என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்ரித் பாரத் ரெயில்"

    • தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை கடந்த 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில், தமிழகத்திற்கு 3 ரெயில்களும் அடங்கும்.

    அதாவது நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்காளம் நியூ ஜல்பாய்குரி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, தாம்பரம்-சந்திரகாச்சி ஆகிய 3 ரெயில்களாகும்.

    பிரதமர் மோடி நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி ஆகிய 3 வழித்தடங்களுக்கான அம்ரித் பாரத் ரெயில் சேவை மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே தொடங்கப்பட்டுள்ள அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 11 தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள், 8 உட்காரும் வசதி உடைய முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு உணவுக்கூட பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

    தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    இந்த ரெயில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நாகர்கோவில் மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் சென்டிரல், கொல்லம், செங்கன்னூர், கோட்டயம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

    இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பகல் 11.40 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மங்களூரு சென்றடையும். புதன்கிழமை மங்களூருவில் இருந்து காலையில் புறப்பட்டு அதே நாள் இரவு நாகர்கோவிலை வந்தடையும்.

    இதேபோன்று திருவனந்தபுரத்தில் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளிக்கு அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

     சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் சேவை வரும் 28-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு 24-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

    • பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    • திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற ரெயில்வே விழாவில் பங்கேற்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. முதன் முறையாக கைப்பற்றியது. அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று பா.ஜ.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருவனந்தபுரத்திற்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்பு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அவர் எம்.ஜி.சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை வரை ரோடு-ஷோ சென்றார். அப்போது அவரை சாலையிலும் இருபுறங்களிலும் திரண்டு நின்ற பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.

    அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசத்தபடி ரோடு-ஷோ சென்றார். பின்பு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற ரெயில்வே விழாவில் பங்கேற்றார்.

    அந்த விழாவில் நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய 3 வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் என 4 புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
    • பிரதமர் மோடி புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பா.ஜ.க. வரலாறு படைத்தது. அப்போது அந்த வெற்றியை பற்றி கருத்து தெரிவித்த போது, விரைவில் திருவனந்தபுரம் வர உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    அதன்படி பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பிறகு எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.

    பிறகு புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் 3 அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

    • திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
    • பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    திருவனந்தபுரம்:

    தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தனது வளர்ச்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சியின் தலைவர்கள் தமிழகம் மற்றும் கேரளத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் வளர்ச்சியாக கேரளாவில் பாரதிய ஜனதா முதன் முறையாக எம்.பி. தேர்தலில் ஒரு இடத்தை கைப்பற்றியது.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ்கோபி, தற்போது மத்திய மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் பெற பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில், கட்சியின் முக்கிய தலைவர்கள் கேரளாவை குறிவைத்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கேரள மாநிலம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (23-ந்தேதி) கேரளா வருகிறார். மாநில தலைநகர் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கும் அவர், புதிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்-மங்களூர், திருவனந்தபுரம்- தாம்பரம், திருவனந்தபுரம் -ஐதராபாத் வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்- திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர், புதுமை, தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை பகல் அவர் திருவனந்தபுரம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து அவர் 'ரோடு ஷோ'வாக விழா நடைபெற புத்திரிக்கண்டம் மைதானத்திற்கு காரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    புத்திரிக்கண்டம் திடலில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்சியினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் மூலம், கேரள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை பாரதிய ஜனதா தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவரது விமானம் வரும் சங்குமுகம் விமான நிலையம் மற்றும் புத்திரிக்கண்டம் கிழக்கு கோட்டை பகுதிகள் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் டிரோன்கள், டிரோன் கேமராக்கள், பறக்கும் பட்டங்கள், பலூன்கள் மற்றும் லேசர் கற்றை விளக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    • தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (வண்டிஎண்.16107), மறுநாள் இரவு 8.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (16108), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்கள் எழும்பூர் வழியாக இயக்கப்படும்.

    திருச்சி-நியூ ஜல்பாய்குரி

    * திருச்சியில் இருந்து வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20610), புறப்பட்டத்தில் இருந்து 3-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரியில் இருந்து வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20609), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மாலை 4.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரெயில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சூலூர்பேட்டை ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

    * நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு புறப்பட்டு நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20604), புறப்பட்டதில் இருந்த 4-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20603), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசத்திக்காக பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் என இருந்த நிலையில், சேரக்கூடிய இடங்களை மிகவும் விரைவாக சென்றடையும் வகையில் வந்தே பாரத் என்ற ரெயிலை அறிமுகப்படுத்தியது.

    குறைந்த பெட்டிகளை கொண்ட ரெயிலாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதிவேகமாக செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ரெயில் முழுவதும் ஏ.சி. பெட்டிகளை கொண்டது. கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் இந்திய ரெயில்வே அம்ரித் பாரத் ரெயில் என்பதை அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்று புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    பீகார் மாநிலத்தின் தர்பங்கா- டெல்லியின் ஆனந்த் விஹார் இடையில் ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அயோத்தி வழியாக செல்லும்.

    மற்றொரு ரெயில் மேற்கு வங்காளத்தின் மால்டா டவுண்- பெங்களூருவின் விஸ்வேஸ்வராய முனைமம் இடையே இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது. படுக்கை வசதி கொண்ட ரெயிலாகும். தற்போது எல்.இ.டி. லைட்டுகள், செல்போன் சார்ஜ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டதாக உள்ளது. மேலும், கட்டணமும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு 6 வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

    • தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரெயில்களோ, அம்ரித் பாரத் ரெயில்களோ தேவையின் அடிப்படையிலேயே இயக்கப்படும்.
    • சென்னை ரெயில்வே கோட்டத்தில் கூடுதல் ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் 30-ந்தேதி (இன்று) 6 வந்தே பாரத் ரெயில்களையும், 2 'அம்ரித் பாரத்' ரெயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில், அம்ரித் பாரத் ரெயில் குளிர்சாத பெட்டி இல்லாத சாதாரண வகை ரெயில்களாகவே இயக்கப்படும். இதில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியில் மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு ரெயிலில் 1,600 பயணிகள் பயணிக்க முடியும். 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும்.

    இதேபோல, தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரெயில்களோ, அம்ரித் பாரத் ரெயில்களோ தேவையின் அடிப்படையிலேயே இயக்கப்படும். இப்போதைக்கு அந்த தேவை எழவில்லை. மிக்ஜம் புயல் வந்த போது வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சென்னை ரெயில்வே கோட்டத்தில் கூடுதல் ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
    • இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் நீண்ட தூர பயணம் என்றாலே பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் பயணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த செலவில் பல்வேறு வசதிகளுடன் நீண்ட தூரம் பயணம் செய்து கொள்வது தான். பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரெயில்வே துறையும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

    அந்த வகையில் குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரெயில்கள் இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 26 அம்ரித் பாரத் ரெயில்களை கூடுதலாக இயக்க மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நெல்லை - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் மற்றும் தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே புதிய அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. நெல்லை - சாலிமர் வழித்தடத்தில் இயங்கும் ரெயில், நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். அதேபோல, சென்னை தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடத்தில் இயங்கும் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக செல்லும்.

    அம்ரித் பாரத் ரெயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட, மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை மற்றும் அடுத்த ரெயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி உள்ளது. இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    அம்ரித் பாரத் ரெயில் குறுகிய நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் திறனை கொண்டது. மேலும் இந்த ரெயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். புதிதாக வர இருக்கும் அம்ரித் பாரத் ரெயில்கள் மீது பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடத்தில் உள்ள 16 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி, சூலூர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.

    ×