என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் எதிர்ப்பு சக்தி"

    • பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
    • சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும்.

    இப்போதைய நவீன காலகட்டத்தில் பெண்கள் புதிதாக ஒரு நோய் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள். சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் எனப்படும் இந்த நோயானது, சுருக்கமாக எஸ்.எல்.இ. என்று அழைக்கப்படுகிறது. இன்னும் எளிதாக புரியவேண்டும் என்றால் இதை லூபஸ் என்று அழைக்கிறார்கள். இது ஒருவகையான திசு குறைபாடு நோய் ஆகும்.

     சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பு:

    தற்போது ஒரு லட்சம் பெண்களில் 20 முதல் 40 பெண்களுக்கு இந்த திசு குறைபாடு நோய் ஏற்படுகிறது. சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசிஸ் நோய்த்தாக்கம் கொண்ட பெண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்களின் கை, கால்களில் சில நேரங்களில் அரிப்புகளுடன் கூடிய அலர்ஜி வரலாம்.

    பல நேரங்களில் அவர்களுக்கு முகத்தில் அலர்ஜி ஏற்பட்டு முகத்தின் தோலில் கருப்பு கருப்பாக மாறி நிறமிழப்பு (பிக்மன்டேஷன்) வரலாம். உடலின் தோல் பகுதியில் பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீர்க்குழாயில் பிரச்சனைகள் உருவாகலாம். சிறுநீரகத்திலும் பிரச்சனை ஏற்பட்டு சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படலாம். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதால், சிறுநீரக செயல்பாடு குறைவாகலாம்.

    இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு பைபுரோசிஸ் ஏற்படும். அதாவது காயம் ஏற்பட்ட இடங்களில் உருவாகும் வடுவில் உள்ள இணைப்பு திசுக்களில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் சேரும் நிலையே பைபுரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் நுரையீரல், வயிறு உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கூட இந்த பைபுரோசிஸ் ஏற்படலாம்.

     

    குறிப்பாக இந்த பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. 15 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்ற நோயும் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. இது உடலில் உள்ள சிறுசிறு மூட்டு பகுதி இருக்கும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய 2 வகையான விஷயங்களிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் பாதிப்பால் ஏற்படுகிற நோய் ஆகும். வழக்கமாக நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் நமது உடலை நோயில் இருந்தும், நோய்க்கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக திரும்பி, நமது உடலில் பாதிப்பை உருவாக்குகிறது.

    கருத்தரிப்பதிலும், கரு வளர்ச்சியிலும் ஏற்படும் சிக்கல்கள்:

    லூபஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிக்கப்பட்டு, உடலில் உள்ள செல்களுக்கே, இவை எதிரான எதிர்ப்பு உயிரியை உருவாக்கி விடும். அதனால் தான் இந்த லூபஸ் எரித்தமட்டோசிஸ் பாதிப்பின்போது செல்லுலர் நியூக்ளிக் அமிலத்துக்கு (செல்களின் உட்கரு அமிலம்), நியூக்ளியர் ஆன்டிபாடி (எதிர்ப்பு உயிரி) உருவாகிறது.

    இதுபோன்று நியூக்ளியர் ஆன்டிபாடி உருவாவதால், நியூக்ளியர் செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிப்படைந்து, அதனால் அந்த செல்கள் சேதம் அடையும். அதன் காரணமாக தோல் நோய்கள், ரத்தக்குழாய் தொடர்புடைய பாதிப்புகள் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதிலும் சரி, கரு உருவாகும்போது கரு வளர்ச்சியிலும் சரி, பிரசவத்திலும் சரி, எல்லா விஷயங்களிலுமே பல சிக்கல்கள் உருவாகின்றன.

