என் மலர்
நீங்கள் தேடியது "ராஜயோகம் யாருக்கு"
- ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.
- தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும்.
ஒரு மனிதனை சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக உயர்த்துவது அவருடைய தொழிலாகும். சாதாரண மனிதன் முதல் சாதனை மனிதன் வரை அனைவரும் ஜீவிக்க தொழில் அல்லது உத்தியோகம் வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தின் மூலம் ஒருவரின் தொழில் பிராப்தம் பற்றி அறிய முடியும். ஒரு ஜாதகத்தில் பத்தாமிடத்தில் நிற்கும் கிரகம் ஜாதகருக்கு வாழ்க்கையில் மேன்மையை தரும். ஒன்பதாமிடமான கொடுப்பினை ஸ்தானத்திற்கு இரண்டாம் இடமாக பத்தாமிடம் வருகிறது. அதாவது ஒருவருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மூலமாகவே ஒருவர் ஜீவனம் நடத்துவார். முன்னோர்கள் நல்ல பலன்கள் சேர்த்து வைத்திருந்தால் ஜாதகருக்கு எளிய உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். முன்னோர்கள் பாவம் சேர்த்து வைத்திருந்தால் கடின உழைப்பில் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். பத்தாம் இடத்தில் எத்தகைய கிரகம் வேண்டும் என்றாலும் இருக்கலாம். பத்தில் ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்று தான் ஜோதிடம் கூறுகிறது.
பத்தாமிடத்தை தொழில் ஸ்தானம் என்று மட்டும் கூற முடியாது. கர்மம் செய்ய புத்திரன் உண்டா என்று சொல்லக்கூடிய ஸ்தானமும் பத்தாமிடம் தான். பத்தில் ஒரு கிரகம் நின்றால் நிச்சயமாக ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஒரு ஜாதகத்தில் 5, 9ம் அதிபதிகள் பலம் பெறாவிட்டாலும் பத்தாமிடம் வலுப்பெற்றால் ஜாதகருக்கு இறுதி காரியம் செய்ய குழந்தை பிறக்கும். இதில் ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் மூலம் பல கோடி சம்பாதிப்பவர்கள் புத்திர பாக்கியத்திற்காக மருத்துவ உதவியை நாடுகிறார்கள்.
பத்தாமிட பலவீனத்தால் நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு பெயர் சொல்ல மழலை செல்வம் அதிகமாக இருக்கிறது. பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வழி வேண்டி கடவுளை நோக்கி ஒரு கூட்டம் செல்கிறது. சம்பாதித்த சொத்தை அனுபவிக்க அடுத்த தலைமுறை உருவாக வேண்டும் என்று ஒரு பிரிவினர் ஆன்மீகத்தையும் மருத்துவத்தையும் நோக்கி செல்கிறார்கள்.
கால பகவானின் கணக்கை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மனிதனாகப் பிறந்தவர்கள் உயிர் காரகத்துவ ரீதியான பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் பொருள் காரகத்துவத்தை இழப்பார்கள். அதே நேரத்தில் பொருள் காரத்துவத்தை அதிகப்படியாக ஒருவர் அனுபவித்தால் அவருக்கு பயந்து உறவுகள் எட்ட நிற்பார்கள். ஒட்டி உறவாட மாட்டார்கள். அல்லது உறவுகள் பணம் கேட்பார்கள் என்று பயந்து உறவுகளிடம் பழக மாட்டார்கள். இன்று பணமா பாசமா என்று பட்டிமன்றம் நடத்தி வாதிடும் வகையில் உலகம் உள்ளது. பதவியும் செல்வமும் ஒரு காலகட்டத்தில் உயர்ந்தும் மற்றொரு கால கட்டத்தில் குறைந்தும் சந்திரன் போல் வளர்ந்தும் தேயும் தன்மை கொண்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தொழிலை பற்றியதாகும் என்பதால் அதைப் பார்க்கலாம்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
தொழில்
ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தொழில் செய்தனர். பெரும்பான்மையானவர்கள் குலத்தொழிலையே நம்பி வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது ஒருவர் வாழ்க்கையில் முன்னேற அரசாங்கமும் வங்கிகளும் நிதி உதவி அதிகமாக வழங்குகிறது. நிதி உதவி பெற்று தொழில் தொடங்க பல இளைய தலைமுறையினர் முன்வருகிறார்கள். தொழில் தொடங்கும் அனைவரும் வெற்றியை நிலை நாட்டுவதில்லை. அதேபோல் ஒருவருடைய தொழிலை முதலீடு அடிப்படையான தொழில்கள் முதலீடு இல்லாத தொழில்கள் என்று இரண்டு விதமாக பிரிக்கலாம். சிலருடைய ஜாதக அமைப்பு படி முதலீடு செய்யக்கூடிய தொழில்கள் நல்ல வருமானத்தை பெற்று தரும். ஒரு சிலருடைய ஜாதக அமைப்பு முதலீடு இல்லாத தொழில்கள் அதிகப்படியான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
முதலீடும் அடிப்படையான தொழில்
எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும் தனது சந்ததியினருக்காகவும் சேர்த்து வைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் செய்தாலும் எட்டாம் பாவக வலிமை வேண்டும். போட்ட முதலீடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை. தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் வீக். ஜோதிடத்தில் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானம் எட்டாமிடமாகும். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பாரம்பரிய முறைப்படி பல்வேறு முறைகள் உள்ளது. மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருப்பதால் அவர்களின் முதலீடுகள் பலமடங்காக பெருகுகிறது. பெரும் பணக்காரர்களின் வாழ்க்கையும் , முதலீடும் யாரும் அறிய முடியாத வண்ணம் மறைபொருளாக ரகசியமாக இருக்கும். 5.10 சம்பந்தம் இருந்தால் அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.
முதலீடு இல்லாத தொழில்கள்
லக்னாதிபதி, பத்தாம் அதிபதியை விட ஆறாம் பாவகம் வலுத்தால் முதலீடு இல்லாத தொழில்கள் அல்லது பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில்கள் அல்லது உத்தியோகமே சிறப்பான பலனைத் தரும். பேச்சை மூலதனமாக கொண்ட, முதலீடு இல்லாத தொழில், ஆலோசனை தொழில் புத்தியைத் தீட்டி சம்பாதிப்பார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், மார்க்கெட்டிங், ஜோதிடம், புரோகிதம் போன்ற துறையில் வாழ்வாதாரம் உயரும். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவார்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பார்கள்.
ராசி சக்கரம்
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.
ஜாதகரின் சிந்தனைகள் தொழில் பற்றியதாகவே இருக்கும். அவர்களின் மூச்சுக்காற்று கூட தொழில் எண்ணம் மிகுதியாக இருக்கும். அதே நேரத்தில் பத்தாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்தால் தொழில் வாய்ப்புகள் ஜாதகரை தேடிச் செல்லும். தொழிலைத் தேடி ஜாதகர் செல்ல வேண்டிய தேவை இல்லை. தொழில் சார்ந்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். 1, 5, 9 என்னும் திரிகோணங்கள் ஒரு ஜாதகத்தில் வலுத்தால் உழைத்து 30 முதல் 50 வயதிற்குள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். 1, 4, 7,10 எனப்படும் கேந்திரம் வலுத்தால் 25- 40 வயதுக்குள் வாழ்க்கையில் செட்டிலாக தேவையான அனைத்து பொருளாதாரத்தையும் தொழில் மூலமாக சம்பாதிப்பார். 2,5,8,11 எனும் பண பரஸ்தானம் பலம் பெற்றால் 20-30 வயதுக்குள் பொருளாதாரத்தில் தன்னிறைவு தொழில் மூலமாக உண்டாகும்.
சனிபகவான்
கால புருஷ பத்தாம் அதிபதி சனிபகவானே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்கிறார். ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதியும் சனி பகவானும் லக்னமும், லக்னாதிபதியும் என்ற நிலைக்கு ஏற்பவே தொழிலில் ஒருவர் வெற்றி பெற முடியும். பத்தாம் பாவகம் வலிமையாக இருந்து சனிபகவான் வலிமையாக இல்லாவிட்டால் சுமாரான வருமானம் வரும். நல்ல வருமானம் தரக்கூடிய வகையில் தொழிலை வழி நடத்த தெரியாது.
