என் மலர்
நீங்கள் தேடியது "Special articles"
- உணவில் தயிர் கடைசியாக இருக்கட்டும்.
- சியா விதைகள் மத்திய அமெரிக்காவில் தோன்றிய ஒரு சிறிய விதை.
இன்றைய உணவு பழக்கங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆளிவிதை எனப்படும் பிளாக்ஸ் விதைகளை மனிதனுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்களில் ஒன்று எனலாம். இது ஆரோக்கியத்தின் புதையல்.
* இருதய ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இதிலுள்ள ஒமேகா 3 கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும். இருதய நோய்கள் பாதிப்பு வெகுவாய் குறையும். சைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ஒமேகா 3 ஆளி விதை மூலம் எளிதில் கிடைக்கும்.
* நார் சத்து மிகுந்தது. எனவே மலச்சிக்கல் இருக்காது. குடல் ஆரோக்கியமாய் சுத்தமாக இருக்கும்.
* பிராஸ்டேட், மார்பக புற்றுநோய் அபாயத்தினைக் குறைக்கும்.
* வயிறு நார்சத்து மூலம் நிறைவு கொள்வதால் எடை குறைப்புக்கு உதவும்.
* தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது முடிகொட்டுவது நிற்கும். சரும பொலிவு கூடும்.
ஆளிவிதை எடுத்துக் கொள்ளும் முறை:
* இதனை அப்படியே உட்கொண்டால் செரிமானம் இன்றி அப்படியே வெளியேறி விடும்.
* இதனை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பயன்படுத்தலாம். மோர், சூப், பருப்பு இப்படி எதிலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
சில முக்கிய குறிப்புகள்:
* அதிக நார்சத்து கொண்டது என்பதால் தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும். நாள்முழுவதும் நன்கு நீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வயிற்று வலி ஏற்படும்.
* கர்ப்ப காலத்தில் மருத்துவர் அறிவுரை பெற்றே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைந்த பலன் கொண்ட ஆளி விதையினை உணவில் சேர்த்து ஆரோக்கியத்தினை மேம்படுத்துவோம்.
* வயிறு உப்பிசம் நீங்க- சர்க்கரை சீஸ், சோடா, க்ளூெடன் தவிர்க்க வேண்டும்.
* 2 லிட்டர் நீர் அன்றாடம் அவசியம், இஞ்சி, சியா விதை, அன்னாசி, சோம்பு, வெள்ளரி இவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
கலோரி சத்தில் மாற்றம்: (100 கிராம் அளவு)
* வேக வைத்த சோளம் 96, கார்ன்பிளாக்ஸ் 285, வெண்ணெய் சேர்த்த பாப்கார்ன் 494.
* வேக வைத்த உருளை 91, பிரெஞ்ச் பிரை 214 உருளை சிப்ஸ் 510
* வாழைக்காய் 97, வாழைப்பழம் 116, வாழைக்காய் நேந்திரம் சிப்ஸ் சுமார் 450

கமலி ஸ்ரீபால்
* வாழைப்பழத்தினை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டாம். மக்னீசியம், கால்சியம் இவற்றில் பாதிப்பு ஏற்படலாம்.
* காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது மந்தமாக உணரக் கூடும்.
* இரவில் கொட்டை வகை உணவு தூக்கத்தினை தொந்தரவு செய்யலாம்.
* காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது படபடப்பினை ஏற்படுத்தும்.
* இரவில் அரிசி உணவு கொழுப்பு சத்தினைக் கூட்டும்.
* வெறும் வயிற்றில் ஆரஞ்சு பழம் ஜுஸ் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
* உணவில் தயிர் கடைசியாக இருக்கட்டும்.
* கிரீன் டீ: சில ஆய்வுகள் கூறும் கருத்துக்கள் கிரீன் டீ எடையை குறைக்கும்.
கல்லீரல் பாதிப்பு குறைய, சர்க்கரை நோய் பிரிவு 2 குறைய, மறதி நோய் பாதிப்பு குறைய கூட உதவுகின்றன என்பதுதான். மேலும் கூடுதல் ஆய்வுகள் கிரீன் டீ பற்றி தேவைப்பட்டாலும் சில நீண்ட கால உறுதியான பலன்களும் கூறப்படுகிறது.
* புற்றுநோய் அபாயத்தினைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது. கவனிக்கும் கூர்மை திறன் கூடும். மறதிநோய் பாதிப்பு அபாயம் குறையும். கெட்ட கொழுப்பு குறையும். எடை குறையும்.
* வீக்கங்களை குறைக்கும். ஆகவே தினமும் இருவேளை கிரீன் டீ குடிக்கலாமே.
* மனித உறுப்புகளுக்கு பிடித்த உணவு
மூளைக்கு ஒமேகா 3 மிகவும் பிடிக்கும். ஞாபக சக்தி, கற்கும் திறன் இவையெல்லாம் ஒமேகா 3விடம் இருந்து நன்கு கிடைக்கும். கண் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது. மனநிலை நன்கு இருக்கும்.
* இரவில் சிலர் 10 மணிக்கு மேல்தான் சாப்பிடுவார்கள். இவர்களுக்கு எடை எளிதில் கூடும். இருதய பாதிப்பு ஏற்படும். தூக்கம் இருக்காது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் கூடும்.
* போதுமான அளவு (சுமார் 2 லி) அன்றாடம் நீர் குடிக்காதவர்களுக்கு அடர்ந்த சிறுநீர், வறண்ட உதடுகள், தலைவலி, சதை பிடிப்பு, வறண்ட சருமம், தலைசுற்றல், மலச்சிக்கல், சோர்வு, சோர்ந்து உள்வாங்கிய கண் ஆகிய பாதிப்புகள் இருக்கும்.
* சியா விதைகள்: சியா விதைகள் மத்திய அமெரிக்காவில் தோன்றிய ஒரு சிறிய விதை. அளவில் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்து அடர்த்தி மிக அதிகம் கொண்டதால் இதனை உயர்ந்த உணவு என்று அழைக்கின்றனர். நம் நாட்டு உணவு முறைகளில் இதனை எளிதாக சேர்த்துக் கொள்ள முடியும்.
சியா விதைகளின் நன்மைகள்:
* நார்சத்து அதிகம். சியா விதைகளில் கரையக்கூடிய, கரையாத நார்சத்து அதிகமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல் குறைய உதவும். குடல் இயக்கத்தை சீராக்கும். நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சியா விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இதனால் கெட்ட கொழுப்பு குறைய உதவும். ரத்த அழுத்தம் சீராக பராமரிக்க உதவும். இதய நோய்களின் அபாய்த்தினைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளது. உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்க உதவும். எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம் கூடும். சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் அதிகமாக உள்ளதால் எலும்பு உறுதி மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.
* சியா விதைகள் தண்ணீரில் ஊறும் பொழுது ஜெல் போல் உறைகின்றன. விரிவடைகின்றன. இதனால் வயிற்றை நிறைவாக உணரச் செய்யும். அதிகமாக உண்பதை குறைக்கும். எடை குறைப்பு முயற்சிகளில் உதவியாக இருக்கும்.
* சியா விதைகள் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் கொண்டவை. இதனால் செல்கள் சேதமடைவதை தடுக்க முதிர்வை தாமதப்படுத்த உதவுகின்றன.
தினசரி சியா விதைகளை பயன்படுத்தும் முறைகள்:-
* ஒரு டீஸ்பூன் சியா விதைகளை மெலிதான வடிகட்டி மூலம் நன்கு கழுவி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலை வெறும் வயிற்றில் அப்படியே பருகலாம்.
* பால் (அ) தயிரில் கலந்து ஊற வைத்து காலை அல்லது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
* பழச்சாறு: ஆப்பிள், பப்பாயா, வாழைப்பழம் போன்ற பழசாறுகளில் ஊறிய சியா விதையினை கலந்து பருகலாம்.
* ஓட்ஸ், கஞ்சி, இட்லி மாவு தயாரிக்கும் போது ஊற வைத்த விதைகளை கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
* சாலட், சூப் இவற்றில் சேர்க்கலாம்.
* ஒரு நாளைக்கு 1 அல்லது 2 ஸ்பூன் விதைகள் போதுமானது. உலர்ந்த விதைகளை நேரடியாக சாப்பிடக் கூடாது. ஊற வைத்து எடுத்துக் கொள்வதே சிறந்தது.
* குடல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் சிறிய அளவில் ஆரம்பிக்க வேண்டும்.
* தைராய்டு, ரத்த அழுத்தம் பிரச்சினை இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூத்த வயதில் தசை இழப்பை தவிர்ப்பது எப்படி?
மனித வாழ்வில் இயல்பான ஒரு பகுதிதான் முதுமை. இக்காலத்தில் உடலில் பல மாறுதல்கள் ஏற்படும். தசை அளவு குறையும். நடப்பதில் சிரமம், விழுந்து காயம் ஏற்படும் சுய நம்பிக்கை குறையும். இப்படி பல பிரச்சினைகள் ஏற்படும் இதனை தவிர்க்க (அ) குறைக்க போதுமான புரதச்சத்து அவசியம். உடல் எடைக்கு ஏற்ற புரதம் தேவை.
* பால், தயிர், மோர், பருப்பு வகைகள், கொட்டை வகைகள், அசைவ வகைகள் உண்பவர்கள் முட்டை, மீன் எடுத்துக் கொள்ளலாம்.
* சோயா மற்றும் அதன் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
* தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பயிற்சியாளர் வயது, உடல் நலத்திற்கேற்ப சொல்லித் தருவார். அவைகளை செய்ய வேண்டும். மெதுவான உடற்பயிற்சி, லேசான எடைப்பயிற்சி செய்யலாம்.

* வைட்டமின் டி, கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். உடல் இயக்கமற்று இருப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் படுத்திருப்பது, உட்கார்ந்திருப்பது போன்றவை தசை இழப்பினை ஏற்படுத்தும். வீட்டு வேலைகள், தோட்டப்பணி போன்றவை தசைகளை செயல்பட வைக்கும்.
* சர்க்கரை நோய், தைராய்டு, சிறுநீரக நோய் இவை தசை இழப்பை அதிகரிக்கும் என்பதால் சரியான கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி தசை இழப்பைத் தூண்டும். மன அமைதி, முறையான தூக்கம் இவை இரண்டுமே ஆரோக்கியத்தின் அடிப்படை ஆகும்.
உணர வேண்டிய சில உண்மைகள்:
* காலம் பணத்தை விடவும் கூட முக்கியமானது. (அனைவரும் அறிந்ததுதான்). ஆரோக்கியமே அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம். அதனால்தான் இத்தனை மருத்துவ கட்டுரைகள், மருத்துவர் பேட்டிகள் தொடர்ந்து வெளியாகின்றன. கவலைப்படும் அனைத்தும் அநேகமாக நடப்பதேயில்லை. உறவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. கருணை, அன்பு மிக அவசியம். பிறருக்காக வாழ வேண்டாம். எளிமையான வாழ்க்கையே அமைதி.
- மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.
- விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.
சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றும் சக்தி படைத்தவர் சனிபகவான். ஆணவம் அகம்பாவம் கொண்டவர்களை வீழ்த்துவதும் சனிபகவான். அதனால் தான் நமது முன்னோர்கள் சனியை போல் கொடுப்பவருமில்லை கெடுப்பவரும் இல்லை என்று சொல்லி வைத்தார்கள். எப்பொழுதும் எளிமையாக நிதானமாக நடந்து கொள்பவர்களை சனி பகவான் உயர்த்திக்கொண்டே செல்வார். அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். ஒருவருக்கு நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் உள்ளது என்றால் அவர் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல வளமான நிலையில் உள்ளார் என்று பொருள். அடிப்படை தேவைக்கு கூட கஷ்டப்படுபவர்கள் அடிமட்ட தொழில் செய்பவர்களுக்கு சனி பகவான் பலவீனமாக உள்ளார் என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சனி பகவான் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கும். அது அவரவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்து அமையும்.
இந்த ஜென்மத்தில் ஜாதகர் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான். ஒருவர் எந்த மனத்தாங்களும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள். யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறு சிறு மனவேதனை படக்கூடிய சம்பவங்கள் நடந்து தீரும். இத்தகைய சிறப்பு பெற்ற சனிபகவான் துலாம் ராசியில் 20 டிகிரியில் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். ஏழையாக இருந்த ஒருவன் பணக்காரனாக மாறும்போது தனது பழைய நிலையை மறந்து விடுவான் அதை மறக்காமல் நினைவில் நிறுத்தி வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே சனி பகவான் துலாம் ராசியில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார்.
சனிபகவான் உச்சம் அடையும் சுவாதி நட்சத்திரத்தில் புதிய தொழில் தொடங்கலாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் தொழில் உத்தியோகம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கலாம். இன்றைய நட்சத்திர நாளில் அரசு அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. குழந்தை பாக்கியத்தில் குறை இருப்பவர்கள் திருமணமாகி பல வருடமாக குழந்தை இல்லாத தம்பதிகள் சுவாதி நட்சத்திர நாளில் பழகினால் கரு உண்டாகும்.
திருமணம், புத்திர பாக்கிய தடை இருப்பவர்கள் இந்த நட்சத்திரநாளில் சிவபெருமானை வழிபட்டால் களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மறந்து யார் செயல்படுகிறார்களோ அவர்களை சனிபகவான் தண்டிக்க தவற மாட்டார். இத்தகைய சிறப்புமிக்க சனி பகவான் 12 லக்னத்திற்கும் உச்சம் பெறுவதால் உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். அவரே பாதகாதிபதி என்பதால் சிலருக்கு நண்பர்கள் தொழில் கூட்டாளிகளால் ஆதாயமும் இருக்கும் பாதகமும் இருக்கும். யாரை முழுமையாக நம்புகிறார்களோ அவர்களே இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் பெரும்பான்மையாக இரண்டு திருமணத்தை சந்திக்கிறார்கள். இரண்டாவது திருமணம் நடந்த பிறகு தொழில் உத்தியோகத்தில் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலமாக வருமானம் மற்றும் சொத்துக்கள் சேர்க்கை உண்டு.
