என் மலர்
நீங்கள் தேடியது "Cuddalore"
- தமிழகத்தில் கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- மின்னல் தாக்கயதில், சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரழந்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதனால், தமிழகத்தில் கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வயலில் பெண்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென மின்னல் தாக்கயதில், சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரழந்தனர்.
இதில், பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகிய நால்வர் உயிரிழந்த நிலையில், தவமணி என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும் அவர்கள் தாக்க முயன்றனர்.
- இதுதொடர்பான புகாரின்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 63). இவரது சகோதரர்களான வைத்தியநாதன், சிங்காரவேல் ஆகிய 2 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்கள் 3 பேருக்கும் பொதுவான நிலம் உள்ளது.
இதை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக 3 பேரின் குடும்பத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் வைத்தியநாதனின் மனைவி சின்னையாள் (47), பிரச்சினைக்குரிய இடத்தில் வீடு கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு சிங்காரவேலின் மனைவி செல்வராணி (55) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சின்னையாள், அவரது மகள்கள் ஜெயசித்ரா, ஜெயந்தி, அனுராதா ஆகியோர் சேர்ந்து செல்வராணியை தாக்கினர். மேலும் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும் அவர்கள் தாக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஓடிவந்து செல்வராணியை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில் சின்னையாள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுராதாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார்.
- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே சொல்வது அலட்சியத்தின் உச்சம்.
- பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நாடு முழுவதும் ரயில் விபத்துகள் பெரும்பாலும் ரயில்வே துறையின் அலட்சியத்தாலேயே நிகழ்கின்றன. கடலூர் விபத்தும் அப்படியே நடந்துள்ளது. ரயில் வருவதற்கு முன்பே கேட் மூடப்பட வேண்டும் என்னும் போது, ரயில் வரும்போது கேட் எப்படி திறந்திருந்தது?
Inter Locking System இல்லாத கேட்களில், ஒரு ஸ்டேசனை ரயில் கடந்தவுடன் அடுத்த ஸ்டேசனுக்கு அந்த ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் போது இந்த விபத்து எப்படி நடந்தது?
மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவரும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்.
பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது. போதிய பணியாளர்கள் நியமனங்கள் இன்றி ரயில்வே துறை தள்ளாடுகிறது. பணி இடங்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பதன் மூலம் சிக்கல் அதிகரிக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் அவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது.
- கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.
இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்வே தரப்பில் இருந்து பள்ளி வேன் ஓட்டுநர் மீதும் பெற்றோர் தரப்பில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இந்த விபத்திற்கு ரெயில்வே துறையின் அலட்சியம் காரணம் இல்லையா? என்று கேள்வி எழுகிறது.
இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம்:
அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் பாயன்பாட்டில் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை பார்த்ததும் ரெயில் ஓட்டுனர்கள் பார்த்து ரெயிலை நிறுத்தி விடுவார்கள். .
ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொழில்நுட்பம் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ஏன்னு கூறப்படுகிறது. ஆகவே இண்டர் லாக்கிங் சிஸ்டம் முறையை அந்த இடத்தில பயன்பாட்டிற்கு கொண்டு வராத ரெயில்வே துறைக்கு இந்த விபத்தில் பொறுப்பில்லையா?
ஸ்டேசன் மாஸ்டர் எங்கே?
தன் எல்லைக்குட்பட்ட ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ரெயில் வரும்போது ரெயில்வே கேட் திறந்து இருந்தால் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தெரிவித்து ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் செய்தாரா? ரெயில்வே கேட் திறந்திருந்த நிலையில், ரெயில் ஓட்டுநருக்கு அவர் தகவல் தெரிவித்தாரா? அவர் மீது ரெயில்வே துறை எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ் தெரியாத கேட் கீப்பர்:
தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ரெயில்வே துறை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. குறிப்பாக கேட் கீப்பர் பணிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமித்தால் உள்ளூர் மக்களுடன் மொழி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பணிகளில் அந்தந்த மாநிலந்தை சேர்ந்த அல்லது அந்த மொழி தெரிந்தவர்களை நியமனம் செய்வது தான் சரியாக இருக்கும். .
வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கும் ரெயில்வே துறையின் நடவடிக்கை இந்த விபத்திற்கு காரணமில்லையா?
கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் இத்தகைய உண்மையான குறைபாடுகளை களைந்து எதிர்காலத்தில் இதுபோன்றதொரு விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவியான நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பும்.
- பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
- கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (75) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரசால் உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதார ஊழியர்கள் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
- ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினந்தோறும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
- பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினந்தோறும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரிடம் இருந்த கைப்பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது கட்டுகட்டாக பணம் இருந்தது.
இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக 57 வயது மதிக்கத்தக்க நபரையும் பணத்தையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் பணத்தை எண்ணியபோது ரூ.35 லட்சம் இருந்தது என தெரிய வந்தது. மேலும் இந்த நபர் குறித்தும், பணம் எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பதனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
சமீப காலமாக கடலூர் வழியாக லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் டேங்க் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.