ஒரு ஜாதகரின் அனைத்து கர்மாவும் சனிகிரகத்திலேயே பதியப்பட்டு இருக்கிறது. சனிபகவான் தன் பணியை திறம்படச் செய்ய ராகு கேதுக்கள் உதவியாக இருப்பார்கள். வினையூக்கி கிரகங்களான ராகு கேதுக்கள் சனி கிரகத்தில் பதிவாகி இருக்கும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன் வழங்குவார்கள்.
சந்திரன்
ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும். எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும் விதியால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன் தான். ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.
சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 6,8,12ல் சந்திரன் மறையக் கூடாது. சந்திரன் மறைந்தவர்கள் தனது சுய முதலீட்டை இழப்பார்கள். தொழிலால் பெரிய நன்மையை அடைய முடியாது.
தசாம்சம் டி10
இவை எல்லாவற்றிற்கும் மேலாக டி10 எனும் தசாம்ச வர்க்கசக்கரத்தின் மூலம் ஒருவரின் தொழில் அமைப்பை தெளிவாக விரிவாக அறிந்து கொள்ள முடியும். ராசி சக்கரம் உணர்த்தும் மேலோட்டமான பலனை விட தசாம்ச சக்கரம் மூலம் அறியும் தொழிலுக்கான பலன் தெள்ளத் தெளிவாக இருக்கும். 30 பாகைகள் கொண்ட ஒரு ராசி சக்கரத்தை பத்து சம பங்காக பிரிக்கும்போது ஒரு பங்கிற்கு மூன்று பகை வரும்.
இதன் மூலம் ஒருவரின் சரியான தொழில் நிலை வகிக்கும் பதவி செயல்திறன் ஆகியவற்றை அறியலாம். ஒரு ஜாதகத்தில் ஜீவனம் எனும் தொழில் நிலையை அறிய 1,10-ம் பாவக ஆய்வு மிக முக்கியம். அதேபோல் தசாம்ச சக்கரத்தில் 1,10-ம் பாவக அதிபதிகளைக் கொண்டு தொழிலை நிர்ணயிக்கலாம். ராசி சக்கரத்தினை விட மிக தெள்ள தெளிவாக தொழிலை நிர்ணயிக்கலாம். தசாம்ச சக்கரத்தில் 1,10 பாவகத்தில் நிற்கும் கிரகங்களில் எந்த கிரகம் வலிமை உள்ளதாக உள்ளதோ அந்த கிரகத்தின் தொழில் ஜாதகர் செய்வார்.
தசாம்ச சக்கரத்தின் லக்னாதிபதி பலம் பெற்றால் தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்கும். ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் பலன் கொடுக்கக் கூடிய தொழில் அமையும்.
ராசி சக்கரத்தின் பத்தாம் அதிபதியும் சனிபகவானும் தசாம்ச சக்கரத்தில் சுபவலிமை பெற்றால் ஜாதகத்தின் தொழில் மூலமாக பலருக்கு வேலை கொடுப்பார். தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். அல்லது பேராசையால் குறுக்கு வழியில் செல்வார். தசாம்ச சக்கரத்தில் சூரியன் பலம் பெற்ற ஜாதகருக்கு நிர்வாகத் திறமை உண்டு. அரசியல் ஈடுபாடு அரசாங்க ஆதரவு உண்டு. சூரியன் பலம் குறைந்தால் தொழிலுக்கு அரசாங்க ஆதரவு கிடைக்காது. நிலையற்ற வருமானம் இருக்கும். நிர்வாக திறமை இருக்காது. தசாம்ச சக்கரத்தில் சனி வலுவாக இருந்தால் ஜாதகரின் தொழிலுக்கு உதவியான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
தசாம்ச சக்கரத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் ஜாதகருக்கு தெளிவான மனநிலை இருக்கும். எத்தகைய சூழ்நிலையிலும் தன்னை முழுமையாக தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வார். தசாம்ச சக்கரத்தின் 10-ம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்மாவை பற்றியும் கர்மவினை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். மனிதராய் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்து வாழ வேண்டும் என்பது விதி. மேலே கூறப்பட்ட அனைத்து நிலைகளிலும் ஒருவரின் ஜாதகம் பலம் பெற்றால் பணத்திற்காக ஜாதகர் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பணம் ஜாதகருக்காக வேலை செய்யும்.
