என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் நேரம் பஸ்கள் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
    X

    மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    கூடுதல் நேரம் பஸ்கள் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

    • வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை- திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 எண் உள்ள பஸ் 7 முறை சென்று வந்தது. இந்த நிலையில் தற்போது காலை 8.30 மற்றும் மாலை 5.30 ஆகிய இரு நேரங்களில் மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    இதனால் வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே கூடுதல் நேரங்களில் பஸ்கள் இயக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை-திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழி மறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×