- ரசாயன கழிவு நீர் அருகில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது
கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன கழிவு நீர் புகுந்தது
இதனால் கண்எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ரசாயன நீர் புகுந்ததைக் கண்டித்து கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
- ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் போலீசார் சோதனை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
அப்போது வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டலாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பண்டல்களை பிரித்து சோதனை செய்தனர்.
இதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த வாலிபரையும் பண்டல்களையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் அந்த வாலிபரை விசாரித்தனர். அப்போது அவரது பெயர் நவீன் அன்வர்(வயது 30) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் ரூ.40 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வருமான வரித்துறையினர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது
- அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது.
- தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே 2 பஸ்கள் மோதி 30 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு விரைவு பஸ்சும், கடலூரில் இருந்து முத்தாண்டிக் குப்பத்திற்கு தனியார் பஸ்சும் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியார்பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக முத்தாண்டிக்குப்பத்திற்கு செல்வதற்காக பஸ்சை திருப்பினார்.
அப்போது நேராக சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராமல் தனியார் பஸ் மீது பலத்த சத்தத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் நிலைகுலைந்த அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது. விபத்து நடந்த பஸ்களில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்க தொடங்கினர்.

மேலும் காயம் அடைந்து மீட்ட பயணிகளை உடனடியாக சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த குள்ளஞ்சாவடி பச்சையம்மாள், குறிஞ்சிப்பாடி கதிர்வேல், புவனகிரி ராம் குமார், சாத்தப்பாடி உதய குமார், பூண்டியாங்குப்பம் அமிர்தவள்ளி, தமிழரசி, வீரகுமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்குகடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசை கைது செய்தனர்.
- பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 நபர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடினர். அப்போது கொள்ளை கும்பல் தலைவனான புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன்நகரை சேர்ந்த கோபி மகன் விஜய் என்ற மொட்டை விஜய் (19) எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருந்ததை பிடிக்க சென்றபோது போலீஸ்காரர்கள் கோபி, கணபதி ஆகியோரை விஜய் அரிவாளால் வெட்டியதால் இன்ஸ்பெக்டர் சந்திரன், தனது தற்காப்புக்காகவும், சக போலீசாரை காப்பாற்றுவதற்காகவும் விஜயை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றார்.
இதனை தொடர்ந்து விஜயின் கூட்டாளிகளான புதுச்சேரி உழவக்கரையை சேர்ந்த அறிவாசகம் மகன் ரேவந்த்குமார் (21), அண்ணாதுரை மகன் அன்பரசு (20), திருபுவனத்தை சேர்ந்த முசுபூர் ரகுமான் மகன் ரியாஸ் அகமது (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசையும் (20) கைது செய்தனர். இதற்கிடையே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயின் உடலை நேற்று மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
அவரது உடலை வாங்க, புதுச்சேரியில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விஜயின் உடலை அடக்கம் செய்ய புதுச்சேரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த2 நாட்களாக என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். என்கவுண்ட்டர் நடந்த எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பை மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முந்திரி தோப்பில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள், அரிவாள் மற்றும் போலீசார் சுட்டபோது வெளியான தோட்டா பாகங்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் என்கவுண்ட்டர் நடந்த சம்பம் குறித்து போலீசார் மாஜிஸ்திரேட் பிரவீன் குமாரிடம் தெரிவித்தனர். அதனை முழுமையாக கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
- புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான்.
- போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.
புதுச்சேரி:
கடலூரில் 2 போலீஸ் காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கொள்ளையன் விஜய் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜய் என்ற மொட்டை விஜய் (வயது 19) புதுவை திலாசுபேட்டை வீமன் நகர் ஓடை வீதியை சேர்ந்தவ ராவார். விஜய் 7-ம் வகுப்பு படிப்பை முடிக்கவில்லை.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே 13 வயது முதல் விஜய் ஆங்காங்கே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 15 வயது முதல் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட தொடங்கினான். மோட்டார் சைக்கிள், நகை, லேப்-டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி அவற்றை விற்று சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தான்.
மேலும் புதுவையை சேர்ந்த ரேவந்த், அசோக் அன்பரசன் அகியோரை தனது கூட்டாளியாக்கிக் கொண்டு திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து நடத்தி வந்தான்.
விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது புதுவை கோரிமேடு, மங்களம் உருளையான்பேட்டை, மேட்டுப்பாளையம், பாகூர், வில்லியனூர், தவளக் குப்பம், சேதராப்பட்டு, அரியாங்குப்பம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
வழக்கில் ஜாமீனில் வெளி வந்திருந்தாலும் திருடுவதை விடவில்லை. இதனால் புதுவை போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக விஜய் இருந்து வந்தான்.
இதனால் புதுவையில் கைவரிசை காட்டினால் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தமிழக பகுதிக்கு இடம் பெயர்ந்தான்.
புதுவையையொட்டிய தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தன்னுடைய கும்லுடன் கைவரிசையை காட்டத் தொடங்கினான். இதனால் தமிழகத்தின் ஆரோவில், கோட்டகுப்பம், கிளியனூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் விஜய் மீது வழக்குகள் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் எம்.புதூரில் பதுங்கியிருந்த விஜயை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.






