என் மலர்
நீங்கள் தேடியது "Merchant"
- சேலம் அம்மாபேட்டை சாமிநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
- இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
- வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58) இவர் மளிகை கடைகளுக்கு மசாலா பொருட்கள் சப்பளை செய்யும் வேலை செய்து கொண்டிருந்தார். இவருக்கு மகாலட்சுமி (57) என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று ரவிச்சந்திரனின் மனைவி மகாலட்சுமி கடைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். மகள் வேலைக்கு சென்று விட்டிருந்தார். ரவிச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மகாலட்சுமி கடைக்கு சென்று திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது ரவிச்சந்திரன் வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ரவிச்சந்தி ரனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவம னைக்கு கூட்டி சென்று பார்த்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளகோ வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நவாஸ்கான் பஸ் ஏறுவதற்காக புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
- திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரி நவாஸ்கான் (30) என்பவர் பஸ் ஏறுவதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் நவாஸ்கான் சட்டை பையில் இருந்து ரூ.500-ஐ திருட முயன்றார். சுதாரித்து கொண்ட வியாபாரி அவரை கையும் களவுமாக பிடித்து அங்கிருந்த போலீ சாரிடம் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வின் விசாரணை நடத்தினார். அதில் திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் (55), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
- அனைத்து பஸ்களும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் நாடார் தலைமையில் மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார் ஆகி யோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு கொடுத்த னர்.
அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
எனவே அதனை உடனடியாக திறக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். அதுவரை அனைத்து பேருந்துகளும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சந்திப்பு பஸ் நிலையம்
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் ஏராள மான கடைகள் உள்ளது. இதனை நம்பி அவர்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்காக கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வரு கிறார்கள்.
எனவே இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடந்தாலும் அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வந்தது.
ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவை நிறுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. எனவே பஸ் நிலையத்தை திறக்கும் வரை அனைத்து பஸ்களும் அங்கு சென்று வர நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், தொகுதி செயலாளர் கருப்ப சாமி, துணைத் தலைவர் ஸ்டீபன், செய்தி தொடர்பா ளர் பகவதி, சந்திப்பு வியா பாரிகள் சங்க தலைவர் பெர்னா ண்டோ, செயலா ளர் ரவீந்திரன், பொருளா ளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை உத்தப்ப நாயக்கனூர் சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் பாணி பூரி வியாபாரம் செய்து வந்தார். ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் அவர் பலரிடமும் கடன் வாங்கி செலவழித்து வந்துள்ளார். அதனை அவரது மனைவி ராணி கண்டித்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜா, உத்தப்பநாயக்கனூர்- வத்தலகுண்டு ரோட்டில் உள்ள தோட்டம் ஒன்றில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
- விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் டி.சி. கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 52 ) ஏலக்காய் வியாபாரி. இவர் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை எண்ணி மிகவும் வேதனை அடைந்த அருண்குமார் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழப்பதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அவரது மனைவி கார்த்திகா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீடு புகுந்து வாசுதேவனை தாக்கினர்.
மதுரை
மதுரை வெங்கலக்கடை தெருவை சேர்ந்தவர் வாசு தேவன் (வயது 58). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக் கும், இவரது சகோதரர்க ளுக்கும் இடையில் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில் வாசு தேவன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரர் மாதவன், அவரது மனைவி காஞ்சனா மற்றும் சாரதா ஆகிய 3 பேர் வீடு புகுந்து வாசுதேவனை சரமாரியாக தாக்கினர்.
இது தொடர்பாக வாசு தேவன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாதவன், காஞ்சனா, சாரதா ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதே வழக்கில் காஞ்சனா கொடுத்த புகாரின் அடிப் படையில் வாசுதேவன், ஜெயராஜ் ஆகிய 2 பேரை யும் போலீசார் கைது செய்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரி-முதியவர் தற்கொலை செய்தனர்.
- பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் மயிலரசன் (வயது 41). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேேய இருந்துள்ளார். அதுகுறித்து அவரது மனைவி அவரிடம் கேட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு மயிலரசன் வீட்டைவிட்டு வெளிேய சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே மயிலரசன் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. உடனடியாக உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மயிலரசன் மனைவி செண்பகவல்லி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரத்ைத சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வணிகர் உரிமை முழக்க மாநாடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
- மாநாட்டை முன்னிட்டு கடைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஈரோடு:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு என்ற தலைப்பில் ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 8.30 மணி அளவில் வணிகக் கொடி ஏற்றும் விழா நடைபெற உள்ளது. கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் வணிகக்கொடியை ஏற்றுகிறார். அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசுகின்றனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசுகின்றனர்.
மேலும் விருதுகளையும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்குகின்றனர்.
முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டுத் திடலில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை இன்று (வியாழக்கிழமை) மாலை திறந்து வைக்கிறார்.
தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன.
மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மாநாடு குறித்து ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதற்கான முன் ஏற்பாடு பணிகளை எனது தலைமையில் நிர்வாகிகள் பிரம்மாண்டமாக செய்து வருகிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பங்களோடு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
அனைவரையும் வரவேற்க மிக சிறப்பான ஏற்பாடுகளையும், பங்கேற்கும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வணிகர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசு விரைந்து தீர்வு காணும் வகையில் வெற்றி மாநாடாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
நாளை காலை 8.30 மணி அளவில் பேரமைப்பு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 9.05 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10 மணிக்கு குத்து விளக்கு ஏற்றுதல், 10.15 மணிக்கு மாநாட்டு தலைமை உரை நிகழ்கிறது. 10.30 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
தொடர்ந்து காலை 11 மணிக்கு முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். மதியம் 2 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 3 மணிக்கு மாநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து 39-வது வணிகர் தினம் மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செயலாளர் பொ.ராமச்சந்திரன், ஈரோடு மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ்.
- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர். தற்போது அவர், சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கடந்த 12-ந்தேதி காலையில் இவர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.
வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருந்தபோது, மாரியம்மன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், நாகராஜின் மனைவிடம் தகராறு செய்து சென்றுள்ளார். இதனையடுத்து நாகராஜ், தனது மனைவியுடன் சென்று கடந்த 15-ந்தேதி தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அவரது தம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தரக்குறைவாக திட்டி, கல்லால் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து நாகராஜ், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் தரக்குறைவாக திட்டி தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரணியில் கார் மூழ்கியதில் வியாபாரி உயிர் தப்பினார்.
- காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ஜான்பால். வியாபாரியான இவர் வெளியூர் சென்று விட்டு காரில் ஊருக்கு வந்திருந்தார். சொக்கம்பட்டி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன் டயர் வெடித்தது.
இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர ஊரணியில் விழுந்து மூழ்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனே ஊரணியில் இறங்கி காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.
மயங்கிய நிலையில் கிடந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- காரைக்குடி அருகே தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்டார்.
- போலீசார் முருகேசனை கைது செய்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 45). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், முருகே சன் (22) என்ற மகனும் உள்ளனர். சூரக்குடி பகுதி யில் அடைக்கலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் தான் பார்த்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டு சில ஆண்டு களுக்கு முன்பு அடைக்கலம் வேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது அடைக்கலத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடைக்கலம் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரியகோட்டைக்கு அடைக்கலம் அந்த பெண்ணை அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த செயல் மகன் முருகேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகேசன் தந்தை அடைக்கலம் தலையில் கல்லை போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் முருகேசனை கைது செய்த னர்.
வேறொரு பெண்ணை திருமணம் செய்து ெகாண்டு குடும்பம் நடத்தியதால் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






