search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lightning strike"

    • பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதில் மயிலம் அடுத்த பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.

    மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கால் நடைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பொண்ணங்குப்பத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. தனால் தென்னை மரம் தீ பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு இடி விழுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மகாதேவன் (வயது 49) படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வாங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிட பணிக்கு சென்ற புளியங்குளம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஹரிஷ்குமார், 12 வகுப்பு மாணவர் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, நாலூர் பூமிநாதன், தோப்பூர் முருகன்,யோக வாசுதேவன், சண்முகக்கனி மற்றும் பனைக்குடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
    • அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி புல்லா நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (வயது 28), சின்னகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜய்(27).

    உறவினர்களான இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ராணி சேதுபுரம் என்ற இடத்திற்கு சென்றனர். வழக்கமாக இருவரும் மாலையில் ஆடுகளுடன் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.

    ஆனால் இருவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவர்களது உறவினர்கள், இருவரையும் நேற்று இரவு தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு 2 பேரும் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக பரளச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை அந்த பகுதியில் கடும் இடி-மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதனால் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட 2 வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி புல்லாநாயக்கன்பட்டி கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • திருமங்கலம் அருேக மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் கருகின.
    • தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து எரிந்த தீயை அணைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருேக கங்குராம்பட்டியை சேர்ந்தவர் அழகர். இவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் தென்னை மரங்கள், மல்லிகை செடிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு திருமங்கலம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அழகர் தோட்டத்தில் உள்ள 2 தென்னை மரங்கள் மீது மின்னல் பாய்ந்தது. இதில் 2 தென்னமரங்களும் தீப்பற்றி எரிந்தன. மேலும் அங்கு வளர்க்கப்படும் மல்லிகை செடிகளும் கருகின. இதுபற்றி திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தென்னை மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடகரை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேதம் குறித்து ஆய்வு செய்தார்.

    சங்கராபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
    சங்கராபுரம்:

    வங்க கடல் பகுதியில் மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று காலை சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பாட்டு கிராமத்தில் நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மதியம் 1.30 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது.

    இதற்கிடையே சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த நல்லாசாமி மனைவி நீலாவதி (வயது 65) என்பவர், நேற்று காலை தனக்கு சொந்தமான 3 பசுமாடுகளை அருகில் உள்ள விளைநிலத்துக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்ததால், தனது பசுமாடுகளுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரை அருகே வந்த போது, திடீரென நீலாவதி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்த நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    ×