என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth death"

    • த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
    • ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் போலீசாரால் அஜித்குமார் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    அதன்படி, போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக, காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

    ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

    6ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து வரும் 12ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • லாக்-அப் டெத் காரணமாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் குமார் என்ற வாலிபரை, நகை திருட்டு புகார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் கடுமையாக அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. லாக்-அப் டெத் காரணமாக 5  போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

    இதனிடையே, அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே அஜித்குமார் போலீசிடமிருந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
    • நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து காளியம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி சாமி தரிசனம் செய்வார்கள். அதில் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    இந்நிலையில் இங்கு தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரது மகன் அஜித்குமார் (வயது 27) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காவலாளியாக பணியில் சேர்ந்தார். திருமணமாகி மனைவி உள்ள நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்ட அவருக்கு தற்போது வரை சம்பளம் கூட தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (75) என்பவர் தனது மகள் நிகிதா (48) என்பவருடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். மாற்றுத்திறனாளியான சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27), கோவில் சார்பில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலியை எடுத்து கொண்டுவந்து கொடுத்தார்.

    முன்னதாக சிவகாமிக்கு சொந்தமான 10 பவுன் நகைகளை ஒரு துணியில் சுற்றி கட்டைப்பையில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காவலாளி அஜித்குமாரிடம் தனது காரை 'பார்க்கிங்' செய்யுமாறு நிகிதா தெரிவித்தார்.

    இதையடுத்து தனக்கு கார் ஓட்ட தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை அஜித்குமார் 'பார்க்கிங்' செய்துள்ளார். சுமார் 1 மணி நேர இடைவெளிக்கு பிறகு கோவிலில் வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறினர். அப்போது அங்கு பையில் சுருட்டி வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகையையும் காணவில்லை.

    இதுபற்றி சிவகாமி மற்றும் நிகிதா ஆகியோர் காரை பார்க்கிங் செய்ய கார் சாவியை பெற்ற அஜித்குமாரிடம் கேட்டனர். ஆனால் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து சிவகாசி 10 பவுன் நகை மாயமானது குறித்து திருப்புவனம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அஜித்குமாரை போலீசார் திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த அவரை, நேற்று தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணைக்காக அவர் உள்பட 5 பேரை காரில் அழைத்து சென்றனர். பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித்குமாருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித்குமாரை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டு மற்ற 4 பேரையும் போலீசார் விடுவித்து உள்ளனர்.

    பின்னர் அஜித்குமாரை சிகிச்சைக்காக முதலில் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து உடல் நிலை மோசமானதாக கூறி அவரை மதுரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றிய தகவல் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    நல்ல உடல் நிலையில் இருந்ததால்தான் அஜித்குமார் கோவில் காவலாளியாக பணியில் சேர்ந்தார். அவருக்கு உடலில் எந்தவித நோயோ, பிரச்சனையோ இல்லாதபோது, போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் சென்று கோஷங்கள் எழுப்பினர்.

    அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கோவில் காவலாளியின் மர்மச்சாவு குறித்த தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாக பரவிய நிலையில் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மற்றும் திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன் கூறியதாவது:-

    நான் ராமநாதபுரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நகை மாயமான புகாரில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி, எனது அண்ணனை அழைத்து சென்றதாக உறவினர்கள் போனில் தெரிவித்தனர். நான் வேலையை முடித்து விட்டு வர 4 மணியாகி விட்டது.

    ஊருக்குள் வந்து நான் கேட்டபோது நகை தொலைந்ததாக பெண்கள் புகார் தெரிவித்து இருந்தனர். நானும், எனது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். அப்போது எனது அண்ணனை போலீஸ் நிலையத்துக்குள் வைத்து விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

    எனவே காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் எனது தாயாரும் வீட்டுக்கு வந்து விட்டோம். காலை 6 மணிக்கு 3 போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். நகையை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டு பீரோவை திறந்து பார்த்தனர். எனது செல்போனை வாங்கிக் கொண்டு என்னை போலீசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

    அதன் பிறகு மேலும் 2 வாலிபர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் ஊருக்கு வெளியே உள்ள தோப்புக்கு எங்களை அழைத்து சென்றனர். அங்கு வைத்து எனது அண்ணனை அடித்தனர். என்னையும் அடித்தனர். சுமார் அரை மணி நேரம் எங்கள் இருவரையும் அடித்தனர்.

