search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார்.
    • சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

    அதன்படி, இன்று மாலை 5.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிறகு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

    சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.

    இதையடுத்து, 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

    சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    மோடி.. மோடி.. என உற்சாக குரல் எழுப்பி, பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    வழிநெடுக நின்று வரவேற்பு கொடுக்கும் மக்களவை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார்.

    பிரதமர் மோடியுடன், வாகனத்தில் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உடன் உள்ளனர்.

    வாகனத்தில் பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.

    ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.

    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவைக்கு இன்று மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது.
    • ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் கோவையில் நடக்கும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.

    பிரதமரின் தமிழக வருகையானது, பா.ஜ.கவினருக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க.வினர் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் பிரதமரின் வருகை நம்பிக்கையை கொடுத்துள்ளது,

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான திட்டத்தை இப்போதே தொடங்கி விட்டோம்.

    பிரதமருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்றைய தினம் கோவை மக்கள் பிரதமரை வரவேற்க பேரன்போடு காத்திருக்கின்றனர்.

    தேசத்திற்கு எதிரானவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜ.க தேசத்தின் வளர்ச்சியை நோக்கி பணிகளை செய்து வருகிறது. தேசத்தை கொள்ளை அடிப்பதும், ஊழல் செய்வதும் இந்தியா கூட்டணி தான்.

    தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா தொடர்புடைய 2ஜி ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம்.

    ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பா.ஜ.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு மத்திய மந்திரி மீதோ, எம்.பிக்கள் மீதோ சிறிய குற்றச்சாட்டு கூட சொல்ல முடியாத அளவுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை பா.ஜ.க. நடத்தி வருகிறது.

    ஊழலின் மறுபக்கமாக தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் உள்ளது. பொன்முடி விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கோர்ட்டு சொல்லவில்லை என்பதே கவர்னரின் விளக்கமாக உள்ளது.

    நீலகிரியில் 2 முதல் 3 ஆண்டுகள் மக்களுக்காக பா.ஜ.க பணியாற்றி வருகிறது. கட்சி சொன்னால் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவேன். கட்சியின் கட்டளையை நிறைவேற்றுவது எனது பணி. கட்சி என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.

    பா.ஜ.க 3-வது முறையாக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கோவை பா.ஜ.க.வின் கோட்டையாக உள்ளது. ஏற்கனவே இங்கு 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். கோவையில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
    • பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.

    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும் சாய்பாபாகாலனிக்கு செல்கிறார். தொடர்ந்து வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறத்திலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    • ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    'தமிழ் தெம்பு' திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது.

    200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

    தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் 'தமிழ் தெம்பு' என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

    நிறைவு நாளான இன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) ஆதியோகி முன்பு நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இதற்காக, கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர்.

    முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது. தொடக்க புள்ளியில் இருந்து கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர் அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது. 

    ஒவ்வொரு நாட்டு மாடுகளும் காண்போரை அசர வைக்கும் வகையில் எல்லை கோட்டை நோக்கி சீறி பாய்ந்தன. 200 மீட்டர் போட்டி நிறைவு பெற்ற பின்னர் 300 மீட்டர் போட்டி நடத்தப்பட்டது. இவ்விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

    இரண்டு பிரிவிலும், முதல் இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

    2-ம் பரிசாக ரூ.50,000, 3-ம் பரிசாக ரூ.25,000, 4-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர 5 முதல் 15 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3,000-ம், 16 முதல் 30 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000-ம் பரிசு தொகையாக வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    • மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது.
    • யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

    கோவை பேரூர் அடுத்துள்ளது வேடப்பட்டி பகுதி. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பகுதிக்கு ஒற்றை காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

    பின்னர், பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் யானை புகுந்தது. அங்கு சுற்றி திரிந்த யானை, தோட்டத்தில் இருந்த மாமரத்தை பார்த்ததும் குஷியானது. மரத்தின் அருகே சென்று, மரத்தில் கால்வைத்து தனது துதிக்கையால் மாங்காய்களை ஒவ்வொன்றாக பறித்து, ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. தொடர்ந்து அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

    மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு எப்படி யானை வந்தது என்பது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர். தோட்ட வேலைக்கு செல்வோரும் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.
    • சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.

    கோவை:

    கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் கோவை வருகையை பா.ஜ.க.வினரும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். பிரதமரும் நம்மை பார்க்க ஆவலாக இருக்கிறார். பிரதமரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கோவை மக்களுக்கு கிடைத்துள்ளது.

    எதிர்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.

    பிரதமர், தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதை எதிர்கட்சிகளின் முன்தோல்வியாக தான் பார்க்கிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 28 பைசா மோடி என தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் பழக்கம் உள்ள உங்களை டிரக் உதயநிதி என்று அழைக்கலாமா?.

    தி.மு.க அரசானது மக்களுக்கு விரோதமான அரசாக உள்ளது. சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்க தயார் என மத்திய மந்திரி சொல்லியுள்ளார். இங்குள்ளவர்கள் 3 ஆண்டுகள் ஆட்சியில் எவ்வளவு வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பா.ஜ.கவை கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளிடம், அது குறித்து விளக்கம் கேட்டால் பதில் இல்லை. பா.ஜ.க வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுவது வதந்தியாக இருக்கும். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொடுக்க முடியும்.

    அதானி, அம்பானி அரசை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு சொல்லி வந்த நிலையில், அந்த நிறுவனங்கள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் தமிழகத்துக்கும் ஏற்கனவே 3 முறை வந்து ஆதரவு திரட்டி உள்ளார். தற்போது 4-வது முறையாக மீண்டும் நாளை (18-ந் தேதி) தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். நாளை கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.

