search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police officers"

    • வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்' என்றார்.

    பின்னர் 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார். முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.
    • கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள சங்கராபுரம், மூங்கில் துறைப்பட்டு, வடபொன் பரப்பி, பகண்டை கூட்டு ரோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக் டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர், குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களை போலீஸ் நிலை–யங்களில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    கைது செய்யப்படும் குற்றவாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், சிகிச்சைக்காக அவரை உடனடியாக ஆஸ்பத்தி–ரிக்கு அழைத்துச் செல்ல–வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடு–பவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவரும் கடைபிடிக்க–வேண்டும் என பேசினர்.

    இதில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கரா–புரம் இன்ஸ்பெக்டர் பால–கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், முருகன், சூர்யா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    பெண் அதிகாரிகள், ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் விதமாக அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐ.ஜி. முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்து தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

    இந்த புகாரை விசாரித்த கமிட்டி, ஐ.ஜி. மீதான புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து புகாருக்கு ஆளான ஐ.ஜி. முருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் மீது 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, வாதாடினார்.

    அப்போது அவர் ‘ஐ.ஜி.க்கு எதிராக போலீசில் புகார் செய்யாமல், தான் பணியாற்றிய துறையின் இயக்குனரிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு புகார் கொடுத்ததால், நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனது’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, ‘பாலியல் கொடுமை தொடர்பாக பெண்கள் புகார் கொடுக்கும் போது, அதில் உள்ள நடைமுறை குறைபாடுகளை கருத்தில் கொள்ளாமல், உடனடியாக நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்’ என்று கூறினார்.



    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு அது போன்று நாம் செயல்படுகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறி உள்ளார். எனவே அதன்படி நடக்க வேண்டும் என்பதால் என்னுடைய சேம்பர் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவு துறைக்கு உத்தரவிடுகிறேன்.

    இந்த வழக்கை பொருத்த வரையில் பெண் போலீஸ் அதிகாரி, ஐ.ஜி.மீது கொடுத்துள்ள பாலியல் புகார் பற்றி விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி. லட்சுமி பிரசாத் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கிறேன்.

    இந்த கமிட்டியில் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணம்மாள், கனகா, டி.எஸ்.பி. ராமதாஸ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வல்ச ராகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். 2 வாரத்துக்குள் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த பாலியல் புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டால் இந்த கமிட்டி ஐகோர்ட்டை நாடலாம்.

    பாலியல் புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டப்படி வழக்கை விரைவாக நடத்த வேண்டும். ஐ.ஜி. முருகன் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளதால் பணி விதிகளின்படி தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண் அதிகாரிகள், ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் விதமாக அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஐ.ஜி.முருகன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #MadrasHC
    குட்கா ஊழல் தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #GutkaScam #CBI
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் அதிகாரிகளின் பக்கம் சி.பி.ஐ.யின் கவனம் திரும்பியது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் போலீஸ் அதிகாரிகள் பட்டியலை சேகரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சி.பி.ஐ. பிடியில் சிக்கினர்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பணியாற்றி வரும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணை ஒரே நாளில் நடத்தப்படவில்லை. 3 பேரையும் தனித்தனி நாட்களில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது 3 அதிகாரிகளும் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட 2 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.

    இப்போது பணியில் இருக்கும் டி.ஜி.பி. ஒருவரும், டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இவர்கள் இருவருக்கும் கீழே பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையே குட்கா முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய மேலும் 3 அதிகாரிகளிடமும் விரைவில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற உள்ளது.

    ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியும், டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும் யாரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GutkaScam #CBI

    பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார். #CVShanmugam #PonManickavel
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தினை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில்ரமானி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். அவர்களை இப்படித்தான் விசாரணை செய்ய வேண்டும், இப்படித்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறக் கூடாது. அவர் மீது கூறப்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பொன்.மாணிக்கவேல் என்பதால் அவர் மீது விசாரணை நடத்தாமல் இருக்க முடியாது. அவர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

    விசாரணையின் போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும்.