    ஏனென்றால் இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு நமது உடலில் உள்ள தோல், ரத்தக்குழாய்கள், நரம்பு செல்கள், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் இருக்கின்ற பல செல்களுக்கு எதிராக, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே மாறுபாடு அடைந்து எதிர்ப்பு உயிரியாக உருமாறி அவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த தன்னியக்க எதிர்ப்பு உயிரிகள், குறிப்பாக டி.என்.ஏ. ஆன்டிபாடி, ஸ்மித் ஆன்டிபாடி ஆகிய எதிர்ப்பு உயிரிகள் தோன்றி தோல், சிறுநீரகம், ரத்தக்குழாய்கள், மூட்டுகள், தசைநார்கள் ஆகியவற்றில் உள்ள செல்களை பழுதாக்கி அதில் வீக்கங்களை ஏற்படுத்தி, நோய்த்தாக்கத்தை உருவாக்கி பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

    இதன் காரணமாக தோலில் பல இடங்களில் ஆங்காங்கே அலர்ஜி போல ஏற்படும். தோலில் மாற்றங்கள் இருக்கும். இது சிறுநீரகத்தை தாக்கினால் சிறுநீரகம் பாதிப்படைந்து, அதில் சேதம் ஏற்பட்டு, அதனுடைய செயல்பாடு குறைந்து விடும். மேலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். இந்த தாக்கம் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும். அந்த வீக்கமானது ரத்தக்குழாய்களை பாதித்து அதனால் ரத்தக்குழாயில் ஆங்காங்கே ரத்த உறைவு ஏற்படும்.

    மூட்டுகளில் வலி, கை கால்களில் வீக்கம்:

    இந்த எதிர்ப்பு உயிரிகளால் குடலுக்கு போகின்ற ரத்தக் குழாய் பாதிக்கப்பட்டால் அந்த குழாயில் ரத்த உறைவு உருவாகலாம். காலில் ரத்த உறைவு ஏற்படலாம். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு அந்த உறுப்புகள் பழுதடையவும் வாய்ப்பு இருக்கிறது. மூட்டு பகுதிகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டால் மூட்டழற்சி வரலாம். மூட்டுகளில் வலி ஏற்படலாம். கை, கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    இதனால் நடக்க முடியாமல் போகும். வேலை செய்ய முடியாது. இந்த மாதிரி ஒவ்வொரு இடங்களிலும் உள்ள எல்லா இணைப்பு திசுக்களும் பழுதடைந்து பைபுரோசிஸ் உருவாகும். அதனால் தான் இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

    ஏனென்றால் ஒவ்வொரு செல்களையும் இணைக்கின்ற இணைப்பு திசுக்களில் தான் இந்த எதிர்ப்பு உயிரிகள் உருவாகிறது. அதனால்தான் இந்த எதிர்ப்பு உயிரியானது, ரத்தக் குழாய்கள், சிறுநீரகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் உள்ள இணைப்பு திசுக்களை பாதிக்கும். இது பல உறுப்புகளிலும் பல பிரச்சனைகளை உருவாக்கும்.

    இந்த லூபஸ் நோயின் முக்கியமான விஷயமே, சில காலகட்டங்களில் இந்த நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். சில நேரங்களில் இந்த நோயின் பாதிப்பு தானாக குறைந்து விடும். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் ஏற்படுகிற சில மாறுபாடுகளை பொறுத்து இந்த விஷயங்களில் நிவாரணமும், குணமடைவதும் ஏற்படும்.

    சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும். காய்ச்சல் பாதிப்பு இருக்கும். சில நேரங்களில் சிறுநீரக செயல்பாடு குறைவாகி சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். பல இணைப்பு திசுக்கள், தோல், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, அது செல்கின்ற உறுப்புகள் எல்லாம் பழுதாகி பல பிரச்சனைகளை உருவாக்கலாம். பல நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தான நிலையை கூட ஏற்படுத்தலாம்.