ரிஷப லக்னத்திற்கு 9,10-ம் அதிபதியான சனி பகவான் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெறுவார். பாக்யாதிபதி ஆறில் உச்சம் பெறுவதால் எளிதில் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாது அல்லது தந்தை நோயாளியாக கடனாளியாக இருப்பார். தந்தையின் பாரத்தை ஜாதகர் சுமப்பார். அல்லது தந்தைக்கு வைத்தியம் செய்து ஜாதகர் கடனாளியாக மாறுவார். இவரே பாதகாதிபதியாக ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஜாதகருக்கு அதிகமாக இருக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
அல்லது அதிகமாக கடன் பெற்று சொந்த தொழில் செய்து அதில் நஷ்டத்தை சந்திப்பார்கள். பொதுவாக ஆறில் உச்ச கிரகம் இருப்பது நல்லதல்ல. சனிபகவானுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் என்றால் ஜாதகருக்கு நிச்சயமாக மீள முடியாத வழக்கும் உண்டாகும்.
மிதுன லக்னத்திற்கு 8,9-ம் அதிபதியான சனி பகவான் ஐந்தில் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்களால் ஜாதகருக்கு வழக்கு வரலாம். குழந்தையின்மை, அபார்ஷன். அவப்பெயர், அவமானம். மன நிம்மதி இன்மை. முடிவெடுக்கும் திறன் இன்மை, உயில் சொத்து, பாலிசி பணம் ஏற்படும். பெரும் நஷ்டம், தற்கொலை எண்ணங்கள், வறுமை ஏற்படும். எவ்வளவு பாக்கிய பலன்கள் இருந்தாலும் அவை ஒரு மன சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியாது. ஜாதகரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை உண்டு. தந்தை வழியில் துர்மரணம் நடந்திருக்கும். எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதிலிருந்து எளிமையாக மீண்டு வருவார்கள். சிலருக்கு மத நம்பிக்கை குறைவுபடும் அல்லது வேற்று மத வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள்.
கடக லக்னத்திற்கு 7, 8-ம் அதிபதியான சனிபகவான் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் உச்சம் பெறும்போது திருமணத்திற்கு பிறகு நல்ல பொருளாதாரம் கிடைக்கும். வாழ்க்கை துணை வசதியானவராக இருப்பார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார மேன்மை மிகுதியாக இருக்கும். தாயாரால் சொத்து வழக்கு வரலாம். தொழில் கூட்டாளி பிரச்சினை, நண்பர்களால் வம்பு, வழக்கு, திருமண வாழ்வில் பிரிவு, தீயவருடன் இணைந்திருக்கும் நிலை ஏற்படலாம். விபத்து நடக்கலாம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள். பண்ணையாளர்கள் சுய ஜாதகம் அறிந்து தொழிலில் ஈடுபட வேண்டும். சில மாணவர்களுக்கு கல்வியில் தடை தாமதங்கள் வரலாம்.
சிம்ம லக்னத்திற்கு 6,7-ம் அதிபதியான சனி பகவான் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். வாழ்க்கைத் துணை கடனாளியாக அல்லது நோயாளியாக இருப்பார். ஜாமீன் சார்ந்த பிரச்சினைகளால் அவதி உண்டு. இளைய உடன்பிறந்த சகோதரன் தனது கடனை ஜாதகரின் மேல் திருப்பி விடுவார். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். தனிமையில் தவிப்பர். ஆறுதலாய் இருக்க முன் வருபவரையும் நோகடித்து விலக்குவர். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். சொத்துக்களுக்கு முறையான ஆவணம் இருக்காது. முதல் திருமண பிரிவினையை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
கன்னியா லக்னத்திற்கு 5,6-ம் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் உச்சம் பெறுவார். பிள்ளை பிறந்த பிறகு ஜாதகர் பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார். சரியாக உண்ண முடியாத, தூங்க முடியாத நோய் பாதிப்பு ஏற்படலாம். பெற்ற பிள்ளைகளுக்காக கடன்படுவார். பூர்விக சொத்தால் வம்பு, வழக்கு, கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். ஜாதகர் மருத்துவ குணம் நிறைந்தவர். இவர்களின் கை ராசி மருந்து சாப்பிட்டவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும் கைராசி மருத்துவர் என்று பெயரும் கிடைக்கும். முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் ஜாதகரே ஆட்டுவிக்கும்.
துலாம் லக்னத்திற்கு 4,5-ம் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் உச்சம் பெறுவார். 12 லக்னங்களில் அதிக நன்மையை பெறுபவர்கள் துலாம் லக்னத்தினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள்.
குல தெய்வ அருள் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள்.
விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். கல்வியில் மேன்மை இருக்காது. வெளியூர் வெளிநாட்டில் கல்வி கற்பார்கள். சொத்துக்களை உடன் பிறப்புக்காக விரயம் செய்வார்கள். முயற்சியில் தோல்வி, சகோதர இழப்பு, சகோதர சச்சரவு, தூக்கமின்மை ஏற்படும். செல்வ நிலையும் சீராக இருக்காது. சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள். தகுந்த நிரந்தர, தொழில் உத்தியோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள்.
தனுசு லக்னத்திற்கு 2,3-ம் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவார் துலாம் லக்னத்திற்கு அடுத்த படியாக உச்ச சனியால் அதிக சுப பலன்களை அடைபவர்கள் தனுசு ராசியினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. பாக்கியவான். நல்ல குணம் உள்ளவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். ஆத்ம சக்தி உள்ளவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு.
மகர லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் தன லாப அதிபதியான சனி பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். தனது வாக்கு திறமையால் குடும்பத்தை காப்பாற்றுவதில் வல்லவன். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள்.
பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவார்கள். பரம்பரையாக அரசு வேலை அல்லது அரசு பதவியில் இருப்பார்கள்.
கும்ப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். தந்தையின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். குல தெய்வ கோவில் நிர்வாகிகள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். சுகமான இல்வாழ்க்கை உண்டு. அரசாங்க பணி உண்டு.
அரசியலில் புகழ், பெயர், கவுரவம் உண்டு. முன்னோர்கள் கல்வி நிறுவனம் நடத்தியவர்கள் அல்லது ஜாதகர் கல்வி நிறுவனங்கள் நடத்துவார்.
மீன லக்னத்திற்கு லாப அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். சொந்த மண்ணை விட்டு சென்று வெளியூர், வெளிநாட்டில் பிழைப்பு நடத்தி புகழ் பெறுவார்கள். அஷ்டமாதிபதி சுக்ரன் பலம் பெற்றால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.
மூத்த சகோதரத்துக்கு கண்டம். மூத்த சகோதரத்துகளால் பொருள் இழப்பு ஏற்படும். லக்னாதிபதி குரு பலம் குறைந்தால் ஆயுள் பங்கம் ஏற்படும். வாழ்வு நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிப்பார். நோய்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். மறைமுக வருமானம் உண்டு. பொதுவாக சனிபகவான் வினைப்பதிவை மிகைப்படுத்தும் கிரகம் என்பதால் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.
செல்: 98652 20406
- கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும்.
- மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.
கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.
கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது.
கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.
* பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்டசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

கமலி ஸ்ரீபால்
இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்னாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ. பி. சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.
கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.
* வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.
* அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.
* அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.
* அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.
* மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.
* பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச்சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.
* எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்தக்கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.
கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்
* வைரஸ் தொற்றில் ஏ, பி, சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.
* வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.
* கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.
* சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.
* கல்லீரல் புற்றுநோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.
* ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உட லின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்ட றிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.
* ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.
* இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.
* பயாபசி-புற்றுநோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.
வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?
* மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
* சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
* சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.
* உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.
* முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
* வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.
(செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.
* ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.
* வளர்சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.
* நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.
* கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
* ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.
கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.
ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.
- கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
- ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.
இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.
கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.
கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது
கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.
* பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்ட சத்துகள். வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்றாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ.பி.சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.
கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.
* வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.
* அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.
* அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.
* அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.
* மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.
* பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச் சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.
* எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்த கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.
கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்
* வைரஸ் தொற்றில் ஏ,பி,சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.
* வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்று நோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.
* கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.

கமலி ஸ்ரீபால்
* சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.
* கல்லீரல் புற்று நோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.
* ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.
* ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.
* இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.
* பயாபசி-புற்று நோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.
வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?
* மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
* சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
* சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.
* உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.
* முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
* வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.
(செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.
* ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.
* வளர் சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.
* நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.
* கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
* ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.
கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.
ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.
தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா?
சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். மற்றபடி தயிர் குளிர் காலத்திலும் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது.
* தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.
* கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
* நல்ல குடல் பாக்டீரியா கொண்டது. வைட்டமின் பி சத்து கொண்டது.
கொலஸ்டிராலை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.
இருதய ஆரோக்கியதற்கு நல்லது.
வயிற்று போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.
உடல் பருமன் குறையும்.
குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.
அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.

உப்பு-இது தாது உப்புகளில் ஒன்று. உப்பு சத்து உடலில் குறையும் போது தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்றவை ஏற்படலாம்.
உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.
பண்டை காலம் முதல் இன்றுவரை அநேகரும் நம்நாட்டில் உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பு, கடல் உப்பினை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
கடல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்ய உதவுகிறது. மேலும் இது அதிக சுத்தகரிப்பு முறை, பதப்படுத்துதல் இவை இல்லாததால் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் உடையது. இந்த காரணங்களினால் இதை உயர்ந்ததாக குறிப்பிடுபவரும் உண்டு. ஆனால் இந்த மற்ற தாதுக்களின் பலனை பெற நாம் அதிகளவில் உப்பினை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த தாதுக்களை மற்ற உணவு பொருட்களில் இருந்தும் பெற முடியும். சோடியம் உடலின் நீர் சத்து சம நிலைக்கு முக்கியமானது. இது குறையும் போது உடலில் நீர்சத்து குறைதல், ரத்த அழுத்தம் மாறுபடுதல் ஆகியவை ஏற்படலாம். உப்பு அதிகம் உட்கொள்வதும், குறைந்து உட்கொள்வதும் ரத்த அழுத்த பாதிப்பினை ஏற்படுத்தும்.
குளோரைட் வயிற்றில் தேவையான அளவு ஆசிட் சுரக்க அவசியம் ஆகின்றது. சோடியம் குளோரைடில் உள்ள குளோரைட் சிறிது சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு அனுப்ப உதவுகின்றது. ஆக அளவான உப்பு செரிமானத்திற்கு உதவும். உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கத்தினை நீக்கும். கடல் உப்பில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகளுக்கு நல்லது.
அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனி போன்றவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.
* பொதுவில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்களை அவருக்கேற்ற அன்றாட உப்பின் அளவினை டாக்டர் பரிந்துரைப்பார்.
'அதிக உப்பு அமைதியாய் கொல்லும்' என்பர்.
அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இன்று பரவலாக பழக்கத்தில் உள்ளது.
* தைராய்டு ஹார்மோன் நோய் இயங்க உதவும்.
* அயோடின் குறைபாட்டினைத் தவிர்க்க உதவும்.
* எலும்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும். குறைந்த அயோடின் உணவு அறிவுறுத்தப்படுபவர்கள் அயோடின் கலந்த உப்பினை தவிர்ப்பது அவசியம்.
வளர்ந்தவர்கள் 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு சோடியம் உணவில் சேர்க்கலாம். 1500 மி.கி. என்பது மிகச் சிறந்தது. இது ஒரு டீஸ்பூன் (5 கி) உப்பு அளவு எனலாம். ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிக அளவு உப்பு உள்ளது. ரெடிமேட் உணவுகள், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டில் சமைத்து அளவான உப்பு சேர்த்து உண்ண பழக வேண்டும்.
- திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
- முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.
வாழ்க்கை என்பது இன்றைய கால கட்டத்தில் ஒரு பெரிய சவாலாகவே இருக்கின்றது. எல்லோர் மனதிலும் எனக்கு மகிழ்ச்சியும் வேண்டாம். துக்கமும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடந்தால் போதும் என்றுதான் இருக்கின்றது. ஆனால் அதனை கடப்பதற்கே ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வருமானம் இவை அடிப்படை தேவை ஆகின்றன. இதில் குடும்பம், உறவுகள் இவர்களின் மீதுள்ள பாசமே நம்மை துரத்தி இயக்குகின்றது எனலாம். நூறு பிரச்சினைகளும், போராட்டங்களும் 24 மணி நேரமும் நம் உடலினையும், மனதினையும் ஆட்டிப் படைக்கின்றன. முயற்சி செய்தும் இலக்கை-அடிப்படை தேவையை அடைய முடியாத பொழுது அநேகர் நடமாடும் ஜீவன் அற்றவர்களாக இருக்கின்றோம். அந்நேரங்களில் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகின்றது. அந்த வடிகால்தான் இறைவன்.
அவரை நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனலாம்
குல தெய்வம் எனலாம். இஷ்ட தெய்வம் எனலாம்
பிள்ளையார், முருகன், அம்மன் எனலாம்
அல்லா எனலாம் இயேசு எனலாம்
இன்னும் எத்தனையோ தெய்வங்களின் பெயரைச் சொல்லி வழிபடலாம்.
பலர் தன் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை என்ற உறுதியுடனும் இருக்கலாம்.
இது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பம் சுதந்திரம். அநேகர் அவரவர் பரம்பரை வழியில் பார்த்து வருவதால் அதனை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
ஆக மனிதனுக்கு அவன் வாழ்க்கையினைக் கடக்க ஒரு துடுப்பு தேவையாக இருக்கின்றது. பிடிப்பு தேவையாக இருக்கின்றது. பொதுவாக நம் தமிழ்நாட்டில் முருக வழிபாடு என்பது காலம் காலமாய் இருக்கின்றது. சஷ்டி விரதமும், காவடி வழிபாடும் கோலாகலமாக காணப்படும் ஒன்று.