மேலே கூறிய நிலைகளில் சில குறைபாடுகள் இருந்தால் பணத்திற்காக ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.
பரிகாரம்: சுய ஜாதக ரீதியான பத்தாம் பாவக வலிமை குறைவால் டி10 எனும் தசாம்சம் பலம் குறைந்தால் சனிக்கிழமை காலபைரவரை வழிபடுவதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
- பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.
- வாழ்ந்த நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை கிடைத்து யோகத்தை அனுபவிப்பார்கள்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது பழமொழியாக இருந்தால் கூட யோகமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் ஆகும்.
அதிர்ஷ்டமான வாழ்க்கை என்பது ஆயிரத்தில் சிலருக்கு மட்டுமே உண்டாகும். ஜோதிடத்தை பொருத்தவரை காலபகவான் நினைத்தால் யாருடைய வாழ்க்கையையும் மாற்றுவார். ஜோதிடத்தில் பல்வேறு யோகங்கள் இருந்தால் கூட விபரீத ராஜயோகம் என்பது சிறப்பான யோகமாக கூறப்படுகிறது. பலர் விபரீத ராஜயோகம் என்பதை பெரும் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஒரு விபரீதம் நடந்து ஒரு மீள முடியாத இழப்பு நடந்து அதன் பிறகு அதை ஈடு செய்யக் கூடிய வகையில் ஏதாவது பணம் பொருள் கிடைப்பதே விபரீத ராஜயோகம் ஆகும். தற்போது சமீப காலத்தில் கரூரில் நடந்த அசம்பாவிதத்தில் 41 பேரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட உயிர் இழப்பை அரசியல் பிரமுகர்கள் அரசாங்கம் ஈடு செய்ததை விபரீத ராஜயோகம் என்று கூறலாம். ஒருவர் சிறுக சிறுக சேர்த்த காப்பீட்டு பணம் அவரின் காலத்திற்கு பிறகு அவரின் வாரிசுகளுக்கு கிடைப்பது விபரீத ராஜயோகமாகும்.
பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள், நெருங்கிய ரத்த பந்தம் போன்ற உறவுகளின் காலத்திற்குப் பிறகு அவர்களின் உயில் சொத்து, பணம், நகைகளை அனுபவிப்பது விபரீத ராஜயோகம் ஆகும். பினாமி மூலம் கிடைக்கும் சொத்துக்களும் இதில் அடங்கும். புதையல், கண்டெடுத்த பொருள், ரேஸ், பங்குச் சந்தை, சூதாட்டத்தில் கிடைக்கும் பணங்களும் விபரீத ராஜயோகமாகும். பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி இதன் மூலமாக கிடைக்கும் பணம் என்றுமே மதில் மேல் பூனை தான். அதிர்ஷ்டம் எல்லா நேரத்திலும் அரவணைக்காது. மேலே கூறிய அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல முறை இழந்த பணம் ஏதாவது ஒரு முறை அதிர்ஷ்ட லட்சுமியை கண்களில் காட்டும்.
சிலருக்கு அதிர்ஷ்ட பணம் பொருள் கிடைத்த பிறகு அதை அனுபவிக்க முடியாத வகையில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருக்கும்.
உடல் ரீதியான பாதிப்பு, மன ரீதியான பாதிப்பு சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கும். சுருக்கமாக இதற்கு ஒரே வரியில் பலன் சொல்ல வேண்டும் என்றால் இருக்கும் ஆனால் இருக்காது அல்லது இருப்பதை அனுபவிக்க முடியாது.

