என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா வைரஸ்"

    • ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதாக மே 28-ந்தேதி அறிவித்தது.
    • மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க பரிந்துரைக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்று, புதிய வைரஸ் உருமாற்றம் காரணமாக கடந்த மே மாதத்தில் மீண்டும் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாநில அரசுகளை எச்சரித்த மத்திய அரசு, கொரோனா பரவலை தீவிரமாக கண்காணித்து வந்தது. புதிய வகை கொரோனா தொற்று, சுகாதார அபாய நிலையை ஏற்படுத்தாது என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த அறிக்கையில் இதுகுறித்து கூறி இருப்பதாவது:-

    உலக சுகாதார நிறுவனம், கிழக்கு மத்திய தரைகடல் நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதாக மே 28-ந்தேதி அறிவித்தது. மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க பரிந்துரைக்கப்பட்டன.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வகை வைரஸ் உருமாற்றத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா மே மாதம் வேகமெடுத்து ஜூன் 13-ந் தேதி உச்சம் தொட்டிருந்தது. அதன்பிறகு சரிவடைந்துவிட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    • 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர்.

    இந்தியாவில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கடந்த 2014-15 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டு முதல் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

    அதே சமயம் கொரோனாவுக்குப் பிறகு இந்திய ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளின் முன்பதிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

    மத்திய தர வர்க்கத்தினரின் செலவழிக்கும் திறன் அதிகரித்துள்ளதால் ரெயில்களில் முன்பதிவு செய்து அதிக அளவில் பயணிக்கின்றனர்.

    அதிகாரப்பூர்வ ரெயில்வே தரவுகளின்படி, 2014-15 மற்றும் 2020-21ம் ஆண்டுக்கு இடையில் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டுகளில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கும் பயணிகளின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    குறிப்பாக புறநகர் பகுதிகளில், தொடர்ச்சியாக 2020 ம் ஆண்டிலிருந்து இது அதிகரித்து வந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 2194 மில்லியன், 2022-23ம் ஆண்டில் 3,834 மில்லியன், 2023-24ல் 4,026 மில்லியன் மற்றும் 2024-25ம் ஆண்டில் 4,201 மில்லியன் என தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

    அதே நேரம் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2014-15 மற்றும் 2019-2020ம் ஆண்டு வரையில் இது அதிகரிகரித்தே இருந்தது. 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு சட்டென புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை 76 மில்லியனாக குறைந்தது.

    இந்த எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக 2021-22ல் 582 மில்லியனாகவும், 2022-23ல் 1,826 மில்லியனாகவும், 2023-24-ல் 2,150 மில்லியனாகவும், 2024-25ல் 2,360 மில்லியனாகவும் மீண்டும் அதிகரித்தது.

    2014-15 மற்றும் 2019-20ம் ஆண்டில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் டிக்கெட் விற்பனை ஊக்கமளிப்பதாக இருந்தது. 2020-21ம் ஆண்டில் மட்டும் புறநகர் பகுதியிலிருந்து 925 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். கொரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 2,214 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ரெயில்வே தரவுகளில் தெரியவந்துள்ளது.

    • ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    • வீடியோவை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அறிவிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    இது பழைய வீடியோ. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.
    • தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

    தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

    • நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.
    • அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.

    இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளா, டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.

    இன்று தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தோற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்துள்ளனர்.

    • முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன.
    • இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம்

    கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    வௌவால்களில் காணப்படும் 'HKU5' என்ற துணை வகை வைரஸ், ஒரு சிறிய மரபணு மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்து, அடுத்த உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான இந்த ஆய்வின் விவரங்கள், முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன

    வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான ஆய்வின்படி, HKU5 வைரஸ்கள் மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸும் அதே ACE2 ஏற்பியைப் பயன்படுத்துகிறது.

    இந்த HKU5 வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) உடன் நெருங்கிய தொடர்புடையது. MERS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சுமார் 34% என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வைரஸ்கள் ஜப்பானிய வீட்டு வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இவை மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதாகக் கூறுகின்றன. இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

    WSU வைராலஜிஸ்ட் மைக்கேல் லெட்கோ, "இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், அதற்கான திறன் உள்ளது. எனவே அவற்றைக் கண்காணிப்பது முக்கியம்" என்று எச்சரித்துள்ளார்.

    ஆல்பாஃபோல்ட் 3 போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள், வைரஸ் எவ்வாறு செல்களுடன் தொடர்பு கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றி, ஆராய்ச்சி வேகத்தை விரைவுபடுத்தியுள்ளன.

    இந்த ஆய்வு, எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் உத்திகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
    • தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர். 

    • திருப்பதியில் நேற்று 67,284 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதன்படி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கூடுதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று. பக்தர்கள் பீதியடைய வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,284 பேர் தரிசனம் செய்தனர். 31,268 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
    • தொற்று பரவல் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 4026 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அது மேலும் உயர்ந்து இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4302 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த 7 பேரில் மகாராஷ்டிர மாநிலத்தில் 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை மொத்த இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பரவல் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அங்கு 1373 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். குஜராத்தில் நேற்று 461 பேரும், டெல்லியில் 457 பேரும் சிகிச்சையில் இருந்தனர். தமிழ்நாட்டில் 216 பேரும், புதுச்சேரியில் 22 பேரும் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    • தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    திருச்சி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் ரூ.18.4 கோடியில் கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    * தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூதாட்டி சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    சென்னையில் கொரோனா பாதிப்பால் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

    சென்னையில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டிக்கு சுவாசப்பிரச்சனை இருந்ததால் அவரை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • நோய்த்தொற்று பரவலில் 3-வது இடத்தில் இருந்த டெல்லி நேற்று 4-வது இடத்துக்கு வந்துவிட்டது.
    • தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 189 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது நேற்று 215 ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    கொரோனாவின் புதுவகை தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 961 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்தது. மாநிலங்கள் வாரியாக பரவலை கணக்கிடும்போது, கேரளாவே இன்னும் அதிக பாதிப்பில் இருக்கிறது. 1,416 பேர் அங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 19 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 494 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அங்கு நேற்று முன்தினத்தைவிட 12 குறைந்து இருக்கிறது.

    நோய்த்தொற்று பரவலில் 3-வது இடத்தில் இருந்த டெல்லி நேற்று 4-வது இடத்துக்கு வந்துவிட்டது. அங்கு நேற்றுமுன்தினம் 483 பேர் சிகிச்சையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 90 குறைந்து 393 ஆகி விட்டது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 189 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது நேற்று 215 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினத்தைவிட 26 பேர் கூடுதலாக சிகிச்சை பெறுகிறார்கள்.

    பலி எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 37 பேர் இறந்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் 32 ஆக இருந்த மொத்த உயிர்ப்பலி நேற்று மேலும் 5 சேர்ந்து 37 ஆகி விட்டது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    கேரளாவில் 80 வயது முதியவர், மகாராஷ்டிர மாநிலத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 மூதாட்டிகள், தமிழ்நாட்டில் 69 வயது மூதாட்டி, மேற்கு வங்காளத்தில் 43 வயது பெண் என 5 பேர் இறந்திருக்கிறார்கள்.

    ×