search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth death"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்து ,சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
    • இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    குரும்பூர்:

    நெல்லை மாவட்டம் பத்தமடை அம்பேத்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்து (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (45). இவர்கள் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்தி ருந்தனர்.

    இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குரும்பூரில் அதிகாலை 4 மணி அளவில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாராகினர். அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த முத்துவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் கீழே விழுந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரும்பூர் போலீசார் முத்துவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் சிவகளையை சேர்ந்த சிவலிங்கம் மகன் குமார் (33) மீது குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.
    • சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் பாபு(வயது24) விவசாயி ஆவார். இந்நிலையில்,நேற்று இரவு இப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது மின்சார ஒயர் ஒன்று அறுந்து வயல்வெளியில் விழுந்து கிடந்தது. இன்று காலை வழக்கம் போல் புதுப்பாளையம் கிராமம், முருகர் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மோகன் பாபு சென்றார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பார்க்காமல் மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கியதால் கூக்குரல் இட்ட வண்ணம் அலறி துடித்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.

    ஆனால்,அதற்குள் அவர் இறந்து போனார். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான மோகன் பாபு உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாடியில் வாலிபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததை பார்த்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஒருவர் சத்தம் போட்டார்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து, அந்த நபரை தேட ஆரம்பித்தனர்.

    அப்போது அந்த நபர் அங்கிருந்த ஒவ்வொரு வீட்டு மாடியிலும் குதித்து தப்பி சென்றார். பொதுமக்கள் சத்தம் போட்டபடி அவரை விரட்டி சென்றனர்.

    அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு குதிக்கும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் மதுரையை சேர்ந்த மதன் (வயது 25) என்பதும், திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நண்பரின் அறையில் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் இரவு நண்பர்களுடன் மது அருந்த சென்று விட்டு திரும்பிய அவர், போதையில் ஒவ்வொரு வீட்டின் மாடி வழியாக சென்றதும், பொது மக்கள் திருடனாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வாலிபரை விரட்டியுள்ளனர். விரட்டும் போது மதன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார்.
    • தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக் (வயது 25).வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தனது சகோதரி தீபிகாவுடன் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.

    தீபக்குடன் சேர்த்து மொத்தம் 10 பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்கு படகு இல்லம் ஒன்றில் பயணம் மேற் கொண்டனர். படகு இல்லத்தை பொறுத்தவரை, மதியம் முதல் மாலை வரை நீர்பரப்பில் செல்லும். இரவு நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

    அதேபோல் தீபக் குடும்பத்தினர் சென்ற படகு, சவாரி முடிந்து பள்ளத்துருத்தி அருகே உள்ள ஹவுஸ் போர்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் படகு இல்லத்தில் தீபக் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் திடீரென தீபக்கை மட்டும் காணவில்லை. படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந் திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார். அது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட 'டைவிங்' வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீபக் தங்கி இருந்த படகு நின்று கொண்டிருந்த பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கி தேடினர்.

    அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் தீபக் பிணமாக கிடந்தார். அவரது உடலை டைவிங் வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த சகோதரி மற்றும் உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என புலம்பினர்.

    இதையடுத்து தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் தமிழக வாலிபர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
    • காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

    இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் வெங்கனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் விவ சாய நிலம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக மருதமுத்து குத்தகை நிலத்திற்கு செல்ல வில்லை. நேற்று தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநத்தம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். அப்போது கிணற்றில் கிடந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் கால்கள் இரண்டும் கயிறால் கட்டி, கல் ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவரது உடல் கைப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வலை மற்றும் அதன் உள்ளே வைக்கோல், டிஜிட்டல் பேனர் கொண்டும் சுற்றப்பட்டிந்தது. 

    இதை பார்த்த போலீசார் இந்த வாலிபரை யாரோ கொடுரமாக கொலை செய்து இங்கு வீசி சென்றுள்ளனர் என்று கூறி உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதற்கு போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. இதனால் பிரேத பரிசோதனை முடிந்த பிறகுதான் அவர் யார் ? அவரை எதற்காக இவ்வளவு கொடூரமாக கொலை செய்தார்கள் என்பது குறித்து தெரிய வரும் என்பது போலீசார் தெரிவித்தனர். 

    இந்நிலையில் இறந்த வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சட்டை காலரில் விழுப்புரம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் போலீசார் விழுப்புரத்தில் இதுவரை காணாமல் போன வர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் டிஜிட்டல் பேனரும் விழுப்புரத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். கொடூர மாக கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசி சென்றவர்கள் யார் என்றும், இறந்த வாலிபருக்கும் அவர்க ளுக்கும் முன்விரோத தகராரில் இந்த கொலை நடந்திருக்குமோ என்று கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 21-ந் தேதி சந்தோஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 35) என்பவர் கடந்த 4 வருடங்களாக ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர், சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள சிந்தலகுப்பம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அதன் முதல்மாடியில் வசித்து வந்தார். கடந்த 21-ந் தேதி சந்தோஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி வக்காரி குளக்கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மது பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
    • வாங் ஏற்கனவே இதே போல அடிக்கடி தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் நேரலை செய்ததால் அவரது சமூக வலைதள ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மது பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர் சவால் விட்டு அதிக மது பாட்டில்களை ஒரே நேரத்தில் குடித்து பலியாகும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.

    சீனாவில் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த சமூக வலைதள பயனரான வாங் என்பவர் சீன வோட்கா எனப்படும் பைஜியு வகை மதுவை அதிகமாக குடித்துள்ளார். மேலும் தான் மது குடித்ததை டிக்-டாக் வெர்சனான டூயிங் என்ற வலைதளத்தில் அவர் நேரலை செய்துள்ளார்.

    அப்போது ஒரே நேரத்தில் 7 பாட்டில் மதுவை அவர் குடித்துள்ளார். இந்நிலையில் மது குடித்த 12 மணி நேரத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

    வாங் ஏற்கனவே இதே போல அடிக்கடி தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் நேரலை செய்ததால் அவரது சமூக வலைதள ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் புதிய கணக்கை ஆரம்பித்து மீண்டும் மது குடிப்பதை ஒளிபரப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து லைக்குகளை பெறுவதற்காக விபரீத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
    • அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி புல்லா நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (வயது 28), சின்னகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜய்(27).

    உறவினர்களான இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ராணி சேதுபுரம் என்ற இடத்திற்கு சென்றனர். வழக்கமாக இருவரும் மாலையில் ஆடுகளுடன் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.

    ஆனால் இருவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவர்களது உறவினர்கள், இருவரையும் நேற்று இரவு தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு 2 பேரும் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக பரளச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை அந்த பகுதியில் கடும் இடி-மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதனால் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட 2 வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி புல்லாநாயக்கன்பட்டி கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.