search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai town"

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நெல்லை:

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று சந்திப்பு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் காவல் துறையினர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் (உதவி எண் :1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • நெல்லை டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் உள்ள உணவு வணிக நிறுவனங்க ளில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு கடைகளில் உள்ளதா என கூட்டாய்வு செய்யப்பட்டது .

    நெல்லை, மே. 18-

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்துதலின் பேரிலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா வழிகாட்டுதலின் பேரிலும் நெல்லை டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் உள்ள உணவு வணிக நிறுவனங்க ளில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அலுவலர்கள் டைட்டஸ் பெர்னா ண்டோ, சங்கர லிங்கம், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினரால் தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு கடைகளில் உள்ளதா என கூட்டாய்வு செய்யப்பட்டது .

    இந்த ஆய்வின்போது 10 கடைகளில் இருந்து 148 கிலோ நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் பயன்டுத்த, சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்ய சுகாதாரமற்ற நிலையில் 3 சக்கர சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அதனை தயாரித்து வினியோகம் செய்தவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    கடைகள்

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர். அதன் ஒரு பகுதியாக சில கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட தொடங்கியது.

    பள்ளி கட்டிடத்தை சுற்றி காம்பவுண்டு கட்டப்படாத நிலையில், கடைகளுக்கு இரவு நேரங்களிலும் ஆட்கள் வந்து சென்றனர்.

    இந்த கடைகளால் பள்ளி மாணவர்கள் விளை யாடுவதற்கும் இடம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

    மாணவர்கள் புகார்

    இந்நிலையில் கடை களுக்கு இரவு நேரங்களில் வருபவர்களில் சிலர் மது அருந்தி விட்டு பாட்டில்களை பள்ளி வளாக பகுதிகளில் வீசி செல்வதாகவும், அது மாணவர்களின் கால்களில் குத்தி காயப்படுத்து வதாகவும் மாணவர்கள் புகார் கூறினர். எனவே பள்ளி கட்டி டத்தை சுற்றி காம்பவுண்டு அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி எஸ்.என்.ஹைரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி கூறினர். உடனடியாக இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், போலீஸ் துணைகமிஷனர் சரவணகுமார் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் அதிகாரி லெனின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது பள்ளி கட்டி டத்தை சுற்றி தகரத்தால் அடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்க கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவில் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்க கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவில் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இதுதவிர வாறுகால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை விரைவுபடுத்தி அதனை அவ்வப்போது மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெங்கு உள்ளிட்ட எந்த காய்ச்சல்களும் பொதுமக்களுக்கு ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    விழிப்புணர்வு பேரணி

    இந்நிலையில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    பேரணி 4 ரதவீதிகள் வழியாக சென்றது. இதில் கலந்த கொண்டவர்கள் டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

    உறுதிமொழி

    முன்னதாக மேயர் சரவணன் தலைமையில் டெங்கு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மாமன்ற உறுப்பினர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் டெங்கு களப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் இருந்து வழுக்கோடைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது.
    • பழமை வாய்ந்த இந்த காட்சி மண்டபம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வந்தன.

    நெல்லை:

    நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் இருந்து வழுக்கோடைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக் களின்போது இந்த காட்சி மண்டபத்தில் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

    காட்சி மண்டபத்தில் தடுப்பு

    பழமை வாய்ந்த இந்த காட்சி மண்டபம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வந்தன. சில நேரங்களில் கனரக வாகனங்கள் சரக்குடன் செல்லும்போது காட்சி மண்டபத்தில் உள்ள தூண்களில் உரசியதால் அவை சேதம் அடைந்தன.

    எனவே பழமை வாய்ந்த காட்சி மண்டபம் சேதம் அடைவதை தவிர்க்க கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத வகையில் இரும்பினால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தடுப்பு, உயரம் குறைவாக வைக்கப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் தலையை பதம் பார்க்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    விபத்து அபாயம்

    ேமாட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் போதும், வாலிபர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வரும்போதும் இந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அந்த இரும்பு தடுப்பை எடுத்து சற்று உயரத்தில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் கூட சற்று உயரமானவர்களாக இருந்தால் அவர்களது தலையையும் இரும்பு தகடு பதம்பார்த்துவிடும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    • வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    நெல்லை:

    வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு

    இந்நிலையில் பருவமழையையொட்டி சில இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    டவுன் பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெரு உள்ளிட்ட இடங்களில் சிறுவர்- சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மருத்துவ முகாம்

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர், தனது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்று இன்று 24-வது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதனை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, கவுன்சிலர் ரவீந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ெபாது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு 24-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    • நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
    • தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்ப ரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங் கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    சபாநாயகர் அப்பாவு பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் செய்தித்துறை அமைச்சர்கள் சாமிநாதன், ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ெஜயசீலன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    பொருட்காட்சியில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    அரசு பொருட்காட்சி தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். அரசுத்துறை அரங்குகளில் தமிழக அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத்திட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் துறை அலுவலர்கள் பொது மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

    பொதுமக்களின் வசதிக்காக நாளை முதல் நிறைவு நாள் வரை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த, பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை கண்டுகளித்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள் உள்ளன. பெண்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களின் அரங்குகள் மற்றும் சிற்றுண்டிகள் உள்ளன. 

    • நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 42). இவர் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
    • அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் மாவு பாக்கெட்டுகளை கடைகளுக்கு கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 42). இவர் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் மாவு பாக்கெட்டுகளை கடைகளுக்கு கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு 2 பேரும் கார்களை தங்களது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தனர்.

    இன்று காலை 2 கார்களின் கண்ணாடிகளும் அடித்து, உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். நள்ளிரவில் மர்மநபர்கள் கார் கண்ணாடிகளை உடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    முன்விரோதம் காரணமாக கார் கண்ணா டிகள் உடைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கணேசனின் ஓட்டலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
    • கடந்த 15-ந் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை டவுன் கீழரதவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது47). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.

    மேலும் கணேசனின் ஓட்டலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 15-ந் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை.

    இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசன் எங்கு சென்றார்?என அவரை தேடி வருகின்றனர்.

    • நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனித்தோரோட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
    • வாகையடி முனையில் கழிவுநீர் ஓடைகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநில இணைச்செயலாளர் நயன்சிங், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், துணைத்தலைவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனித்தோரோட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நான்கு ரத வீதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும். குறிப்பாக வாகையடி முனையில் கழிவுநீர் ஓடைகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ள நிலையில் மாநகராட்சி சார்பில் உடனடியாக செப்பனிட்டு பொது மக்களுக்கு தேரோட்ட காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×