    காலையிலும் மதியமும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்தனர். மதியம் சாப்பாடு வாங்கி கொடுத்த பிறகும் எனது அண்ணனை மீண்டும் அடித்தனர். கடைசி வரை எனது அண்ணன் எனக்கு தெரியாது என்ற ஒரு வார்த்தையை மட்டும்தான் கூறினான். ஆனால் போலீசார் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

    ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் நகை இருக்கும் இடத்துக்கு கூட்டி செல்கிறேன் என்று சொன்னான். அப்படியாவது போலீசார் அடிப்பது குறையும் என்பதற்காக அப்படி சொன்னான். கோவிலுக்கு பின்னால் நகை இருக்கிறது என்று கூறியுள்ளான்.

    இதனால் அவனை கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று போலீசார் பார்த்தனர். அங்கு நகை இல்லாததால் போலீசார் கோவிலின் பின்புறம் வைத்தும் அவனை அடித்து உள்ளனர்.

    பின்னர் என்னை வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு என் அண்ணனுக்கு என்ன நடந்தது, எங்கே அழைத்து சென்றார்கள் என்று தெரியவில்லை.

    மாலை 6 மணியளவில் என்னிடம் போலீஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து போடுமாறு கூறினார்கள். நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    எனது அண்ணனை போலீசார் அழைத்து சென்றிருக்க கூடாது. இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், அதன் மூலும் நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சூழலில் இறந்த அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அஜித் குமார் உயிரிழப்பு குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது உறவினர்கள் திரண்டு நிற்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. எனவே அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
    • தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.

    சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டபோது,''பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் காவலரின் தாக்குதலால் உயிரிழந்தார்.
    • இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    "ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?

    முக ஸ்டாலின்

    விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?

    தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.

    தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

    திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    • உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
    • முதலமைச்சர் உடனடியாக இவ்விஷயத்தில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.

    கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

    தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார்.
    • காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் பக்தர்களிடம் 10 சவரன் நகைகள் திருட்டு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில் ஊழியர் அஜித்தை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோவில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படை போலீசாரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார். கோவில் ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர்:

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.

    இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.

    மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.

    இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.

    புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கனகராஜ் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்
    • கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகு(வயது 45). இவரது மகன் கனகராஜ்(22). இவர் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு கனகராஜ் கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கம்புளி சாலையில் வந்து கொண்டிந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் வயலுக்கு போடப்பட்டு இருந்த வேலிக்கான கல்லில் மோதியது.

    இந்த விபத்தில் கனகராஜின் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த கனகராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
    • மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அருண்குமார் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.

    இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

    நேற்று அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.
    • உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். அவரது மகன் ராஜி (வயது 34). இவர் ஊரில் வேலை இல்லாமல் இருந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடநெமிலி பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மேஸ்திரி மூலம் மும்பையில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று ராஜி மும்பை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ெரயிலில் அடிபட்டு இறந்தார் என்று பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பின்னர்இறந்த ராஜியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்பந்ததாரர் முன்னிலையில் போலீசார் ராஜி உடலை ராஜி ஊரான மேல்வாழைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த ராஜி உடல் இன்று காலை மேல்வாழைக்கு வந்தது. இதை அறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது. ராஜியை மும்பையில் வேலையில் சேர்த்த மேஸ்திரி சங்கர் நேரடியாக இங்கு வர வேண்டும் என்று கூறி அவர்கள் இறந்த ராஜி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி அளி க்கபட்டது. அதனை தொட ர்ந்து போராட்டம் விலக்கி கொ ள்ள ப்பட்டது.

    • ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது.
    • பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.

    ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது. அந்தப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்காமல் எச்சரிக்கை டேப் மட்டும் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் அந்தப்பகுதியில் விளக்கு வெளிச்சம் குறைவாக இருப்பதாலும், நள்ளிரவு மற்றும் தற்போது அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிரே உள்ள மேடு, பள்ளங்களை பார்த்து வாகனங்களை இயக்க முடிவதில்லை.

    இந்நிலையில் அங்கிருந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் அம்பலப்புளி பஜார் பகுதியை சேர்ந்த பொன் இருளப்பன்(வயது32) என்பதும் ஜவுளிக்கடையில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×