search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collectors"

    • காரைக்கால் மாவட்த்திலுள்ள பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர்.
    • இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்,

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் மேல வாஞ்சூர், கீழவாஞ்சூர், நிரவி, திரு.பட்டினம், காரைக்கால் வடக்கு, தெற்கு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், திட்டச்சேரி திருமருகல் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது.   திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர். மேலும் புகை மூட்டம், கடற்கரைப் பகுதியை ஒட்டிய பகுதியிலிருந்து வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதனை அடுத்து நாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு உருக்கும் தொழிற்சா லையிலிருந்து வெளியேறிய புகையினால், பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிரு ப்பதாக தகவல் வந்தன. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்மண்டலம் காரணமாக காற்று சுழற்சி இல்லாத காரணத்தி னால், புகை நாகை, காரைக்கால் மாவட்டங்க ளில் பனி போல் சூழ்ந்துள்ள தும் தெரியவந்தது. இதனையடு த்து காரை க்காலில் இயங்கிய இரும்பு உருக்கும் பணியை நிறுத்த நாகப்ப ட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவி ட்டனர். அதன் பேரில், இரும்பு உருக்கும் பணி நிறுத்தப்ப ட்டாலும் அதிலிருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டு இருக்கிறது. புகைமூட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையி ல்லை என காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட கலெக்ட ர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா வேலூர் மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், கோவை (வடக்கு) வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், அப்பொறுப்பில் இருந்த சதீஷ்குமார், சென்னை- கன்னியாகுமரி தொழிற்நுட்ப திட்ட மறு குடியமர்வு அலுவலரா–கவும், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.

    தமிழகம் முழுவதும் கொடி கம்பங்களை அகற்றி விட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளை தோண்டி அரசியல் கட்சியினர் கொடி கம்பங்களை நடுகின்றனர். இது, தமிழ்நாடு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். கொடி கம்பங்கள் நடுவதற்காக சாலைகள் தோண்டப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறையும் இல்லை. கொடி கம்பங்கள் நடுவதால் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது 21 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58,172 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கொடி கம்பங்களை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து ஆகியவற்றில் கொடி கம்பங்களை அகற்றியது குறித்து 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட கலெக்டர்கள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் சென்னை உள்பட மீதமுள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ந் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். #MadrasHC

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக தேனி, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaCyclone
    தேனி:

    கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone
    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    அரியலூர்:

    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    சிவகங்கை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaStorm
    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
     
    இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaStorm
    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
     
    இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சை உள்ளிட்ட 7  மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தற்போது நடந்து வரும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களிடம் அறிவுறுத்தினார். #Parliamentelection #EdappadiPalaniswami
    சென்னை:

    பாராளுமன்றத்திற்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்டி இந்த சாதனையை உருவாக்கினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவு பட்டதால் தொண்டர்கள் மத்தியில் மனநிலை மாறியுள்ளது.



    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வை தயார்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் சில வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படும்படி கேட்டுக்கொண்டார்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்று 17 மாதங்கள் ஆகிறது. இந்த 17 மாதங்களில் அவர் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் ஓட்டுகேட்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. எனவே தற்போது நடந்து வரும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடிப்பதற்கு கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் தனித்தனியாக பேசி ஆய்வு நடத்துகிறார். மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கிறார்.

    குறிப்பாக குடிநீர், வீட்டு வசதி திட்டம், பொது வினியோக திட்டம், விவசாய கடன் மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிகிறார். இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு முக்கிய திட்டங்களை ஓரளவிற்கு முடித்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    பெண்களை கவர்வதற்காக தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டத்தை தாராளமாக செய்ய கூறியுள்ளார். கிராமங்களில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகளிலும் கலெக்டர்கள் கவனம் செலுத்துமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். #Parliamentelection #EdappadiPalaniswami

    புதிய சட்டத் திருத்தத்தின்படி குழந்தைகளை தத்து கொடுக்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டர் அளிப்பார் என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். #ManekaGandhi #Adoption
    புதுடெல்லி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தி டெல்லியில் நடந்த அனைத்து மாநில பெண்கள் நலத்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘‘குழந்தைகள் நீதி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. தற்போது குழந்தைகளை தத்துக் கொடுப்பதற்கான ஒப்புதல் கோர்ட்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத் திருத்தத்தின்படி இனி இதற்கான ஒப்புதலை மாவட்ட கலெக்டர் அளிப்பார். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு மையங்களும் அடுத்த ஒருமாதத்துக்குள் தத்துக் கொடுப்பதற்கான தலைமை அமைப்பிடம் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

    அண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் சட்டவிரோதமாக குழந்தைகள் தத்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது, தெரிய வந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.  ManekaGandhi #Adoption #tamilnews 
    ×