'எங்களுக்கு பாதுகாப்பு கொடு, ஞானம் கொடு... என்று அவரவர் தேவைக்கேற்ப வேண்டுதல்களை வைத்து விரதம், மவுன விரதம், பாதயாத்திரை செய்து ஊர் குலுங்கும் விழாவாக நடத்துகின்றனர்.
* முருகன் என்றாலே அழகுதான். ஓம் என்ற பிரணவத்தின் வடிவம்.

* ஆறு பகைவர்களை அழித்தவர். (ஆணவம், கம்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்)
* சரவணப் பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாய் பிறந்தார்.
* தமிழ் குறிஞ்சி நிலக் கடவுள். எத்தனை பெயர்கள் இவருக்கு கார்த்திகேயா, கந்தா, சுப்ரமணியா, குமரா, குகா, சண்முகா, ஆறுமுகா....
* பரம சிவன், பார்வதியின் புதல்வர், பிள்ளையாரின் இளைய சகோதரர்.
* சிவபிரான் நெற்றிக் கண்ணில் உதித்தவர்.
* கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்.
* ஆறு குழந்தைகளை பார்வதி தாயார் ஒரு சேர அணைக்க ஆறு முகங்கள் கொண்ட ஒருவரானார்.
* என்றும் இளமையானவர்.
* அவரது வேல் வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அறியாமை தடைகளை நீக்கும் சக்தி கொண்டவை. அன்னை சக்தியால் அதை பெற்றவர்.
* மயில் வாகனம் கொண்டவர். மயில் காலில் பாம்பு. இவை ஆணவம், அழிவுப் பூர்வமான சிந்தனைகளை அழிக்கும் என குறிப்பிடுகின்றது.
* குகர்- குகைகளிலும், குன்றுகளிலும் இருப்பவர்.
* தந்தைக்கே உபதேசம் செய்த சாமிநாதன்.
* போர் கடவுள். அசுரர்களை அழித்தவர்.
* தமிழ் கடவுள்.
* ஆறுபடை வீடுகளைக் கொண்டவர்.
* தைப்பூச விழா மிகவும் சிறப்பு பெற்றது.
* வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றவர்.
* சிலோன், மலேசியா என ஏனைய நாடுகளிலும் இவர் கோவில்கள் உண்டு.
* அறுபடை வீடுகள்
* திருப்பரங்குன்றம்-தெய்வானை திருமணம் செய்த இடம்.
* திருச்செந்தூர்-சூரபத்மனை அழித்து சூரசம்ஹாரம் செய்த இடம்.
* பழநி-ஞானம் நிறைந்த இடம். சுவாமிமலை- ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த தலம்.
திருத்தணி- அமைதி தரும் இடம்.
* பழமுதிர் சோலை-அவ்வையார் ஆசி பெற்ற இடம்.

கமலி ஸ்ரீபால்
எத்தனை எததனையோ முருக பக்தர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் பழநியில் நவபாஷாண முருக சிலையினை உருவாக்கி ஸ்தாபித்த போகர் சித்தரை மறக்க முடியுமா? கி.மு. 200களில் வாழ்ந்தவர். இன்றும் பழநியில் ஜீவ சமாதியாக இருப்பவர். சீன நாட்டிற்க்கும் சென்றவர். பழநி நவபாஷாண சிலையின் அபிஷேக தீர்த்தம் மக்களின் நோய்களை போக்க வல்லது. இறைவன் மார்பில் இரவில் சந்தனம் சாற்றி மறுநாள் அதனையும் பிரசாதமாக வழங்குவர். இதே போன்று அவர் மற்றொரு நவ பாஷாண முருகர் சிலையினை உருவாக்கி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சிறந்த ஆன்மீக, தியான முறைகளை அருளியவர்.
அருணகிரி நாதரை அறியாத ஆன்மீக வழி மக்கள் குறைவு எனலாம். தன் வாழ்வினை எண்ணி வருந்தி கோவில் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்ற பொழுது அவரை தடுத்தாட் கொண்டவர் முருகபிரான். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் முருகனைப் பாடியே முக்தி அடைந்தார். திருப்புகழினை பாடியவர். 15-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவர். ஆறு எழுத்து மந்திரமான 'சரவண பவ' அருணகிரிநாதரின் நாக்கில் முருகன் வேல் கொண்டு எழுதினார் என்றும் "ஓம்" என எழுதினார் என்றும் கூறப்படுகின்றன.
இவருக்கு பல இடங்களில் முருகர் காட்சி அளித்துள்ளார். திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
திருச்செந்தூரில் நடன தரிசனம் தந்தார்.
வயலூரில் மயில் மீது அமர்ந்து காட்சி தந்தார். மேலும் சுவாமிமலை, திருவிடைக்கழி என பல இடங்களில் முருகனை கண்ணார கண்டுகளித்தவர் அருணகிரிநாதர். முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.
மன்னர் ஒருவருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்ட போது அருணகிரி நாதர் கிளியாக மாறி தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னரின் கண் பார்வையினை மீட்டார் எனவும் கூறப்படுகின்றது.
இவரது திருப்புகழ் பாடல்களை ஒரு முறையாவது பொருள் அறிந்து படித்துதான் பார்க்கலாமே.
அது போலவே 'கந்தர் சஷ்டி கவசத்தினை' அன்றாடம் சொல்ல சிறு வயது முதலே குழந்தைகளை பழக்கலாமே.
இது போலத்தான் போகர் சித்தரும், மாபெரும் சித்தர் என்பதனை அறிந்தோம். ரசவாத ரகசியங்கள், மருத்துவ நுட்பங்கள், போகர்-1000 போன்ற நூல்களை படித்தால் பல அரிய விஷயங்களைக் கற்கலாம். மேரு மலையே சுற்றி வந்தவர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனிக்கு செல்லும் பக்தர்கள் முருகனை தரிசித்து, செவ்வாய் ஆதிக்கம் கொண்ட போகர் சமாதியிலும் வணங்கி வருவர்.
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு சுவாமிகள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஞானி. 666 பாடல்களை சைவ சமயம், முருக வழிபாட்டில் பாடியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது ஜீவ சமாதி உலகப் பிரசித்தி பெற்றது.
சண்முக கவசம், குமாரஸ்தவம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற பாடல்களை இயற்றியவர். 1929ல் ஜீவசமாதி அடைந்தவர். 'வேலும், மயிலும் துணை'. இது இவரது மந்திரச் சொல். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தங்க வேலினை வருடம் ஒருமுறை மலை சுனைக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து மேலே காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து கொண்டு வருவர். மேள தாளங்களுடன் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த வேல் பூஜை.
பாம்பன் சுவாமிகளுக்கு 1920-ல் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்திய நிலையில் அவரது பக்தர் 'சண்முக கவசத்தினை' தினமும் 11 முறை படித்தார். 11-ம் நாள் அவரது கனவில் இரு மயில்கள் வந்து நடனமாட, வேல் சுவாமிகளின் கால்களை சீர் செய்ய, முருக பிரான் சுவாமிகளின் அருகில் அமர்ந்திருப்பதனைக் கண்டார். பாம்பன் சுவாமிகளின் கால்களும் முழுமையாய் குணமடைந்து இருப்பதனைப் பார்தார். என்ன ஆச்சர்யம்! மறுநாள் மருத்துவமனை சென்ற பொழுது அவர் கனவில் கண்ட அனைத்தும் உண்மையிலேயே நடந்து இருந்தது. இன்றும் இதற்கான சாட்சியங்கள் உள்ளன.
பாம்பன் சுவாமிகள் கடுந்தவம் புரிந்த காலத்தில் முருகன், அருணகிரி நாதர், அகத்திய சுவாமிகள் ஆகிேயார் ஒரு சேர காட்சி அளித்தனர். அவர் தவம் செய்த காலத்தில் அவரை நெருங்கிய துஷ்ட சக்திகளை அவரது 'தண்டம்' துரத்தியது. இன்றும் திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் அத்திரு தண்டம் பூஜிக்கப்படுகின்றது.
தைப்பூசம்
இந்த விழா உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படும் விழா. கோலா கலமான விழா. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் விழா. இம்முறை2026-ல் நாளை (1-ந்தேதி) அன்று வருகின்றது. ஆனால் அதற்கான ஆரம்ப வேலைகள் தை மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விடும். பலர் 48 நாள் விரதம் எடுப்பர். கடும் விரதம் எடுப்பவர்களும் உண்டு. பலர் 21 நாள், 7 நாள் என்றும் விரதம் இருப்பர். விரத கோட்பாடுகளை பக்தியுடன் கடைபிடிப்பர். சிலர் பால், பழம் மட்டுமே அருந்துவார்கள். காவடி எடுப்பது, பால் குடம் ஏந்தி செல்வது என பல வேண்டுதல்கள் இருக்கும். அலகு குத்துவார்கள். பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்த தைப்பூசத்தில்தான் அகிலமே தோன்றி யது என்பவரும் உண்டு. பழநியில் இந்த விழா கூடுதல் சிறப்புடன் நிகழும்.
வறுமை நீங்க, வேண்டுதல்களின் காணிக்கையாக, பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் நீங்க இந்நாளில் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடக்கின்றன. சிவ, பார்வதி ஆனந்த நடனம் நிகழ்வது இந்நாளில் என்ற கருத்து உண்டு. குரு பகவான் வழிபாடும் நடைபெறும். வணங்கி வளம் பெறுவோம்.
- உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார்.
- ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும்.
ஒருவர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தால் அவருக்கு சுக்கிர கடாட்சம் உள்ளது என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார். காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, நல்ல குடும்ப உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன். சுக்கிரன் பலமாக இருந்தால் அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமயமான வாழ்க்கை அனைத்தும் ஒருவருக்கு தேடிவரும்.
கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரமும் தொட வைக்கும். சுக்ரன் பலம் குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் போகும்.
சுக்ரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடத்தில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள், ராசி அல்லது லக்னம் அல்லது ஏழாம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சுக்கிர கடாட்சம் நிச்சயமாக கிடைக்கும். சுக்கிரன் மீன ராசியில் 27-வது டிகிரியில் உச்சமடைவார். அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கும் உள்ள பலன்களை நடத்தியே தீரும். இனி பனிரென்டு லக்னத்திற்கும் உச்ச சுக்ரனால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 2,7-ம் அதிபதியான சுக்ரன் 12-ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும். வாழ்க்கை துணை அழகு, காதல் உணர்வு, நல்ல புரிந்துணர்வு உள்ளவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் திருப்புமுனை உண்டாகும். சிலருக்கு காலதாமத திருமணம் நடைபெறும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரிவினை அல்லது மனக்கசப்பு அதிகமாக இருக்கும். அல்லது தம்பதிகள் தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கு ஒரு ஊரில் பிரிந்து வாழ்வார்கள். வரவுக்கு மீறிய செலவுகளால் அவதி இருக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.
ரிஷப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் 6-ம் அதிபதியான சுக்கிரன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. தொட்டது துலங்கும். நிலையான நிரந்தரமான உத்தியோக அனுக்கிரகம் உண்டு. ஜாதகர் அதிர்ஷ்டப் பிறவி பொன்னும் பொருளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் நிறைந்தவராக இருப்பார். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் எளிதில் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்தவராக இருப்பார். பிறருக்கு கடன் கொடுப்பது ஜாமீன் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஜாதகரின் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும்.
மிதுன லக்னத்திற்கு 5,12-ம் அதிபதியான சுக்ரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகர் குல கவுரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். அரசியல் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கவுரவ பதவிகள் தேடி வரும். முதல் தொழிலில் தோல்வியை சந்திப்பார்கள் இரண்டாவது தொழிலில் வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் தனி முத்திரை பதிப்பார்கள். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் நன்மை நடக்கும். அதற்கு இணையான சில தீமைகளும் உண்டாகும்.
கடக லக்னத்திற்கு 4,11-ம் அதிபதியான சுக்கிரன் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பு. தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பரம்பரையாக குலத்தொழில் செய்வார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக உள்ளவர்கள். கற்றக்கல்வி பலன் தரும். சொத்துக்கள் மூலமாக வாடகை வருமானங்கள் ஜாதகருக்கு கிடைக்கும். பல தொழில் வல்லுநராக இருப்பார்கள். ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். அரசியல் அரசாங்க ரீதியான நன்மைகள் ஜாதகரை தேடிவரும். நல்ல ஆரோக்கியமான தேக சுகம் உண்டு. நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கை துணை மூலமாக பொருளாதார மேன்மை உண்டாகும். அதே நேரத்தில் பாதகாதிபதியாகிய சுக்கிரன் அதிகவலு உடன் இருப்பதால் சுக்கிர தசை புத்தி காலங்களில் சொத்துக்களால் சொந்தங்களால் மன உளைச்சல் மிகுதியாக இருக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
சிம்ம லக்னத்திற்கு 3,10 அதிபதியான சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் உச்சமடைவார். ஒப்பந்த அடிப்படையான தொழில் மூலமாக வருமானம் ஈட்டுவார். யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் ஜாதகருக்கு வருமானம் வரும். புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம்மிகும். கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரிடும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாக இருக்கும். பாகப்பிரிவினை சார்ந்த பிரச்சினைகள் ஜாதகருக்கு மன உளைச்சலைத் தரும். அண்டை அயலாருடன் ஒத்துப்போக முடியாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும்.
கன்னியா லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான சுக்கிரன் சம சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பாகும். திருமணத்திற்குப் பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும் பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில் மூலம் ஜாதகருக்கு வருமானம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். குலத்தொழில் விருத்தியடையும். தனது புத்தி சாதுர்ய பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு பெருகும். தந்தையால் ஆதாயம் உண்டு. தந்தையின் குலத்தொழில் ஜாதகரை வந்து சேரும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். புண்ணிய பலன்களை அதிகரிக்க அடிக்கடி ஆன்மீக யாத்திரை செய்வார்கள்.
