search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver suicide"

    • பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லரி மற்றும் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த வழக்கில் அதன் உரிமையாளர்கள் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம் (50) என்பவர், அவரது உறவினர்கள் உள்பட பலரிடம் மொத்தமாக ரூ.1 கோடி வரை வசூல் செய்து, ஏ.ஆர்.டி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஏ.ஆர்.டி. நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட தகவலறிந்ததும் பணம் கொடுத்த உறவினர்கள், பன்னீர் செல்வத்தை தகாதவார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, பணத்தை திருப்பி தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பன்னீர்செல்வம் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில், பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

    பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் பலர் போலீஸ் நிலையத்தில் ஒன்று கூடியதால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து அம்பத்தூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.

    • கிரி பாபு மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
    • தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த மதுரா நகரை சேர்ந்தவர் கிரி பாபு (வயது 27). கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி, ராஜேஸ்வரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 மாத குழந்தை உள்ளது.

    கிரி பாபு மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அப்பலாய குண்டாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    நேற்று முன்தினம் மனைவிக்கு போன் செய்த கிரி பாபு குடும்பம் நடத்த வரவேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஸ்வரி உன்னுடைய நடத்தை மாற்றிக் கொண்டால்தான் வருவேன் என்றார். நீ குடும்ப நடத்த வரவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என கிரி பாபு தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று கிரி பாபு வாட்ஸ்அப் வீடியோ காலில் மனைவிக்கு போன் செய்தார். மின்விசிறியில் கயிறை தொங்கவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

    இதனைக் கண்ட ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கணவரிடம் கெஞ்சினார். இருப்பினும் கிரி பாபு மனைவியை பார்க்க வைத்து மின்விசிறியில் தூக்கில் தொங்கி இறந்தார்.

    இதுகுறித்து ராஜேஸ்வரி அலிப்பிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரி பாபு பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், சைதாப்பேட்டை, சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர்.

    மதுவுக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் மது போதையில் வந்து அவரது மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெங்கடேசன் மாமியார் வீட்டிற்கு சென்று பலமுறை குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். அவர் வர மறுத்ததால் விரக்தியில் இருந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் தனியார் தொலைக்காட்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
    • திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் ராஜா கிராமணி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். 48 வயதான இவர் தனியார் தொலைக்காட்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் நேற்று இரவு சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் எதிரில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக அவர் தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்தும் வீடியோ வெளியிட்டும் தகவல் தெரிவித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் மனைவி அளித்த தகவலின் பேரில் பத்திரிகையாளர் மன்றத்தில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோதுதான் மணிகண்டன் தூக்கில் தொங்கி உயிரை விட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மணிகண்டன் சக ஊழியர் திட்டியதால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    • சிவக்குமார் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.
    • வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே மாரப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவரது மனைவி புவனேஸ்வரி (42).

    சிவக்குமார் சென்னையில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணம் ஆகாததால் மாரப்பம்பாளையம் புதூரில் உள்ள தனது தாய் தனலட்சுமி வீட்டிற்கு வந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டு மேற்கூரையின் இரும்புக் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார். இதுபற்றி ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க கோரி தகராறு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வீரபாஞ்சாலி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). இவரது மனைவி குமாரி(52), இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் அசோக்குமார்(28), பொக்லைன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குடித்து விட்டு தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த திருவிழாவிலும் திருமணம் செய்து வைக்க கோரி மது போதையில் குடும்பதினருடன் சண்டை போட்டு விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்இலை.

    இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் ஊருக்கு அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் அசோக்குமார் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளனர். உடனே இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 29) குடிநீர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இன்று அதிகாலை சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
    • பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வாலிபருடன் திருமணமாகிவிட்டது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சின்ன வைரவன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 26). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராமச்சந்திரன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

    இதற்கிடையே தென்காசி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ராமச்சந்திரனின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ராமச்சந்திரன் என்பது உறுதியானது.

    தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று ராமச்சந்திரன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ராமச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வாலிபருடன் திருமணமாகிவிட்டது.

    இதனால் ராமச்சந்திரன் மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    • டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் டிரைவர் தூக்கில் தொங்கி உள்ளார்.
    • டிரைவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (38). இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபுரிந்த வந்தார்.

    இவருக்கு சுனிதா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் ஒருவருடன் அலாவுதீன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி அலாவுதீனின் மனைவியிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கர்நகர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் அலாவுதீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவர் தூக்கில் தொங்கி உள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இருந்தது. அதில் அலாவுதீன் கூறி இருப்பதாவது:-

    ஆஸ்பத்திரியில் நான் ஒரு பெண்ணுடன் சகஜமாக பேசுவதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அந்த பெண்ணுடன் என்னை தொடர்புபடுத்தி பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது சாவுக்கு ஆஸ்பத்திரி உரிமையாளரும், மேலும் சில பெண் ஊழியர்களுமே காரணம். என்னையும் அந்த பெண்ணையும் அவமானப்படுத்தியதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் தற்கொலை செய்கிறேன்.

    இவ்வாறு அலாவுதீன் வீடியோவில் வாக்குமூலம் போன்று பதிவு செய்து வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • மனைவி செலவுக்கு பணம் தராததால் விபரீத முடிவை எடுத்தார்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    கோவை:

    கோவை தடாகம் அடுத்த பன்னிமடை அறிவு நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 42). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் அவர் கடந்த ஒரு வாரமாக வேைலக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று துரைராஜ் தனது மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டார்.

    அப்போது அவரது மனைவி தன்னிடம் பணம் இல்லை என்று அறிவுரை கூறினார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை தென்சங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). எலக்ட்ரீசியன். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் 38. ஆட்டோ டிரைவர்.

    புதுச்சேரி:

    மனைவி குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் 38. ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி பச்சைவாழி மகள் லட்சுமி தேவி மகன் ஆகாஷ் ஆகியோருடன் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    தியாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்தது கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டு தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்துவந்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த தியாகராஜன் தனது மனைவி, குழந்தைகளை விஷம் வைத்து கொண்டு விட்டு தியாகராஜனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தியாகராஜன் தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு ஆடியோ ஒன்று வெளியிட்டது தெரியவந்தது. தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் தற்கொலைக்கு 3 பேர் காரணம் என தற்கொலை செய்து கொண்ட தியாகராஜ னின் ஆடியோ பதிவு வாக்குமூலத்தை அவரது அண்ணன் பூரணாங்குப்பம் மதியழகன் (வயது38) அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.

    கடன் கொடுத்தவர்கள் பல்வேறு தகாத வார்த்தைகளால் திட்டி போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவு வெளியானதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த ஏலச்சீட்டு நடத்திவரும் டெய்லர் ராமச்சந்திரன் (வயது40). தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டிக் கொண்டு ஏலசீட்டு நடத்தி வரும் முத்து (வயது45). தவளக்குப்பத்தை அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமார் (வயது38) ஆகியோரை அரியாங்கு ப்பம் போலீசார் கைது செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர் கார் வாங்கித்தராததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    உசிலம்பட்டி மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார்.

    இந்த நிலையில் கார்த்திக் தனது தந்தையிடம் ‘எனக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டார். அதற்கு ‘நான் ரூ.50 ஆயிரம் தருகிறேன். மீதிப்பணத்தை நீ தயார் செய்து கொள்’ என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.

    இதையடுத்து கார்த்திக் பல இடங்களில் கடன் வாங்க முயற்சி செய்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சீனி (40). மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் பணியில் இருந்த சீனி நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×