    திரும்பத் திரும்ப ஏற்படும் கருச்சிதைவுக்கு காரணம்:

    இந்த மாதிரியான விஷயங்கள் இளம்பெண்களை பாதிப்பதால் அவர்கள் முக்கியமான பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நோய்த்தாக்கம் என்பது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆகும். இதேபோல் தான் இன்னொரு பிரச்சனை ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ். நமது மூட்டு இணைப்புகளில் சைனோவியல் எனப்படும் ஜவ்வு பகுதி உள்ளது. இந்த ஜவ்வு பகுதிதான், மூட்டுகள் இயல்பாக இயங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

    அந்த பகுதிக்கு எதிரான எதிர்ப்பு உயிரி உருவாகி அந்த இணைப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கை கால்கள் எல்லாம் வீங்கிவிடும். மூட்டு ஜவ்வு இருக்கின்ற நிறைய சிறுசிறு இணைப்பு பகுதிகள் எல்லாம் பாதிப்படைந்து, அந்த பகுதிகளில் வீக்கம் உருவாகி, விறைப்புத்தன்மை ஏற்பட்டு வேலை செய்ய முடியாமல் போய் விடும். இதனால் கால்களை மடக்க முடியாது, நீட்ட முடியாது. வலி இருந்துகொண்டே இருக்கும். பல நேரங்களில் இந்த ஜவ்வு பகுதியானது சேதம் அடைந்து பழுதாகி கை, கால்களில் மாற்றங்களும் ஏற்படும். இது ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

    தற்காலத்தில் தான் இந்தநோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் கர்ப்பம் முதற்கொண்டு பலவிதமான பிரச்சனைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு தான் அடிப்படையான காரணமாக இருக்கிறது. கருத்தரிக்காமல் இருப்பது மற்றும் கருத்தரித்து திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படுவதற்கு கூட நோய் எதிர்ப்பு சக்தி பழுதாவது தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்யும்போது, அதில் கருவானது கருப்பையில் ஒட்டி வளரும் தன்மை குறைவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.

    இந்த வகையில் சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்திலும் இவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம். அது என்னென்ன பிரச்சனைகள்? இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பாதுகாப்பாக குழந்தைகளை பெற்றெடுப்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.
    • தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

    தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

    • உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது.
    • மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

    தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளில் மாம்பழம் முக்கியமான ஒன்று. வெப்ப மண்டலங்களில் பயிராகி, குளிர் பிரதேசங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்து இழுக்கும் பழம் என்றால் அது மாம்பழம் தான். எனவே இது 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது.

    உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி உள்பட பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது. மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த மாம்பழம் உதவுகிறது. இதில் காணப்படும் மாங்கிபெரின் எனப்படும் ஒரு வகை பாலிபீனால் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

    இது தவிர, மாம்பழத்தில் அமைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். கோடைக்காலங்களில் இயற்கை தரும் பழங்களில் தவிர்க்காமல் உண்ண வேண்டிய ஒன்று மாம்பழம் ஆகும்.

    • நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.
    • உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

    கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

    அதனால் வைட்டமின் சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சீரான உணவை உண்பது அவசியமானது. மேலும் நன்றாக தூங்கவும் வேண்டும். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

    ஆண்டு முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை பெரும் பாலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப்படும் இரண்டு முக்கிய கூறுகளால் ஆனவை. மனித உடல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் திறன் கொண் டவை அல்ல. ஆதலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கின்றன. சாப்பிடும் உணவில் அவை போதுமான அளவு இல்லாதபோது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். அதனால் நோய்க்கிருமிகள் எளிதாக குடிகொண்டுவிடும். உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், முழு தானியங்கள் மற்றும் தினைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நுண்ணூட்டச்சத்துக்களைத் தவிர, அன்றாடம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்க செயல்பாட்டிற்கு உதவும். அது குடல் ஆரோக்கியத்தையும், மூளையின் சரியான செயல்பாட்டிற்கான நீரேற்றத்தையும் உறுதி செய்துவிடும். எந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிட வேண் டும் என்பது பற்றி உணவியல் நிபுணரை கலந்தாலோசித்துக்கொள்வதும் அவசியம்.

