என் மலர்
நீங்கள் தேடியது "டிக்கெட் முன்பதிவு"
- தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.
- திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை கடந்த 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில், தமிழகத்திற்கு 3 ரெயில்களும் அடங்கும்.
அதாவது நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்காளம் நியூ ஜல்பாய்குரி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, தாம்பரம்-சந்திரகாச்சி ஆகிய 3 ரெயில்களாகும்.
பிரதமர் மோடி நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி ஆகிய 3 வழித்தடங்களுக்கான அம்ரித் பாரத் ரெயில் சேவை மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே தொடங்கப்பட்டுள்ள அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 11 தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள், 8 உட்காரும் வசதி உடைய முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு உணவுக்கூட பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரெயில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் சென்டிரல், கொல்லம், செங்கன்னூர், கோட்டயம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.
இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பகல் 11.40 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மங்களூரு சென்றடையும். புதன்கிழமை மங்களூருவில் இருந்து காலையில் புறப்பட்டு அதே நாள் இரவு நாகர்கோவிலை வந்தடையும்.
இதேபோன்று திருவனந்தபுரத்தில் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளிக்கு அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் சேவை வரும் 28-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு 24-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
பின்னர், பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.மத்திய தணிக்கை வாரியம் சான்று வழங்கியதை அடுத்து நாளை திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.
தொடர்ந்து, பராசக்தி படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக டான் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இந்நிலையில், சென்சார் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் 'பராசக்தி' படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
தமிழ்நாடு முழுவதும் நாளை 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'பராசக்தி' படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதையடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜன நாயகன் படத்திற்காக திரையரங்குகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அன்புள்ள ரசிகர்களே,
ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் உங்கள் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே பகிர்ந்து கொள்கிறோம்.
ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆன்லைன் முன்பதிவுகள் (9 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தைத் திரும்பப் பெறுவது தானாகவே அசல் கட்டண முறைக்கு மாற்றப்படும்.
கவுண்டர் முன்பதிவுகள் (9 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தை நேரடியாக சென்று திரும்பப் பெறலாம்.
உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.
- 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
சென்னை:
நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு முறையை ரெயில்வே வாரியம் அமல்படுத்தியது.
இதேபோல, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும். தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), சென்னை சென்டிரலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
- ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், 17-ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
IRCTC, இணையதளம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாக பயணியர் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
- ஜனவரி 9-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 16-ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ரெயில்களில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஜனவரி 9-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் உள்ளிட்ட முக்கியமான ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
- அவர்களால் மட்டுமே அந்த நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
- இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மோசடியைத் தடுக்கவும் ரெயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அக்டோபர் 1, 2025 முதல், பொது முன்பதிவு திறந்த முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் பதிவு செய்வோர் ஆதாரை கட்டாயமாக இணைந்திருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே அந்த இடைப்பட்ட நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
தற்போது, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாகும். இப்போது இந்தக் கொள்கை பொது ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, நவம்பர் 15 ஆம் தேதி பயணிக்க பொதிகை எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், விதிகளின்படி, முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே, அதாவது செப்டம்பர் 16 காலை 8 மணிக்கு தொடங்கும். புதிய விதியின்படி, ஆதார் சரிபார்ப்பை முடித்த IRCTC பயனர்கள் மட்டுமே 8.00 முதல் 8:15 வரை, அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சரிபார்க்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவளிக்கு 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
- காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.
தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 20 ம்தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
கீழ்க்காணும் தேதிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
ரெயில் டிக்கெட் முன்பதிவு நாள் | பயண நாள் | பயண கிழமை |
ஆகஸ்ட் 17 | அக்டோபர் 16 | வியாழன் |
ஆகஸ்ட் 18 | அக்டோபர் 17 | வெள்ளி |
ஆகஸ்ட் 19 | அக்டோபர் 18 | சனிக்கிழமை |
ஆகஸ்ட் 20 | அக்டோபர் 19 | ஞாயிறு |
ஆகஸ்ட் 21 | அக்டோபர் 20 | திங்கட்கிழமை - தீபாவளி பண்டிகை |
ஆகஸ்ட் 22 | அக்டோபர் 21 | செவ்வாய் |
ஆகஸ்ட் 23 | அக்டோபர் 16 | புதன்கிழமை |
வட இந்திய ரெயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும். வட இந்திய ரெயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரெயில்கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்
- புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
- 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர்.
இந்தியாவில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கடந்த 2014-15 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டு முதல் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
அதே சமயம் கொரோனாவுக்குப் பிறகு இந்திய ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளின் முன்பதிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மத்திய தர வர்க்கத்தினரின் செலவழிக்கும் திறன் அதிகரித்துள்ளதால் ரெயில்களில் முன்பதிவு செய்து அதிக அளவில் பயணிக்கின்றனர்.
அதிகாரப்பூர்வ ரெயில்வே தரவுகளின்படி, 2014-15 மற்றும் 2020-21ம் ஆண்டுக்கு இடையில் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டுகளில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கும் பயணிகளின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக புறநகர் பகுதிகளில், தொடர்ச்சியாக 2020 ம் ஆண்டிலிருந்து இது அதிகரித்து வந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 2194 மில்லியன், 2022-23ம் ஆண்டில் 3,834 மில்லியன், 2023-24ல் 4,026 மில்லியன் மற்றும் 2024-25ம் ஆண்டில் 4,201 மில்லியன் என தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
அதே நேரம் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2014-15 மற்றும் 2019-2020ம் ஆண்டு வரையில் இது அதிகரிகரித்தே இருந்தது. 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு சட்டென புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை 76 மில்லியனாக குறைந்தது.
இந்த எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக 2021-22ல் 582 மில்லியனாகவும், 2022-23ல் 1,826 மில்லியனாகவும், 2023-24-ல் 2,150 மில்லியனாகவும், 2024-25ல் 2,360 மில்லியனாகவும் மீண்டும் அதிகரித்தது.
2014-15 மற்றும் 2019-20ம் ஆண்டில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் டிக்கெட் விற்பனை ஊக்கமளிப்பதாக இருந்தது. 2020-21ம் ஆண்டில் மட்டும் புறநகர் பகுதியிலிருந்து 925 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். கொரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 2,214 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ரெயில்வே தரவுகளில் தெரியவந்துள்ளது.
- பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிடுவது அவசியம்.
- அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் இந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது.
ரெயில் பயணத்திற்கான உடனடி (Tatkal) டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையில்,
IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் உடனடி டிக்கெட் முன்பதிவு செய்ய, பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிடுவது அவசியம்.
கவுண்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யும் போதும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இது ஜூலை 15 முதல் முழுமையாக அமலுக்கு வரும்.
அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள், காலை 10:00 முதல் 10:30 வரை ஏசி டிக்கெட்டுகளையும், காலை 11:00 முதல் 11:30 வரை ஏசி அல்லாத டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியாது என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவில் போலி பெயர்களில் மோசடிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் பயணிக்க 30 நாட்களுக்கு முன்பாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போக்குவரத்து துறையில் உள்ளது. வருகிற 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஒரு மாதத்துக்கு முன் என்ற அடிப்படையில் பொங்கலுக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு tnstc.com என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது.
தற்போது பெரும்பாலான விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பாமல் காலியாக உள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து இப்போது டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
சென்னை :
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந்தேதி) முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும்.
இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம்.






