கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மின்னல் தாக்கயதில், சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரழந்தனர்.
கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
Published on

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

இதனால், தமிழகத்தில் கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வயலில் பெண்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென மின்னல் தாக்கயதில், சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரழந்தனர்.

இதில், பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகிய நால்வர் உயிரிழந்த நிலையில், தவமணி என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com