என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் திருட முயன்ற தொழிலாளி கைது
- நவாஸ்கான் பஸ் ஏறுவதற்காக புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
- திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரி நவாஸ்கான் (30) என்பவர் பஸ் ஏறுவதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் நவாஸ்கான் சட்டை பையில் இருந்து ரூ.500-ஐ திருட முயன்றார். சுதாரித்து கொண்ட வியாபாரி அவரை கையும் களவுமாக பிடித்து அங்கிருந்த போலீ சாரிடம் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வின் விசாரணை நடத்தினார். அதில் திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் (55), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






