search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் திருட  முயன்ற தொழிலாளி கைது
    X

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் திருட முயன்ற தொழிலாளி கைது

    • நவாஸ்கான் பஸ் ஏறுவதற்காக புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
    • திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரி நவாஸ்கான் (30) என்பவர் பஸ் ஏறுவதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் நவாஸ்கான் சட்டை பையில் இருந்து ரூ.500-ஐ திருட முயன்றார். சுதாரித்து கொண்ட வியாபாரி அவரை கையும் களவுமாக பிடித்து அங்கிருந்த போலீ சாரிடம் ஒப்படைத்தார்.

    இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வின் விசாரணை நடத்தினார். அதில் திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் (55), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×