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில் ரமானி பேசியதாவது:-

    புதிய சார்பு நீதிமன்ற கட்டிடம் அமைப்பின் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

    அதே போன்று காஞ்சீபுரத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையினை சென்னை உயர்நீதி மன்றம் கவனத்தில் கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.



    வழக்கு தொடுத்தவர்கள் பயன்பெறும் வகையில் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய உதவிகளை உயர்நீதிமன்றம் செய்து கொடுக்கும். இதனால் வழக்கு தொடுத்தவர்கள் பயன் பெறுவர். புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இளம் வழக்கறிஞர்கள் நிறைய அனுபவங்களை பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமலா, பவானி சுப்பராயன், மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா, மாவட்ட நீதிமன்றம்-2 நீதிபதி கருணாநிதி, மற்றும் நீதிபதிகள் கீதாராணி, பாக்கியஜோதி, மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி.

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், படுநெல்லிதயாளன், அதிமுக வழக்கறிஞர் அணி கே.ரவிச்சந்திரன், ஜி.எம்.சி. ஜீவரத்தினம்

    பார் அசோசியேசன் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சுப்பிரமணி, லாயர் அசோசியேசன் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் கார்த்திகேயன்,

    அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சத்தியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் டி.சி.வரதராஜன், டோமேசன், ஒய்.தியாகராஜன், கேதார் நாத், தாங்கி பழனி, துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CVShanmugam #PonManickavel
    டிஜிபியிடம் என்மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது என சிலை கடத்தல் பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IdolWing #PonManickavel
    சென்னை:

    பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிக்காலம் முடிந்து விட்டதால், அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியிலும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.
     
    இதற்கிடையே, சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். இன்று மேலும் சில அதிகாரிகள் புகார் மனு அளித்தனர்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றியதாகவும், இனி தங்களால் செயல்பட முடியாது என்றும் கூறினார்.

    இந்நிலையில், பொன் மாணிக்கவேல் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கூறியதாவது:

    டிஜிபியிடம் என்னைப் பற்றி புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது, என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே. என்மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. என்னைப் பற்றி அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. துறைக்குள் நடப்பதை போலீசார் வெளியே சொல்லலாமா?  என கேள்வி எழுப்பியுள்ளார். #IdolWing #PonManickavel
    குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம்பெறாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

    மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது.


    அ.தி.மு.க. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், இந்த ஊழலின் “பிதாமகன்களாக” திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

    குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

    குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

    ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும்.

    அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணை கோரி தி.மு.க.வின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    பசுமை வழி சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏவை தாக்கியதாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Greenwayroad
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதற்கான நில அளவீடு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த நில உரிமையாளர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ்மானூஸ், மாணவி வளர்மதி, அரசியல் கட்சி பிரமுகர்கள் முத்துக்குமார், மாரிமுத்து உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே 8 வழி சாலைக்கு எதிராக பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழி சாலைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும் அதனை எதிர்த்து போராடிய போது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர் காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா, சவுந்தர் ஆகியோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கையும் நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.

    அப்போது இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்த போலீசாரின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொது மக்களை கைது செய்த போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதனால் விரைவில் இது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தன்னை தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் செங்கம் கரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி எனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது செங்கம் டி.எஸ்.பி.யாக இருந்த சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    மேலும் 8 வழி சாலைக்கு எதிராக போராடியதாக கூறி என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். என் மீது பொய் வழக்கும் போட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி ஆகிய 3 பேரும் டிசம்பர் மாதம் 12-ந் தேதி மாநில மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #Greenwayroad
    திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் பிளாஸ்டிக் மலைபோல் குவிந்து கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இதனை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓட்டல்கள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் மக்களிடமும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என சோதனை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் கடந்த 3-ந் தேதி முதல் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்படுகிறது.

