என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மது பழக்கத்தால் பிரிந்து சென்றார்: வீடியோ காலில் மனைவியை பார்க்க வைத்து டிரைவர் தற்கொலை
- கிரி பாபு மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
- தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த மதுரா நகரை சேர்ந்தவர் கிரி பாபு (வயது 27). கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி, ராஜேஸ்வரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 மாத குழந்தை உள்ளது.
கிரி பாபு மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அப்பலாய குண்டாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் மனைவிக்கு போன் செய்த கிரி பாபு குடும்பம் நடத்த வரவேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஸ்வரி உன்னுடைய நடத்தை மாற்றிக் கொண்டால்தான் வருவேன் என்றார். நீ குடும்ப நடத்த வரவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என கிரி பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று கிரி பாபு வாட்ஸ்அப் வீடியோ காலில் மனைவிக்கு போன் செய்தார். மின்விசிறியில் கயிறை தொங்கவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
இதனைக் கண்ட ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கணவரிடம் கெஞ்சினார். இருப்பினும் கிரி பாபு மனைவியை பார்க்க வைத்து மின்விசிறியில் தூக்கில் தொங்கி இறந்தார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி அலிப்பிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரி பாபு பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்