search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road blockade"

    • சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர்.
    • கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பணிக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர். தினமும் ஷிப்ட் முறையில் பணிபுரியும் இவர்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை நேர பணிக்காக 6.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அரசு டவுன் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மருத்துவ கல்லூரி செல்லும் டவுன் பஸ் வந்தது. அதில் ஏற அவர்கள் முயன்றனர்.

    ஆனால் கண்டக்டர் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில ஏறுங்கள் என கூறினார். இதனால் அவர்கள் அடுத்து வந்த டவுன் பஸ்சில் ஏற முயன்றபோது அந்த கண்டக்டரும் இந்த பஸ்சில் ஏறாதீர்கள் என கூறி அலைக்கழித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வெளியே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் அங்கேயே நின்றது. மற்ற பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கரந்தை போக்குவரத்து கிளை மேலாளர் சந்தானராஜ், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பெண்கள், அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் என்பதால் எங்களை போன்ற பெண்களை ஏற்ற மறுக்கின்றனர். பஸ்சில் ஏறினாலும் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என மாறி மாறி கூறுகின்றனர்.

    இலவச டிக்கெட் என்பதால் சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர். அரசே இலவச டிக்கெட் என கூறும்போது கண்டர்கள் அவமரியாதையாக நடந்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

    நாங்கள் 7 மணிக்குள் மருத்துவ கல்லூரிக்கு சென்றால் தான் இரவு பணியில் ஈடுபட்டவர்களை மாற்றி விட முடியும். பஸ்களில் ஏற்ற மறுப்பது பல நாட்களாக நடக்கிறது. இலவச டிக்கெட் என்பதற்காக தான் அவமதிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பஸ்களை எடுக்க விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.

    இதையடுத்து போக்குவரத்து மேலோளர் சந்தானராஜ், இனி இதுபோல் பிரச்சினை நடக்காமல் பார்த்து கொள்கிறோம். மறியலை கைவிடுங்கள். மாற்று பஸ்சில் உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்டு பெண் பணியாளர்கள் மறியலை கைவிட்டனர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏறி மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். மேலும் ஆம்புலன்சிலும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த மறியல் போராட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்ததால் அதுவரை மற்ற பஸ்களும் செல்ல முடியாமல் நின்றது. மறியலை கைவிட்ட பிறகு மற்ற பஸ்களும் சென்றன. மேலும் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் கிராமம் இடையன் கிணறு நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை தாராபுரம் திருப்பூர் சாலையில் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சூரியநல்லூர் மற்றும் கொழுமங்குழி, இடையன் கிணறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்களை மறியலை கைவிடவில்லை. இதைய டுத்து டி.எஸ்.பி., கலையரசன், தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைத்தால் விபத்துக்கள் அதிகம் நிகழும். எனவே கடை அமைக்கக்கூடாது என்றனர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை நேற்று மாலை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.

    இதனை அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறி ஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். திடீர் சாலை மறியலால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தை அடித்து சூறையாடியதாக சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.

    தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்த வர் பிரபாகரன் (வயது 38). விவசாயியான இவர் இரு சக்கர வாகனத்தில் பெர ம்பலூர் சென்றார்.

    எறையூர் பிரிவு பாதை இடதுபுறம் நுழையும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் துடிதுடித்து அதே இடத்தில் பிரபாகரன் உயிரிழந்தார்.

    இதனை அறிந்த பிரபா கரன் மனைவி ரம்யா மற் றும் உறவினர்கள் அதிவேக மாகவும் அதிக பாரம் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவே ண்டும். க.எறையூரில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும். இறந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண் டும் என கோரிக்கை களை வலியுறுத்தி அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிசாமி மறிய லில் ஈடுபட்டோர்க ளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதின் பேரில் சாலை மறியலில் கைவிட்டு சென்றனர்

    • ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினை
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
    • 100 பேர் கைது


    திருச்சி,

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டு காலமாக அடிமனை பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளி திருமுத்தம் கிராமத்தில் புதிய பெயரில் பத்திரங்கள் பதிய கூடாது என ஸ்ரீரங்கம் சார்பதிவாளார் அலுவ லகத்திலும், மேற்கண்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, வரைபட அனுமதி, கட்டிட நிறைவு சான்று போன்ற எந்த அனுமதி சான்றுகளும் கொடுக்கக் கூடாது என திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், புதிய பெயரில் இந்த பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தலையிட்டு மேற்கண்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.


    இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் இடங்களை விற்பதற்கும், வங்கியில் வைத்து கடன் வாங்கு வதற்கு, உயில் எழுத, பழைய வீடுகளை இடித்து புனரமைப்பு செய்ய முடி யாமல் தவித்து வருகின்ற னர். எனவே ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிமனை பிரச்சனையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் தலையிட்டு ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது மக்களுடன் இணைந்து நேற்று ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட முயன்றனர்.


    அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.


    இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்தியகட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரெங்கராஜன், மாவட்ட க்குழு உறுப்பினர் சந்தா னம், கிளைசெயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், ஸ்ரீரங்கம் அடிமனை ஒருங்கிணைப்புக்குழு வரதராஜன், மாருதி ராமசாமி, பன்னீர்செல்வம், சின்னகண்ணு உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.


    • மின்தடையை கண்டித்து மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.
    • மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலமேட்டுபட்டி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர்.

    இந்தநிலையில் இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் இதனால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக கூறி மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.

    அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், பூபதி மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் யூசிப் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    • கடந்த 2 மாதமாக இரவு- பகலாக போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது நடந்து வருகிறது.
    • இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது. தென்னை, வாழை தோட்டங்கள் காய்ந்து வருகின்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி.எஸ். சத்தியசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஆழ்துளை கிணறு

    ஏரல் முதல் உமரிக்காடு வரை முழுமையான விவசாய பகுதியாகும் இங்கு வயலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுவது நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் இதனை தடுக்க கோரி பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் தொடர்ந்து சட்ட விரோதமாக குடிநீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதே போன்று முன்பு வறட்சி ஏற்பட்டபோது அப்போதைய மாவட்ட கலெக்டர் இந்த பகுதியில் போர்வெல் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளார்.

    தற்போது இந்த பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 2 மாதமாக இரவு- பகலாக போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு லாரி கள் மூலம் விற்பனை செய்யப்படுவது நடந்து வருகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது. தென்னை, வாழை தோட்டங்கள் காய்ந்து வருகின்றன.

    கடந்த காலங்களில் இல்லாத அளவில் உமரிக்காடு ஆலடியூர் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சட்டவிரோதமாக போர்வல் அமைத்து லாரிகள் மூலம் நடைபெறும் குடிநீர் திருட்டை தடுத்த நிறுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து குடிநீர் திருட்டு நடைபெற்றால் சுற்று வட்டார பொதுமக்கள், விவசாயிகளை ஒன்றிணைந்து லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
    • மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு தாலுகா செயலாளர் வெள்ளை ச்சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விலை வாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்ட ங்களை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

    இதில் தாலுகா துணை செயலாளர் தவநூதன், தாலுகா குழு உறுப்பினர்கள் பொன்னு ச்சாமி, பழனியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

    • கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.
    • இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவமனை தெரு, புது தெரு, பொன்னாரத்தம்மன் கோவில் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் குடிநீர் வழங்கக்கோரி முத்துப்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆர்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
    • 39 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து பொது சேவை கூட்டமைப்பு சார்பில், சங்கராபுரம் 3 முனை சந்திப்பில் வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுவரையறை செய்யக்கோரி கடையடைப்பு, ஆர்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. இதில் வடபொன்பரப்பி குறுவட்டத்துக்குட்பட்ட 23 கிராமங்களை சங்கராபுரம் தாலுகாவில் இனணக்கக் கோரி சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர் உள்பட 39 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    • கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது.
    • மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அருகே பழமையான மயானம் ஒன்று உள்ளது. தொடக்கத்தில் இந்த இடம் வயல்வெளிகளுக்கு இடையே இருந்தது. நாடா வட்டத்தில் இப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது. இந்த மயானத்தால் சிறு சிறு சங்கடங்கள் இருந்து வந்தாலும் அதனைப் பொதுமக்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற பேரூராட்சி முடிவு செய்து அதற்கான நிதியையும் ஒதுக்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த மின் மயானத்தை வேறு மயானத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அமைச்சர் கலெக்டர் உள்ளிட்டோ ருக்கு மனுவும் அனுப்பினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதே இடத்தில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதனைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர் அதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    ×