என் மலர்
நீங்கள் தேடியது "Nutritional foods"
- புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும்.
- வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
தமிழர்களின் உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். பொதுவாக புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும். ஏனெனில் புளி சூட்டை கிளப்பி, வயிற்று வலியை உண்டாக்கும் எனக் கூறுவார்கள். வெந்தயம் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படுமாம். அது எப்படி எனப் பார்ப்போம்.
தாய்ப்பால் அதிகரிப்பு
குழந்தை பிறந்த தொடக்கத்தில், சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது. அப்போது பலரும் நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பரிந்துரைப்பர். அந்த வகையில் வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள மக்கள் பாரம்பரியமாக தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணுக்களால் உற்பத்தி செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க வெந்தயம் உதவும். வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. இது எரிச்சல், மனநிலை மாற்றம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும். வெந்தய பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க உதவுவதோடு, பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்குப் பிறகு 35-65 வயதுடைய 45 ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 46% வரை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோய் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு வெந்தயம், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. நீரிழிவு காரணமாக உண்டாகும் நீரிழிவு நரம்பியல், கேட்கும் திறன் மற்றும் பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரக நோய், பல் சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை சொல்ல முடியும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது!
குறையும் கொழுப்பு
வெந்தயம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் சேர்மங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
எந்த அளவில் வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும்?
வெந்தயத்தின் பயன்பாடு நோய்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். வெந்தயத்தை எந்த அளவு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
வெந்தய பயன்பாடு பாதுகாப்பானதா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். அதுபோல கர்ப்பிணிகளும் வெந்தயத்தை அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை உள்ளவர்களும் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 21 கிராமுக்கு மேல் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது.
- ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு காரணம்.
- மனஅழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.
கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
ஊட்டச்சத்து குறைபாடு:
போதுமான அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்குத் தீனி போன்றவற்றில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்காது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குடலில் இருக்கும் மைக்ரோபயோட்டா இன்றியமையாதது.
மேலும் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்புகள், வைட்டமின்கள் டி, சி, பி, ஏ, ஈ, கே மற்றும் இரும்பு, கால்சியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் உடலுக்கு போதுமான அளவு தேவை. அத்துடன் நோய் எதிர்ப்பு அமைப்பு திறம்பட செயல்பட பழங்கள் மற்றும் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஃப்ரீபயாடிக்குகள், புரோபயாடிக்குகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதும் முக்கியம்.
உடற்பயிற்சி இல்லாமை:
தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் வாரத்தில் 3 நாட்களாவது உடற்பயிற்சிக்காக நேரம் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது. அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மன அழுத்தம்:
நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதன் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளில் மன அழுத்தம் முதன்மையானது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அதில் இருந்து மீள்வதற்கான நேரம் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள வைத்துவிடும். மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.
தூக்கமின்மை:
மன அழுத்தத்தைப் போலவே தூக்கமின்மையும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான ரத்த வெள்ளை அணுக்களின் இயல்பான உற்பத்தியை சீர்குலைத்து விடும். ஒழுங்கற்ற தூக்க முறைகளும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.
மது-புகைப்பழக்கம்:
மது பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆல்கஹால் காரணமாக பாதிப்படையும். புகைப்பிடித்தல் புற்றுநோயுடன் தொடர்புடையது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளிலும் குறுக்கிடும்.
வீட்டுக்குள்ளேயே இருத்தல்:
எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருப்பதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். தினமும் சில நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படர வேண்டும். சூரிய ஒளியின் வெளிப்பாடு சர்க்காடியன் தாளத்தை பராமரிக்க உதவும். இது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போதுமான அளவு கிடைக்காதபோது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும்.
கொரோனா காலகட்டத்தில் பலரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டார்கள். எப்போதும் சளி, இருமலால் அவதிப்படுவது, அடிக்கடி வயிறு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது, மன அழுத்தத்திற்கு ஆளாவது, அவ்வப்போது சோர்வாக இருப்பதாக உணர்வது, அடிக்கடி நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன.
- ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அது குழந்தைகள் இறப்பதற்கு காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர்.
குறைப் பிரசவம்
கருப்பை திசுச்சுரண்டல் எனப்படக்கூடிய டி அன்ட் சி செய்வதன் காரணமாக, கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிலந்து விடலாம். இதன் காரணமாக, கருப்பைத் திசு தளர்வதுடன் அதில் குழந்தை வளரும் போது குழந்தையைத் தங்க வைக்க முடியாமல், கருப்பை வாய் திறக்க ஆரம்பித்து விடும். இந்த நிலையில் கரு சிதைந்து விட வாய்ப்புள்ளது. இவ்வாறு நிகழாத சமயத்தில் குறை பிரசவம் உண்டாவது உறுதியாகும்.
குறைபிரசவ மற்றும் முதிராத குழந்தை
கர்ப்பம் தரித்ததில் இருந்து 37-வது வாரத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தை குறை பிரசவக் குழந்தை எனக் கூறப்படுகிறது. அதேபோல, 37-வது வாரத்திற்குப் பிறகு பிறந்தாலும், குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதை முதிராத குழந்தை எனக் கூறுவர்.