    இதற்காக அவர் நாளை மாலை கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். அங்கு அவருக்கு மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் அவினாசி சாலை, புரூக்பாண்ட் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து வாகன பேரணி நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார்.

    அவர் செல்லும் வழிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு பா.ஜ.கவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



     மாலை 5.45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் சிக்னல் பகுதியில் இருந்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை தொடங்குகிறார். பேரணி நடைபெற உள்ள சாலையானது 2 வழிச்சாலையாகும். இந்த சாலையின் இடதுபுறம் வழியாக பிரதமர் மோடி பேரணியாக செல்கிறார். வலதுபுறம் பொதுமக்களும், தொண்டர்களும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியில் நின்றபடி அங்கு திரண்டு நிற்கும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    சில இடங்களில் பிரதமர் மோடி காரை விட்டு இறங்கி மக்களை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகன பேரணி மாலை 6.45 மணிக்கு ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேரை பா.ஜ.க.வினர் திரட்ட உள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசாரம் என்பதால் கோவை பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

    பிரதமர் மோடியின் வாகன பேரணி கவுண்டம்பாளையம் எரு கம்பெனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீ தூரம் வரை நடப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ரோடு ஷோவானது 2 கி.மீ தூரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

    வாகன அணிவகுப்பை முடித்து கொண்டு பிரதமர் மோடி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் காலை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கோவை விமானம் நிலையம் சென்று, கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலத்திற்கு வருகை தந்து அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளான சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், அவர் தங்க உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுதவிர ஓட்டல்கள், லாட்ஜ்கள், விடுதிகளிலும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி, கோவை சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர்.
    • பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன.

    கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் போன்ற மேற்கு மாவட்டங்கள் கொங்கு மண்டலங்கள் என அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த கொங்கு மண்டலம் தனிக்கவனம் பெறும். காரணம் இங்கு கிடைக்கும் அதிகப்படியான வெற்றி அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இதற்கு கடந்த பல தேர்தல்கள் உதாரணம் ஆகும். அ.தி.மு.க. அடுத்தடுத்து பல முறை தமிழகத்தில் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது இந்த கொங்கு மண்டலம் தான்.

    இதன்காரணமாக அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை ஏற்படுத்த முயல்கின்றன. கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அதிகப்படியாக தொகுதிகளை வென்றது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. 9 தொகுதிகளிலும், பா.ஜ.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இவ்வாறு அரசியலில் பல அதிர்ச்சிகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி விடும் இந்த கொங்கு மண்டல தொகுதிகள்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர். கடந்த 2 முறை வடநாட்டில் பெற்ற வெற்றியை கொண்டே பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது தென்மாநிலங்களை குறிவைத்து பா.ஜ.க. களமிறங்கி இருக்கிறது. அதுவும் தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதில் கொங்கு மண்டலத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை தொகுதி பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருமுறை இந்த தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதே இதற்கு காரணம் ஆகும். கோவை தொகுதி தவிர பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளையும் பா.ஜ.க. குறிவைத்துள்ளது. இந்த தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற பகுதிகளை மையமாக கொண்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயண யாத்திரையின் நிறைவு விழாவாக அந்த கூட்டம் அமைந்தது. இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த கூட்டம் பா.ஜ.க. ஓட்டாக மாறும் என அவர் கணக்கு போட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து அவர் கொங்கு மண்டலத்துக்கு நாளை மறுநாள் (18-ந் தேதி) மீண்டும் வருகை தர உள்ளார். கோவை கவுண்டம்பாளையம்-ஆர்.எஸ்.புரம் இடையே நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார். பேரணி இறுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களையும் பங்கேற்ற செய்ய பா.ஜ.க. மாநில தலைமை ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்பின் மறுநாள் (19-ந் தேதி) மீண்டும் பிரதமர் மோடி கொங்கு மண்டலத்தின் மற்றொரு பகுதியான சேலத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேச உள்ளார். அதன்பின் மற்றொரு கட்ட பிரசாரத்துக்கும் கொங்கு மண்டலத்துக்கு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் வருகையால் கொங்கு மண்டல பா.ஜ.க.வினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் வெற்றியை குறிவைத்து களப்பணியாற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளை இழந்த தி.மு.க. இம்முறை அதுபோல் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதன்காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். அவர்களின் நேரடி பார்வையில் இந்த தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வியூகம் அமைத்துள்ளனர்.

    கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை கோவை தொகுதியை வென்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என கருதிய தி.மு.க. இங்கு தங்கள் கட்சியே போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கி கொடுத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அத்தனை தொகுதிகளையும் வாரி சுருட்டி விட வேண்டும் என்ற திட்டத்தில் தி.மு.க. உள்ளது.

    அதேசமயம் கோவையில் 9 சட்டசபை தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. அதனை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பல்வேறு வியூகங்களை அமைத்து களப்பணியில் இறங்கி உள்ளனர்.

    பா.ஜ.க., தி.மு.க. அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான வேட்பாளரை களமிறக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. மேலும் பூத் கமிட்டி உள்ளிட்ட அடிமட்ட தொண்டர்களையும் அ.தி.மு.க. உஷார்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. சாதிக்குமா? என்பது தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும்.

    • பிரதமர் மோடி நாளை மறுநாள் கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
    • கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பிரதமர் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி நாளை மறுநாள் (18-ந் தேதி) கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார்.

    அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு கார் மூலம் வாகன பிரசாரத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி மாலை 6.45 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதைத்தொடர்ந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வரும் பிரதமர் இரவில் அங்கு தங்குகிறார். 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.40 மணிக்கு கோவை சர்வதேச விமானம் நிலையம் வந்தடைகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பிரதமர் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சேலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் சேலம் விமான நிலையம் செல்லும் பிரதமர் பிற்பகல் 2.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். 

    ×