ஐ.ஆனந்தி
ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ம் மிடத்திற்கான அதிபதியே அஷ்டமாதிபதியாகும். அந்த அஷ்டமாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும், அஷ்டமாதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோகத்தையோ அவ யோகத்தை தருகிறது. எட்டாம் பாவகம் என்பது பணபர ஸ்தானமாகும். பணம் பொருளால் ஏற்படும் சுப அசுப பலனைப் பற்றிக் கூறுவது எட்டாம் பாவமாகும். ஒருவர் ஜாதகத்தில் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவகாரியத்தை குறிப்பது 8ம் பாவகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 8ம் பாவக அதிபதி, 8-ல் நின்ற கிரகங்கள், எட்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்கள் ஒருவருக்கு எதிர்பாராத துன்பம், அவதூறுகளை தருபவர்கள்.
ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் பிரச்சினை தேடி வரும். வம்பு பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து, ஜாமீன் பிரச்சினை, தீராத நோய், தீர்க்க முடியாத கடன் வரும். ஒரு சிலருக்கு பரிதாபப்பட்டு கொடுத்த பணம் கூட அலைக்கழிக்கும். எட்டாமிடம் வேலை செய்யும் போது தொழில் உத்தியோகரீதியான யோகமோ, அவயோகமோ நடக்கும். ஒரு சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் உழைத்த கூலிக்கு பலமுறை அலைய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த பயம் ஜாதகருக்கு இருந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தை குறிப்பது 8ம் பாவகமாகும். ஒரு ஜாதகத்தில் எட்டாமிடத்தின் மூலம் ஆயுள் மட்டுமல்ல தீராத நோய் விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மதியின்மை, தற்கொலை எண்ணம், கோர்ட், கேஸ் பிரச்சினை போன்றவற்றை அறிய முடியும்.
ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து போன்றவை தேடி வருவதற்கு அஷ்டமா திபதியே காரணமாகும்.
பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பணம் சம்பாதிப்பது எளிதான செயல் அல்ல என்ற நிலை இருக்கும் போது எதிர்பாராத பண இழப்பு சிலருக்கு வாழ்க்கை பாதையை தடம் புரட்டி விடுகிறது. 8-ம்மிடம் அசுப வலுப்பெற்றால் போலீஸ், கோர்ட், கேஸ் , கட்டப்பஞ்சாயத்து நஷ்டம் அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உண்டாகும். இவர்களில் பெரும்பான்மையோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள். 8-ம்மடத்தில் நின்ற கிரகம் தனது சமசப்தம பார்வையால் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் 8ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன்கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்கள்.
பெண்கள் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியே. மாங்கல்ய பலம் பற்றியும் தெரிவிப்பவர். 8-ம் இடத்தில் நிற்கும் பாவ கிரகங்கள் மட்டுமல்ல சுப கிரங்களும் ஜாதகரை நிலை குலைய வைக்கும். எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும் தனது சந்ததியினருக்காகவும் சேர்த்தும் வைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் நடத்த எட்டாம் பாவக வலிமை வேண்டும். தொழிலுக்காக போட்ட முதலீடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை. தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் பலவீனம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஜோதிடத்தில் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானம் எட்டாமிடம். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பராம்பரிய முறைப்படி பல்வேறு முறைகள் உள்ளது. மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருக்கும்.
அவர்களின் முதலீடுகள் பலமடங்காக பெருகும். அவர்களின் வாழ்க்கையும், முதலீடும் யாரும் புரிய முடியாத வண்ணம் மறைபொருளாக இருக்கும். எட்டாம் பாவகத்தின் பாவத் பாவம் பத்தாம் பாவமாகும். எட்டாம் பாவகம் எனும் பணபர ஸ்தானம் மூலமாக வளர்க்கப்படும் பாவகம் பத்தாம் பாவகம் எனும் தொழில் ஸ்தானமாகும்.
ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயரும். 7-க்கு 2 என்பதால் மனைவியால் விபரீத ராஜயோகம் ஏற்படும். அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு வீடு, கார், பங்களா, நகை, நட்டு, தங்கம், வெள்ளி, பணம், சீர் வரிசை என பெரும் பொருளுடன் மனைவி அமையும். 8-ல் நிற்கும் கிரகம் 2ம்மிடத்தை பார்ப்பதால் தனது வாய்ஜாலத்தால் மனைவியை மகிழ்வித்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம் தொடரும்.
