search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமாகாத விரக்தியில் டிரைவர் தற்கொலை
    X

    திருமணமாகாத விரக்தியில் டிரைவர் தற்கொலை

    • பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க கோரி தகராறு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வீரபாஞ்சாலி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). இவரது மனைவி குமாரி(52), இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் அசோக்குமார்(28), பொக்லைன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குடித்து விட்டு தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த திருவிழாவிலும் திருமணம் செய்து வைக்க கோரி மது போதையில் குடும்பதினருடன் சண்டை போட்டு விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்இலை.

    இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் ஊருக்கு அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் அசோக்குமார் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளனர். உடனே இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×