என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டவுனில் நள்ளிரவில் சம்பவம் : வியாபாரிகள் 2 பேரின் கார் கண்ணாடிகள் உடைப்பு - சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரணை
- நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 42). இவர் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
- அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் மாவு பாக்கெட்டுகளை கடைகளுக்கு கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.
நெல்லை:
நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 42). இவர் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் மாவு பாக்கெட்டுகளை கடைகளுக்கு கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு 2 பேரும் கார்களை தங்களது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தனர்.
இன்று காலை 2 கார்களின் கண்ணாடிகளும் அடித்து, உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். நள்ளிரவில் மர்மநபர்கள் கார் கண்ணாடிகளை உடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்விரோதம் காரணமாக கார் கண்ணா டிகள் உடைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்