துலாம் லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான சுக்கிரன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உச்சமடைவார்.
லக்னாதிபதி ஆறாம் இடத்தில் உச்சமடைவதால் ஜாதகருக்கு கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் உபரியாகி கொண்டே இருக்கும். அடிக்கடி நோய்க்கு வைத்தியம் செய்து மன உளைச்சல் கூடும். சிலருக்கு நோயின் தன்மையை எளிதில் அறிய முடியாது. நிலையான தொழில் அமையும். வருமானத்திற்கு மீறி கடன் வாங்க கூடாது. உயில் சொத்து காப்பீட்டு பணம் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட பணம் பொருள் வரவு உண்டு. ஒரு நல்லது நடந்தாலும் ஒரு கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதகரே காரணமாக இருப்பார். தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால் தசை முடியும் போது அவயோகம் உண்டு. துலாம் ராசிக்கு சுக்ர தசை வராமல் இருப்பது நல்லது.
விருச்சிக லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.இதற்கு குரு பார்வை இருந்தால் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்வார்கள். பூர்வீகம் குலதெய்வம் அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷ யங்களில் ஜாதகருக்கு சாதகமான பலன்கள் நடக்கும். சிலருக்கு 2-வது குழந்தை பிறந்த பிறகு மண வாழ்க்கையில் மன கஷ்டம் வரும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் விரயங்கள் அதிகரிக்கும். 2-வது குழந்தை பிறந்ததற்கு பிறகு அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
தனுசு லக்னத்திற்கு 6,11-ம் அதிபதியான சுக்கிரன் சுகஸ்தானத்தில் உச்சமடைவதால் நன்மை தீமை கலந்த பலன்கள் கிடைக்கும். ஆறாம் அதிபதி உச்சம் பெறுவது சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்படுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவதும் மதி மந்திரியாக இருப்பார். அதே நேரத்தில் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக லாபமும் உண்டு. பலர் அடிக்கடி ஒரு சொத்தை விற்று புது சொத்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு சொத்துக்களை விற்று கடன் அடைக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கும். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் அதை அடைக்கும் திறமையும் உண்டு. சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக கடன் தொகை தள்ளுபடியாகும். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக அமைப்பு அமையும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.
மகர லக்கினத்திற்கு 5,10-ம் அதிபதியான சுக்கிரன் மூன்றாம் இடமான சகாய வெற்றி ஸ்தானத்தில் உச்சமடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தொட்டது துலங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். குலதெய்வ கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். பல தொழில் திறமை நிறைந்த வல்லுநர்களாக இருப்பார்கள். கமிஷன் அடிப்படையான தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுவார்கள். இனக்கவர்ச்சியாலும், போகத்திற்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் வரும். கவுரவ பதவி உள்ளவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியலில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். சொந்த முயற்சியில் தொழில் செய்வார்கள். தொழிலுக்கு கிளை நிறுவனங்கள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமையும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.
அரச பதவி, அரசு உத்தியோகம் அந்தஸ்து உண்டு. கும்ப லக்னத்திற்கு 4, 9 அதிபதியான சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பித்து சொல்ல கூடிய சுப பலனாகும். நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் உறவுகளின் அனுசரனையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாக படிப்பார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கவுரவ பதவி உண்டு. சிலர் குலத்தொழில் செய்பவர்கள். சமூதாய அங்கீகாரம் நிறைந்தவர்கள். குடும்பச் சொத்துக்கள் அதிகமாக இருக்கும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு.
மீன லக்கினத்திற்கு 3,8-ம் அதிபதியான சுக்ரன் ராசியில் உச்சம் அடைவார். அஷ்டமாதிபதி ராசியில் உச்சம் அடைவதால் விபரீத ராஜ யோகமாக சில அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் ஆனால் அந்த அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு ஒரு விபரீதம் ஏற்பட்ட பிறகு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஜாமீன் பிரச்சினை ஏற்படலாம். முறையற்ற பாகப்பிரிவினை சந்திக்க நேரிடும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் அவமானம் வம்பு வழக்கு சர்ஜரி போன்ற பாதிப்புகள் இருக்கும். தொழிலில் உடன் பிறந்தவர்களால் ஏமாற்றம் உண்டு. முயற்சி குறைவுபடும். திட்டமிடுதல் இருக்காது எந்த ராசி லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் உச்சம் பெறுவதால் சொகுசு வாழ்க்கையை அடையக்கூடிய பாக்கியம் உண்டாகும்.
செல்: 98652 20406
- ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது.
- உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.
புத்தகம்! மக்களிடையே காட்சி மீது உருவாகியுள்ள ஈர்ப்பு, எழுத்து மீது குறைந்து வருவது குறித்து அனைவரும் ஒரு கட்டத்தில் உணர நேரிடும். கண் முன் கிண்டி வைத்த படத்தை நோகாமல், எந்த மெனக்கிடலும் இல்லாமல் பார்த்துப் பழகியதால் அதிக கவனத்தை கோரும் எழுத்தின் பக்கம் பலர் செல்லாமலேயே இருந்து விடுவது உண்டு.
ஆனால் இரண்டும் வெவ்வேறு வழிகளில் அதனதன் தன்மைகளில் சுவை தருபவை. எழுத்தில் வாசகர்களின் கற்பனைக்கு அதிக இடம் உண்டு. தேடலுக்கு இடம் உண்டு. முழுமையான உணர்வுக்கு இடம் உண்டு. ஆனால் இவ்வின்பங்கள் துய்க்கப்படாமலேயே நம் கண் முன் வீணாவது வேதனையே. ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்பதற்கினங்க நம் சிந்தனைக்கு வேலை தரும் புத்தகங்கள் ஏராளம்.
புத்தக வாசிப்பு என்பது ஒரு கடல். அது முழு உலகம், அதன் கதவுகள் என்றும் அகலத் திறந்தே உள்ளன. ஆனால் தயக்கம் பலரை தடுக்கிறது. இந்த சிறு தடையை கடந்து வந்தால் இந்த உலகின் பிரமாண்டங்களையும், ஆச்சர்யங்களையும் காணலாம். மனிதர்களின் மனதின் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது. அக சிடுக்குகளை ஆராய்கிறது. இது சினிமாவில் 100 சதவீதம் சாத்தியமாவது அரிதே.
சரி, புத்தம் படிக்கலாம் என்று முடிவெடித்துவிட்டோம், எங்கு?, எப்படி தொடங்குவது? என்று கேட்கிறீர்களா?, உலகம் உருண்டையாக இருப்பதால் அதற்கு தொடக்கப் புள்ளி என்று ஒன்று கிடையாது. அதே போலவே புத்தகங்களும்.
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்" என்ற துள்ளாத மனமும் துள்ளும் குட்டியின் பாடலுக்கு இணங்க தேடல், உங்களை உங்கள் வாழ்வையே, வாழ்வு குறித்த உங்கள் பார்வையையே, மாற்றக் கூடிய புத்தகத்துக்கு உங்களை இட்டுச் செல்லலாம்.
இதற்கு ஏற்ற களம் புத்தக கண்காட்சி என கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்த்திலும் புத்தக கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடந்து தான் வருகின்றன.
ஒரு சுற்றுலாத் தளத்துக்கு செல்வது போல, திரையரங்குக்கு செல்வது போல அங்கு சென்று, உங்கள் பார்வையை அலைபாய விடுங்கள். அப்படி என்னதான் இருக்கிறது? என்ற கேள்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு அட்டைப்படம் உங்களை ஈர்க்கலாம், ஒரு எழுத்தாளரின் பெயர் உங்களை ஈர்க்கலாம், புத்தம் குறித்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் உங்களை ஈர்க்கலாம்.
பல நேரங்களில் உங்கள் உள்ளுணர்வு இதை படிக்கலாம் என்று நிச்சயம் சொல்லும். வாங்குங்கள். 199 ரூபாய் செலவில் ஒரு 2 மணிநேர சினிமாவை முடித்து வெளியே வந்தால் உங்களிடம் நிறைவு இருக்கலாம், ஆனால் உங்கள் கையில் ஒன்றும் இருக்காது. ஒரு புத்தகம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தான் இருக்கும். அதை மீண்டும் மீண்டும் மறு வாசிப்பு செய்யலாம், பிடித்தவர்களுக்கு பரிசளிக்கலாம். உங்களுக்கு புரிகிறது தானே. அவ்வளவு தான் விஷயம்.
புத்தகத்தை வாங்கிவிட்டு படிக்க முடியாமல் போகிறதே என்று கேட்கிறீர்களா?, தயக்கத்தை தூக்கியெறியுங்கள். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் படித்தே தீர்வீர்கள். இந்த புத்தகம் வாங்கும் விஷயமே வேண்டாம் என நினைக்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது ஊர்தோறும் நூலகங்கள்.
ஒரு நாள் சுற்றிப் பார்க்கவாவது செல்லுங்கள், நூலகத்தின் மாயத்தன்மையின் புத்தக வாசமும், அறிவுச் சூழலும் நிச்சயம் உங்களை மீண்டும் அதை நோக்கி இழுக்கும். மெதுவாக ஒரு புத்தகத்தை கையில் எடுத்து அலட்சியமாக பார்ப்பீர்கள்.பின்னர், சில பக்கங்களின் மீது உங்கள் கண்கள் அலைபாயும். ஒரு வரி, பத்தி உங்களை ஈர்க்கலாம். மேஜையில் வந்து அமர்வீர்கள். முதல் பக்கத்தை படிப்பீர்கள். அது உங்களை உள்ளே இழுக்கும். பின்னர் என்ன? நீங்கள் ஒரு முழுமையான வாசகன் ஆவீர்கள். அதில் உள்ள சுகத்தை உணர்வீர்கள். ரசனை வளரும். ரசனையோடு உங்கள் பார்வையும் விரிவடையும்.

புதிதாக படிக்கும் வாசகர் என்றால் 100 பக்கங்களுக்குள் உள்ள புத்தகங்களை முதலில் தேர்ந்தெடுக்கலாம். முழுதாக படித்து முடிக்கும் அனுபவம் தான், அடுத்த புத்தகத்துக்கு உங்களை அழைத்து போகும். தினம் டிவி பார்ப்பது போல சில பக்கங்களை அசை போடுங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். 2026 சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி விட்டது. இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி.
பல புத்தக விரும்பிகளுக்கு இது சொர்க்கம். பதிப்பகம் வாரியாக அரங்குகள் அமைத்து 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறும். இதே போல உங்கள் ஊரிலோ மாவட்டத்திலோ வருடந்தோறும் நடக்கும். பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தனையும் பேசிவிட்டு தலைப்பிற்கு இணங்க நல்லதொரு தொடக்கத்திற்கு சில புத்தகங்களை குறிப்பிடாமல் போனால் நன்றாக இருக்காது. எனவே அவை கீழ்வருமாறு..
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (நாவல்) - ஜெயகாந்தன்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.'
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சுந்தர ராமசாமி
தமிழ் நவீன இலக்கிய உலகில் பலருக்கும் பிடித்தமான நாவல் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை. 1966-ல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து வாசகர்கள் பலரால் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். சுதந்திரத்திற்கு முன்னால் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிற்பாடு வரையிலான ஒரு கால கட்டத்தை புளியமரத்தோடு பல நிகழ்வுகைளைத் தொகுத்து நமக்குக் காட்டும் நாவல் இது.
கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
இது இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், தமிழகத்திலிருந்து பர்மா, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை, காதல், பிரிவு மற்றும் துயரங்களை சித்தரிக்கிறது.
எழுத்தாளர் சி.மோகன் கூற்றுப்படி, ப. சிங்காரம், நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றது.
புயலிலே ஒரு தோணி (நாவல்) - ப.சிங்காரம்
கடலுக்கு அப்பால் நாவலின் இன்னும் ஆழமான தொடர்ச்சி புயலிலே ஒரு தோணி. பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும்.
நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது. 'மனதை இழக்காதவரை நாம் எதையும் இழப்பதில்லை' - புயலிலே ஒரு தோணி நாவலின் கடைசி வரி இது.
கோபல்ல கிராமம் (நாவல்) - கி.ராஜநாராயணன்
கரிசல் நிலத்தை, கரிசல் மக்களின் வாழ்வை, கரிசல் மண்ணின் வாசனையோடு பதிவு செய்யும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
எரியும் பனிக்காடு – மூலம் - Red Tea - பி.எச். டேனியல்
பாலாவின் "பரதேசி" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கங்காணி முறையினை பயன்படுத்தி எப்படி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக ஆனைமலைக் காட்டில், தேயிலை தோட்டங்களில் எப்படியாக சிறைபடுத்தினார்கள் என்பதை சித்தரிக்கும் வரலாற்றுப் புதினம்.
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துகிறது. சாதிய, பாலியல், மற்றும் உழைப்பு சுரண்டல்களால் அன்றைய காலங்களில் மக்களின் வாழ்வு எப்படி சீர்குலைந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
ஏழு தலைமுறைகள் (நாவல்) - அலெக்ஸ் ஹேலி
இது 18-ஆம் நூற்றாண்டில் கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கறுப்பின இளைஞனின் குடும்ப வரலாறு, அவர்களின் வேர்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கொடூரமான பாதிப்புகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் ஆழமான, வேதனை நிறைந்த கதை.
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.
- பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும்.