    உணவு சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கழிவுகளை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பாகவே அதிகாரிகள் கொட்டியுள்ளனர். அவை கடந்த 4 நாட்களாக மலைபோல் குவிந்துள்ளது.

    4 வழிச்சாலையில் குப்பைகள் கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் மட்டும் அக்கறையின்றி செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் விருதுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    1. லாவண்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

    2. நமசிவாயம், துணை காவல் கண்காணிப்பாளர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, மதுரை.

    3. உலகநாதன், காவல் ஆய்வாளர், கம்பம் வடக்கு காவல் நிலையம், தேனி மாவட்டம்.

    4.கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர், வி-7 நொளம்பூர் காவல் நிலையம், சென்னை பெருநகர காவல்.

    5. சரவணன், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

    6. கிளாஸ்டின் டேவிட், காவல் ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல்.

    7. மகேஷ்குமார், காவல் ஆய்வாளர், பி-3 தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், மதுரை மாநகர்.

    8. சித்ராதேவி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, தேனி மாவட்டம்.

    9. ஜெயந்தி, காவல் ஆய்வாளர், இருப்புப் பாதை காவல் நிலையம், ஜோலார்பேட்டை.

    10. சுரேந்தர், காவல் உதவி ஆய்வாளர், கண்டோன் மென்ட் காவல் நிலையம், திருச்சி மாநகரம்.

    இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்- அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    1. மகேஷ்குமார் அகர்வால், காவல் ஆணையர், மதுரை மாநகரம், தற்போது காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

    2. முத்தரசி, காவல் துறை உதவி தலைவர், (நிர்வாகம்), காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.

    3. கண்ணன், காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

    4. ராஜ்நாராயணன்,காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, அயல் பணி இயக்குநர் அலுவலகம், சென்னை.

    5. ஆனந்தராஜன், காவல் உதவி ஆய்வாளர், திட்டச்சேரி காவல் நிலையம், அயல்பணி, நாகப்பட்டினம் மாவட்ட தனிப்பிரிவு.

    விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

    மேற்கண்ட விருதுகள், முதல்-அமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்கூறிய காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    சென்னையில் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்த விவகாரம், மேலும் ஒரு ஆடியோ பேச்சு மூலம் கடும் புயலை கிளப்பியுள்ளது. #TNPolice
    சென்னை:

    ஏற்கனவே ஆடியோ பேச்சு விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள உதவி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் மீண்டும் மாற்றப்பட்டார். டி.ஜி.பி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் அவர் இருப்பார் என்று டி.ஜி.பி. அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

    அடுத்தடுத்து இந்த மாற்றங்களைச் சந்தித்த உதவி கமிஷனர் முத்தழகு ஆடியோ பேச்சு விவகாரத்தால்தான் இந்த சிக்கலில் சிக்கினார். அவர் குற்றவாளி ஒருவரை காப்பாற்றுவதற்காக பணம் கேட்டு பேரம் பேசியது போன்ற ஆடியோ பேச்சு நேற்று முன்தினம் இரவு ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெளியானது.

    சமீபத்தில் தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராக்கெட் ராஜா துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் சுந்தர், ராஜ்சுந்தர், பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரும் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான குற்றவாளி ஒருவரின் தம்பியிடம் உதவி கமிஷனர் முத்தழகு பணம் கேட்டு பேரம் பேசுவதுபோல, ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான ஆடியோ பேச்சில் தகவல் வெளியானது.

    குறிப்பிட்ட குற்றவாளிமீது கோவையில் ரூ.60 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்வேன் என்றும், கைது செய்யாமல் இருக்க பெரிய அளவில் தனக்கு தொகை வேண்டும் என்றும், தனக்கு பெரிய அளவில் பணப்பிரச்சினை இருப்பதாகவும் உதவி கமிஷனர் பேசுகிறார்.

