search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை- காதல் தோல்வியால் விபரீத முடிவு
    X

    ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை- காதல் தோல்வியால் விபரீத முடிவு

    • ராமச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
    • பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வாலிபருடன் திருமணமாகிவிட்டது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சின்ன வைரவன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 26). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராமச்சந்திரன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

    இதற்கிடையே தென்காசி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ராமச்சந்திரனின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ராமச்சந்திரன் என்பது உறுதியானது.

    தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று ராமச்சந்திரன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ராமச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வாலிபருடன் திருமணமாகிவிட்டது.

    இதனால் ராமச்சந்திரன் மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    Next Story
    ×