ஒருவரின் குண நலன்களை பிரதிபலிப்பதில் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு அளப்பரியது செவ்வாய் வலுப்பெற்றவர்கள் பிடிவாதம், அகங்காரம், துணிச்சல், கர்வம், அவசர புத்தி, கலகம், அதீத காம உணர்வு நிறைந்தவராக இருப்பார்கள். அதே நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் மட்டுமே ஒருவருக்கு தைரியம், வீரியம், சொத்துக்கள் சேருதல், உடன் பிறந்த சகோதரர்களின் அன்பு, விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் ஆதாயம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.செவ்வாய் பலம் குறைந்தால் பிரஷர், மாதவிடாய் கோளாறு, சொத்துக்கள் இல்லாத நிலை, ஏமாற்றம் போன்ற அசுபங்கள் அதிகமாக இருக்கும். எந்த கிரகமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மையும் தீமையும் உண்டு.
இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் ஒரு ஆதிபத்திய ரீதியாக நன்மை செய்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு பின்விளைவுகளை தரலாம். பலம் பெற்ற ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை ஜாதகர் எளிமையாக அடைய முடியும். பலம் இல்லாத கிரகத்தின் ஆதிபத்திய ரீதியான பலனை ஜாதகர் போராடி அடைவார்கள். அல்லது வாழ்நாள் லட்சியமாக கனவாகவே இருக்கும்.
பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.அத்துடன் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஏதாவது கிரகம் இருந்தாலும் அந்த தசா புத்தியில் ஜாதகருக்கு செவ்வாயால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மை தீமைகளும் நடக்கும். செவ்வாய் மகர ராசியில் 28 வது பாகையில் அவிட்டம் நட்சத்திரத்தில் உச்சமடைகிறார்.
ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும். தனது பகை வீட்டில் தனது சொந்த நட்சத்திரத்தில் ஒரு கிரகம் உச்சம் அடைவது செவ்வாயில் தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் அமைப்பாகும். மேலும் தற்போது கோட்ச்சாரத்தில் 16.1.2026 முதல் 23.2.2026 வரை மகரத்தில் உச்சம் பெறப் போகிறார். கடந்த வாரங்களில் சூரியன், சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன் தரும் என்ற கட்டுரையை பார்த்தோம் தற்போது செவ்வாய் உச்சம் பெற்றால் யாருக்கு நன்மை தரும் என்பதை இந்த வாரம் நாம் பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான செவ்வாய் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும்போது ஜாதகருக்கு செவ்வாய் திசை புத்தி காலகட்டங்களில் விபரீத ராஜயோகமான பலன்கள் நடக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியான சிந்தனை ஜாதகருக்கு மிகுதியாக இருக்கும், அரசியல் அரசாங்கம் அரசு சார்ந்த துறைகளில் ஆதாயம் மிகுதியாக இருக்கும் அவரே அஷ்டமாதிபதி என்பதால் ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஒரு வம்பு, வழக்கு, அறுவை சிகிச்சை, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோய், அல்லது கடன் இருந்தே தீரும்.
ரிஷப லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான செவ்வாய் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகருக்கு தந்தையின் வழியில் அதிக சொத்து கிடைக்கும். திருமணத்திற்கு பிறகு சொத்து சேர்க்கை உண்டாகும்.பூர்வ ஜென்மத்து வாழ்க்கை துணை இந்த ஜென்மத்திற்கும் வாழ்க்கை துணையாக வருவார். தம்பதிகள் ஓர் உயிர் ஈர் உடலாக வாழ்வார்கள். கூட்டுத் தொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பரம்பரை கூட்டுத் தொழிலில் ஜாதகர் பங்குதாரராக இருப்பார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவு ஏற்படும். செவ்வாய் தசை, புத்தி நடப்பில் இருந்தால் வெளியூர் வெளிநாட்டில் வாழ்வார்கள் அல்லது அதிக வைத்தியம் செய்வார்கள்.
மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 6, 11-ம் அதிபதி என்பதால் உச்சம் பெறுவது சிறப்பல்ல. ஆறாமிடம் எனும் கடன், நோய் எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகமாகும். அதிர்ஷ்ட உயில் சொத்து, பணம், நகைகள், இன்சூரன்ஸ் காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கும். எதிரியை வெல்லக்கூடிய வலிமை உண்டாகும். அவரே லாப ஸ்தான அதிபதியாக இருப்பதால் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் கடன், நோய் நிவர்த்தியாகும்.
கடக லக்னத்திற்கு செவ்வாய் 5, 10-ம் அதிபதி. செவ்வாய் இந்த லக்னத்திற்கு ஏக யோகாதிபதி என்பதால் ஜாதகருக்கு மிடுக்கான தோற்றம், ஆளுமைத் திறன் கூடும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளி வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.காதல் திருமணம் நடக்கும். உரிய வயதில் திருமணம் குழந்தை பேரு போன்ற நல்ல சம்பவங்கள் நடக்கும். கவுரவ பதவி உண்டு. ஜாதகருக்கு குலதெய்வமே குழந்தையாக பிறக்கும். குலதெய்வ இஷ்ட தெய்வம் வழிபாட்டில் ஜாதகருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ்க்கைத் துணை மூலமாக அனுபவிப்பார்கள். சிம்ம லக்னத்திற்கு 4,9-ம் அதிபதியான செவ்வாய் 6-ல் உச்சம் பெறுவதால் நிலையான நிரந்தரமான உத்தியோகம் உண்டு. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். விவசாயம், கால்நடை வளர்த்தல், பண்ணை தொழில், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
கன்னி லக்னத்திற்கு 3, 8-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு மன உளைச்சல் இருக்கும். பாகப்பிரிவினையில் உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஜாதகருக்கு செவ்வாய் தசை புத்தி காலங்களில் வரலாம். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக ஒரு விபரீதம் ஏற்பட்டு அதன் பிறகு அதிர்ஷ்ட சொத்து, உயில் பணம், காப்பீட்டு பணம் போன்ற வைகள் கிடைக்கலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம்.
துலாம் லக்னத்திற்கு 2-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 4-ல் உச்சம் பெறுவது மிக அதிர்ஷ்டமான யோகமான அமைப்பாகும். இளம் வயதில் காதல் திருமணம் நடக்கும். அல்லது உறவுகளில் வரன் வரும். சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். வாழ்க்கைத் துணை மூலமாக உபரி வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் மூலமாக ஜாதகரின் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள்.சில ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று விடுவார்கள்.
விருச்சிக லக்னத்திற்கு 1,6-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 3-ல் உச்சம் பெறுவதால் ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். உடன்பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதரே காரணமாக இருப்பார். இடப்பெயர்ச்சி நடக்கும். மனதில் வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு நிரம்பும். ஞாபக சக்தி குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.
தனுசு லக்னத்திற்கு 5,12- அதிபதியான செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவார். வாக்கு வன்மை பெறும். குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் வல்லவர்களாக வலம் வருவார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், ஐடி, போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் இருந்தாலும் சில விரயங்களும் இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாட்டில் சென்று குடியேறக்கூடிய அமைப்பு இருக்கும்.கண், பல் போன்றவற்றிற்கு சிகிச்சை செய்வீர்கள்.
மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான செவ்வாய் ராசியில் தனது சொந்த நட்சத்திரத்தில் உச்சம் அடைவதால் முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். அடிக்கடி உத்தியோக மாற்றம் செய்வது, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.சிறு சிறு நோய் தாக்கம் இருக்கும். கடனால் கவலை, எதிரிகளால், உயர் அதிகாரிகளால் மன சஞ்சலம் இருக்கும். ஜாமீன் சார்ந்த பிரச்சினை இருக்கும். சமாளிக்க முடியாத வீண் விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் வரலாம். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கை இவர்களுக்கு வரமாக இருக்கும்.
கும்ப லக்னத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்தில் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது தொழில், உத்தியோக ரீதியான உயர்வை நிச்சயம் தரும். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல், கடனை புதுப்பித்தல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும்
மீன லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான செவ்வாய் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது உயர்வான யோகமாகும். குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. வங்கி, ஆசிரியப்பணி, ஜோதிடம், நிதி நிர்வாகம், அரசியல், ஆன்மீகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.
இதில் ஆர்வம் ஆதாயமும். அதிகமாகும். முன்னோர்கள் வழிச் சொத்து முறையாக கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றால் மட்டுமே உரிய வயதில் திருமணம் நடக்கும். பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்தவர்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
செல்: 98652 20406
- சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு.
- ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும்.
சந்திரன் ரிஷப ராசியின் மூன்றாவது பாகையான கிருத்திகை நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான். ஒரு ஜாதகத்தில் சூரியன் ஆன்மாவையும் ஆன்ம பலத்தையும் குறிப்பவர். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடலையும் மனதையும் குறிப்பவர்.
உடலையும் மனதையும் பற்றி கூறும் சந்திரன் ஆன்மாவை பற்றி கூறும் சூரியனின் நட்சத்திரத்தில் உச்சம் அடைந்தால் மனமும் ஆன்மாவும் புனிதம் அடையும். உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் உயரும் போது லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அடைய முடியும். சந்திரன் உச்சம் பெற்றவர்கள் ஆன்ம பலம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் சுப வலிமை பெற வேண்டும். சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு. மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள். நல்ல தோற்ற பொலிவு உள்ளவர்கள். எந்த சூழ்நிலையிலும் அஞ்ச மாட்டார்கள். தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாய்மை உணர்வுடன் வழிநடத்துவார்கள்.
எளிதில் நோய்கள் அண்டாது. சந்திரன் காலபுருஷ நான்காம் அதிபதி என்பதால் சந்திரன் பலம் பெற்றால் ஸ்திர சொத்துக்கள் இருக்கும். இனி 12 லக்னங்களுக்கும் உச்ச சந்திரன் என்ன பலனை வழங்குவார் என்று பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 4-ம் அதிபதியான சந்திரன் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பப் பெற்றவர்கள்.
தாயின் மூலமாக திரண்ட சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு. பலர் வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் உள்ளவராக இருப்பார்கள். கற்ற கல்வியின் மூலம் பயன் உண்டு. படித்ததை உடனே புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். தான் கற்றதை பிறருக்கு உபதேசிக்கும் வல்லமை நிரம்பியவர்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது பண்ணை தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு ஆர்வம் மிகுதியாக உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் அனுசரணை இருக்கும். இடத்திற்கு தகுந்தார் போல் தனது பேச்சை மாற்றுவார்கள்.
ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகர் பிறந்தவுடன் குடும்பத்திற்கு மாற்றம் தரக்கூடிய நல்ல இடப்பெயர்ச்சி நடக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
ஜாதகருக்கு உடன்பிறந்த இளைய சகோதர சகோதரிகள் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் உண்டாகும். அடிக்கடி தொழில் வேலை உத்தியோகத்தை குடியிருப்பை மாற்றிக் கொண்டே இருப்பார். விடா முயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். வேலை ஆட்கள் யோகம் நிறைந்தவர்கள். பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
மிதுன லக்னத்திற்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் தன் வீட்டிற்குப் பின் வீடான 12ம் இடத்தில் உச்சம் பெற்றால் ஜாதகருக்கு மறைமுக வருமானம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கற்பனையில் கனவுகளில் வாழ்வார்கள். குடும்ப வாழ்க்கை ரகசியம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்திற்கு சாப்பிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டே இருப்பார்கள். கஞ்சத்தனம் அதிகமாக இருக்கும்.
ஆதாயம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உலகில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை அனுபவிக்காமல் பணத்தையும் சொத்து சுகத்தையும் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பார்கள். தானும் அனுபவிக்க மாட்டார்கள் தன்னை சார்ந்தவர்களையும் அனுபவிக்க விடமாட்டார்கள்.
கடக லக்னத்திற்கு ராசி அதிபதியான சந்திரன் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் நின்றால் மிகப்பெரிய பொருளாதார அமைப்பு நிறைந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளவர்கள். குடும்ப தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்வார்கள். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடக லக்னத்திற்கு 11ம்மிடம் பாதகஸ்தானம் என்பதால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அது ஜாதகரை சார்ந்தவர்களுக்கு தான் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நல்ல நட்புகள் உண்டு பேச்சில் பெருமிதம் இருக்கும். வாக்கு சம்பந்தமான தொழிலை அதிகம் விரும்புவார்கள்.
வாக்கு வன்மை உண்டு. கொடுத்த வாக்கை எந்த சூழ்நிலையிலும் தவற விட மாட்டார்கள். தாய் பாசம் பற்றி அடிக்கடி பேசுவார்கள்.
சிம்ம லக்னத்திற்கு விரயாதிபதியான சந்திரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. சிம்ம லக்னத்திற்கு சந்திரன் உச்சம் பெறுவது சுமாரான பலன்களை தரும். எந்த தொழில் செய்தாலும் நஷ்டம். தொழிலுக்காக பிரயாணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். அதிக முதலீடு உள்ள தொழில்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை கட்டுப்படுத்த முடியும். இடது கண் பாதங்களில் பாதிப்பு இருக்கும். எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்குவார்கள். சிலர் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அயல்நாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். சிலர் அந்திம காலத்தில் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் பிள்ளைகளுடன் கழிப்பார்கள்.
கன்னி லக்னத்திற்கு லாப அதிபதியான சந்திரன் 9-ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச்சிறந்த அமைப்பாகும். ஜாதகர் அந்தஸ்து, கவுரவம், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஜாதகருக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனே வசிப்பார்கள். பல தொழில் வல்லுநராக இருப்பார். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகமாக இருக்கும். ஆயிரம் பேருக்கு மத்தியில் ஜாதகர் தனித் திறனுடன் மிளிர்வார்கள். எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கையேந்தி வாழ மாட்டார்கள். இரண்டு குடும்ப வாழ்க்கை உண்டு. கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார். மூதாதையர்களின் சொத்து ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். ஜாதகரின் எண்ணங்களும் விருப்பங்களும் உடனுக்குடன் நிறைவேறும்.
துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தான அதிபதியான சந்திரன் 8ம் இடத்தில் உச்சம் பெறுவது நல்லது. முதலீடு உயர்ந்து கொண்டே இருக்கும். முதலீட்டை விட அதிக வருமானம் வந்து கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பிய வாழ்க்கை துணை அமையும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக வருமானம் உண்டு. பேச்சில் கனிவு கவுரவம் இருக்கும். அறநெறி தவறாமல் வாழ்வார்கள். உயர் கல்வி வாய்ப்பு உண்டு. அறக்கட்டளை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். தந்தைக்கு இருதார யோகம் உண்டு. ஜாதகர் தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்தவராக இருப்பார். தந்தையை விட தாத்தாவின் மேல் பிரியம் அதிகமாக இருக்கும். தாய்வழி தந்தை வழி சொத்து உண்டு. வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ஜாதகர் பிறந்த பிறகு தாய், தந்தைக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதி பதியாகி ராசிக்கு ஏழாம் இடத்தில் பெறுவது சற்று சுமாரான பலனை தரும். பரம்பரை கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சம்பந்தம் இல்லாத நபர்களால் நிம்மதி குறைகிறது. ஏழில் சந்திரன் உச்சம் பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் திருமண வாழ்க்கை இருக்கிறது. பாதகாதிபதி ஏழில் உச்சம் பெறுவதால் கூட்டுத் தொழில் வஞ்சிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசை காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக விருச்சிக லக்னம் கால புருஷ எட்டாமிடம் என்பதால் எளிதில் எந்தப் பிரச்சினையும் எளிதில் வெளியில் தெரிவிக்காத பிரச்சினை நன்றாக தீவீரமடைந்த பின்பே வெளியில் தெரியும். கடுமையான பாதகம் உருவாகும்.
தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சந்திரன் மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. கெட்டவன் கெடுவது நல்லது. கெட்டவன் உச்சம் பெறுவது ஜாதகருக்கு உச்சகட்ட கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகம் அதிகப்படுத்தும். உத்தி யோகம் சிறப்பாக இருக்காது அல்லது அடிக்கடி உத்தியோகத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நடக்காததை நடந்ததாக நினைத்து கற்பனை பயத்தை வளர்த்துக் கொள்வார்கள். சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருந்தால் புத்தி தடுமாற்றம் மிகையாக இருக்கும். சிலர் அடிப்படை தேவைக்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கும். மிகச் சுருக்கமாக சந்திர தசை காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரை மட்டும் விட்டு வைத்து மனிதனை நிர்கதியாக்குகிறது. பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள்.
மகர லக்னத்திற்கு சந்திரன் களத்திர ஸ்தான அதிபதியாகும். அவர் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால்
ஜாதகருக்கு மிகச்சிறப்பான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு நன்மை தரும்.ஜாதகர் திறமையான அணுகு முறையுடன் கூடிய சாமார்த்தியசாலியாக திகழ்வார்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்தவராக இருப்பார். தன்னைத் தானே உணரும் வலிமை படைத்தவராக இருப்பார்கள். காதல் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். கூட்டு தொழில் பல மடங்கு நன்மை தரும். குடும்ப உறவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். நிச்சயமாக சொத்து வாகன வசதிகள் இருக்கும். இயல் இசை நாடகப் பிரியர்கள்.
கும்ப லக்னத்திற்கு 6ம் அதிபதியான சந்திரன் 4-ம்மிடத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன் அல்ல. கடன், நோய், வம்பு, வழக்கு எதிரியை உருவாக்கி தரக்கூடிய கிரகமான சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். கல்வியில் தடை உண்டாகும். அல்லது அதிகமாக கல்லி கடன் பெற்று உயர் கல்வி படிப்பார்கள். நான்காம் அதிபதிக்கு ஆறாம் அதிபதி சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு முதல் சொத்து விரயமாகும் அல்லது சொத்தை விற்று கடன் தீர்ப்பார்கள். சொத்தின் மதிப்பை விட கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும். 6ம் இடத்திற்கு லாப ஸ்தானம் நான்காம் இடம் என்பதால் இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் சொத்து வாங்கும் முன்பு தாயிடம் அல்லது தாய் மாமாவிடம் யாசகம் பெற்று சொத்து வாங்க வேண்டும்.
மீன லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சந்திரன் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக உயர்வான அமைப்பாகும். ஆன்மீக நாட்டம் தியாக சிந்தனை மிகுந்தவராக இருப்பார். பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். புனித யாத்திரை செய்யும் பாக்கியம் உள்ளவர்கள். முதலீடு இல்லாத கமிஷன் தொழில்கள் பல மடங்கு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொடுக்கும். வயது கூட கூட ஜாதகருக்கு வருமானம் கூடிக் கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பியவர்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு பூர்வீகத்தை விட்டு வெளியேறி முன்னேறுவார்கள் ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் மாறுவார்கள். சாதாரண மனிதனாக இருந்தால் கூட சாதனை மனிதனாக மாறுவார்கள். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகரின் சிந்தனை ஓட்டம் நல்ல விதமாக இருக்கும். உச்ச சந்திரனால் இன்னல் களை அனுபவிப்பவர்கள் பவுர்ணமி அன்று பால் சாதம் தானம் வழங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
செல்: 98652 20406
- கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.
- மது, புகை வேண்டவே வேண்டாம்.
2026-ம் ஆண்டினை நாம் நெருங்கி வருகின்றோம். ஒரு பேப்பர் எடுத்து 2025-ல் என்ன வெல்லாம் செய்தீர்கள் என 15 நிமிடங்கள் உங்களுக்காக செலவழித்து எழுதிப் பாருங்கள். அநேகருக்கு சில செய்திகளே இருக்கும். இந்த ஊருக்குப் போனேன், கோவிலுக்கு போனேன். டிரஸ் வாங்கினேன் என சிலரும் பல வகையான வேதனைகளை பகிரும் சிலரும் இருப்பர். மற்றும் சிலர் காலை முதல் இரவு வரை வேலை மட்டும் தான் இருந்தது என்பர். இப்படி பல பிரிவுகளில் சொல்லலாம்.
ஆனால் முன்னேற்றத்தினை அடைந்ததாக சிலரே கூறுவர். அநேகர் செல்போன், சீரியல், யூடியூப் என அன்றாட நேரத்தினை உபயோகமற்று செலவழித்து இருப்பர். பரவாயில்லை. எதுவும் குற்றம் இல்லை. ஆனால் கிடைக்கும் காலத்தினை நமக்காகவும், நம் ஆரோக்கியத்திற்காகவும், நம் குடும்பத்திற்காகவும் செலவழிக்கலாமே என்ற முறையில் எழுத முற்படுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.முயன்று பார்ப்போமே.
* உங்களுடைய உற்ற நண்பர் யாராக இருக்க வேண்டும் தெரியுமா? நீங்கள் தான். நீங்கள் மட்டும்தான். உங்களுக்கு உற்ற நண்பராக நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
* உங்கள் வாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். மாறாக சண்டை, விரோதம் வளர்ப்பதாக இருக்க வேண்டாம்.

* கணவன்-மனைவி, பிள்ளைகள், நல்ல உறவுகள் போன்ற உறவுகளை பொது இடத்தில் மட்டம் தட்டி பேசக் கூடாது. ஆறாத காயத்தினை இது ஏற்படுத்தும்.
* சிலரை பற்றி குறைவான எண்ணங்களில் மட்டுமே மூழ்க வேண்டாம். இது மனதில் ஆழப்பதிந்து அதனை நீக்குவது கடினமாகி விடும்.
* உங்கள் குழந்தைகளுடன் கட்டாயம் தினமும் பேச வேண்டும். நேரம் செலவழிக்க வேண்டும். சிறு குழந்தைகள் என்றால் விளையாட வேண்டும்.
* நம் குழந்தைகள் நம் வேலையினை விட முக்கியம்தான்.
* தினமும் உங்கள் நிதி நிலைமையினை வரவு செலவினை கணக்கு பார்க்க வேண்டும். இது நம்மை அறியாமல் எத்தனை தண்ட செலவினை தினமும் செய்கின்றோம் என்பதனைக் காட்டும்.
* முடிந்த வரை கடன்களை தீர்த்து விடுங்கள். கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.
* ஏதாவது சிறு முயற்சி செய்து சிறு தொழில் செய்து வருமானத்தினை கூட்ட முடியுமா? என்று யோசித்து செயல்படுங்கள்.
* வயதான காலத்திற்காக இன்றே சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.
* வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிந்தால் நேரமும், பணமும் மிச்சமாகும்.
* எந்த ஒரு வேலையிலும் திறமையை கூட்டிக் கொள்ளுங்கள்.
* விழிப்புணர்வு ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும்.
* இந்த வாழ்வில் நாம் என்ன பெற வேண்டும் என்பதில் தெளிவு தேவை.
* 3 முதல் 6 வரை மாத வருமானம் இல்லாவிடினும் வீட்டை நடத்தும் அளவு தனி சேமிப்பு இருக்க வேண்டும்.
* அன்றாடம் 10 நிமிடங்களாவது தியானம் செய்வது அவசியம்.
* வாய் விட்டு சிரியுங்கள்.
* எந்த செயலிலும் முறையாகவும், ஒழுக்கமாகவும் இருங்கள்.
* அன்றைய நாளில் எது முக்கியமோ அதனை முதலில் செய்யுங்கள்.
உடல் நலம்- சாப்பிடுவதற்கு 10 நிமிடம் முன்பு உணவைப் பற்றி யோசித்தால் சத்தான உணவு கிடைக்காது. கிடைக்கும் எதனையோ கொண்டு வயிறு நிரப்பினால் ஆரோக்கியம் கெடும். முதல் நாளே மறுநாளைக்கான உணவு பட்டியலை தயார் செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் இதிலேயே 50 சதவீதம் முன்னேற்றம் பெறும்.
* ஒருமுறை வறுத்த, பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது 24 மணி நேரத்திற்கு வயிறு சங்கடமாகவே உணர்வீர்கள். 24 மணி நேரம் வறுத்த, பொரித்த, மசாலா பொருட்களை தவிருங்கள். நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் என்று உணர்வீர்கள்.
* உடற்பயிற்சி என்பதற்கு மனம் போனபடி லீவு கொடுக்க வேண்டாமே. பால், பால் சார்ந்த உணவுகள் அளவோடு இருந்தால் ஜீரணம் சீராக இருக்கும்.
* ஏதாவது ஒன்றினை விட்டு விடலாமே- அதிக காபி, டீ, மது போன்றவற்றை விட்டு விடலாமே.
* உடற்பயிற்சி செய்யுங்கள். எளிதாக ஒரு மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படச் செய்யலாம்.
* தினமும் சற்று வியர்க்கும் அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.
* மது, புகை வேண்டவே வேண்டாம்.
* செல்போன் சார்ஜ் ஆவது உங்கள் படுக்கையில் இருந்து தள்ளி இருக்கட்டும்.
* ஒரு ரூமிலேயே அடைந்து கிடக்க வேண்டாம்.
* ஒவ்வொரு உணவிலும் நார்சத்து, புரதம் இல்லாமல் உண்ணாதீர்கள்.
* அன்றாடம் இறைவனுக்கு, பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
* உங்கள் நாளை தினமும் காலையில் வரையறுத்து செயல்படுங்கள்.

கமலி ஸ்ரீபால்
* சுத்தமாக, நேர்த்தியாக உடை அணிபவர் மதிக்கப் படுகின்றார்.
* எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இல்லாமல் எளிமையாய் இருந்தால் அவர் மதிக்கப்படுவார்.
* வெற்றி இருக்கும் இடத்திலேயே கூட்டம் கூடும்.
* எதிலும் அதிக ஆசை வைக்காது இருப்பது ஒருவரின் மரியாதையினை உயர்த்தும்.
* எங்கோ, யாரோ- மருத்துவ மனையில் இருக்கும் தன் உறவின் உயிருக்காக கடும் பிரார்த்தனை செய்கின்றனர். அப்படியென்றால் அந்த உயிரில் இருக்கும். அதன் அருமையினை நாம் உணர்ந்து வாழ வேண்டும்.
* சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.
* படிப்பை விட முக்கியமானது பண்பு.
* யாரை பற்றியும் குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டாம்.
* வெதுவெதுப்பான நீரில் ஒரு முறை நாள் ஒன்றுக்கு குளிக்கலாம்.
* 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்தது தானே.
* 7000 முதல் 10000 அடிகள் அன்றாடம் உங்கள் நடையில் இருக்க வேண்டும்.
* 10 நிமிடமாவது சூரிய ஒளி உடலில் பட வேண்டும். இரவு 9 மணிக்கு தூங்கச் செல்கின்றீர்களா? நீங்கள் இளமையாய் இருப்பீர்கள்.
* 10 மணிக்கு தூங்கச் சென்றால் மூளை செயல்பாடு பாதிக்காது. சீராக இருக்கும்.
* 11 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு முடி கொத்து கொத்தாய் கொட்டும்.
* 12 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு எடை கூடுகின்றது.
* 1 மணிக்கு தூங்கச் செல்பவர்கள் அன்றாடம் சிறிது சிறிதாக நஞ்சு அருந்துவதற்கு சமம்.
நாம் எப்படி இருக்கின்றோம் என்பதனை நாமே அறிந்து கொள்ளலாம்.
* மிக அதிக நேரம் தூங்குபவர்களுக்கு மனதினுள் ஏதோ துக்கம், கவலை இருக்கும்.
* சின்ன ஜோக்குக்காக விழுந்து விழுந்து அதிகம் சிரிப்பவர்கள் மனதினுள் தனித்து இருக்கின்றார்கள்.
* டி.வி., சினிமா பார்த்து மற்றும் நிகழும் சிறு செயல்களுக்காக அழுது விடுபவர்கள் உள்ளத்தில் மிகவும் தூய்மையானவராக இருப்பர்.
* முறையற்று மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ சாப்பிடுபவர்கள் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள்.
* சிறு நிகழ்வுகளில் சுணங்கி விடுபவர்கள் மனதில் அன்புக்காக ஏங்குகின்றனர்.