    • 100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது.
    • ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    பூசணி விதையில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், அதிகமாக உள்ளதால் உடம்பில் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

    100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளதால் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், புண்கள் விரைவில் ஆறும். வாசனை மற்றும் சுவையறிதலுக்கு இது இன்றியமையாதது.

    பூசணி விதையில் மெக்னீசியம் இருப்பதால், தசைகள், நரம்புகள் நல்ல முறையில் இயங்கும். எலும்புக்கு நல்ல வலிமையைத் தரும். தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும். ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை அளவை குறைக்கும்.

    பூசணி விதையில் உடலுக்கு தேவையான வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் பூசணி விதையை உண்பது மிகச் சிறந்தது. ஏன் எனில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, தடுக்கும் ஆற்றல் பூசணி விதைகளில் உள்ளது.

    இதை இள வறுப்பாக வறுத்து 10 முதல் 15 கிராம் (30 கிராமுக்கு அதிகமாக சாப்பிட கூடாது) அளவு மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் எடுத்தால், ரத்த அழுத்தம் சீரடையும், சர்க்கரை அளவு குறையும், உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு, ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
    • தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது.

    எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தக்காளி. இது அதிக மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

    ஊட்டச்சத்து கலவை:

    தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும், 'வைட்டமின் கே 1' ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

    எலும்பு ஆரோக்கியம்:

    எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின்-கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

    கண் பார்வை:

    தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குணப்படுத்த முடியாத கோளாறான மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

    பொலிவான கூந்தல்:

    தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும், இதனால் கூந்தல் அழகாக மாறும்.

    புற்றுநோய்:

    இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்டுகளும் தக்காளியில் உள்ளன. இதனால் புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

    உடல் எடை குறைய:

    தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி பழத்தை சாப்பிடலாம்.

    100 கிராம் தக்காளியில்...

    நீர்ச்சத்து- 95 சதவிகிதம்

    புரதச்சத்து- 0.9 கிராம்

    கார்ப்ஸ்- 3.9 கிராம்

    சர்க்கரை- 2.6 கிராம்

    நார்ச்சத்து- 1.2 கிராம்

    கொழுப்பு- 0.2 கிராம்

    மொத்த கலோரிகள்- 18

    • குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள்.
    • குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.

    குழந்தைகள் வளர்ச்சியில் பருவகாலநோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுவராமல் தடுக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், வைரஸ் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த தொற்றை எதிர்க்கும் வகையில் குளிர்காலத்தில் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான முதன்மையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

    சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.

    அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.

    குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. .

    உடல் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்தவை கொட்டைகள். அம்மாக்கள் குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கு பிறகு கொட்டைகளை தவிர்க்காமல் கொடுப்பார்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை போராடுவதற்கான ஆற்றலை கொடுக்கும்.

    அம்மாக்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை இதை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

    கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.

    முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது. மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் ஆக மாற்றி கொடுக்கலாம். முட்டையை பொரித்தும் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினம் ஒர் டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள் குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் பால் பொருள்களை தயிர், சீஸ் போன்றவற்றை சேர்க்கலாம். குறிப்பாக தினசரி தயிர் சேர்க்கலாம்.

    • இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
    • குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    நட்சத்திர பழம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் அதனை நட்சத்திர பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

    குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக் குளம் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல், மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது. இந்த நட்சத்திர பழம் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.

    • நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
    • எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

    பீன்ஸ் பல உலக நாடுகளில், பல்வேறு விதமான வண்ணங்களில் விளைகிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் பீன்ஸில் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.

    பீன்ஸ் உங்களுக்கு பிடிக்குமா...? அது சுவையில் மட்டுமல்ல, சத்து விஷயங்களிலும் சூப்பரானது. இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…!

