search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
    • கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் கண்ணு வலி கிழங்கு என சொல்லப்படும் செங்காந்தாள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.

    செங்காந்தாள் விதை கொள்முதல் செய்வதற்காக நண்பர்கள் அவினாசியை சேர்ந்த குமார், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாஞ்சியப்பன் (39) ஆகியோருடன் 50 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு காரில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி காலை 4.30 மணிக்கு சேலம் இரும்பாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் போலீஸ் என கூறி வெங்கடேஷ், அவருடன் வந்த குமார், வாஞ்சியப்பன் ஆகியோரை பணத்துடன் காரில் கடத்தியது. பின்னர் தாரமங்கலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றது.

    இது குறித்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை செப்டம்பர் மாதம் இறுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரித்து வந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள முத்தியால் பள்ளியை சேர்ந்த நடராஜன் (53), அவரது மனைவி சுஜாதா (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர் . தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவல் படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூசாரி வட்டம் சீனிவாசன் (44) , கீரப்பாப்பம்பாடி மகாலிங்கம் (39), மாமாங்கம் ஜெகன்மோகன் (44), தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் கோபி (38) ஆகியோரை அவரவர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 6 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), இவர் தற்போது பண்ருட்டி அடுத்த திருவதிகை வள்ளி கந்தன் நகரில் தங்கி இருந்து தனது மூன்று சக்கர ஆட்டோவில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓடும் வாகனத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
    • நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜின் மகன் பிரசாத் கண்ணன் (42). இவரும் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நாகராஜனுக்கும், அவரது அண்ணன் பால்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு முதுகு மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத் கண்ணனை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.
    • திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கொரடாச்சேரி எருக்காட்டூரை அடுத்த நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 50).

    இவர் திருவாரூரில் இளநீர வியாபாரம் செய்து வந்தார்.

    இவரது மனைவி விசாலாட்சி.

    இவர்களுக்கு விஜய், விமல் என்ற இரண்டு மகன்களும், வினிதா என்ற மகளும் உள்ளனர்.

    அதே ஊரைச் சேர்ந்த வீரமணி, தனது மனைவியுடன் ராஜாவுக்கு தகாத உறவு இருந்ததாக சந்தேகம் அடைந்துள்ளார்.

    இதனால் ராஜா மீது வீரமணி கோபத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு ராஜா மது அருந்திவிட்டு எருக்காட்டூர் வாய்க்கால் மதகு அருகில் நின்றுகொண்டு இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த வீரமணி மற்றும் அவரது உறவினர் சரவணன் ஆகிய இருவரும் தகாத உறவு குறித்து ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை ராஜா மறுத்தாலும் சந்தேகம் தீராத நிலையில், இருவரும் சேர்ந்து ராஜாவை அருகில் இருந்த வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி கொலை செய்து, வாய்க்கால் மதகின் உள்ளே வைத்து மறைத்துள்ளனர்.

    ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்நிலையில் எருக்காட்டூர் வாய்க்கால் மதகு உட்புறம் ராஜாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    இது தொடர்பாக கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை தொடர்பாக வீரமணி மற்றும் சரவணன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தன் மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக கருதி கொலை செய்ததாக வீரமணியும், அவரது மைத்துனர் சரவணனும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் கொரடாச்சேரி போலீசார் வீரமணி (வயது 40), சரவணன் (வயது 30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டினார்.

    கள்ளக்காதல் காரணமாக இளநீர் வியாபாரி தண்ணீரில் அமிக்கி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லம்கொ ண்டான் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பலகாரம் தயாரித்து மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார்.

    சம்பவத்தன்றும் அவர் வியாபாரத்திற்கு புறப்பட்டார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட ஜோதி(18) என்பவர் மாரியப்பனை மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதனால் அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மணிகண்டஜோதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்தது. கை விரல்கள் துண்டாகின. வலியால் துடித்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர் பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டஜோதியை கைது செய்தனர். விசாரணையில், இவருக்கு சிறு வயதில் இருந்தே போதை பழக்கம் இருந்தது. இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில்பிள்ளை மளிகை கடை நடத்தி வந்தார்.
    • உறவினர் ஒருவருக்கு போன் செய்த கோவில் பிள்ளை தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள ஓசனூத்தை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை (வயது 51). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி குருவம்மாளின் நகைகளை மளிகை கடை பொருட்கள் வாங்குவதற்காக அடகுவைத்து உள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த கோவில் பிள்ளை நேற்று இரவு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனே உறவினர்கள் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் மாடியில் மயக்கநிலையில் இருந்த கோவில் பிள்ளையை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணிக்கம் மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார்.
    • புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

    விழுப்புரம்:

    திருச்சி மாவட்டம் துவாரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பாய் வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பினார். வானூர் அருகேயுள்ள டோல்கேட்டை கடந்து வீட்டிற்கு செல்ல முயற்சித்தார். அப்போது திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணிக்கத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், இன்று காலை அவர் இறந்து போனார். இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
    • தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்திய மூர்த்தி நகரில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

    வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.

    கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கின்றோம்.

    இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.

    தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.

    ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்கமாட்டோம்.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அருண் சின்னப்பா, சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி.

    நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண் டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற னர். நகைபெட்டிகளை அருகேயுள்ள முட்புதர்களில் வீசி சென்றனர்.

    பிறந்தநாள் கொண்டாடத்தினை முடித்துவிட்டு இரவு 10.45 மணிக்கு முத்துபால்பாண்டி குடும்பத்தினருடன் வீடு திரும்பினர்.வீடு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் தலைமையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைநிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    சம்பவம் நடைபெற்ற வீடு மதுரை - விருதுநகர் நான்குவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் முத்துபால் பாண்டி வீட்டில் திருடிய பின்பு நான்குவழிச்சாலை வழியாக தப்பி சென்றி ருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசா ரணை நடத்திவருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேலூர் அருகே இன்று நடந்த விபத்தில் கார் மோதி பழ வியாபாரி பலியானார்.
    • பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம் பட்டியை அடுத்துள்ள அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் புயல்ராஜ் என்ற ராஜீவ்காந்தி (வயது38). இவர் அங்குள்ள நான்கு வழிச்சாலையில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இன்று காலை ராஜீவ்காந்தி நான்கு வழிச்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக புயல்ராஜ் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து கொட்டாம்பட்டி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புயல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை மேலூர் அருகே போலீசார் விரட்டி பிடித்தனர். காைர ஓட்டி வந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print