* ஒருவரது துன்ப காலத்தில் உடன் நிற்பவர் எப்போதும் அவருக்கு உண்மையாக இருப்பவர் ஆவார்.
இதனை அறிந்தால் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளலாமே.
சிலவற்றினை நாம் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.
* உடல் அளவில், மனதளவில், பண அளவில் நீங்கள் பலவீனமாக இருக்கும்போது யாரையும் எதிர்க்கக் கூடாது. நமது பலம் கூடட்டும்.
* நம்மை நாமே காயப்படுத்திக் கொள்ளக் கூடாது. திட்டிக் கொள்ளக் கூடாது.
* கண் மூடித்தனமாக யாரையும் முழுமையாய் நம்பக் கூடாது.
* தவறானவர்களுடன் நட்பினை தொடரவே கூடாது.
* யாராவது அழுகின்றார்கள் அல்லது சிரிக்க சிரிக்க பேசுகின்றார்கள் என்பதால் எல்லை மீறிய கருணை, எல்லை மீறிய நட்பு வேண்டாம்.
* யாரிடமும் இரண்டாம் முறையாக கெஞ்சி உதவி கேட்கக் கூடாது. உங்கள் சுய மரியாதை காக்கப்பட வேண்டும்.
* சோக பாட்டுகளை கேட்பதினை, ரசிப்பதனை தவிருங்கள்.
சில பழக்கங்கள் ஒருவரை அமைதியாய் கொல்கின்றன.
* போதுமான தூக்கமின்மை என்பது தொடர்ந்து தேவையான அளவு தூக்கம் இல்லாதது.
* அளவுக்கு அதிகமாக தொடர்ந்து தூங்கும் பொழுது உடலில் அதிக தாக்குதல்கள் நிகழும்.
* தொடர்ந்து காலை உணவினை தவிர்க்கும் பொழுது,
* தொடர்ந்து இரவில் மிக காலம் தாழ்த்தி உண்ணும் பொழுது.
*அதிகம் பதப்படுத்திய உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் என ஓயாது உட்கொள்ளும் பொழுது.
* அதிகம் சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்தும் பொழுது.
* அதிக காபி, டீ, மது எடுத்துக் கொள்ளும் பொழுது.
* தேவையான அளவு அன்றாடம் நீர் எடுத்துக் கொள்ளாத பொழுது.
* அசையாது 'இடித்த புளி' போல் ஒரே இடத்தில் வெகுநேரம் அமரும் பொழுது.
* முறையற்று கோணல், மாணலாக அமரும் பழக்கம் கொண்டவராக இருக்கும் பொழுது.
* ஓய்வில்லாது வேலை செய்யும் பொழுது.
* உடற்பயிற்சி இல்லாத பொழுது, யோகா பயிற்சி இல்லாத பொழுது.
* 'ஸ்ட்ரெஸ்' அதிகம் உள்ளவர்களுக்கு
* விஷ உறவுகள், எதனையும் வெளியில் சொல்லாமல் மனதினுள் புழுங்குபவர்கள்.
* அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள்.
* தனக்கு தானே அழிவுப்பூர்வமாக பேசிக் கொள்பவர்கள்.
* எதனையும் மிக மிக அதிகமாக யோசிப்பவர்கள்.
* தனக்கென நேரம் ஒதுக்காத–வர்கள்.
* எல்லாவற்றிற்கும் 'சரி, சரி' என தலையாட்டி வேலை செய்பவர்கள்.
* பழைய சோகங்களில் மூழ்கி கிடப்பவர்கள்.
* பணத்தினை முறையாக கையாளாதவர்கள்.
* 'பரபர'வென வேகமாக சாப்பிடுபவர்கள்.
* டாக்டர் பரிசோதனையினை தவிர்ப்பவர்கள்.
* எரிமலை போல் எப்பொழுதும் கோபமாக இருப்பவர்கள்.
* ஊர் வம்பு மட்டுமே பேசுபவர்கள்.
* உணவினை நன்குமென்று விழுங்காதவர்கள்.
* பிடிக்காத வேலையில் தொடர்ந்து இருப்பவர்கள்.
* எப்பொழுதும் பயத்தோடு வாழ்வது.
* சதா ஏதாவது சாப்பிடுவது.
* முறைப்படி அன்றாட வேலைகளை செய்யாது இருப்பது.
* நன்றி உணர்வு இல்லாது இருப்பது.
* ஏதோ வாழ்க்கை என வாழ்வது.
* மனநலம் இல்லாமல் இருப்பது.
இவை அனைத்துமே மெதுவாய் ஒருவரை கொல்லும் விஷங்கள். ஆக எத்தனையோ விஷயங்களை நம் வாழ்வில் நாம் மாற்ற வேண்டி உள்ளது. சில நீக்கப்பட வேண்டும். சில உருவாக்கப்பட வேண்டும். இந்த புது வருடத்தில் இவைகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாமா.
- உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.
- வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
அனைவருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தானே ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கான சில முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் அல்லவா? அந்த முயற்சிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
* நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை நல்ல ஆரோக்கியம்தான். ஆக முதல் முயற்சியாக அன்றாடம் 20 முதல் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பிக்கலாமே. சாதாரணமாகத் தெரிந்தாலும் இதன் பலன்கள் ஏராளம்.
* வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் அவசியம். பேசும் பேச்சு, உண்ணும் உணவு என அனைத்திலும் ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம்.
* ஒருநாளில் ஒவ்வொரு நிமிடமும் எப்படி செலவழிக்கின்றோம் என்பதனைப் பொறுத்தே ஒருவரின் வருங்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. இதனை ஒவ்வொரு நொடியிலும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
* அப்பா, அம்மா வாழ்வில் மிக முக்கியம். அவர்களோடு நேரம் செலவழியுங்கள். சேர்ந்து உணவு உண்ணுங்கள். அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
* மிஷின் போன்று ஒரே மாதிரியாக வாழாதீர்கள். வெளியில் செல்லுதல், படித்தல், நண்பர்கள் என வாழ்விற்கு சுவை சேருங்கள்.
* மருத்துவரிடம் எந்த பொய்யும் கூறாதீர்கள். எதனையும் மறைக்காதீர்கள்.
* நேரம், காலத்தில் நல்ல முதலீடு செய்தால் அதன் பலன் மிக சிறப்பாக இருக்கும்.
* உடற்பயிற்சி நல்ல மன நிலையினையும் தரும்.
* புன்னகையும் அவசியம்.
* தைரியம் அவசியம்.
* உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.

* பிறரது நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* ஒருவர் மன்னிப்பு கேட்ட பிறகு 2 மணி நேரம் அதைப் பற்றியே பேசாதீர்கள்.
* முக்கியமான குறிப்புகளை எழுதி வைக்கலாம்.
* நம்பிக்கையோடு இருங்கள்.
* ஒருவரால் நமக்கு எந்த உதவியும் இல்லை என்றாலும் அவரை மதிக்க வேண்டும்.
* எதிலும் அதிக 'துல்லியம்' என எதிர்பார்த்தால் அந்த செயலை முடிப்பது கடினமாகி விடும்.
* சொல்ல வேண்டியதனை தெளிவாக சொல்லப் பழகுங்கள். முயற்சி செய்வோமே.
சில மாற்றங்களை நாம் செய்தால் வாழ்க்கையும் மாறும்.
* சிறு சிறு அடிகளாக வைத்தாலும் சரியான பாதையில் சென்றால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். குறுக்கு வழி, முன்னேற்றம் என்ற பெயரில் எகிற குதித்து தவறான வழியில் சென்று விடாமல் இருப்பது நல்லது.
* நடைபயிற்சி என்பது வேறு, காலாற நிதானமாய் நடப்பது என்பது வேறு. நடைபயிற்சி என்பது கைகளை சற்று வீசி பேசாமல், துரித நடை செல்வது. காலாற நடப்பது என்பது நிதானமாய் இயற்கையை ரசித்து நம் உறவுகள், நண்பர்களோடு பேசிக் கொண்டோ அல்லது தனியாகவோ நடப்பது, காலாற நடப்பது மனதிற்கு அத்தனை மகிழ்ச்சி தரும்.
* வாழ்வில் திடீர் திடீர் என ஏதோ, எப்படியோ தடங்கல்கள் ஏற்படுகின்றது. வாழ்க்கை நன்கு செல்லும் பொழுதே இந்த தடங்கல்கள், தாக்குதல்களை மனதில் கொண்டு பாதுகாப்புகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
* ரொம்ப சவாலாக இருக்கும் செயல் என்றாலும் அதில் உடல், மனம் உறைந்து விட வேண்டாம். அதனையும் மனதில் சற்று எளிதாகவே எடுத்துக் கொண்டுதான் செயல்பட வேண்டும்.
* நல்ல மனம், திறந்த சிரிப்பு, அழகான சூரிய உதயம், மாலை நேர மென்மை இவைகளை அனுபவிக்க ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அனுபவியுங்கள்.
யார் நல்ல மன மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள்:
* அதிக பந்தா காண்பிக்க மாட்டார்கள்.
* அளவாக பேசுவார்கள்.
* தேவையானவர்களுக்கு உதவுவார்கள்.
* ஊர் வம்பு, தவறான செய்திகளுக்கு காது கொடுக்க மாட்டார்கள்.
* மனம் விட்டு சிரிப்பார்கள்.

கமலி ஸ்ரீபால்
* அன்றாடம் ஏதேனும் கற்பார்கள்.
* நம்மை நாமே பார்த்து பார்த்து செதுக்கிக் கொள்ளும் போது வாழ்க்கை அமைதியாய் இருக்கின்றது.
* நம் துன்பங்களை அதிகம் பகிராமல், புலம்பாமல் அனுபவிக்கும் போது வாழ்வின் நுணுக்கத்தினை நன்கு கற்றுக் கொள்கின்றோம்.
* யாராவது தேவையில்லாமல் உங்களை காயப்படுத்தினால் பதிலுக்கு தொண்டை கிழிய கத்தி சண்டை போட வேண்டாம். அழ வேண்டாம். முடங்க வேண்டாம். அவர்களைப் பார்த்து 'நீங்க நன்றாகத் தானே இருக்கின்றீர்கள். எந்த பிரச்சினையும் இல்லையே?' எனக் கேட்டு விட்டு நகர்ந்து விடுங்கள். எதிராளி புழுங்கி போய் விடுவார்.
* மிக அதிகமாக நண்பர்களை நம்ப வேண்டாம். இது இருவருக்குமே நல்லது. அதே போல் பகைவரையும் எதிரியாகவே நினைக்க வேண்டாம். அவர்களை ஏதேனும் ஒரு நல்ல செயலுக்கு பயன்படுத்துங்கள்.
* யாரேனும் பொய் சொன்னால் அவர்கள் கண்களை சில நொடிகள் உற்று பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுங்கள். இது அவர்கள் மனதினை மணல் போல் உறுத்தி விடும்.
* வாதமான பேச்சு வார்த்தையில் ஆக்ரோஷம் இல்லாமல் அமைதியாகவே பேசலாம்.
* செயல்களின் மூலம் உங்கள் திறமையினை, வெற்றியினை காண்பித்தால் உங்கள் மதிப்பு உயரும்.
* ஒருவர் எந்த மனவேதனையில் இருக்கின்றார் என்பது தெரியாது. ஆகவே யாரிடமும் பண்பாகவே பேசுங்கள்.
* வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
* நீங்கள் படிக்கும் புத்தகத்தின் தரம் உங்கள் பேச்சில் தெரியும்.
* நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சக்தியில் ஆரோக்கியத்தில் தெரியும்.
* உங்கள் கவனக் கூர்மை உங்கள் வேலையின் முடிவில் தெரியும்.
* குளிர்ந்த குழாய் நீரில் தினம் 2 முதல் 3 முறை முகத்தில் வேகமாக அடியுங்கள். உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும்.
* டென்ஷனா இருக்கா? ஆழ் மூச்சு பயிற்சி செய்யுங்கள். மனம் அமைதிப்படும்.
* கண்களை வேகமாய் ஒரு நிமிடம மூடி திறங்கள். தூக்கம் நன்கு வரும். முயற்சி செய்து தான் பார்ப்போமே.
சில நபர்களை இவர்கள் 'அரகண்ட்' என்று குறிப்பிடுவர். அதாவது 'திமிர் பிடித்தவர்' என்று பொருள் கொள்ளலாம். இந்த குணம் ஒருவரின் வெற்றியினை தடைப்படுத்தும். அவர்களுக்கே அவர்கள் இப்படி முரட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கலாம்.
இந்த குணங்கள் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
* அவர்கள் தகுதியானவர்கள் சொல்வதினை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.
* அறிவுரை, ஆலோசனை இவர்களுக்குப் பிடிக்காது.
* இவர்கள் அகராதியில் 'Borry' என்ற வார்த்தையே இருக்காது.
* அவர்களது மூளை, உழைப்பை மட்டுமே கொண்டு வெற்றி பெற்றதாக கர்வம் கொள்வார்கள்.
* பிறருக்கு மரியாதை கொடுப்பது என்பது மருந்துக்கு கூட இவர்களிடம் இருக்காது.
* மற்றவர்களை விட தானே எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று நினைப்பார்கள்.
* தானே அனைத்திற்கும் தலைமை வகிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
* கோபம் மட்டுமே இருக்கும்.
* தற்பெருமை மிக அதிகம்.
* கேள்வி கேட்டாலே பிடிக்காது.
* உதவியாளர்களை உதறி எறிவார்.
* பிறரின் சாதனைகளை பாராட்டவே மாட்டார்.
இவைகள் எல்லாம் கண்டிப்பாய் ஒருவர் மாற்றிக் கொள்ள வேண்டிய குணங்கள் ஆகும்.
வாழ்க்கையில் அறிய வேண்டிய சில உண்மைகள்:
* பயம் மரணத்தினை நிறுத்தாது. ஆனால் வாழ்வினையே நிறுத்தி விடும்.
* நம் மன நிம்மதியினை கொடுக்கும் எதுவும் விஷ பாதிப்பே.