    பேப்பேசி குடும்ப,த்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ்கள் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

    100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும். மிக அதிக அளவிலான வைட்டமின்-ஏ, பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும். குழந்தைகளுக்கு நோயை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.

    பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல் தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது. இது வைட்டமின் டீ 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது. பைரிடாக்சின் எனும் வைட்டமின் பி-6, தையமின் பி-1, வைட்டமின் சி ஆகியவை பீன்ஸில் நிறைந்துள்ளது.

    வைட்டமின்-சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு ரொம்பவும் அவசியமானது.

    மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது. பிரிரேடிக்கல்ஸை விரட்டி யடிக்கக் கூடியது. பொட்டாசியம் தாது உப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

    • மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.
    • வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.

    கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.

    வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் சீதபேதி கட்டுப்படும்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.

    வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும். தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட்ஸ் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இதிலும் வைட்டமின் 'ஈ' சத்து நிறைந்துள்ளது.

    • ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.
    • அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

    ஸ்ட்ராபெர்ரியில் இருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிற மூட்டியாகவும் பயன்படுகிறது.

    நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நிறைந்திருக்கின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழம் சுவையாக இருப்பதுடன், தோலின் வறட்சியைப் போக்கும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யும் மற்றும் செல் அழிவைத் தடுக்கும் பணிகளைச் செய்கிறது. ஆம்...! அதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுப்படுத்துகிறது.

    ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவைத் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடெண்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி-6, வைட்டமின் கே, அயோடின், செலினியம் போன்ற சத்துப்பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபிளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன. இவையும், உடலை வலுவாக்குகின்றன.

    5 பழங்களில் 250 மி.லி. அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

    இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் முகத்தில் தோன்றும் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க ஸ்ட்ராபெர்ரி, சிறப்பான மருந்து.

    • அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
    • நட்சத்திர வடிவில் இருப்பதால் இது ‘நட்சத்திரப்பூ’ என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. நட்சத்திர வடிவில் இருப்பதால் இது 'நட்சத்திரப்பூ' என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரியாணிக்கு மணம், சுவை கொடுப்பதில் இதற்கு நிகர் வேறில்லை. அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

    * இந்த எண்ணெய் சரும அழற்சி அனைத்தையும் தீர்க்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் நரம்புகளை வலுவாக்கவும் உதவும். இதில் முக்கியமாக அனெத்தோல், எஸ்ட்ராகோல், மெத்தில் சாவிகோல், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் மற்றும் லிமோனின் உள்ளன.

    * இப்பூவை பொடி செய்து ½ முதல் 1 கிராம் எடை வீதம் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை உட்கொள்ள, செரியாமை, மாந்தம், புளித்த ஏப்பம் நீங்கும்.

    * அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.

    * அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகும். இந்த தைலத்தை நெற்றியில் தடவினால் மன இறுக்கத்தை போக்கும்.

    * துருக்கி, சீனா, பெர்சியா போன்ற நாடுகளில் மக்கள் செரிமானத்திற்கு இதனை பயன்படுத்துகின்றனர். இந்த மசாலா, வாயுவால் ஏற்படும் வயிற்று பிடிப்பை நீக்கும். இது பெருங்குடல் நோய் உள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

    * குழந்தைகளுக்கு இதை தேநீர் போன்று காய்ச்சி வழங்குவதால் வாந்தி, வலிப்புத் தாக்கங்கள், பிற நரம்பியல் விளைவுகளை குணப்படுத்தும்.

    * இதில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளை கொல்லும் பயோஆக்டிவ் பொருட்கள் உள்ளன.

    * வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான சிகிமிக் அமிலம் அன்னாசிப் பூவில் உள்ளது. இது 'ஆசெல்டாமிவிர்' (டாமிபுளூ) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தாக பன்றி காய்ச்சலுக்கு தரப்படுகிறது.

    * இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளாகும். இது இதயத்தின் மென்மையான தசைகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது, திசுக்களில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றுகிறது.

    ×