அதாவது மனைவிக்கு கூஜா தூக்க வேண்டும். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் மனைவியின் பின் செல்லும் போது வாழ்க்கை வசந்தமாகும். மனைவியை தவறான வார்த்தைகளால் வசை பாடினால் முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து கோர்ட், கேஸ் என அழைந்து மன வியாதி வந்து விடும். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும். நிலையான நண்பர்கள் அமைய மாட்டார்கள். இவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. தம்பதிகள் சண்டை நீதிமன்றம் வரை சென்று அவமானத்தை அதிகபடுத்தும்.
அன்றாட தேவைக்கு கஷ்டப்படும் ஒருவர் திடீர் தனவானாக மாறி அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பது விபரீத ராஜயோகமாகும். வாழ்ந்த நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை கிடைத்து யோகத்தை அனுபவிப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய யோகங்களில் ஒன்றுதான் விபரீத ராஜ யோகமாகும்.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8, 12-ம் மிடங்கள் மறைவு ஸ்தானங்களாகும். கடந்து வந்த பிறவிகளின் கர்மாவிற்கு ஏற்ப சுக, துக்கங்களை வழங்குபவர்கள் இந்த மறைவு ஸ்தான அதிபதிகள். 3, 6, 8.12-ம் அதிபதிகள் ஒரு ராசியில் நின்றாலோ, ஒருவரையொருவர் நேரடியாக பார்த்தாலோ, ஒரு மறைவு ஸ்தான அதிபதியின் நட்சத்திரத்தில் மற்றொரு மறைவு ஸ்தான அதிபதி நின்றாலோ 3, 6, 8, 12-ம் அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை அடைந்தாலும் விபரீத ராஜயோகம் உண்டாகும்.
அதாவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். ஒரு ஜாதகத்தில் 5,9-ம் மிடங்கள் ஒருவர் செய்த புண்ணியத்தைக் கூறுமிடங்களாகும். 6,8, 12-ம்மிடங்கள் ஒருவர் செய்த பாவத்தை தெரிவிக்கும் இடங்களாகும். பூர்வ புண்ணிய ஸ்தானா திபதி எனும் 5ம் அதிபதியும் பாக்கியாதிபதி எனும் 9ம் அதிபதியும் எந்த பாவகத்தில் அமர்கிறார்களோ அந்த பாவகத்தில் உள்ள குறைகளை நீக்கிவிடுவார்கள்.
உதாரணமாக ஒன்பதாம் அதிபதி அதாவது பாக்யாதிபதி அஷ்டமஸ்தானத்தில் அமர்ந்தால் எட்டாம் பாவகக் குறைகளை நீக்கிவிடுவார். இந்த 5,9-ம் அதிபதிகள் வீட்டில் 6,8,12-ம் அதிபதிகள் அமர்ந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களும் தடைபடும். 6, 8, 12-ம் அதிபதிகள் தங்களின் வீடுகளை மாற்றிக் கொண்டவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று புகழ் அடைகிறார்கள். 6,8,12-ம் அதிபதிகள் 1, 5, 9-ம் இடத்தில் அமர்ந்தால் முன்னேற்றக் குறைவு பூர்வீகத்தில் பிழைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அஷ்டமாதிபதி சுப வலுப் பெற்றால் லாட்டரி, ரேஸ், வாரிசு இல்லாத சொத்து, அதிர்ஷ்ட சொத்து, பங்குச்சந்தை ஆதாயம்.. போன்ற விபரீத ராஜ யோகமும் உண்டாகும். அஷ்டமாதிபதி அசுப வலுப் பெற்றால் விரும்பத்தகாத விளைவுகள் நடக்கும்.
