search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது

    • மனைவி குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் 38. ஆட்டோ டிரைவர்.

    புதுச்சேரி:

    மனைவி குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் 38. ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி பச்சைவாழி மகள் லட்சுமி தேவி மகன் ஆகாஷ் ஆகியோருடன் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    தியாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்தது கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டு தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்துவந்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த தியாகராஜன் தனது மனைவி, குழந்தைகளை விஷம் வைத்து கொண்டு விட்டு தியாகராஜனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தியாகராஜன் தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு ஆடியோ ஒன்று வெளியிட்டது தெரியவந்தது. தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் தற்கொலைக்கு 3 பேர் காரணம் என தற்கொலை செய்து கொண்ட தியாகராஜ னின் ஆடியோ பதிவு வாக்குமூலத்தை அவரது அண்ணன் பூரணாங்குப்பம் மதியழகன் (வயது38) அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.

    கடன் கொடுத்தவர்கள் பல்வேறு தகாத வார்த்தைகளால் திட்டி போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவு வெளியானதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த ஏலச்சீட்டு நடத்திவரும் டெய்லர் ராமச்சந்திரன் (வயது40). தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டிக் கொண்டு ஏலசீட்டு நடத்தி வரும் முத்து (வயது45). தவளக்குப்பத்தை அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமார் (வயது38) ஆகியோரை அரியாங்கு ப்பம் போலீசார் கைது செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×