search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்...
    X

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்...

    • குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள்.
    • குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.

    குழந்தைகள் வளர்ச்சியில் பருவகாலநோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுவராமல் தடுக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், வைரஸ் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த தொற்றை எதிர்க்கும் வகையில் குளிர்காலத்தில் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான முதன்மையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

    சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.

    அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.

    குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. .

    உடல் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்தவை கொட்டைகள். அம்மாக்கள் குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கு பிறகு கொட்டைகளை தவிர்க்காமல் கொடுப்பார்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை போராடுவதற்கான ஆற்றலை கொடுக்கும்.

    அம்மாக்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை இதை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

    கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.

    முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது. மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் ஆக மாற்றி கொடுக்கலாம். முட்டையை பொரித்தும் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினம் ஒர் டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள் குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் பால் பொருள்களை தயிர், சீஸ் போன்றவற்றை சேர்க்கலாம். குறிப்பாக தினசரி தயிர் சேர்க்கலாம்.

    Next Story
    ×