குறைபிரசவத்திற்கான காரணம்
பெண்கள் சாதாரண நிலையில் இருப்பதை விட கர்ப்ப காலத்தில் இருக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு ஊட்டச்சத்து சாப்பிடாமல், கர்ப்பகாலத்தில் தேவையான பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும், ரத்த சோகை ஏற்படுவதால் உண்டாகும் அசதியினால் பாதிக்கப்பட்டவர்களும், பால்வினை நோய்களால் தாக்கப்பட்ட சமயத்திலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும், கர்ப்பிணி பெண்கள் கடுமையான காய்ச்சல், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பினும் குறைபிரசவம் நிகழ வாய்ப்புண்டு.
முக்கியமாக, கர்ப்பம் தரித்த பெண்களின் வயதைப் பொறுத்தும் ஏற்படலாம். அதாவது, கர்ப்பிணி பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டவராகவோ 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ உள்ள இருந்தால் அவர்களுக்கு குறை பிரசவம் நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண்கள் இந்த காலகட்டங்களில் மிகுந்த பாதுகாப்புடனும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.
- சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
- குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.
குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.
வளர்பருவம்:
இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.
சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

வைட்டமின் சி:
குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

இரும்புச்சத்து:
குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.
வைட்டமின் டி:
குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

புரதம்:
வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.
ஆரோக்கியமான கொழுப்பு:
சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
- எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
- புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...

கீரை
கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

பருப்பு
பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.

ஓட்ஸ்
ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.

பால்
பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.

ப்ரோக்கோலி
பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.

பீட்ரூட்
பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.

பாதாம்
பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
- கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்து உணவுகள்.
- ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு உடலுக்கு சமநிலையை வழங்குகிறது. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தாதுக்கள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகவும் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளாக உள்ளன.
கர்ப்ப காலத்தில் குறிப்பாக பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த முடியும். இது கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவற்கு உதவும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவற்கும் உதவுகிறது.

பேரீச்சை
பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி மற்றும் கே, இரும்புச்சத்து, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுப்பொருட்கள் உள்ளது.
கருத்தரித்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள். பேரீச்சம்பழங்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கர்ப்ப காலத்திற்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த உணவாகும்.

மாதுளை
மாதுளையில் வைட்டமின் சி மற்றும் கே, அத்துடன் பல ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை பெண் கருவுறுதலை அதிகரிக்கச் செய்வதாகவும், கருப்பை சுவரை தடிமனாக்க உதவுவதாகவும், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மக்கா வேர்
மக்கா ரூட் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் குறைந்த கருவுறுதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். இது சத்தானது மற்றும் வைட்டமின்கள் பி, சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இந்த வேர் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும், விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்துகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் அரை டீஸ்பூன் மக்கா ரூட் தூள் சேர்க்கவும். நீங்கள் பல மாதங்களுக்கு மக்கா ரூட் தூள் எடுக்கலாம், ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அதை தவிர்க்கவும்.
வைட்டமின் டி
உடலில் வைட்டமின் டி இல்லாதது கருவுறாமைக்கு வழிவகுக்கும் மற்றும் முந்தைய கர்ப்பத்தை இழந்த பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.
எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. பல அறிவியல் ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டால் பெண் கருவுறுதலில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் காட்டுகின்றன.

