என் மலர்

    கோயம்புத்தூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திரைப்பட விழாவின் இறுதி நாளின் போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஈரானிய நடிகை மஹ்லாக ஜபேரி.
    • கடந்த ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் உக்ரேனிய கொடியை உடலில் வரைந்து கொண்டு ரஷ்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.

    கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளின் போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஈரானிய நடிகை மஹ்லாக ஜபேரி. கடந்த ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் உக்ரேனிய கொடியை உடலில் வரைந்து கொண்டு ரஷ்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார். அதே போல இந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்ட மஹ்லாக ஜபேரி அணிந்திருந்த கருப்பு உடையில் கீழே மரண தண்டனையை நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.


    மஹ்லாக ஜபேரி

    அவருடைய உடையைப் பார்த்த ஊடகத்தினர் பரபரப்பானார்கள். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அவர் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் ஈரானிய மக்களுக்கு இதனை அர்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இதனால் ஈரானில் நடக்கும் மரண தண்டனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது.

    இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
    • புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரில் இருந்து உக்கடம் செல்லும் புட்டு விக்கி சாலையில் உள்ள புறக்காவல் நிலையம், புதிய கட்டிடங்கள் உடன் புனரமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அப்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், மதிவாணன், சுகாசினி, உதவி கமிஷனர் ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.

    அங்கு உள்ள போக்குவரத்து சாலையில் ஆங்காங்கே சிசிடிவி கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்படும. இதன்மூலம் அந்த பகுதியில் குற்றங்கள் குறைவதற்கு, இந்த புற காவல் நிலையம் ஏதுவாக அமையும் என்று தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த ஆய்வு பணி நடந்தது.
    • அவசர நிலையில் இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது தான் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

    கோவை,

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகி ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    கோவையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் விபத்துகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் செய்யும் பணி இன்று நடந்தது.

    கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த ஆய்வு பணி நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வில் கோவையில் உள்ள 230-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1355 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    ஆய்வின் போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி, சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா? படிக்கட்டுகள் குறைந்த உயரத்தில் உள்ளதா? முதலுதவி பெட்டி, மற்றும் டிரைவரின் பணி அனுபவம், வாகனம் ஓட்டுவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட 17 அம்சங்கள் கொண்ட வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    மேலும் ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை, உடல் பரிசோதனையும் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறையின் சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    கோவையில் உள்ள அனைத்து தனியார் பஸ்களிலும் கட்டாயம் கண்காணிப்பு காமிராக்கள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் போன்றவைகள் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் பள்ளி நேரத்தை குறித்து வாகனங்களை சரியாக இயக்க வேண்டும்.

    மேலும் அவசர நிலையில் இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது தான் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே டிரைவர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் அந்தந்த கல்வி நிறுவனங்களில் வாகனங்களை இயக்கம் டிரைவர்கள் அவ்வப்பொழுது வானங்களை பழுது பார்த்து சரி செய்து விட வேண்டும்.

    மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் 3 குழந்தைகள் மற்றும் 4 குழந்தைகளை மோட்டார்சைக்கிளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து நடக்கின்றது.

    எனவே இதுபோன்ற செயல்களை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செய்யாதீர்கள். மேலும் பள்ளி கல்லூரி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் பள்ளி மாணவ,மாணவிகளிடம் பொறுப்பாக முறையாக பேச வேண்டும். நீங்கள் பேசும்வார்த்தைகளில் தான் அவர்களது எண்ணமும் மற்றும் வாகனங்களில் பயணிக்கும மாணவர்களின் பாதுகாப்பு அடங்கி உள்ளது. எனவே டிரைவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் முறையாக பேச வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருகிறோம்.
    • போலீசார் 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர்-பாலக்காடு மெயின் ரோடு ஞானபுரம் ஜங்சனில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அங்கு நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட கும்பல் சென்றனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் தங்களை ஜமாத்தில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருவதாகவும், இங்கும் சோதனை செய்ய வேண்டும் என கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் சோதனை செய்வது போல நடித்து ஊழியரை மிரட்டி அங்கிருந்த மொபைல் டேப், சிசிடிவி காமிரா மற்றும் ஒரு சிம்கார்டை கொள்ளையடித்து சென்றனர்.

    இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர், குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பென்சனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது.
    • ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமானோர் தபால் அனுப்பினர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் பஞ்சாலை மற்றும் என்ஜினியரிங் கம்பெனிகளில் வேலை பார்த்து சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பென்சன்தார்கள்கள் உள்ளனர். அவர்கள் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பென்சன் பெற்று வருகின்றனர்.

    இதனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக சென்னையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் மணியோசை எழுப்பும் போராட்டம் நடந்தது.

    தொடர்ந்து மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிரதமருக்கு தபால்கார்டு அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமான இ.பி.எப் பென்சன்தாரர்கள் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்றார். சங்க உறுப்பினர் மவுனசாமி சிறப்புரை–யாற்றினார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பென்சனை உயர்த்துவதுடன் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இ.பி.எப் பென்சன்தாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும், உயர் பென்சன் வழங்க வேண்டும்.

    மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்தவேண்டும் என கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து தபால் பெட்டியில் தபால்கார்டுகளை போட்டு அனுப்பினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாரிமுத்து தனது மகன் லோகேஸ்வரனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்தார்.
    • மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் தற்கொலை செய்தார்.

    கோவை,

    கோவை நடுக்கல்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து . கூலித் தொழிலாளி. இவரது மகன் லோகேஸ்வரன் (23) . இவரும் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மாரிமுத்து மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்துள்ளார்.

    இதனால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாரிமுத்து பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதில் விரக்தி அடைந்த லோகேஸ்வரன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவியின் தாய் நர்சிங் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
    • போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கினர்.

    வால்பாறை,

    வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு நர்சிங் படிப்பதற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது. இதனை அவரது தாயிடம் தெரிவித்தார்.

    ஆனால் அவரது தாய், தனது மகள் நர்சிங் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் வாழ்கையில் விரக்கி அடைந்த மாணவி வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். இதையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவரது தாய், தனது மகள் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி கூறுகையில் எனக்கு நர்சிங் படிக்க விருப்பம் உள்ளது. ஆனால் எனது தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.

    இதனால் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.
    • ஊர் பொதுமக்கள் வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கம்பீர விநாயகர், கன்னிமூல விநாயகர், ஆறுமுக வேலவர், விஸ்வநாதர்,விசாலாட்சி அம்மன், ஆதி மூலவர் அகஸ்தீஸ்வரர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன், கடம்பன் வீரபாகு ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்தது.

    குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து கோபூஜை, தன பூஜை, அணுக்கை, மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம், அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    இதை தொடர்ந்து காரமடையில் இருந்து திருமுருக பக்தர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் தாரை தப்பட்டைகள், செண்டை வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி மிருதிங்கரணம், அங்கூரார் பணம், ரக்ஷாபந்தனன், கும்ப அலங்காரங்கள் கலா ஆகர்சனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, மண்டப வேதியர்ச்சனை, பூரணாகுதே மற்றும் இரவு உபச்சாரங்கள் தீபாராதனை தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ணயாகசாலை நிகழ்ச்சியை பாலு மற்றும் விவேக் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.
    • வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வால்பாறை,

    வால்பாறை அருகே மானாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம்போல் விஜயலட்சுமி தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் காட்டில் இருந்த ஒருவகை கீரையை பிடுங்கி விட்டு, வீட்டிற்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டார்.

    கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து, மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin