search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cardamom"

    • கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும்.
    • வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும்.

    மர வகையை சேர்ந்தது இலந்தை மரம். கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை 9 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இலந்தை பழம் சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதன் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். இதன் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.

    இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.

    இலந்தை பழத்தில் வைட்டமின் -சி சத்து நிறைந்து இருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீமால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்டிடன்ட்டாக செயல்படும்.

    இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும்.

    உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பை சரிசெய்ய முடியும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

    பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

    பசியில்லாமல் அவதிப்படுபவர்கள், செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்கள் இலந்தை பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

    • ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.சி. கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 52 ) ஏலக்காய் வியாபாரி. இவர் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை எண்ணி மிகவும் வேதனை அடைந்த அருண்குமார் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழப்பதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது மனைவி கார்த்திகா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடியில் ஏலக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    போடி:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி மற்றும் போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளில் அதிகளவு ஏலக்காய் விளைவிக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் தேனி மாவட்டம் போடி முந்தல் சாலையில் உள்ள இந்திய நறுமணப்பொருட்கள் வாரியத்தில் ஏலம் எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு நடந்த ஏலத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிபோட்டு ஏலக்காயை வாங்கினர்.

    அதிகபட்சமாக ஒருகிலோ ரூ.2025-க்கு விற்பனையானது. நடுத்தரவகை ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1500 வரை விலைபோனது. தற்போது ஏலத்தோட்டங்களில் காய்கள் இல்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது.

    மேலும் சில வியாபாரிகள் அதிகவிலை கிடைப்பதற்காக ஏலக்காய்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் இருப்பு ஏலக்காய் வைத்து ஏலம் எடுப்பவர்கள் மட்டுமே விலை ஏற்றத்தால் பயன்படுகிறார்கள். விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை.

    ×