* நம்மால் பல விஷயங்களை செய்ய முடியும். ஆனால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு விஷயத்திலும் முழு கவனம் தேவை.
* நாம் எதிர்பார்த்தபடி வாழ்வில் அநேக நிகழ்வுகள் நடப்பதில்லை. ஆகவே கனவு, எதிர்பார்ப்புகள் அதிகம் வேண்டாம். இயல்பான வாழ்க்கையோடு ஒத்து செல்ல வேண்டும்.
* 20 வயதில் நிறைய கற்க வேண்டும். நிறைய முன்னேற வேண்டும்.
* அமைதியினை விட பேச்சு உதவும் என்றால் மட்டுமே பேச வேண்டும்.
* உங்கள் எண்ணங்கள் மிக வலிமையானவை. ஆகவே அவை ஆக்கப்பூர்வ மாகவே இருக்கட்டும்.
* நீங்கள் வேலை செய்யும் இடத்திலும், பழகும் இடத்திலும் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்காதீர்கள்.
மனநலம் பெற்றவராக எப்படி மாற முடியும்?
* அனைவருக்கும் கவனம் கொடுங்கள். பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என இருக்கக் கூடாது.
* பிறர் பேச அதிகம் கேளுங்கள். இது பல விஷயங்களை புரிய வைக்கும்.
* துரோகங்களை தலை விதி என ஏற்கக் கூடாது. மன்னிக்கலாம். ஆனால் மறக்கக் கூடாது.
* அதிக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
* சில கடின சூழ்நிலைகளில் வேலை செய்யும் போது உங்களை நீங்களே உணர முடியும்.
* குறைவாக பேசுங்கள். அதிகம் கவனம் செலுத்துங்கள்.
* உறுதியான மனநிலை வேண்டும்.
* கெட்ட நண்பர்கள் மட்டும் வேண்டாம். வாழ்வு வீணாகி விடும்.
* நல்ல சுத்தமான ஆடை, தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிட வாழ்வும் பரிசே.
* ஒருவரை திருத்த முடியவில்லை என்றால் அவர் அந்த எல்லையை மீறி விட்டார் என்றே பொருள்.
* நல்ல மனிதர்களோடு தொடரவும் தவறான மனிதர்களிடமிருந்து நகர்ந்து விடுவதையும் மன பலம் பெற்றவர்கள் செய்வார்கள். மேலும் முன்னேற்ற பாதையில் மட்டுமே செல்வார்கள். உணர்ச்சி வசப்படும் மன பலம் இல்லாதவர்கள் நிலை தடுமாறுவார்கள்.
* புகை பிடிக்கவே மாட்டார்கள்.
* முறையற்ற உணவு இருக்காது.
* புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும்.
* மிக சத்தமாக இசை கேட்க மாட்டார்கள்.
* எப்போதும் மன உளைச்சல் என்று மூழ்க மாட்டார்கள்.
இவையெல்லாம் 'நல்ல வாழ்க்கை'க்காக கடை பிடித்து பயன் பெறலாமே.
- பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது
- தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
வாய் விட்டு மனதார சிரித்தால் நோய் எதிர்ப்பு சக்தி 20 சதவீதம் கூடுகின்றதாம்.
* குளிர்ந்த நீர் (சாதாரண நீரில்) ஷவர் முறையில் குளிக்கும் பொழுது உடலின் செயல்பாட்டுத் திறன் கூடுகிறது.
* சூயிங்கம் மெல்லுவது மூளையின் ஞாபகத்திறனை கூட்ட கூடுதலாக 35 சதவீதம் பலன் அளிக்கின்றது.
* வாழைப்பழம் சாப்பிட்டால் மன அமைதி, மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
* பாட்டு பாடுவது நுரையீரலுக்கான ஏரோபிக் பயிற்சி.
* சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கிளாஸ் நீர் குடித்தால் 13 சதவீதம் உங்கள் உணவில் கலோரி சத்து அளவு குறையும் நிலை ஏற்படும்.
* பச்சை பசேல் என்ற இயற்கை சூழ்நிலையில் 20 நிமிடங்கள் இருந்தால் மன உளைச்சல் 20 சதவீதம் வரை குறைகின்றது.
* தினமும் மஞ்சள் உணவில் சேர்க்கப்படும் பொழுது வீக்கங்கள், உள் வலிகள் குறைகின்றன.
* மருத்துவர் ஆலோசனைப்படி மக்னீசியம் கிளைசினேட் எடுத்துக் கொள்ளும் பொழுது தசைகளின் டென்ஷன் நீங்கும். மைக்ரேன் பாதிப்பு குறைகின்றது.
* இஞ்சி டீ அஜீரண கோளாறுகளை சீர் செய்கின்றது.
* எளிதில் உடையும் நகம், முடி இவை பயோடின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.
* வாய் ஓரத்தில் வெடிப்பு, புண் இருந்தால் இரும்பு சத்து வைட்டமின் பி பிரிவு சத்துகள் குறைபாடாக இருக்கின்றதா என்பதனை அறிய வேண்டும்.
* அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படுகின்றதா? கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் குறைபாடு இருக்கின்றதா என மருத்துவர் மூலம் அறிய வேண்டும்.
* காயங்கள் மெதுவாக ஆறுகின்றதா? பல காரணங்களுடன் துத்தநாகம் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்.
* இரவில் பார்வை குறைபாடு உள்ளவதற்கு வைட்டமின் 'ஏ' குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம்.
* வெளிறிய சருமம்- இரும்பு சத்து, குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

கமலி ஸ்ரீபால்
* ஈறுகளில் ரத்தம்- வைட்டமின் 'சி' குறைபாடாக இருக்கலாம்.
* அடிக்கடி கிருமி தாக்குதல்- சிங்க், வைட்டமின் 'சி' குறைபாடு இருக்கலாம்.
பார்லி தண்ணீர்:
நம் வீட்டில் பெரியவர்கள் இன்றும் பார்லி அரிசி தண்ணீர் குடிப்பதனை அடிக்கடி செய்வர். அவர்கள் என்ன காரணத்திற்காக செய்தனரோ- இன்று அதில் விஞ்ஞானப் பூர்வமாக அநேக நன்மைகள் கூறப்பட்டு உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதனை அடிக்கடி குடிக்கின்றனர்.
* இது வைட்டமின் போலேட், இரும்பு, காப்பர்மங்கனீஸ் சத்து நிறைந்தது.
* கொலஸ்டிராலினை குறைக்கின்றது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது.
* எடை குறைப்பிற்கு உதவுகின்றது.
* புற்று நோய் தாக்குதல் அபாயத்தினை குறைக்கின்றது.
* உடல் கழிவுகள் வெளியேற உதவுகின்றது.
* குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
* நீர் சத்து குறைவதினை தடுக்கின்றது.
* சிறு நீரக நச்சுகளை வெளியேற்றுகின்றது.
சில குடல் பிரச்சினைகள், அலர்ஜி உள்ளவர்கள் பார்லி எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
* டீ, காபி என்பதனை விட சீரக தண்ணீர், பார்லி தண்ணீர் போன்றவை நன்மை பயப்பவை ஆகும். ஆனால் எதனையும் அளவோடு செய்வதே நல்லது.
* பார்லி கலோரி சத்து குறைந்தது. வைட்ட மின்கள் பி2, பி3, பி6 கொண்டது. நார்சத்து கொண்டது. ஓட்ஸ் பாஸ்பரஸ், சிங்க், காப்பர், மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் வைட்டமின் பி1, பி5 கொண்டது. க்ளூடன் இல்லாதது. 'ஸ்டீல் கட் ஓட்ஸ்' என வாங்கி இதனையும் பயன்படுத்துங்கள்.
ரத்தக் கொதிப்பு- உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது.
கீரை வகைகள்- பொட்டாசியம் சத்து உள்ளது.
பீட்ரூட்- நைட்ரேட் சத்தை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றும்.
வாழைப்பழம்- சோடியம் முறைப்படும்
பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது

மீன் உணவு- ஒமேகா 3
பொரி வகைகள்- ஆண்டி ஆக்சிடண்ட்
போன்றவற்றினை எடுத்துக் கொள்வோம். கீழ்கண்ட உணவுகளை தவிர்த்து விடுவோம்.
அதிக உப்பு, வறுத்த, பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட அசைவம், சோடா, அதிக உப்பு சேர்த்த சீஸ் பேக்கரி உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றினை தவிர்த்து விடுவோம்.
பாதங்கள் சில்லென இருந்தால்- தைராய்டு பிரச்சினை, சர்க்கரை நோய், ரத்த சோகை இருக்கலாம்.
பாதம் எரிச்சலாக இருந்தால் - சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, பித்த வெடிப்பு, நீர் பற்றாகுறை, தைராய்டு பிரச்சினை, சரும பாதிப்பு, சத்து குறைபாடு இருக்கலாம்.
ஆறாத புண்
சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சீரான ரத்த ஓட்டம் இன்மை, வலி ஆர்த்ரைட்டிஸ், பிற கோளாறுகள். உதாரணம் எலும்பு முறிவு என இவையெல்லாம் இருக்கக் கூடும். மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததுதானே.
* ஜீரண சக்தி சீராய் இயங்க
* ஒவ்வாத உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும்.
* நன்குமென்று, பொறுமையாய் உண்ண வேண்டும்.
* அமர்ந்து உண்ண வேண்டும். அந்நேரத்தில் அரட்டை, போன், டிவி, இவற்றினை தவிர்த்திட வேண்டும்.
* நார் சத்து அவசியம்.
* தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
* வேக வைத்த காய்கறிகள் சிறந்தது.
* 'ஸ்ட்ரெஸ்சில் மூழ்க கூடாது.
* வெறும் உடற்பயிற்சி மட்டுமே போதாது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.
தண்ணீர் இப்படியும் குடிக்கலாம்.
* தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
* சில துளி இஞ்சி சாறு சேர்க்கலாம்.
* சில புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம்.
* மோர் குடிக்கலாம்.
* வெள்ளரி சாறு எடுத்துக் கொள்ளலாம்.
* சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்கலாம்.
* வெது வெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம்.
* இளநீர் நல்லது.
* ஒரு டீஸ்பூன் சோம்பினை நன்கு நீரில் கொதிக்க வைத்து பருகலாம்.
* சீரகத் தண்ணி நாள் முழுவதும் குடிக்கலாம்.
உடல் உறுப்புகள்
* வெகு நேரம் பசியுடன் நீர் கூட அருந்தாமல் இருந்தால் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.
* போதுமான அளவுநீர், தாகம் எடுக்கும் பொழுது நீர் அருந்தாமல் இருந்தால் சிறு நீரகமும் பாதிக்கப்படலாம்.
* அதிக ஸ்ட்ரெஸ் அறிவுப் பூர்வமான எண்ணங்கள், மூளை நலத்தினை, மன நலத்தினை பாதிக்கும்.
* இருட்டில் போனில் பிரகாசமான ஒளி, டி.வி. இவற்றினை பார்ப்பது கண்களை பாதிக்கும்.
* துரித உணவு, மது- கல்லீரலை பாதிக்கும்.
* எண்ணெய், கொழுப்பு உணவு குடலை பாதிக்கும்.
* அதிக உப்பு, எண்ணை உணவு இருதயத்தினை பாதிக்கும்.
* தலையை பிளக்கும் சத்தத்தில் பாட்டு கேட்பது காதுகளை பாதிக்கும்.
* புகை பிடிப்பது நுரையீரலை அழித்து விடும்.
இவைகளும் நம் பழக்கத்தில் இருப்பவைதான்.
* சில்லென்ற நீரினை மருந்தோடு சேர்த்து அருந்துவதில்லை.
* மாலை 5 மணிக்கு பிறகு கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.
* செல்போன் சார்ஜ் 10 சதவீதம் மட்டுமே இருந்தால் சார்ஜ் செய்யுங்கள். அந்த 10 சதவீதம் தீரும் வரை பேச வேண்டாம்.
* காலை உணவினை தவிர்க்கக் கூடாது. * உணவுக்குப் பின் உடனே டீ, காபி வேண்டாமே. * ஒரு மணி நேரம் அமர்ந்து இருந்தால் எழுந்து கை, கால்களை நீட்டி மடக்குங்கள். * உணவுக்குப் பின் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். * உபயோகித்த எண்ணையை அடிக்கடி சூடு படுத்தி சமைப்பது நஞ்சு.
உறுப்புகள் பலம் பெற:
* வயிறு பலம் பெற- வயிற்று மசாஜ் செய்வது ஜீரண சக்தியினை அதிகரிக்கும். வயிறு உப்பிசம் குறையும்.
* நுரையீரல் பலம் பெற- வாய் விட்டு பாடுங்கள், இசை பயிலுங்கள், தினமும் பாட்டு பயிற்சி செய்யுங்கள், மூச்சும் சீராய் இயங்கும்.
* சிறுநீரகம் பலம் பெற- கால் விரல் நுனிகளில் நிற்கும்படி பாதத்தினை உயர்த்தி, இறக்கி பயிற்சி செய்யுங்கள். ரத்த ஓட்டம் முன்னேற்றம் தரும்.
* மூளை பலம் பெற- தினமும் 20 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
* கல்லீரல் பலம் பெற- தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடை பயிற்சி செய்யுங்கள். * இருதயம் பலம் பெற- ஆழ்மூச்சு பயிற்சியும் உதவும். * குடல் பலம் பெற- இடுப்பு பயிற்சிகளை முறையாய் கற்று பயிற்சி செய்ய வேண்டும். * கண்கள் பலம் பெற- கண் பயிற்சியும் அவசியம்.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை மட்டுமே பாதிப்பிற்கு தீர்வாக அமையாது. தீர்விற்கான பலம், தடுப்பு முறை சக்தி என விளங்கும். மருத்துவர் ஆலோசனை, சிகிச்சை என்பது அவசியம். ஆனால் நாம் அறிந்த வற்றினை ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோமே.






