search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children park"

    • பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.

    ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகக்குடையான் ஊராட்சியில், பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு ஊராட்சிகளில் அரசின் செலவில் சிறுவர்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு ஊராட்சிகளில் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. இதே போல நாகக்குடையான் ஊராட்சியில் ஜீவா நகர் சாலையில் ஊராட்சி சேவைக்கட்டிடத்தின் எதிர்புறத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. ஆடு, மாடுகள் கட்டும் இடமாக மாறியுள்ளது.

    மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. பல லட்ச ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மக்களுக்கு உபயோகப்படாமல் உள்ளது.

    எனவே பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 
    ×