என் மலர்
நீங்கள் தேடியது "ரத்த சர்க்கரை அளவு"
- புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும்.
- வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
தமிழர்களின் உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். பொதுவாக புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும். ஏனெனில் புளி சூட்டை கிளப்பி, வயிற்று வலியை உண்டாக்கும் எனக் கூறுவார்கள். வெந்தயம் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படுமாம். அது எப்படி எனப் பார்ப்போம்.
தாய்ப்பால் அதிகரிப்பு
குழந்தை பிறந்த தொடக்கத்தில், சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது. அப்போது பலரும் நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பரிந்துரைப்பர். அந்த வகையில் வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள மக்கள் பாரம்பரியமாக தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணுக்களால் உற்பத்தி செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க வெந்தயம் உதவும். வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. இது எரிச்சல், மனநிலை மாற்றம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும். வெந்தய பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க உதவுவதோடு, பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்குப் பிறகு 35-65 வயதுடைய 45 ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 46% வரை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோய் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு வெந்தயம், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. நீரிழிவு காரணமாக உண்டாகும் நீரிழிவு நரம்பியல், கேட்கும் திறன் மற்றும் பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரக நோய், பல் சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை சொல்ல முடியும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது!
குறையும் கொழுப்பு
வெந்தயம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் சேர்மங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
எந்த அளவில் வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும்?
வெந்தயத்தின் பயன்பாடு நோய்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். வெந்தயத்தை எந்த அளவு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
வெந்தய பயன்பாடு பாதுகாப்பானதா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். அதுபோல கர்ப்பிணிகளும் வெந்தயத்தை அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை உள்ளவர்களும் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 21 கிராமுக்கு மேல் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது.
- ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.
- மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்.
இரவு உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமான சில நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
செரிமானத்திற்கு உதவும்
ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டக்கூடியது. வயிறு வீக்கம், அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைக்கக்கூடியது. இரவு உணவு உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்று பிரச்சினைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாகவும் அமையும்.
சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்
ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும். அதனால் வாய் துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கும். வாய் சுகாதாரத்தை பராமரிக்க செயற்கை புத்துணர்ச்சியூட்டும் பொருட்கள் அல்லது சூயிங்கம் உபயோகிப்பதற்கு இயற்கையான மாற்றாக ஏலக்காய் அமையும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும்
ஏலக்காயில் இருக்கும் சேர்மங்கள் நரம்புகளை தளர்த்த உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். தூக்க தரத்தை மேம்படுத்துவதற்கும், அமைதியான இரவிற்கும் பங்களிக்கும்.
நச்சுகளை வெளியேற்றும்
ஏலக்காயில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் துணைபுரியும். கல்லீரல் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஏலக்காய், உடலில் கொழுப்பு அளவை குறைப்பதன் மூலமும், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும்.
ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த பொருளான ஏலக்காய், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இது நீரிழிவு நோயாளிகள் அல்லது குளுக்கோஸ் அளவை நிலையாக பராமரிக்க விரும்புவோருக்கு நன்மை பயக்கும்.
நெஞ்செரிச்சலை குறைக்கும்
ஏலக்காயில் இருக்கும் காரத்தன்மை வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவும். அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை குறைக்கும். குறிப்பாக இரவு உணவு உட்கொண்ட பிறகு ஏற்படும் அசவுகரியத்தில் இருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும். தொண்டையில் சளி படிவதையும் தடுக்கும். தொண்டை புண்ணை ஆற்றும். இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச கஷ்டங்களை தடுப்பதிலும் பயனுள்ளதாக அமையும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்
வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, கலோரி எரிப்பை ஊக்குவிக்கும் ஆற்றலும் ஏலக்காய்க்கு உண்டு. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவிடும்.
- ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
- அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.
ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சர்க்கரை நோயாளிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் ஐஸ்கிரீமை சாப்பிடவே கூடாது என்பதல்ல. தங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் போது ஐஸ்கிரீமை எப்பொழுதாவது சாப்பிடலாம். ஒரு அரை கப் ஐஸ்கிரீமில் 137 கலோரிகள், 7 கிராம் கொழுப்பு, 16 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் இனிப்பு இருக்கிறது.
ஐஸ்கிரீமில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை, கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாலும், ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுவதில்லை. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மூன்று வாரத்துக்கு ஒருமுறை, அரை கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். அப்போது அவர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
1) ஐஸ்கிரீம் சாப்பிடும் போது குறைந்த கார்போஹைட்ரேட், கலோரி, சுகர், கொழுப்பு மற்றும் அதிக புரதம் உள்ள ஐஸ்கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2) உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது. அப்போது ஐஸ்கிரீமில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் அளவை சமன் செய்ய அன்று உட்கொள்ளக்கூடிய உணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
3) ஐஸ்கிரீமின் மேலே டாப்பிங்ஸாக பாதாம், பிஸ்தா போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். இது ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸை திடுக்க உதவுகிறது.
4) அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.
5) ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, அந்த சூழலில், ஐஸ்கிரீம் உண்ண முயற்சிக்க கூடாது.
ஐஸ்கிரீமில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோஆசிட் "பீல் குட்" ஹார்மோன் என்று அழைக்கப்படும் "செரட்டோனின்" சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகமாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- புழுங்கல் அரிசி சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை உடனடியாக ஏறாது.
- சாப்பிட்டவுடன் ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது. புழுங்கல் அரிசி தயாரிக்க நெல்லை வேக வைக்கும் போது உமியில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், பினோலிக் ஆசிட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக விளங்குகிறது.
கீழ்கண்ட காரணங்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது என்று கருதப்படுகிறது.

1) புழுங்கல் அரிசியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 60, பச்சரிசியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 72. இதனால், புழுங்கல் அரிசி சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை உடனடியாக ஏறாது.
2) பச்சரிசியை ஒப்பிடும் போது புழுங்கல் அரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதாலும், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி1, பி3, பி6, பி9 ஆகியவை அதிகமாக இருப்பதாலும் பச்சரிசியை விட சர்க்கரை நோயாளிகளுக்கு புழுங்கல் அரிசியே அதிக நன்மைகளை தரும்.
3) புழுங்கல் அரிசி பெருங்குடலில் ப்ரீபயாடிக்ஸ் மற்றும் பியூட்டைரேட் அளவை அதிகப்படுத்தி பெருங்குடலில் உள்ள செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது.
4) புழுங்கல் அரிசியை வேக வைக்கும் போது இதில் உள்ள ஸ்டார்ச் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறி செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டவுடன் ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
5) புழுங்கல் அரிசி சமைக்கும் போது உண்டாகும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் ப்ரீபயாடிக்ஸ் (நன்மை தரும் பாக்டீரியா) உருவாவதற்கும் துணை புரிகிறது.
மேற்கூறிய காரணங்களால் சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி உட்கொள்வதே நல்லது.
- உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
- சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க வேண்டும்.
நீரிழிவு என்பது ஒரு தீவிர நோயாகும். இது உலகம் முழுவதும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அதன் பலியாக்குகிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. டைப் 1 நீரிழிவு, குழந்தை பருவ நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் ஒரு நபர் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட இன்சுலின் பயன்படுத்த வேண்டும். அதேசமயம் டைப் 2 நீரிழிவு மரபணு காரணங்களால் ஏற்படுகிறது மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.
டைப் 1 நீரிழிவு நோயின் போது என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
* டைப் 1 நீரிழிவு நோய், தாமதமாக கண்டறியப்படுகிறது. டைப் -1நீரிழிவு நோயைப் பற்றி அறிய, ஆன்டிஜென் சோதனை செய்யப்பட வேண்டும். இதற்காக நீங்கள் ஐலெட் செல் ஆன்டிஜென் மற்றும் குளுடாமிக் அமிலம் டிகார்பாக்சிலேஸ் 65 ஆகியவற்றைப் பெறலாம். இது தாமதமாக கண்டறியப்பட்டால் நீரிழிவு நோய் மேலும் அதிகரிக்கலாம்.
* டைப் 1 நீரிழிவு அடிக்கடி கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை தூண்டுகிறது. இது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளில், இந்த ஹார்மோன் மாற்றங்கள் இன்சுலின் மூலம் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் உயர் ரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும்.
எனவே, உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. ஆனால் மன அழுத்தத்தை குறைக்கவும், இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும்.
உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள், உணவு உட்கொள்ளல், உடல் செயல்பாடு மற்றும் இன்சுலின் அளவைப் பற்றிய குறிப்பை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம். ஒரு நாளிதழ் எழுதுவது நீரிழிவு வடிவங்களைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
டைப் 1 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்கள், சிறுநீரக செயல்பாடு சோதனைகள் மற்றும் லிப்பிட் சுயவிவரம் சரியான நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். இதனால் அது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சோதனைகள் செய்யப்படாவிட்டால், தேவையான சிகிச்சையை தாமதப்படுத்தலாம்.

கார்போஹைட்ரேட்டுகளின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அளவை தவறாகக் கணக்கிடுவது தவறான இன்சுலின் டோசுக்கு வழிவகுக்கும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். எனவே, சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது நிபுணரை அணுகவும்.






