search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேப்பாக்கத்தில் டிரைவர் தற்கொலை- போலீசார் விசாரணை
    X

    சேப்பாக்கத்தில் டிரைவர் தற்கொலை- போலீசார் விசாரணை

    • மணிகண்டன் தனியார் தொலைக்காட்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
    • திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் ராஜா கிராமணி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். 48 வயதான இவர் தனியார் தொலைக்காட்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் நேற்று இரவு சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் எதிரில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக அவர் தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்தும் வீடியோ வெளியிட்டும் தகவல் தெரிவித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் மனைவி அளித்த தகவலின் பேரில் பத்திரிகையாளர் மன்றத்தில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோதுதான் மணிகண்டன் தூக்கில் தொங்கி உயிரை விட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மணிகண்டன் சக ஊழியர் திட்டியதால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×