லவங்கப்பட்டை
இந்த அற்புதமான மருந்து பெண்களின் கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மலட்டுத்தன்மையை தடுக்கிறது. பெண் மலட்டுத்தன்மையின் முக்கிய காரணங்களில் ஒன்றான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் சேர்த்து இந்த தேநீரை பல மாதங்களுக்கு குடிக்கலாம்.

ஆலமரத்தின் வேர்கள்
ஆலமரத்தின் வேர் கருத்தரிப்பிற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். உங்கள் மாதவிடாய் முடிந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு வெதுவெதுப்பான பாலுடன் ஆலமரத்தின் வேரின் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பல மாதங்கள் கூட இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். நல்ல ரிசல்ட் இருக்கும்.

பூண்டு
கர்ப்பம் தரிக்க ஒரு சிறந்த இயற்கை தீர்வு உண்டு என்றால் அது பூண்டு சாப்பிடுவது. பூண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. பூண்டு விந்தணு மற்றும் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துகிறது. 1 முதல் 5 பல் பூண்டுகளை மென்று சாப்பிடலாம்.
பூண்டை மென்று சாப்பிட்ட பிறகு, ஒரு கிளாஸ் சூடான பால் குடிக்கவும். அல்லது பாலில் பூண்டு பற்களை வேகவைத்தும் சாப்பிட்டு வரலாம். கருவுறுதலை மேம்படுத்த குளிர்காலங்களில் இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்றவும்.
- கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.
- மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள்.
கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் முக்கியமானது. இவற்றில் உண்டாகும் குறைபாடுகள் கருத்தரித்தலில் சிக்கலை உண்டு செய்துவிடும்.
ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே மூன்று லட்சம் கருமுட்டைகளை கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை வளரும் போது இந்த கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து கர்ப்பபையை சென்றடையும். பிறகு இவை விந்துவுடன் இணைந்து கருத்தரித்தலை உண்டு செய்யும்.
கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணையாத நிலையில் கர்ப்பப்பை சுவருடன் இணைந்து ரத்தமாக வெளியேறும். இந்த உதிரபோக்கு தான் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
அதனால் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.
கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியம் என்பது உணவிலும் அடங்கியிருக்கிறது. முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் தரமான விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும்.
கருவுற விரும்பும் தம்பதியர்கள் மருத்துவரை அணுகும் போது கருமுட்டை வளர்ச்சி மற்றும் விந்தணுக்கள் குறைபாடு பற்றி கூறியிருந்தால் நீங்கள் உங்கள் உணவு திட்டத்தை மாற்றுங்கள்.
அதில் முதலாவதாக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிருங்கள். இருவரும் மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். தூக்கம் போதுமான அளவு இருக்கட்டும்.

விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரைகள் டாக்டர் கொடுத்திருந்தாலும் வீட்டில் உணவு முறையில் ஆரோக்கியத்தை கொண்டு வரலாம். அதில் முதலாவது பச்சைகாய்கறிகள். குறிப்பாக கீரைகள். கீரையில் முருங்கைக்கீரை கொடுக்கலாம்.
பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பழங்காளில் ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.
அதே போன்று காய்கறிகள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் எடுத்துகொள்ள வேண்டும்.
பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் இந்த உணவுகள் உதவும் என்றாலும் அதோடு பெண்கள் சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ என இன்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.
மேலும் நல்ல ஊட்டச்சத்து என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது அல்ல. சரியான உணவுகளை எடுத்துகொள்வது. குழந்தையை பெற முயற்சிக்கும் போது புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சீரான உட்கொள்ளலுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம்.
- பாசிப் பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.
- வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பருப்பு உணவுகள்
இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் உண்ணக்கொடுக்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப் பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.
ஆரோக்கியமான எண்ணெய்கள்
ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.
பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், கால்சியம் பற்றாக்குறையை ஈடுசெய்ய கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழைப்பழங்கள்
மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.
கேரட்
கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

கோழி
கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் வைட்டமின்-சி உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

மீன்
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இதய அமைப்பை பலப்படுத்துகின்றன.
வைட்டமின்-டி
இது ஒரு உணவு அல்ல என்றாலும், உடல் உறிஞ்சும் சத்தாகும். உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.






