என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெற்றோர் கார் வாங்கித்தராததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை:
உசிலம்பட்டி மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில் கார்த்திக் தனது தந்தையிடம் ‘எனக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டார். அதற்கு ‘நான் ரூ.50 ஆயிரம் தருகிறேன். மீதிப்பணத்தை நீ தயார் செய்து கொள்’ என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.
இதையடுத்து கார்த்திக் பல இடங்களில் கடன் வாங்க முயற்சி செய்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சீனி (40). மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் பணியில் இருந்த சீனி நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்