளமான பணம் தருபவர்கள் மட்டுமே நன்கொடை கொடுத்து படிக்க முடியும்.

    மேலும் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். ஆனால், பட்ட மேற்படிப்பு படிக்க இருக்கும் இடங்களோ 5 லட்சத்து 41 ஆயிரம் மட்டும்தான். நான்கில் ஒருவரே பட்டமேற்படிப்பை பெறமுடிகிறது. தேவை, வினியோகம் என்ற பொருளாதார கோட்பாட்டின்படி பார்த்தால் பட்டப்படிப்புக்கும் ரூ.10 லட்சம் செலவாகிறது என்றால் பட்ட மேற்படிப்புக்கு மேலும் பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

    இந்தியாவில் நன்கொடை மிக அதிகம் என்பதால் இதே படிப்பை வெளிநாடுகளில் படிக்க மாணவர்கள் விருப்பப்படுகிறார்கள். அங்கு இந்தியாவைவிட குறைந்த செலவில் பட்டம் பெற முடியும் என்பதே இதற்கு காரணம். இந்த நிலை மாற கல்லூரிகளில் போதுமான இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெரும் முதலீட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தரமான கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பெறுவதற்கே பணம் செலவழிக்க வேண்டியிருப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வு.

    முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும். நான்கு வழிச்சாலை, புல்லட் ரெயில் என்று கோடிக்கணக்கான பணத்தை திட்டங்களுக்காக செலவழிக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் நாடான இந்தியாவில் கல்வியை இலவசமாக கொடுப்பதும் சாத்தியமே என்கிறது அந்த ஆய்வு.
    இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும்.
    இளைஞர்கள் நிறைந்த இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ.எஸ்.ஏ. என்ற அமைப்பு உலக அளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய ஓர் ஆய்வு நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்கள்.

    73 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில் நம் நாட்டின் தரவரிசை 72 ஆக இருந்தது. ஆகவே, பள்ளிக்கல்வியிலே நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண வேண்டும். தரத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் சுமார் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

    உலகிலேயே பள்ளிகளின் அதிக எண்ணிக்கை இது தான். இதிலே சுமார் 75 சதவீதம் அரசுப்பள்ளிகள், மற்றவை தனியார் பள்ளிகள். அரசுப்பள்ளிகளின் வெற்றிதான் நம் நாட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை முடிவு செய்யும். இதில் 3-ல் ஒரு பகுதி பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே படிக்கிறார்கள். அங்கே சராசரியாக இருக்க வேண்டிய எண்ணிக்கையைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். மற்ற பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை அமர்த்துவது இல்லை.

    பள்ளிக்கல்வியின் தர வரிசையில் உலகின் முதல் இடத்தில் இருப்பது தென்கொரியா. அந்த நாட்டில் ஆசிரியர்களுடைய தகுதியே மிக உயர்வானது. ஆசிரியர்களின் ஊதியம், அவர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு அனைத்துமே வியக்கத்தக்கவை. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களாக விண்ணப்பித்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் பேர்தான் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் கடுமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சிக்கு பின்னர்தான் அவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இரண்டு தரப்புக்குமே அரசாங்க நிதியுதவி கிடைக்கிறது. சில பெற்றோர்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவியும் செய்கிறது. அவர்களுடைய வேலை நாட்களும், வேலை நேரமும் நம் நாட்டைவிட மிக அதிகம்.

    ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள். பாதி நேரம் பொதுவான வகுப்புகளும் மீதி நேரம் தனி பயிற்சியும் நடக்கிறது. நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. அதிலே ஒரு பகுதியினர்; பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே சான்றிதழ் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

    இது அரசுகளுக்கு தெரிந்தே நடக்கிறது. ஆசிரியர்களை அரசு வேலைக்கு அமர்த்துவது எல்லா நேரங்களிலும் தகுதியை மட்டுமே வைத்து அமர்த்துவது இல்லை. ஆசிரியர் ஆவதற்கு பணச்செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிபட்டவர்கள் பள்ளியில் சேர்ந்த பின்னால் வேறு ஏதாவது தொழில் செய்து பணத்தை ஈட்ட முனைகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

    அரசுப் பள்ளிகளைப் பற்றிய ஓர் ஆய்வில், ஆசிரியர்கள் சுமார் பாதிபேர் வேலைக்கு வருவது இல்லை என்று தெரியவருகிறது. மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் அரசின் கொள்கை முடிவுப்படி 8-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் மேல் வகுப்பிற்கு தகுதி பெற்றுவிடுகிறார்கள். இந்த முடிவு கல்வித்தரத்தையே கேள்வி குறியாக்கிவிட்டது. அமெரிக்க நாட்டில் அரசுப்பள்ளிகளை உள்ளாட்சிகள் நடத்துகின்றன. எந்தப் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த பகுதிக்கு மக்கள் அதிகமாக குடியேறுகிறார்கள். அவர்கள் மூலம் அந்த உள்ளாட்சிக்கு வரித்தொகை அதிகமாக கிடைக்கிறது. இதன்விளைவாக உள்ளாட்சிகள் தங்களுக்குள் போட்டிபோட்டு பள்ளிகளை திறமையாக நடத்தி தரத்தை உயர்த்துகின்றனர்.

    இன்னொருபுறம் ஒரு புதுமையாக சார்ட்டர் பள்ளிகள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாநில அரசுகள் கொடுக்கும். ஆனால் நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற சார்ட்டர் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக வளர்ந்து வருகின்றன. நம் நாட்டிலும் அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் தருணம் வந்துவிட்டது. அரசு அலுவலர்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் அரசின் கவனம் அரசு பள்ளிகளின் பக்கம் திரும்பும்.

    ஆசிரியர்களின் பயிற்சி முறையை இன்னும் பலப்படுத்த வேண்டும், கடுமையாக்க வேண்டும். அரசில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதியை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்வு செய்ய வேண்டும். பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு இந்த மூன்றிலேயும் ஊழல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறையில்லாமல் செய்து தர வேண்டும். திறமையான நிர்வாகத்திற்கு புதிதாக வழிவகை செய்ய வேண்டும்.

    தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு எந்த உதவியும் செய்வது இல்லை. 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்று சட்டம் இயற்றி இருந்தாலும் தனியார் பள்ளிக்கு இது பொருந்தாது. 14-லிருந்து 18 வயது வரை உயர்த்தப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கும், அங்கு படிக்கும் குழந்தைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். தற்போது நம் நாட்டில் பல்வேறு அனுமதிகள் பெறுவதற்காக பள்ளிகள் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

    இதன் மூலம் கல்விச் செலவைக் குறைக்கலாம். தனியார் பள்ளிகளில் தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவது இல்லை. இதை மாற்றுவதற்கு மாநில அரசுகள் தனியார் நிர்வாகங்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் தென்கொரியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு நம்முடைய குழுக்களை அனுப்பி அவர்களுடைய அனுபவத்தை கண்டறிந்து நாம் கடைபிடிக்க வேண்டும்.

    பின்லாந்து நாட்டைப்போல் கல்விக் கொள்கையை போல் நிரந்தர நிலை ஏற்படுத்துவதற்காக அரசும், எதிர்க்கட்சியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். மக்களாட்சி மாண்புற வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் காண வேண்டுமானால் கல்விக்கு அதிகமான தொகையை செலவழித்து வளர்ந்த நாடுகளுடன் நாமும் போட்டிபோட வேண்டும். அப்போது நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    ஜி.விஸ்வநாதன் வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
    ×