search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron fence"

    • சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம்.
    • நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி - கோழியூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இதற்கு சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வாகனத்தை நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நிறுவனத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த குட்டியானை வாகனம் இரும்பு வேலியின் மோதி நகர முடியாமல் நின்றி ருந்தது. இதனை பார்த்த நிறுவன உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் குட்டியானை வாகனத்தில் அமர்ந்து அதனை இயக்குகிறார். இந்த வாகனம் அருகில் இருந்த இரும்பு வேலியில் மோதி நிற்கிறது. இதனை வெளியில் எடுக்க முயற்சிக்கும் மர்ம நபர், குட்டியானை வாகனத்தை இயக்க முடியாததால், அங்கேயே விட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைக் கண்ட உரிமையாளர் கார்த்திக், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். இதில் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கமுத்து மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் விக்னேஷை கைது செய்தனர். திட்டக்குடி பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவைகள் அடிக்கடி திருடி போயின. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பஸ், குட்டியானை போன்ற வாகனங்களும் திருடப்படுகின்றன. இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் இருந்து வழுக்கோடைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது.
    • பழமை வாய்ந்த இந்த காட்சி மண்டபம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வந்தன.

    நெல்லை:

    நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் இருந்து வழுக்கோடைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக் களின்போது இந்த காட்சி மண்டபத்தில் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

    காட்சி மண்டபத்தில் தடுப்பு

    பழமை வாய்ந்த இந்த காட்சி மண்டபம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வந்தன. சில நேரங்களில் கனரக வாகனங்கள் சரக்குடன் செல்லும்போது காட்சி மண்டபத்தில் உள்ள தூண்களில் உரசியதால் அவை சேதம் அடைந்தன.

    எனவே பழமை வாய்ந்த காட்சி மண்டபம் சேதம் அடைவதை தவிர்க்க கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத வகையில் இரும்பினால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தடுப்பு, உயரம் குறைவாக வைக்கப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் தலையை பதம் பார்க்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    விபத்து அபாயம்

    ேமாட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் போதும், வாலிபர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வரும்போதும் இந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அந்த இரும்பு தடுப்பை எடுத்து சற்று உயரத்தில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் கூட சற்று உயரமானவர்களாக இருந்தால் அவர்களது தலையையும் இரும்பு தகடு பதம்பார்த்துவிடும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    • பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.

    ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×