அஷ்டமாதிபதிக்கு பாதகாதி சம்பந்தம் இருந்தால் உச்ச கட்ட பாதிப்ப ஏற்படும். லக்ன ரீதியான சுப கிரகத்தின் சம்பந்தம் குரு பார்வை இருக்கும் போதும் சிறு சிறு பாதிப்பு ஏற்படும். ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சுப பலன் வழங்குவாரா அல்லது அசுபத்தை ஏற்படுத்துவார என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பு. இதை எளிமையாக உணர ஒரு வழி உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஒருவரின் வாழ்வாதாரம் உயர்ந்தால் அஷ்டமாதிபதி வரமாக உள்ளார் என்று பொருள். திருமணத்திற்கு பிறகு பொருளாதார இன்னல் மிகுதியாக இருந்தால் அஷ்டமாதிபதி அசுபமாக உள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா நான் பணக்காரன் ஆவேனா? என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது.
தேவைக்கு பணம் கிடைக்காமல் போவதற்கு முதலாவது காரணம் சராசரி வாழ்க்கைக்கே போராடும் நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்று நம்பிக்கை இழந்து வாழ்வதே இதற்கு முதல் காரணமாகும். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பதை விட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிந்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் பால் தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகியவற்றை கலந்து பஞ்சகவ்யம் தயாரித்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் கூடி வரும்.
வேயுறு தோளிபங்கன் எனத் துவங்கும் கோளறு பதிகம் தினமும் படித்து வர நவக்கிரகங்களால் நன்மைகள் உண்டாகும்.
செல்: 98652 20406
- கிரகங்களின் சஞ்சாரத்தின் படி ராசுபலன் கணிக்கப்படும்.
- 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும்.
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருள் இழப்பு ஏற்படுவதற்கும், நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பேருந்தில் ஆட்டோவில் பயணம் செல்லும் போது உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி செய்யும் வேலை நல்லபடியாக செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். எந்த பிரச்சனையும் இல்லை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மன பயம் இருக்கும். எடுக்கக்கூடிய முடிவில் தடுமாற்றம் இருக்கும். முயற்சி முழுமையாக வெற்றியை கொடுக்காது. ஆகவே, எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மனதில் உள்ள பிரச்சனையை வெளிப்படையாக பேசுங்கள். வெளிப்படையாக பேசும் போது தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் பார்ட்னரை முழுசாக நம்பாதீங்க. பண பரிவர்த்தனை கணக்கு வழக்குகளை நீங்களும் கொஞ்சம் பாருங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான கடன் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்யுங்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக கற்பனை செய்து வந்திருந்த விஷயங்கள் இன்று நிஜத்திலும் நடக்கும். மனது சந்தோஷம் அடையும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சண்டை சச்சரவுகள் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் போட்டி பொறாமைகளும் இருக்கும். நண்பர்களும் எதிரிகளாக மாற வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீர்கள். மேலதிகாரிகளிடம் கொஞ்சம் பணிவாக பேசுவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். உங்களுடைய செயலை பாராட்டி பரிசுகளும் வழங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கலைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்க போகின்றது. மனசு ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இறையருளை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வந்த பிரச்சனைகள் குறையும். நல்ல முன்னேற்றம் இருக்கும் கடன் பிரச்சனை தீரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் கூட உங்களுக்கு பிரச்சனை கொடுக்க சில பேர் இருப்பார்கள். அதையெல்லாம் சமாளிக்க தேவையான திறமை உங்களிடத்தில் இருந்தாலும், சின்ன சின்ன சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும். முன் கோபப்படாதீங்க. பிரச்சனைகளை பொறுமையாக எதிர்கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்து வந்திருந்த சொந்த பந்தங்கள், சொத்து பிரச்சினைகள் கூட ஒரு முடிவுக்கு வரும். மாலை நேரம் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மாணவர்களின் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாமியார் மருமகள் சண்டை பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். குழப்பங்கள் தெளிவு பெறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட தொழிலில் திறமையாக செயல்பட்டு லாபத்தை ஈட்டுவீர்கள். பேச்சால் அடுத்தவர்களை கவரக்கூடிய வித்தையை இன்று வெளிகாட்டுவீர்கள். வெற்றி காண்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் பெருகும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகளும் உண்டு. நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபட தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் இருக்கும்.






