search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவர் தற்கொலை
    X

    ஆட்டோ டிரைவர் தற்கொலை

    • மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், சைதாப்பேட்டை, சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர்.

    மதுவுக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் மது போதையில் வந்து அவரது மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெங்கடேசன் மாமியார் வீட்டிற்கு சென்று பலமுறை குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். அவர் வர மறுத்ததால் விரக்தியில் இருந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×