    அதற்குப்பதில் அளித்த குற்றவாளியின் தம்பி முதலில் ரூ.3 லட்சம் தருவதாக சொல்கிறார். அதற்கு உதவி கமிஷனர் சம்மதிக்கவில்லை. அதற்கு அடுத்து ரூ.5 லட்சம் தருவதாக சொல்கிறார். அது ‘டீ’ செலவுக்குக்கூட பத்தாது என்று உதவி கமிஷனர் கூறுகிறார்.

    பெரிய அளவில் தொகையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரவேண்டும் என்றும், சென்னையில் தனது அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும், அண்ணாநகருக்கு வரும்படியும் உதவி கமிஷனர் ஆடியோ பேச்சில் சொல்கிறார். அதற்கு குற்றவாளியின் தம்பியும் சம்மதம் தெரிவிக்கிறார்.

    இந்த ஆடியோ பேச்சின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் எதிரொலியாகவே நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட முத்தழகு, நேற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

    ஆடியோ பேச்சு விவகாரத்தால் சிக்கலில் மாட்டியுள்ள உதவி கமிஷனர் முத்தழகுவிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:-


    ஆடியோ பேச்சில் உள்ள குரல் என்னுடைய குரல் அல்ல, தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டலில் ராக்கெட் ராஜாவோடு கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளிகள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனருக்கு நான்தான் சிபாரிசு செய்தேன்.

    ராக்கெட் ராஜாவோடு தங்கியிருந்த அவர்களை கைது செய்ததும் நான்தான். தென்மாவட்ட போலீசார்கூட, அவர்களை கைது செய்ய முடியவில்லை. நான் பணம்கேட்டு, பேரம் பேசியிருந்தால் அவர்களை ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சிபாரிசு செய்ய வேண்டும்? ஆடியோ பேச்சு விவகாரம் முழுக்க முழுக்க தவறானது, எனக்கு எதிரானவர்கள் அந்த பிரச்சினையை பெரிதாக்கிவிட்டார்கள். என்னை மத்திய குற்றப்பிரிவுக்குத்தான் மாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உதவி கமிஷனர் முத்தழகு பிரச்சினை முடிவுக்கு வருவதற்குள் சென்னை போலீசில் இன்னொரு ஆடியோ பேச்சு விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. 2 பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பது, அந்த ஆடியோ பேச்சில் உள்ளது. குற்றவாளி ஒருவருக்கு சாதகமாக பேசும் அந்த இன்ஸ்பெக்டர் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை மிகவும் இழிவாக பேசி உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் பேசிய பேச்சு தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் உயர் அதிகாரிகளிடமே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலக உயர் அதிகாரிகளிடமும் அந்த இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு பரிந்து பேசும் அந்த இன்ஸ்பெக்டரை குறிப்பிட்ட வழக்கில் இருந்து மாற்றி அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

    கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இன்ஸ்பெக்டர் பேசிய பேச்சை ஆடியோவாக ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடுவோம் என்று புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இதுபோன்ற வாட்ஸ்-அப்பில் வெளியாகும் ஆடியோ பேச்சுக்களும், வீடியோ காட்சிகளும் தமிழக போலீஸ் துறையையே உலுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #TNPolice
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #tuticorinfiring #sandeepnanduri

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மற்ற பகுதிகளில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட பணிக்கு திரும்பியுள்ளனர். அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போது 144 தடை உத்தரவு தேவை இல்லை என்பதால் நீட்டிக்கப்படவில்லை. சூழலை கண்காணித்து வருகிறோம்.

    தேவைப்பட்டால் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல் பரிசோதனை முடிவடைந்துள்ளது. எஞ்சிய 6 பேரின் பிரேத பரிசோதனை நடக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார்.

    இதையடுத்து தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை இல்லாமல் ஆலை இயங்க முடியாது. எனவே பொதுமக்கள் அரசின் உறுதியை ஏற்று முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.

    தற்போதைய சூழ்நிலையை அரசு கண்காணித்து வருகிறது. இணையதள சேவை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tuticorinfiring #sandeepnanduri 

    ×